புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணுக்கு மை எதற்கு?
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
காதலுக்குக் கண்ணில்லை என்கிறார்கள்; தவறு.
கண்ணில்லை என்றால் காதல் இல்லை.
கண்தான் காதலை உண்டாக்குகிறது.
கண்தான் காதலின் வாசல்.
கண் வழியாகத்தான் நுழைந்து இதயத்தில் இடம்பிடிக்கிறார்கள்.
சீதை இராமனைப் பார்த்தாள். காதல் உண்டாகி விட்டது. அவன் அவள் இயத்திற்குள் போய் விட்டான்.
அவன் எப்படி உள்ளே போனான்?
‘‘கண் வழியாகத்தான் நுழைந்திருக்கிறான், திருட்டுப் பயல்!’’
‘கண்வழி நுழையுமோர்
கள்வனே கொலாம்.’
அந்தக் காலத்திலிருந்தே பெண்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை அணிகலன் களால் தங்களை அலங்கரித்துக் கொள் வார்கள்.
எல்லாம் ஆண்களைக் கவர்வதற்காகத்தான்.
வெண்ணிலாவுக்கு வெள்ளையடிப்பதுபோல் இயற்கையாகவே அழகாக இருக்கும் பெண் களும் தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்கள். வயதானவர்களும் அலங்கரித்துக் கொள் கிறார்கள்.
நெடுங்காலமாகச் செய்து செய்து பெண்களின் ஆழ்மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் பழக்கம் இது.
‘பெடைமான் போன்ற மட நோக்கம், நாணம் இவற்றால் இவள் அலங்கரிக்கப் பட்டிருக்கிறாள். இவை போதாவோ. இவுளுக்கெதற்கு வேறு அணிகலன்கள்?’ என்று கேட்கிறார் வள்ளுவர்.
‘பிணையேர் மட நோக்கம் நாணும் உடையாட்கு
அணி எவனோ ஏதிலதந்து.’
நகைகள் அணிந்த அழகியை வருணிக்க வந்த காளிதாசன் ‘நகைகள் இவளை அணிந்திருக்கின்றன’ என்கிறார்.
பெண்கள் இரண்டே இரண்டு அங்கங்களில்தான் நகைகள் அணிவதில்லை. ஒன்று உதடு, மற்றொன்று கண்.
இவற்றில் நகைகள்தாம் அணிவதில்லையே தவிர, இவற்றிலும் அலங்காரம் செய்து கொள்கிறார்கள்.
உதட்டில் சிவப்பு வண்ணம் ஏற்றிக்கொள்கிறார் கள். கண்ணில் கறுப்பு மை தீட்டிக்கொள்கிறார்கள்.
அந்தக் காலத்தில் புலவர்கள் பெண்களின் கண்களை வருணிக்கும்போது ‘உண்கண்’ என்பார்கள். அதாவது ‘உண்ணும் கண்’.
இது ‘மை உண்ணும் கண்’ என்று விரியும். ஆனால் ‘உண்கண்’ என்று மட்டுமே எழுதுவார்கள்.
அதாவது மற்றதையும் உண்ணும் என்பது குறிப்பு. எதை?
இராமனும் சீதையும் முதன்முறையாகச் சந்திக்கிறார்கள்.
அவனுடைய கண்களும் அவளுடைய கண்களும் ஒன்றையொன்று கவ்வி உண்கின்றன.
‘கண்ணொடு கண்ணினைக்
கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும்’
- என்கிறார் கம்பர்.
அதாவது ‘கண்களை உண்ணும் கண்கள்’ என்கிறார் கம்பர்.
‘கண்ணிரண்டும்
ஆளை விழுங்கும்
அதிசயத்தைக் கூறுவனோ?’
- என்கிறார் பாரதியார்
‘ஆளையே உண்ணும் கண்’ என்பது பாரதியின் பார்வை.
‘கண்டார் உயிருண்ணும்
தோற்றத்தாள் பெண்தகைப்
பேதைக்கு அமர்த்தன கண்’
அதாவது பெண்ணின் கண் உயிரையே உண்ணும் என்பது வள்ளுவரின் வாக்குமூலம்.
ஷாஜஹானும் மும்தாஜும் அரண்மனைப் பூங்காவில் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.
‘‘கண்ணே! உலகில் வெண்முத்து உண்டு, கருமுத்து உண்டா?’’ என்று ஷாஜஹான் கேட்டான்.
‘‘உண்டே! பெண்கள் அழும்போது அவர்களு டைய கண் மையைக் கரைத்துக் கொண்டு வரும் ஒவ்வொரு கண்ணீ்ர்த் துளியும் கருமுத்து தான்’’என்றார் மும்தாஜ்.
‘பெண்ணே!
உன் கண்ணை
இரக்கக் கண்ணீரால்
அலங்கரி
மையால்
அலங்கரிக்காதே
ஏனெனில்
மை கரைந்துவிடும்’
- என்று நான் எழுதியிருக்கிறேன்.
இதோ கண் மை பற்றி என் மை எழுதிய மற்றொரு கவிதை:
‘அவள் மை தீட்டக்
கையில்
கோலெடுத்துவிட்டாள்
யாருடைய விதி
எழுதப்படப் போகிறதோ?’
திருக்குறளில் ஒரு சுவையான குறள்.
வழக்கமாகக் கண்ணுக்கு மை தீட்டும் தலைவி அன்று தீட்டவில்லை.
‘‘ஏனடி, நீ இன்று கண்ணுக்கு மை தீட்டவில்லை?’’ என்று தோழி கேட்கிறாள்.
தலைவி கூறுகிறாள்: ‘‘என் காதலர் என் கண்ணுக்குள் இருக்கிறார். நான் மை தீட்டும் போது கண்ணை மூட வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் அவர் மறைந்துவிடுவார். அந்தக் கண நேரப் பிரிவைக் கூட என்னால் தாங்க முடியாது.
‘கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து’
எந்தக் கவிதை வீணையை மீட்டும் விரல்களைப் போல் கவிஞனை மீட்டிப் புதுப் புதுப் பண்களை எழுப்புகிறதோ, அது உயர்ந்த கவிதை.
இந்தக் கவிதை உயர்ந்த கவிதை. இதனால் நான் மீட்டப்பட்டேன். இதோ எனக்குள்ளிருந்து புறப்பட்டு வந்த ராகங்கள்:
l
‘கண்ணில் ஏன்
மை தீட்டவில்லை
என்கிறாயா, தோழி!
சொல்கிறேன்
l
மை போட்டு
மயக்கினேன்
மயங்கிவிட்டார்
இன்னும் எதற்கு மை?
l
கண்ணுக்குள்
என் காதலர்
அவர் முகத்தில்
கரி பூசலாமா?
l
என் சூரியனை
இருட்டடிப்புச்
செய்யலாமா?
l
வீட்டிற்குள்ளே அவர்
வாசலில் எதற்கு
வரவேற்புக் கோலம்?
l
அவரையே தீட்டி
அழகு பெற்ற கண்ணுக்கு
மையலங்காரம் வேண்டுமா?
l
கண்ணை விட
மென்மையானவர்
காதலர்
கோல் பட்டால்
வலிக்காதோ?
l
அவர்தான்
சிக்கிவிட்டாரே
பிறகு எதற்கு வலை?
l
அவரை வைத்த இடத்தில்
வேறொன்றை வைப்பது
கற்புக்கு இழுக்கல்லவா?’
****கவிக்கோ அப்துல் ரகுமான்***
நன்றி யார்ல்
கண்ணில்லை என்றால் காதல் இல்லை.
கண்தான் காதலை உண்டாக்குகிறது.
கண்தான் காதலின் வாசல்.
கண் வழியாகத்தான் நுழைந்து இதயத்தில் இடம்பிடிக்கிறார்கள்.
சீதை இராமனைப் பார்த்தாள். காதல் உண்டாகி விட்டது. அவன் அவள் இயத்திற்குள் போய் விட்டான்.
அவன் எப்படி உள்ளே போனான்?
‘‘கண் வழியாகத்தான் நுழைந்திருக்கிறான், திருட்டுப் பயல்!’’
‘கண்வழி நுழையுமோர்
கள்வனே கொலாம்.’
அந்தக் காலத்திலிருந்தே பெண்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை அணிகலன் களால் தங்களை அலங்கரித்துக் கொள் வார்கள்.
எல்லாம் ஆண்களைக் கவர்வதற்காகத்தான்.
வெண்ணிலாவுக்கு வெள்ளையடிப்பதுபோல் இயற்கையாகவே அழகாக இருக்கும் பெண் களும் தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்கள். வயதானவர்களும் அலங்கரித்துக் கொள் கிறார்கள்.
நெடுங்காலமாகச் செய்து செய்து பெண்களின் ஆழ்மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் பழக்கம் இது.
‘பெடைமான் போன்ற மட நோக்கம், நாணம் இவற்றால் இவள் அலங்கரிக்கப் பட்டிருக்கிறாள். இவை போதாவோ. இவுளுக்கெதற்கு வேறு அணிகலன்கள்?’ என்று கேட்கிறார் வள்ளுவர்.
‘பிணையேர் மட நோக்கம் நாணும் உடையாட்கு
அணி எவனோ ஏதிலதந்து.’
நகைகள் அணிந்த அழகியை வருணிக்க வந்த காளிதாசன் ‘நகைகள் இவளை அணிந்திருக்கின்றன’ என்கிறார்.
பெண்கள் இரண்டே இரண்டு அங்கங்களில்தான் நகைகள் அணிவதில்லை. ஒன்று உதடு, மற்றொன்று கண்.
இவற்றில் நகைகள்தாம் அணிவதில்லையே தவிர, இவற்றிலும் அலங்காரம் செய்து கொள்கிறார்கள்.
உதட்டில் சிவப்பு வண்ணம் ஏற்றிக்கொள்கிறார் கள். கண்ணில் கறுப்பு மை தீட்டிக்கொள்கிறார்கள்.
அந்தக் காலத்தில் புலவர்கள் பெண்களின் கண்களை வருணிக்கும்போது ‘உண்கண்’ என்பார்கள். அதாவது ‘உண்ணும் கண்’.
இது ‘மை உண்ணும் கண்’ என்று விரியும். ஆனால் ‘உண்கண்’ என்று மட்டுமே எழுதுவார்கள்.
அதாவது மற்றதையும் உண்ணும் என்பது குறிப்பு. எதை?
இராமனும் சீதையும் முதன்முறையாகச் சந்திக்கிறார்கள்.
அவனுடைய கண்களும் அவளுடைய கண்களும் ஒன்றையொன்று கவ்வி உண்கின்றன.
‘கண்ணொடு கண்ணினைக்
கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும்’
- என்கிறார் கம்பர்.
அதாவது ‘கண்களை உண்ணும் கண்கள்’ என்கிறார் கம்பர்.
‘கண்ணிரண்டும்
ஆளை விழுங்கும்
அதிசயத்தைக் கூறுவனோ?’
- என்கிறார் பாரதியார்
‘ஆளையே உண்ணும் கண்’ என்பது பாரதியின் பார்வை.
‘கண்டார் உயிருண்ணும்
தோற்றத்தாள் பெண்தகைப்
பேதைக்கு அமர்த்தன கண்’
அதாவது பெண்ணின் கண் உயிரையே உண்ணும் என்பது வள்ளுவரின் வாக்குமூலம்.
ஷாஜஹானும் மும்தாஜும் அரண்மனைப் பூங்காவில் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.
‘‘கண்ணே! உலகில் வெண்முத்து உண்டு, கருமுத்து உண்டா?’’ என்று ஷாஜஹான் கேட்டான்.
‘‘உண்டே! பெண்கள் அழும்போது அவர்களு டைய கண் மையைக் கரைத்துக் கொண்டு வரும் ஒவ்வொரு கண்ணீ்ர்த் துளியும் கருமுத்து தான்’’என்றார் மும்தாஜ்.
‘பெண்ணே!
உன் கண்ணை
இரக்கக் கண்ணீரால்
அலங்கரி
மையால்
அலங்கரிக்காதே
ஏனெனில்
மை கரைந்துவிடும்’
- என்று நான் எழுதியிருக்கிறேன்.
இதோ கண் மை பற்றி என் மை எழுதிய மற்றொரு கவிதை:
‘அவள் மை தீட்டக்
கையில்
கோலெடுத்துவிட்டாள்
யாருடைய விதி
எழுதப்படப் போகிறதோ?’
திருக்குறளில் ஒரு சுவையான குறள்.
வழக்கமாகக் கண்ணுக்கு மை தீட்டும் தலைவி அன்று தீட்டவில்லை.
‘‘ஏனடி, நீ இன்று கண்ணுக்கு மை தீட்டவில்லை?’’ என்று தோழி கேட்கிறாள்.
தலைவி கூறுகிறாள்: ‘‘என் காதலர் என் கண்ணுக்குள் இருக்கிறார். நான் மை தீட்டும் போது கண்ணை மூட வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் அவர் மறைந்துவிடுவார். அந்தக் கண நேரப் பிரிவைக் கூட என்னால் தாங்க முடியாது.
‘கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து’
எந்தக் கவிதை வீணையை மீட்டும் விரல்களைப் போல் கவிஞனை மீட்டிப் புதுப் புதுப் பண்களை எழுப்புகிறதோ, அது உயர்ந்த கவிதை.
இந்தக் கவிதை உயர்ந்த கவிதை. இதனால் நான் மீட்டப்பட்டேன். இதோ எனக்குள்ளிருந்து புறப்பட்டு வந்த ராகங்கள்:
l
‘கண்ணில் ஏன்
மை தீட்டவில்லை
என்கிறாயா, தோழி!
சொல்கிறேன்
l
மை போட்டு
மயக்கினேன்
மயங்கிவிட்டார்
இன்னும் எதற்கு மை?
l
கண்ணுக்குள்
என் காதலர்
அவர் முகத்தில்
கரி பூசலாமா?
l
என் சூரியனை
இருட்டடிப்புச்
செய்யலாமா?
l
வீட்டிற்குள்ளே அவர்
வாசலில் எதற்கு
வரவேற்புக் கோலம்?
l
அவரையே தீட்டி
அழகு பெற்ற கண்ணுக்கு
மையலங்காரம் வேண்டுமா?
l
கண்ணை விட
மென்மையானவர்
காதலர்
கோல் பட்டால்
வலிக்காதோ?
l
அவர்தான்
சிக்கிவிட்டாரே
பிறகு எதற்கு வலை?
l
அவரை வைத்த இடத்தில்
வேறொன்றை வைப்பது
கற்புக்கு இழுக்கல்லவா?’
****கவிக்கோ அப்துல் ரகுமான்***
நன்றி யார்ல்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|