புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன் Poll_c10ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன் Poll_m10ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன் Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன் Poll_c10ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன் Poll_m10ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன் Poll_c10ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன் Poll_m10ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன் Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன் Poll_c10ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன் Poll_m10ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன் Poll_c10ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன் Poll_m10ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன் Poll_c10ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன் Poll_m10ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 08, 2009 8:50 am

ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன் Pg2


இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ், தி.மு.க. கட்சிகளுக்கு எதிராக பரப்புரை மேற்கொண்டு வருகிறார், இயக்குநர் மணிவண்ணன்.

இதற்கிடையே தன்னிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த இயக்குநர் சீமான், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதால் கொந்தளித்துப் போயிருக்கிறார் அவர். அவரை நாம் சந்தித்தபோது, சீமான் கைது உள்ளிட்ட இலங்கைப் பிரச்னைகள் குறித்துப் பேசினார் அவர்.

``நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டோம் என்கிற விழிப்புணர்வு இங்கே சூடுபிடித்துள்ள நிலையில், நான்காவது முறையாக சீமான் கைது செய்யப்பட்டிருக்கிறார். தேர்தல் வெற்றிக்காக இப்படி சீமான், கொளத்தூர் மணி, வைகோ போன்றவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். இந்தக் கைதுகள், தமிழக மக்களை இந்த அரசுகளுக்கு எதிராகவே திருப்பியிருக்கிறது. சீமானின் பேச்சு தங்களுடைய ஓட்டுக் கணக்கை மாற்றி எழுதி விடும் என்ற அச்சத்தில்தான் காங்கிரஸ் தலைமை `சீமானைக் கைது செய்யுங்கள்' என்று தி.மு.க.வை நிர்ப்பந்திக்கிறது.

`சீமான் கைது செய்யப்பட வேண்டும்' என்று சில ஊடகங்களும் தமிழுணர்வுக்கு எதிராக வரிந்துகட்டி எழுதுகின்றன. அவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் விதமாகவே சீமான் இப்போது நான்காவது முறையாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த முறை தேர்தல் முடியும் வரை வெளிவர முடியாத தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அவர் மீது ஏவியிருக்கிறார்கள்'' என்று கொதித்தவரிடம், சில கேள்விகளை முன்வைத்தோம்.

சீமான் கைது செய்யப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் இலங்கைப் பிரச்னையில் தமிழக முதல்வரின் செயல்பாடு பற்றிய உங்கள் கருத்து என்ன?

``தி.மு.க., ஒரு பலமான, மக்கள் செல்வாக்குள்ள கட்சி; மாநிலத்திலும் சரி, மத்தியிலும் சரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான பிரதிநிதிகளைக் கொண்ட கட்சி, தி.மு.க.!

இலங்கையில் கொடூரமான முறையில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியைத் தந்து தி.மு.க.வால் போர் நிறுத்தத்தைக் கொண்டு வரமுடியும். இந்த நேரத்திலும் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக விமர்சனம் செய்திருக்கிறார், கலைஞர். இந்த விமர்சனத்தை மனசாட்சியுள்ள தி.மு.க.வினர் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சாவு வீட்டில் அமர்ந்து கொண்டு அங்கிருப்பவர்கள் மீது விமர்சனம் செய்வது முறையற்றது என்பதை எல்லா மக்களும் உணர்ந்திருக்கிறார்கள்.

சிங்கள அரசின் வேண்டுகோளை நம்பி வெள்ளைக் கொடியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்த ஈழ மக்களை வயதானவர்கள், இளைஞர்கள், யுவதிகள், குழந்தைகள் எனத் தனித்தனியாகப் பிரித்து, முகாம்களில் அடைக்கிறார்கள். தங்கள் குடும்பத்தினர் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பது தெரியாமல் தமிழர்கள் தினம்தினம் சாகிறார்கள். ஹிட்லரின் நாஜி கான்சென்ட்ரேஷன் முகாமை விட கொடுமையான முறையில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இதெல்லாம் சாதாரண மக்களுக்குத் தெரிந்திருக்கும் போது முதல்வருக்குத் தெரிந்திருக்காதா என்ன?''

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 08, 2009 8:51 am


மத்திய அரசுதான் இலங்கைத் தமிழர்கள் மீதான போரை நடத்துகிறது என்பதுபோலல்லவா பேசுகிறீர்கள்?

``இலங்கைக்கு ராடார்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், ராணுவப் பயிற்சிகள் கொடுத்து வருவது இந்திய மைய அரசுதான் என்று தமிழக மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. இது காங்கிரஸ் மீதான கோபமாக மாறியிருக்கிறது. நிச்சயம் இது தேர்தலில் எதிரொலிக்கும். இன்றைக்கு இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடும் அரசியல் கட்சிகள், தேர்தல் திருவிழா பணிக்குத் திரும்ப வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளன. ஆனால் மாணவர்களும், இளைஞர்களும் காங்கிரஸுக்கு எதிரான இந்தப் பரப்புரையைத் தொடர்ந்து நடத்துவார்கள்.''


எதனடிப்படையில் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்?


``அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்கிறார். ஆனால், இலங்கையில் சார்க் மாநாடு நடந்தபோது சிங்கள எதிர்க்கட்சித் தலைவர்களான ரணில் விக்ரமசிங்கேவும், சந்திரிகாவும் இந்தியா வந்து பிரணாப் முகர்ஜியைச் சந்திக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் வசம் இரண்டரை லட்சம் தமிழர்கள் சிக்கியிருப்பதாக, சிங்கள அரசு சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. இப்போது வெறும் 75,000 தமிழர்கள் மட்டுமே இருப்பதாக அதே அரசு அறிவிக்கிறது. அதே எண்ணிக்கையை சிங்கள எதிர்க்கட்சிகளான ரணிலும், சந்திரிகாவும் சொல்கிறார்கள். பிரணாப் முகர்ஜியும் 75,000 தமிழர்கள்தான் உயிருடன் இருக்கிறார்கள் என்கிறார். இரண்டரை லட்சம் தமிழர்களின் எண்ணிக்கை 75,000 ஆக மாறியது எப்படி? மீதமுள்ளவர்கள் எங்கே போனார்கள்?

இரண்டரை லட்சம் தமிழர்களை 75,000 ஆகக் குறைக்க சிங்கள அரசுடன் அந்நாட்டு எதிர்க்கட்சிகளும் சதித்திட்டம் தீட்டியிருக்கின்றன. அதையொட்டித்தான் முன்கூட்டியே தமிழர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுகிறார்கள். இந்த சதித் திட்டத்தில் இந்திய அரசும் பங்கெடுத்திருக்கிறது. ஏற்கெனவே, ராடார்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ராணுவப் பயிற்சிகளைக் கொடுத்தது போதாது என்று, இந்தப் பாவத்தையும் இந்திய அரசு செய்யப்போகிறது என்றே நான் கருதுகிறேன்.''

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 08, 2009 8:52 am

ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியிருக்கக் கூடாது என்கிற தொனியில் நீங்கள் பேசியிருக்கிறீர்களே?

``ரஹ்மான் இசை மேதை. அவரை விமர்சனம் செய்யும் தகுதி எனக்கு வந்துவிட்டதாகக் கருதவில்லை. தமிழனாக அவர் ஆஸ்கர் விருது வாங்கியதை பெருமையாகவே கருதுகிறேன். உலகமே உற்று நோக்கியிருந்த அந்த ஆஸ்கர் அரங்கில், `எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அவர் தமிழை உச்சரித்தது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. அத்துடன், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டு வரும் வேளையில், இந்த விருதை கனத்த இதயத்துடன் வாங்கிக் கொள்கிறேன் என்கிற ரீதியில் அவர் பேசியிருந்தால், தமிழின அழிப்பு விவகாரம், சர்வதேச அளவில் இன்னும் அதிகமாகக் கவனிக்கப்-பட்டிருக்கும் என்பதைத்தான் நான் பதிவு செய்தேன்.''


சரி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்குத்தான் மக்கள் வாக்களிப்பது?


``தி.மு.க., அ.தி.மு.க. தவிர்த்து, தமிழ்த் தேசியம் மற்றும் ஈழ மக்கள் வாழ்வுரிமை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிகளுக்கே ஆதரவு என்கிற கோரிக்கையை ஈழத் தமிழர்களுக்காகப் போராடி வரும் இயக்கங்கள் முன்வைக்கலாம். தேர்தல் திருவிழாவில் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆயினும் என்னைப் போன்ற அரசியல் சார்பற்ற போராளிகள், அந்த வெற்றிடத்தை நிரப்புவோம். இந்தப் போராட்டத்தினால் ஏற்படும் சொந்த பாதிப்புகளைப் பற்றி கவலைப்படாமல் தமிழர்களுக்கு ஆதரவான எங்கள் நிலைப்பாடு தொடரும்'' என்று குமுறலோடும், வேதனையோடும் பேட்டியை முடித்தார் இயக்குநர் மணிவண்ணன்.

படம்: ஞானமணி

நன்றி குமுதம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக