புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_c10பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_m10பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_c10 
72 Posts - 53%
heezulia
பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_c10பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_m10பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_c10பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_m10பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_c10பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_m10பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_c10பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_m10பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_c10பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_m10பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_c10பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_m10பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_c10பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_m10பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது? Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது?


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 22, 2016 7:33 pm

இது குடிமகளின் கருத்துரை.

ஆண்களுக்குப் பயந்து (அரசு) மதுக்கடைகளுக்கு செல்லமுடியாத பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்! எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி பயந்துகொண்டே இருப்பது! ஆண்-பெண் சமம்  என்பது விவாதங்களில் மட்டும் இருந்தால் போதுமா? இதை நடைமுறைப்படுத்தி நிஜவாழ்வில் சாத்தியமக்க வேண்டாமா என்று கேட்பவர்களுக்கு - இதோ ஒரு உதாரணம், பெண்களின் குடி/மதுப்பழக்கம் – ஆணுக்குப் பெண் நிகரென்று நிரூபிக்க!

ஆண்கள் மதுவருந்துவதை ஏற்கும் இச்சமுதாயம் பெண்களின் குடிப்பழக்கத்தை ஏன் இழிவாகச் சித்தரிக்கின்றது? மதுவருந்துதல் தனிமனித உரிமையா அல்லது பொதுப்பிரச்சனையாகப் பார்க்கப்பட வேண்டுமா? தனிமனித உரிமை என்றெண்ணினால்  பெண்கள் மதுவருந்துவது  மட்டும் ஏன் சமூகச் சீர்கேடாகச் சித்தரிக்கப்படுகின்றது? இதில் ஆண்களுக்கொரு நியாயம்? பெண்களுக்கொரு நியாயமா?
....................
டில்லியில் திறக்கப்பட்ட பெண்கள் மதுக்கடை. தற்போது வியாபாரம் அமோகம்.இவற்றைப் போல் மேலும் திறக்க முடிவு.



இது ஆதங்கப்படும் மனிதனின் கருத்துரை.

பெண்ணியம் என்பது பெண்ணை/பெண்களைத் தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள் மற்றும் சமத்துவமின்மை போன்றவற்றிற்கெதிரான செயல்பாடு அல்லது கோட்பாடு.

க்ளபிங்க் (Clubbing), சமூகமயமாதல் (Socializing), கேளிக்கை விடுதிகள், சோசியல் ஸ்ட்ரெஸ் போன்றவை முக்கிய வெளிக்காரணிகளாக அறியப்பட்டுள்ளது. இவைமட்டுமல்லாது வீட்டிற்குள் நிகழும் ஆண்களின் கேலி, மன அழுத்தம், குழந்தையின்மை, விவாகரத்து, பெற்றோர்களின் தவறான வளர்ப்புமுறைகள் போன்றவைகளும் காரணிகளாகவுள்ளது.  
நல்லதை சொல்லி தவறை கண்டிக்கும் பெற்றோர்கள் இங்கு மிகவும் குறைவு. பிள்ளையை பெற்றெடுத்தால் மட்டும் போதாது, அவர்களை முறையாக வளர்ப்பதும் பெற்றோரின் கடமையாகும். தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை என்பது போல் பிள்ளைகளின் இதுபோன்ற தவறுகளுக்குப் பெற்றோர்களே காரணமாகின்றனர். 

ஆண்களிடத்தில் த்ரில் மற்றும் பொழுதுபோக்கிற்காகத் தொடங்கிய இப்பழக்கம் இன்று சமுதாயத்தில் புற்றுநோய் போல் பரவியுள்ளது. அதேபோல் மதுவருந்துதலென்பது பணம் படைத்த மற்றும் சமுதாய அந்தஸ்துள்ள பெண்களிடத்தில் மட்டுமல்லாது நகர்ப்புற பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்வோரிடத்திலும் பரவிவருகிறது. இன்று இளம்பெண்களிடத்தில் மதுவருந்துவது குற்றமில்லை என்ற நிலைப்பாடு பரவலாக உள்ளது. கேம்பஸ் பார்ட்டி, அலுவலக பார்டிகளில் மதுவருந்துவது நாகரிகமாகக் கருதப்படுகின்றது.

மேற்கத்திய நாடுகளின் தாக்கமும், அவர்களின் பழக்கவழக்கங்களின் மீதுள்ள மோகமும், இன்றைய தவறான சினிமாக்களின் மறைமுகத் தாக்கமும் இளம்பெண்களிடத்தில் மதுப்பழக்கம் உருவாக முக்கியக் காரணமாக உள்ளது. இது குடிப்பழக்கமுள்ள ஆண்களுக்கும் பொருந்தும்.

இன்றைய நிலையில் மது அருந்தாதவர்கள் குற்றவாளிகளாக பாவிக்கப்படுகிறார்கள். நீ மது அருந்தியதில்லையா? நீயெல்லாம் ஆண்மகனா? போன்ற கேள்விகளை நண்பர்கள் என்னிடத்தில் கேட்டதுண்டு. ஒரு ஆண் தன்னை ஆண்மகன் என்று நிரூபிக்க மதுவருந்தினால் மட்டும் போதுமா? வியப்பாக உள்ளது.

தொடர்ந்து வாசிக்க..................

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 22, 2016 7:36 pm

நவீன இந்தியாவில் பெண்கள் சுயமுடிவெடுப்பது வரவேற்கத்தக்கது, அதே நேரத்தில் சுதந்திரம்  மற்றும் கருத்துச் சுதந்தரம் என்பது மதுவருந்தினால் வருமென்பது முற்றிலும் தவறானது. பெண்ணியம் மற்றும் பெண்முன்னேற்றம் என்பது ஆண்களுக்கெதிராக மதுவருந்துவதில் மட்டும்தான் உள்ளதா? பெண்களை சமமாக பாவித்து மரியாதையளிக்கும் ஆண்கள் வெகுகுறைவென்றாலும் எண்ணிக்கையில் இருக்கவே செய்கிறார்கள். அதேபோல் மது அருந்தாத ஆண்களும் இங்கு வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர்.

மதுவருந்துவதால் எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை. மாறாக கற்பழிப்பு, பலாத்காரம், வன்கொடுமைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. 

பெண்ணியம் மற்றும் பெண் பாதுகாப்பைப் பற்றிப் பேசுபவர்கள் இதுபோன்ற பிரச்ச்னைகளுக்கெதிராக குரல் கொடுக்காமலிருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்நிலை பிற்காலத்தில் நிகழவிருக்கும் அவலங்களை வரவேற்பதற்குச் சமம். 

இக்காலத்தில் பெண்கள் தனியே செல்வதே கடினமாக இருக்கும்போது, மதுவருந்திவிட்டு சென்றால் யோசிக்கவே பயமாக இருக்கிறது. பெண்பாதுகாப்பு, பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்பு போன்றவற்றிற்கு முன்னுரிமையளிக்காமல் இதுபோன்ற சமூக சீர்கேட்டை வரவேற்பது இன்னும் வேதனை அளிக்கிறது.

இன்று புருஷன், மகன் எங்கு விழுந்துகிடக்கின்றான் என்று வேதனையில் புலம்பும் பெண்களைப் போல், நாளை பெண்ணைப் பெற்றெடுத்த பெற்றோரும் கணவர்களும் புலம்பும் நிலை வெகுதொலைவில் இல்லை.  நாளைய சந்ததிகளுக்கு `மதுவருந்துதல்` இயல்பானது என்ற நிலை வருமுன் இதைத் தடுக்க வேண்டும்.

மதுவருந்தி தள்ளாடும் இவளல்ல நாம் வேண்டும் புதுமைப் பெண்;
 
‘”வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் கலி யழிப்பது பெண்க ளறமடா கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்”
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்டபார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்.
அமிழ்ந்து பேரிருளாமறியாமையில்
அவலமெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம்
உதயகன்னி உரைப்பது கேட்டீரோ!"

“சாத்தி ரங்கள் பலபல கற்பராம் சவுரி யங்கள் பலபல செய்வராம் மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம் மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம் காத்து மானிடர் செய்கை யனைத்தையும் கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம் ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்”
இதோ இவள்தான் நான் விரும்பும், பாரதி கண்ட புதுமைப் பெண்;

நன்றி:வருண் துபாய்.

மதுவால் வாழ்விழந்த என் தோழிக்கு சமர்ப்பணம். சிந்து சிங்கையில் இருந்து.

GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Mon Aug 22, 2016 8:24 pm

பதிவு நீக்கினால் நன்று.
தமிழ் பாரம்பரியம் சிலவற்றை வெளிப்படுத்தி செய்வதில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 22, 2016 8:34 pm

நாம் சில நேரங்களில் , மூல காரணத்தை மறந்து , பின் விளைவுகளை அலசி கொண்டு இருக்கிறோம் .
நிர்பயா கேசும் அப்பிடியே . எத்தனை பேர்கள் இது எப்பிடி நடந்தது ,இதன் மூல காரணத்தை அறிவார்கள் .
அதைப் பற்றி பேசினால் , பாரபட்ஷம் என்றே கூறுவார்கள் . நிர்பயாவின் உண்மை பெயர் கூட தெரியாது.
பெண்கள் மது அருந்துவது ....அவரவர்கள் சுய விருப்பம் .தடை செய்யமுடியாது .
தனியாக அருந்த வேண்டுமெனில் ,உங்கள் வீட்டில் அருந்துங்கள் --நாலு சுவர் நடுவே . உங்களுக்கும் கஷ்டமில்லை மற்றவர்களுக்கும் கஷ்டமில்லை .
socialising என்று வெளியில் சென்று, கும்மாளம் போடுகிறீர்களா? நம்பகமான துணையுடன் சென்று வாருங்கள் . என்னால் முடியும் எதையும் சமாளிப்பேன் என்ற அசட்டு தைரியமும் ,வீரமும் வேண்டாம்.
கலிகாலம். நம்முடைய அறிவுரைகளை கேட்கும் நிலையில் இவர்கள் இப்போது இல்லை .அவர்கள் செய்யும் தொழில் /சூழ்நிலை / பணத்தாசை /வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் / எதையும் வீட்டுக் கொடுத்து நினைத்ததை சாதித்துக் கொள்ளும் மனோபாவம் அதிகம் வலம் வருகின்றது .

ஒட்டு மொத்தமாக எல்லா பெண்மணிகளையும் கூறவில்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 22, 2016 8:38 pm

பெண்கள் மது அருந்தினால் மார்பக புற்றுநோய்
ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக
அமெரிக்காவின் ஹவுஸ்டன் பல்கலைக்கழக ஆய்வறிக்கை
தெரிவித்துள்ளது.
-


avatar
Guest
Guest

PostGuest Mon Aug 22, 2016 11:41 pm

இவை எல்லாம்  சமூக,சினிமா ஊடகங்களுக்கு  அடிமையாதல்-addiction- காரணமா?

கணினி வீசும்
காதல் வலையில்
காதலே வாழ்வு
இழக்கிறது!

காட்சி வேட்கை
ஐயம் தெளிதல்
காதல் விதிகள்
எதுவும் இன்றி
கணினி வளர்க்கும்
காம அக்கினியில்
சாம்பல் ஆகிறது
தமிழன் உருக்கிய 
பண்பாட்டு நெய்!

இது காமத்துக்கு மட்டுமல்ல, மது,அழகுக்கலை போன்ற பலவற்றுக்கும் பொருந்தும் .

அரிச்சுவடியில் அழகாய்ச் சிரிக்கும்
அம்மா
நேரில் அடிக்க வருகிறாள்
அம்மா என்றதால்"

இந்த சமயத்தில் ரமணியன் அவர்கள் சொல்வதை எண்ணிப் பார்க்க வேண்டி உள்ளது.
நம்முடைய அறிவுரைகளை கேட்கும் நிலையில் இவர்கள் இப்போது இல்லை .அவர்கள் செய்யும் தொழில் /சூழ்நிலை / பணத்தாசை /வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் / எதையும் வீட்டுக் கொடுத்து நினைத்ததை சாதித்துக் கொள்ளும் மனோபாவம் அதிகம் வலம் வருகின்றது .

"அம்மாவையும் நிலவின்
வெளிச்ச வெளியில்
ருசிக்க ருசிக்க
அவள் உருட்டிக் கொடுத்த சோற்றையும்
வளையல் சலசலக்க
அவளது அழகுக் கை
இழுத்து அரைத்த 
அம்மியையும்
நினைவூட்டுகிறது
என் கையில்
மெஹந்தியாக மாறிப்போன மருதாணி!
இந்தக் கவிதை வரிகள் ஆதிரா முல்லை அவர்களின் பட்டாம்பூச்சிகளின் இரவு என்ற கவிதை நூலில் படித்தவை.



அவர் மேலும் சாடுகிறார்,
பிளாஸ்டிக் கவர் என்ன நாங்க எங்க உடலையே பிளாஸ்டிக்கால கவர் செய்து கொள்வோம் என்று கூறுகின்றனர் பலர். அதுவும் எதற்காக எல்லாரையும் கவர் பண்ணுவதற்காகவே. கவர்ந்திழுக்கச் செய்யும் கண்ணழகு, முதல் சொக்க வைக்கும் கால் அழகு வரை அனைத்து உறுப்புகளையும் பிளாஸ்டிக்கினால் வடிவமைத்துக் கொண்டு புகழ் உச்சியில் ஏறி உலகை வலம் வந்து கொண்டு இருக்கின்றனர் பிளாஸ்டிக் இராணிகள் பலர்.

முத்தத்தின் மீது வெறுப்பென்று ஒன்றும் இல்லை
முத்தம் தூய்மையானதுதான்

என்றாலும்………

அவசரமாக ஒரு தீர்மானம்
நிறைவேற்றி விட வேண்டும்
“இனி
மலர்களின் முத்தம் தவிர
வேறு எதனையும்
ஏற்பதில்லை”

இப்படி எழுத்தாளர் கவிஞர் முனைவர் பானுமதி (ஆதிரா முல்லை) தனது எழுத்தில் அவரின் கவிதைகளில் சமூதாய சீர்கேடுகளை சொல்லுவதை ,கலைமாமணி பொன்னடியான் கலந்து கொண்ட கடற்கரைக் கவியரங்கில் சொன்னவையும்
எண்ணிப்  பார்க்க வேண்டியவை.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 23, 2016 9:12 am

மங்கை ஒருத்தி மதுவருந்திக் காரோட்டி
பங்கம் விளைத்திட்டார் பாவம் ! முனுசாமி
என்னும் தொழிலாளி மூச்சை நிறுத்திட்டார்
இன்னுமா வேண்டும் மது ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 23, 2016 2:06 pm

மது ,மாது --கால்தான் வித்தியாசம்
மது அதிகமாக மாதுவின் கால் தடுமாற ,
முனுசாமி, சாமியானார் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Wed Aug 24, 2016 9:58 pm

பெண் சுதந்திரம் என்பது ஆபாச கவிதைகள் எழுதுவதும் ,மது அருந்துவதும் தான் என சில பெண்கள் நினைப்பதின் விளைவு இது...
பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பி(த்தி)ருக்கிறது?
இது ஆண்களுக்கும் பொருந்தும்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 25, 2016 12:45 pm

Hari Prasath wrote:பெண் சுதந்திரம் என்பது ஆபாச கவிதைகள் எழுதுவதும் ,மது அருந்துவதும் தான் என சில பெண்கள் நினைப்பதின் விளைவு இது...
பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பி(த்தி)ருக்கிறது?
இது ஆண்களுக்கும் பொருந்தும்
மேற்கோள் செய்த பதிவு: 1219864

மதுவாக இருந்தாலும்
எதுவாக இருந்தாலும்
மிதமாக இருந்தால்
சுகமாக இருக்கும் .

இது
ஆணுக்கும் சரி
பெண்ணுக்கும் சரி
என்னிக்கும் சரி
இனிக்கும் வரி  .

மது அருந்தும்
மாது அறிவேன்
ஆபாச கவிதையையும், தனது
பாச கவிதையாக எழுதியவர்
யாரையும் அறியேன்
கமலா தாஸை தவிர .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக