புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
32 Posts - 51%
heezulia
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
74 Posts - 57%
heezulia
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 01, 2016 7:26 am

இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! QDw5ts6YTFWH9F5dGmZg+141
-
அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைக் கணக்கில் கொள்வார்கள்;
ராஜதந்திரிகள் அடுத்த தலைமுறையைக் கருத்தில் கொள்வார்கள்.
அதுபோல, உடனடி அறிவியல் சாதனைகளைவிட, அடுத்தடுத்த
தலைமுறை சாதனைகளுக்கு வித்திடுபவரை அறிவியல் ராஜதந்திரி
எனலாம். அத்தகையவர் தான் எம்.ஜி.கே.மேனன்.

மங்களூரில் 1928, ஆக. 28-இல் பிறந்தார் கோவிந்தகுமார்.
(இவரே பின்னாளில் எம்.ஜி.கே. மேனன்). அவரது தந்தை மாவட்ட
நீதிபதியாகப் பணியாற்றியவர். 1942-இல் மெட்ரிக் பள்ளி தேர்ச்சி
பெற்ற கோவிந்தகுமார், ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில்
பி.எஸ்சி. பட்டம் பெற்றார்.

கோவிந்தகுமார் இளைஞனாக இருந்தபோது, அவரது தந்தையின்
அழைப்பை ஏற்று, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சிவி.ராமன்
ஜோத்பூர் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார். அவரை நெருங்கியிருந்து
பார்த்த கோவிந்தகுமாருக்கு அவரே ஆதர்ஷ நாயகனாகிவிட்டார்.

அப்போது, கோவிந்தகுமாரின் படிப்பை விசாரித்த ராமன்,
“மேற்படிப்புக்கு அறிவியலைத் தேர்ந்தெடு. இயற்பியலில் நீ பெரிய
ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்’ என்று ஆசீர்வதித்தார்.
அதன்படியே கோவிந்தகுமார் தனது வாழ்க்கையைத் தீர்மானித்துக்
கொண்டார். பிறகு மும்பையிலுள்ள ராயல் அறிவியல் இன்ஸ்டிட்யூட்டில்
எம்.எஸ்சி. இயற்பியல் படித்தார்.

கோவிந்தகுமார் புகைப்படக்கலையில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.
எனவே, புகைப்பட பிலிம்களைக் கழுவும் போட்டோ கரைசலை
உருவாக்கும் முயற்சியில் அவர் 1949-இல் ஈடுபட்டார். அது நுண்துகள்
இயற்பியல் (Particle Physics) ஆய்வுகளுக்கும், அண்டக்கதிர்
(Cosmic Rays) ஆய்வுகளுக்கும் அவரை பின்னாளில் இட்டுச் சென்றது.

பிரிட்டனிலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த கோவிந்தகுமார்,
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சி.எஃப்.பாவெல்லின் வழிகாட்டுதலில்
அண்டக்கதிர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1953-இல் இயற்பியலில்
பிஎச்.டி. பட்டமும் பெற்றார்.

பிரிஸ்டலில் பயிலும்போது, அங்கு தத்துவவியல் படித்த மாணவி
இந்துமதி படேலை காதலித்து மணம் புரிந்தார்.

அப்போதுதான் இந்தியாவில், அடிப்படை அறிவியலுக்கான டாடா ஆராய்ச்சி
நிறுவனம் (TIFR- Tata Institute of Fundamental Research)
துவங்கியிருந்தது. அதில் 1955-இல் இணைந்தார் கோவிந்தகுமார்.

அங்கு, வளிமண்டலத்துக்கு அப்பால் விஞ்ஞானிகளுக்குத் தேவையான
கருவிகளைக் கொண்டுசேர்க்கும் பிளாஸ்டிக் பலூன்களை மிகப் பெரிய
அளவில் தயாரிக்கும் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டார். அதுவே விண்வெளித்
துறையில் இந்தியாவின் முன்னோடி ஆய்வுத் திட்டமாகும்.

தவிர, துகள் இயற்பியல், அண்டக்கதிர்கள் குறித்த ஆராய்ச்சிகளிலும் அவரது
கவனம் குவிந்தது. பூமிக்கடியில் மிகவும் ஆழமான பகுதியில் அண்டக்கதிர்கள்
எவ்வாறு இயங்குகின்றன என்ற ஆய்விலும் சக விஞ்ஞானி பி.வி.ஸ்ரீகாந்தன்
உதவியுடன் கோவிந்தகுமார் ஈடுபட்டார். கோலார் தங்கவயல் சுரங்கத்தில்
ஆழமான பகுதியில் அண்டக்கதிர்களைச் செலுத்தி அதன்மூலம் வெளியான
நியூட்ரினோக்களை அவர்கள் ஆராய்ந்தனர்.

தனது ஆராய்ச்சி அறிவுடன், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு,
தலைமைப்பண்பு ஆகிய குணங்களால் டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் மிகக்
குறுகிய காலத்தில் டீன் பொறுப்பிலும், துணை இயக்குநர் பொறுப்பிலும் அவர்
நியமிக்கப்பட்டார். அவரை விஞ்ஞானிகள் “கோகு’ என்று அன்புடன் அழைத்தனர்.

நுண்துகளான நியூட்ரினோக்கள் தொடர்பான ஆராய்ச்சியில் பல முக்கிய
முடிவுகளை கோகு குழு கண்டறிந்தது. அண்டக்கதிர்களிடையே மோதலின்போது
உருவாகும் புதிய நுண்துகளான மியான் (Muon) 1965-இல் கண்டறியப்பட்டது.
இது 1965-ஆம் வருடத்திய சர்வதேச அண்டக்கதிர் ஆராய்ச்சி மாநாட்டில் இது
ஆய்வறிக்கையாக முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அறிவியல் உலகிற்கு பேரிழப்பாக, விஞ்ஞானி
ஹோமி பாபா விமான விபத்தில் (1966) இறந்தார். டாடா ஆராய்ச்சி நிறுவனத்தின்
நிர்வாகக் குழு தலைவரான ஜே.ஆர்.டி.டாடா, உடனடியாக “கோகு’வை பாபாவின்
இடத்தில் நியமித்தார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 01, 2016 7:26 am


நோபல் விஞ்ஞானி சர்.சி.வி.ராமனும் “கோகு’வை தனது ராமன் ஆராய்ச்சிக்
கழகத்தில் (RRI) பணிபுரிய அழைத்து வந்தார். 1970-இல் ராமன் மறைந்தவுடன்
அந்நிறுவனம் ஸ்தம்பித்தது. அப்போது விஞ்ஞானிகள் பலரது வேண்டுகோளை
ஏற்று அந்நிறுவனத்தின் பொறுப்பையும் “கோகு’ ஏற்றார். ராமனின் புதல்வரும்
வானொலி விண்ணியல் விஞ்ஞானியுமான வெங்கட்ராமன் சந்திரசேகர்
“கோகு’வின் வேண்டுதலின் பேரில் ராமன் ஆராய்ச்சிக் கழகத்தின் பொறுப்பை
ஏற்றார்.

அதேபோல, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக
இருந்த விக்ரம் சாராபாயும் 1971-இல் திடீரென மரணமடைந்தார். அதையடுத்து,
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி “கோகு’வை இஸ்ரோ தலைவராகப்
பொறுப்பேற்கச் செய்தார். தவிர அகமதாபாத்தில் இயங்கும் இயற்பியல் ஆராய்ச்சி
ஆய்வகத்தின் (PRL) இயக்குநராகவும் பொறுப்பேற்றார்.

இஸ்ரோவின் தலைவராக 1972 ஜனவரி முதல் அதே ஆண்டு செப்டம்பர்
வரையிலான 9 மாதங்களே இருந்தபோதும், அங்கு தனது முத்திரையை ஆழப்
பதித்தார் “கோகு’.

எனினும், இஸ்ரோவுக்கு முழுநேரமாக கவனம் கொடுக்கும் விஞ்ஞானியே
தகுதியானவர் என்று கூறிய “கோகு”, மிக விரைவில் அப்பதவிக்கு சதீஷ் தவானைத்
தேர்வு செய்து 1972-இல் நியமித்தார். மேலும் விஞ்ஞானி யு.ஆர்.ராவை இயற்பியல்
ஆராய்ச்சி ஆய்வகத்தின் இயக்குநராகவும் நியமித்தார்.

பிரதமரின் அறிவியல் ஆலோசகர், அமைச்சரவையின் அறிவியல் ஆலோசனைக்குழு
தலைவர், திட்டக்குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளில் அரசுடன் இணைந்து
பணியாற்றிய “கோகு’, அரசாங்கத்தில் அறிவியலின் செல்வாக்கை உறுதிப்படுத்தினார்.

உலக அளவில் பல அறிவியல் அமைப்புகளில் கெüரவ உறுப்பினராக உள்ள மேனன்,
பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார். சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1960),
பிரிட்டனின் எஃப்ஆர்எஸ் (1970), இந்திய அரசின் பத்மஸ்ரீ (1961), பத்மபூஷண் (1968),
பத்மவிபூஷண் 1985), உலக அறிவியல் அகாதெமியின் அப்துஸ் சலாம் பதக்கம் (1996)
உள்ளிட்ட பல கெüரவங்களை மேனன் பெற்றுள்ளார்.

1989-90 இல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அறிவியல், தொழில்நுட்பத் துறை
அமைச்சராகவும் மேனன் பணியாற்றியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவும்
(1990- 1996) அவர் இருந்துள்ளார்.

தனது 88-வது வயதிலும், அறிவியல் சார்ந்த பணிகளில் சளைக்காமல் ஈடுபட்டு
வருகிறார் மேனன். அவரைக் கெüரவிக்கும் வகையில், 2008-இல் கண்டுபிடிக்கப்பட்ட
புதிய சிறுகோளான ஆய்டிராய்டு 7564-க்கு “கோகு மேனன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

————————————-
– வ.மு.முரளி
இளைஞர் மணி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 01, 2016 5:57 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 01, 2016 5:58 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக