புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 5:06 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 4:48 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 1:57 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 1:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 8:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 6:09 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 12:01 pm

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 10:18 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:48 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:41 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:38 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:36 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:34 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:04 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:02 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:43 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:37 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:35 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:41 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:40 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:56 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:43 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:28 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:03 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:57 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சங்கு சுப்ரமணியம் Poll_c10சங்கு சுப்ரமணியம் Poll_m10சங்கு சுப்ரமணியம் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
சங்கு சுப்ரமணியம் Poll_c10சங்கு சுப்ரமணியம் Poll_m10சங்கு சுப்ரமணியம் Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
சங்கு சுப்ரமணியம் Poll_c10சங்கு சுப்ரமணியம் Poll_m10சங்கு சுப்ரமணியம் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
சங்கு சுப்ரமணியம் Poll_c10சங்கு சுப்ரமணியம் Poll_m10சங்கு சுப்ரமணியம் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
சங்கு சுப்ரமணியம் Poll_c10சங்கு சுப்ரமணியம் Poll_m10சங்கு சுப்ரமணியம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
சங்கு சுப்ரமணியம் Poll_c10சங்கு சுப்ரமணியம் Poll_m10சங்கு சுப்ரமணியம் Poll_c10 
1 Post - 1%
சிவா
சங்கு சுப்ரமணியம் Poll_c10சங்கு சுப்ரமணியம் Poll_m10சங்கு சுப்ரமணியம் Poll_c10 
1 Post - 1%
bala_t
சங்கு சுப்ரமணியம் Poll_c10சங்கு சுப்ரமணியம் Poll_m10சங்கு சுப்ரமணியம் Poll_c10 
1 Post - 1%
prajai
சங்கு சுப்ரமணியம் Poll_c10சங்கு சுப்ரமணியம் Poll_m10சங்கு சுப்ரமணியம் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
சங்கு சுப்ரமணியம் Poll_c10சங்கு சுப்ரமணியம் Poll_m10சங்கு சுப்ரமணியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கு சுப்ரமணியம் Poll_c10சங்கு சுப்ரமணியம் Poll_m10சங்கு சுப்ரமணியம் Poll_c10 
297 Posts - 42%
heezulia
சங்கு சுப்ரமணியம் Poll_c10சங்கு சுப்ரமணியம் Poll_m10சங்கு சுப்ரமணியம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சங்கு சுப்ரமணியம் Poll_c10சங்கு சுப்ரமணியம் Poll_m10சங்கு சுப்ரமணியம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சங்கு சுப்ரமணியம் Poll_c10சங்கு சுப்ரமணியம் Poll_m10சங்கு சுப்ரமணியம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சங்கு சுப்ரமணியம் Poll_c10சங்கு சுப்ரமணியம் Poll_m10சங்கு சுப்ரமணியம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
சங்கு சுப்ரமணியம் Poll_c10சங்கு சுப்ரமணியம் Poll_m10சங்கு சுப்ரமணியம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சங்கு சுப்ரமணியம் Poll_c10சங்கு சுப்ரமணியம் Poll_m10சங்கு சுப்ரமணியம் Poll_c10 
6 Posts - 1%
prajai
சங்கு சுப்ரமணியம் Poll_c10சங்கு சுப்ரமணியம் Poll_m10சங்கு சுப்ரமணியம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சங்கு சுப்ரமணியம் Poll_c10சங்கு சுப்ரமணியம் Poll_m10சங்கு சுப்ரமணியம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
சங்கு சுப்ரமணியம் Poll_c10சங்கு சுப்ரமணியம் Poll_m10சங்கு சுப்ரமணியம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கு சுப்ரமணியம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 22, 2016 9:49 pm

சங்கு சுப்ரமணியம் R7TiqnKITivixOVvgQbm+Sangu-Subramanian
-
சுதந்திரச்சங்கு” என்றொரு பத்திரிகை அக்காலத்தில் பிரபலமாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்தியர் அடிமைப்பட்டுக் கிடந்த காலம். சுதந்திரப் போராட்டங்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராகத் தீவிரமாக நடத்தப்பட்டு வந்தது. மக்களின் சுதந்திர வேட்கையை, அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் தூண்டிவிட்ட பெருமை பல பத்திரிகைகளையே சாரும். இவைகள் தாம் இங்கு சுதந்திரப் போராட்டத்தை முன் எடுத்துச் சென்றன.

அம்மாதிரியான பத்திரிகைகள் அக்கால ரூபாயின் மதிப்பிற்கேற்ப ஓரணா, இரண்டணா என்று விலை வைக்கப்பட்டு விற்கப்பட்டு வந்த கால கட்டத்தில், காலணாவுக்கு ஒரு பத்திரிகை வெளிவந்து, லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாயிற்று. அப்பத்திரிகைதான் “சுதந்திரச்சங்கு”. இதன் தலையங்கம் படிக்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். சுதந்திரச்சங்கின் ஆசிரியராக இருந்தவர் சுப்ரமணியம் என்பவர்.

கம்பர் பிறந்த தேரழுந்தூரில் 1905இல் பொருளாதாரத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சுப்ரமணியம்.

“சுதந்திரச்சங்கு” மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டு, அப்பத்திரிகையின் பெயரிலிருந்த பின் பகுதியான ‘சங்கு’ ஆசிரியரான சுப்ரமணியத்துடன் இணைந்து பின்பு சங்கு சுப்ரமணியம் என்றே நிலைத்து விட்டது.

காலணா (கால் அணா) வின் மதிப்பு என்னவென்று இப்போது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நமது இந்திய ஒரு ரூபாய் என்பது இப்போது நூறு (100) பைசாக்களைக் கொண்டது. இந்த பைசா, நயா பைசா சமாசாரமெல்லாம் சமீபத்தில் ஏற்பட்டதுதான். அதற்கு முன்பு ரூபாய், அணா, பைசா என்பது தான் வழக்கத்திலிருந்தது. ஒரு ரூபாய்க்கு, பதினாறு அணா, ஒரு அணாவின் நாலில் ஒரு பங்கு கால் அணா. அந்தக் காலத்தில் ஓட்டைக்காலணா மிகவும் பிரபலம். ஆக ஒரு ரூபாயில் 64 கால் அணாக்கள் அடக்கம். இப்போதைய மதிப்பில் ஒன்றைரப் பைசாவுக்கு சற்று அதிகம். அவ்வளவுதான். லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனை செய்ய வைத்து அதிசயக்க வைத்த இப்பத்திரிகையை எதிர்பாராத விதமாக 1933இல் நிறுத்தும்படியாகவும் ஆகிவிட்டது மிகப்பெரிய துரதிருஷ்டம்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 22, 2016 9:50 pm


“சங்கு” சுப்ரமணியம், சுதேசமித்திரன் பத்திரிகையிலும் சில காலம் பணியாற்றினார். அனுமான், மணிக்கொடி போன்ற இலக்கிய பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றியவர் சங்கு.

மகாகவி பாரதியுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர். சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்ட அனுபவமும் உண்டு. காந்தியின் கொள்கைகள், அதிலும் குறிப்பாகத் தீண்டாமை ஒழிப்பில் பேரார்வம் காட்டியவர்.

அக்காலத்தில் தீண்டத்தகாதவர் என அழைக்கப்பட்டவர்களுக்கு உணவளித்தார் ஒரு பெண்மணி. இதற்காக இப்பெண்மணி மிகப்பெரிய எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியதாயிற்று. இந்தப் பெண்மணியையே மணந்து கொண்டார் சங்கு சுப்ரமணியம்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சங்கு சுப்ரமணியம் உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களின் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.

இவர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து “ஸ்ரீராமானுஜர்” என்கிற திரைப்படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டு அப்படத்தில் ஸ்ரீராமானுஜராகவும் நடித்தார். அப்படத்திற்கு மணிக்கொடி ஆசிரியர் வ.ரா. வசனம் எழுத, பிரபல எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தி, இலக்கியவாதி இதழியலாளர் ந. ராமரத்தினம் போன்றோரும் நடித்திருந்தனர். பாடல்களை பாவேந்தர் பாரதிதாசன் இயற்றியிருந்தார். இப்படம் 1938இல் வெளிவந்தது.

ஜெமினி கதை இலாகாவில் இருந்தபோதுதுதான் அவர்கள் தயாரித்த ‘சக்ரதாரி’ என்னும் படத்திற்கு திரைக்கதை வசனம், பாடல்கள் பொறுப்பை ‘சங்கு’ சுப்ரமணியம் ஏற்று திறம்பட செய்து முடித்தார். ‘சக்ரதாரி’ படம் ஜெமினிக்கு பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

‘லட்டு, லட்டு மிட்டாய் வேணுமா?
ரவா, லாடு பூரியும் வேணுமா?’

மிகவும் பிரபலமடைந்த இந்தப் பாட்டு ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இடம் பெற்ற பாட்டு. பி. பானுமதி மற்றும் குழுவினரால் பாடப்பட்ட இந்தப் பாடலை இயற்றியவர் சங்கு சுப்ரமணியம்.

பல்வேறு மொழி பேசும் சிப்பாய்கள் மத்தியில் பாடப்பட்ட இந்தப் பாடலில் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் அந்தந்தப் பகுதி சிப்பாய்கள் பாடுவதாகக் காட்சி அமைக்கப்பட்டது.

தொடர்ந்து ஜெமினியின் கதை இலாகாவில் பணியாற்றி ‘சந்திரலேகா’, ‘ராஜி என் கண்மணி’ போன்ற படங்களில் பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இவரது மனம் ஆன்மீகத்தை நாடியது. ஜெயதேவரின் ‘கீத கோவிந்தம்’ நூலை தமிழில் மொழி பெயர்த்தார். இது வெகு காலமாக அச்சில் வராமலிருந்து, பல வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ண பிரேமியின் ‘பாகவத தருமம்’ ஏட்டில் பிரசுரம் கண்டிருக்கிறது.

ஆன்மீகத்தில் ஈடுபட்ட சங்கு சுப்ரமணியத்திற்கு பஜனை சம்பிரதாயத்தில் ஆர்வம் கூடி, பஜனைகள் செய்ய ஆரம்பித்தார். தனக்கென்று ஒரு தனிப்பாணியையும் உருவாக்கிக் கொண்டார். இவரது பஜனைகளில் ஆழ்வாரின் பாசுரங்கள், பாரதியாரின் பாடல்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.

இவர் தனது 64வது வயதில் 1969 ஆம் வருடம் இயற்கை எய்தி, வழிபட்டு வந்த கண்ணனின் திருவடியைச் சேர்ந்தார்.

- கிருஷ்ணன் வெங்கடாசலம்
நன்றி- இது தமிழ் காம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக