புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
64 Posts - 50%
heezulia
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 01, 2016 7:26 am

இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! QDw5ts6YTFWH9F5dGmZg+141
-
அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைக் கணக்கில் கொள்வார்கள்;
ராஜதந்திரிகள் அடுத்த தலைமுறையைக் கருத்தில் கொள்வார்கள்.
அதுபோல, உடனடி அறிவியல் சாதனைகளைவிட, அடுத்தடுத்த
தலைமுறை சாதனைகளுக்கு வித்திடுபவரை அறிவியல் ராஜதந்திரி
எனலாம். அத்தகையவர் தான் எம்.ஜி.கே.மேனன்.

மங்களூரில் 1928, ஆக. 28-இல் பிறந்தார் கோவிந்தகுமார்.
(இவரே பின்னாளில் எம்.ஜி.கே. மேனன்). அவரது தந்தை மாவட்ட
நீதிபதியாகப் பணியாற்றியவர். 1942-இல் மெட்ரிக் பள்ளி தேர்ச்சி
பெற்ற கோவிந்தகுமார், ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில்
பி.எஸ்சி. பட்டம் பெற்றார்.

கோவிந்தகுமார் இளைஞனாக இருந்தபோது, அவரது தந்தையின்
அழைப்பை ஏற்று, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சிவி.ராமன்
ஜோத்பூர் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார். அவரை நெருங்கியிருந்து
பார்த்த கோவிந்தகுமாருக்கு அவரே ஆதர்ஷ நாயகனாகிவிட்டார்.

அப்போது, கோவிந்தகுமாரின் படிப்பை விசாரித்த ராமன்,
“மேற்படிப்புக்கு அறிவியலைத் தேர்ந்தெடு. இயற்பியலில் நீ பெரிய
ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்’ என்று ஆசீர்வதித்தார்.
அதன்படியே கோவிந்தகுமார் தனது வாழ்க்கையைத் தீர்மானித்துக்
கொண்டார். பிறகு மும்பையிலுள்ள ராயல் அறிவியல் இன்ஸ்டிட்யூட்டில்
எம்.எஸ்சி. இயற்பியல் படித்தார்.

கோவிந்தகுமார் புகைப்படக்கலையில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.
எனவே, புகைப்பட பிலிம்களைக் கழுவும் போட்டோ கரைசலை
உருவாக்கும் முயற்சியில் அவர் 1949-இல் ஈடுபட்டார். அது நுண்துகள்
இயற்பியல் (Particle Physics) ஆய்வுகளுக்கும், அண்டக்கதிர்
(Cosmic Rays) ஆய்வுகளுக்கும் அவரை பின்னாளில் இட்டுச் சென்றது.

பிரிட்டனிலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த கோவிந்தகுமார்,
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சி.எஃப்.பாவெல்லின் வழிகாட்டுதலில்
அண்டக்கதிர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1953-இல் இயற்பியலில்
பிஎச்.டி. பட்டமும் பெற்றார்.

பிரிஸ்டலில் பயிலும்போது, அங்கு தத்துவவியல் படித்த மாணவி
இந்துமதி படேலை காதலித்து மணம் புரிந்தார்.

அப்போதுதான் இந்தியாவில், அடிப்படை அறிவியலுக்கான டாடா ஆராய்ச்சி
நிறுவனம் (TIFR- Tata Institute of Fundamental Research)
துவங்கியிருந்தது. அதில் 1955-இல் இணைந்தார் கோவிந்தகுமார்.

அங்கு, வளிமண்டலத்துக்கு அப்பால் விஞ்ஞானிகளுக்குத் தேவையான
கருவிகளைக் கொண்டுசேர்க்கும் பிளாஸ்டிக் பலூன்களை மிகப் பெரிய
அளவில் தயாரிக்கும் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டார். அதுவே விண்வெளித்
துறையில் இந்தியாவின் முன்னோடி ஆய்வுத் திட்டமாகும்.

தவிர, துகள் இயற்பியல், அண்டக்கதிர்கள் குறித்த ஆராய்ச்சிகளிலும் அவரது
கவனம் குவிந்தது. பூமிக்கடியில் மிகவும் ஆழமான பகுதியில் அண்டக்கதிர்கள்
எவ்வாறு இயங்குகின்றன என்ற ஆய்விலும் சக விஞ்ஞானி பி.வி.ஸ்ரீகாந்தன்
உதவியுடன் கோவிந்தகுமார் ஈடுபட்டார். கோலார் தங்கவயல் சுரங்கத்தில்
ஆழமான பகுதியில் அண்டக்கதிர்களைச் செலுத்தி அதன்மூலம் வெளியான
நியூட்ரினோக்களை அவர்கள் ஆராய்ந்தனர்.

தனது ஆராய்ச்சி அறிவுடன், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு,
தலைமைப்பண்பு ஆகிய குணங்களால் டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் மிகக்
குறுகிய காலத்தில் டீன் பொறுப்பிலும், துணை இயக்குநர் பொறுப்பிலும் அவர்
நியமிக்கப்பட்டார். அவரை விஞ்ஞானிகள் “கோகு’ என்று அன்புடன் அழைத்தனர்.

நுண்துகளான நியூட்ரினோக்கள் தொடர்பான ஆராய்ச்சியில் பல முக்கிய
முடிவுகளை கோகு குழு கண்டறிந்தது. அண்டக்கதிர்களிடையே மோதலின்போது
உருவாகும் புதிய நுண்துகளான மியான் (Muon) 1965-இல் கண்டறியப்பட்டது.
இது 1965-ஆம் வருடத்திய சர்வதேச அண்டக்கதிர் ஆராய்ச்சி மாநாட்டில் இது
ஆய்வறிக்கையாக முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அறிவியல் உலகிற்கு பேரிழப்பாக, விஞ்ஞானி
ஹோமி பாபா விமான விபத்தில் (1966) இறந்தார். டாடா ஆராய்ச்சி நிறுவனத்தின்
நிர்வாகக் குழு தலைவரான ஜே.ஆர்.டி.டாடா, உடனடியாக “கோகு’வை பாபாவின்
இடத்தில் நியமித்தார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 01, 2016 7:26 am


நோபல் விஞ்ஞானி சர்.சி.வி.ராமனும் “கோகு’வை தனது ராமன் ஆராய்ச்சிக்
கழகத்தில் (RRI) பணிபுரிய அழைத்து வந்தார். 1970-இல் ராமன் மறைந்தவுடன்
அந்நிறுவனம் ஸ்தம்பித்தது. அப்போது விஞ்ஞானிகள் பலரது வேண்டுகோளை
ஏற்று அந்நிறுவனத்தின் பொறுப்பையும் “கோகு’ ஏற்றார். ராமனின் புதல்வரும்
வானொலி விண்ணியல் விஞ்ஞானியுமான வெங்கட்ராமன் சந்திரசேகர்
“கோகு’வின் வேண்டுதலின் பேரில் ராமன் ஆராய்ச்சிக் கழகத்தின் பொறுப்பை
ஏற்றார்.

அதேபோல, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக
இருந்த விக்ரம் சாராபாயும் 1971-இல் திடீரென மரணமடைந்தார். அதையடுத்து,
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி “கோகு’வை இஸ்ரோ தலைவராகப்
பொறுப்பேற்கச் செய்தார். தவிர அகமதாபாத்தில் இயங்கும் இயற்பியல் ஆராய்ச்சி
ஆய்வகத்தின் (PRL) இயக்குநராகவும் பொறுப்பேற்றார்.

இஸ்ரோவின் தலைவராக 1972 ஜனவரி முதல் அதே ஆண்டு செப்டம்பர்
வரையிலான 9 மாதங்களே இருந்தபோதும், அங்கு தனது முத்திரையை ஆழப்
பதித்தார் “கோகு’.

எனினும், இஸ்ரோவுக்கு முழுநேரமாக கவனம் கொடுக்கும் விஞ்ஞானியே
தகுதியானவர் என்று கூறிய “கோகு”, மிக விரைவில் அப்பதவிக்கு சதீஷ் தவானைத்
தேர்வு செய்து 1972-இல் நியமித்தார். மேலும் விஞ்ஞானி யு.ஆர்.ராவை இயற்பியல்
ஆராய்ச்சி ஆய்வகத்தின் இயக்குநராகவும் நியமித்தார்.

பிரதமரின் அறிவியல் ஆலோசகர், அமைச்சரவையின் அறிவியல் ஆலோசனைக்குழு
தலைவர், திட்டக்குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளில் அரசுடன் இணைந்து
பணியாற்றிய “கோகு’, அரசாங்கத்தில் அறிவியலின் செல்வாக்கை உறுதிப்படுத்தினார்.

உலக அளவில் பல அறிவியல் அமைப்புகளில் கெüரவ உறுப்பினராக உள்ள மேனன்,
பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார். சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1960),
பிரிட்டனின் எஃப்ஆர்எஸ் (1970), இந்திய அரசின் பத்மஸ்ரீ (1961), பத்மபூஷண் (1968),
பத்மவிபூஷண் 1985), உலக அறிவியல் அகாதெமியின் அப்துஸ் சலாம் பதக்கம் (1996)
உள்ளிட்ட பல கெüரவங்களை மேனன் பெற்றுள்ளார்.

1989-90 இல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அறிவியல், தொழில்நுட்பத் துறை
அமைச்சராகவும் மேனன் பணியாற்றியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவும்
(1990- 1996) அவர் இருந்துள்ளார்.

தனது 88-வது வயதிலும், அறிவியல் சார்ந்த பணிகளில் சளைக்காமல் ஈடுபட்டு
வருகிறார் மேனன். அவரைக் கெüரவிக்கும் வகையில், 2008-இல் கண்டுபிடிக்கப்பட்ட
புதிய சிறுகோளான ஆய்டிராய்டு 7564-க்கு “கோகு மேனன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

————————————-
– வ.மு.முரளி
இளைஞர் மணி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 01, 2016 5:57 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 01, 2016 5:58 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக