புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு புதிய சிந்தனை - அர்த்தமுள்ள இந்து மதம்
Page 1 of 1 •
-
ராமகிருஷ்ணா மிஷனைப் போல, உத்தரப் பிரதேசம்
ஷாஜஹான்பூரில் ஸ்ரீராமசந்த்ர மிஷன் என்று ஒன்று
இருக்கிறது. இதனுடைய ஸ்தாபகர் மகாத்மா
ஸ்ரீராம் சந்த்ரஜி ஆவார்கள்.
அவர்களைப் பற்றிய விவரங்களோடு, அவர்கள் எழுதிய
‘சத்யோதயம்’ என்ற புத்தகத்தின் தமிழாக்கம் ஒன்றையும்,
சேலத்தைச் சேர்ந்த நண்பர் திருவேங்கடம் என்பார் எனக்கு
அனுப்பியிருந்தார்.
இந்து மதத்தில் அவர் ஒரு புதிய மார்க்கத்தை உபதேசிக்கிறார்.
எனக்குத் தெரிந்தவரை இந்த மார்க்கம் மற்றவர்கள் சொல்லாத
ஒன்றாகும்.
விக்கிரக ஆராதனையை வெறும் ஸ்தூல ஆராதனை என்று
வருணித்து, அது மனத்தின் உள் நோக்கத்தை அதிகமாகப்
பூர்த்தி செய்வதில்லை என்று சிலர் கூறியிருக்கிறார்கள்.
வெறும் ஸ்தூல வழிபாட்டில் சிக்கியவர்கள் பெரும் ஆன்மிகப்
பயிற்சியைப் பெற்றதில்லை என்று அவர்கள் வாதிக்கிறார்கள்.
ஸ்ரீராம் சந்த்ரஜியும் அதைத்தான் கூறுகிறார் என்றாலும்,
மற்றவர்கள் கூறாத புதிய கருத்துகளையும் கூறுகிறார்.
கோஷ்டி பஜனைகளைப் பற்றி அவர் கூறும்போது,
கூட்டமாக உட்கார்ந்து பஜனை செய்வதில், தெய்வத் தியானம்
விருப்பத்தை நிறை வேற்றுவதில்லை என்கிறார்.
விக்கிரக ஆராதனையும், பஜனைகளும் பக்குவமில்லாத தாழ்ந்த
நிலையில் - ஆரம்ப நிலையில் மட்டுமே பயன்படும் என்கிறார்.
சாதாரணமாக, இன்றைய இளைஞர்களின் மனத்தில் இதே
சிந்தனை தோன்றியிருப்பது கவனிக்கத்தக்கது.
‘‘கோயிலுக்குப் போய் கூட்டத்தோடு கோவிந்தா போடுவதில்
என்ன கிடைக்கிறது?’’
‘‘பஜனைப் பாடல்களை சத்தம் போட்டுப் பாடுவதில் என்ன
பயன் இருக்கிறது?’’ - என்றுதான் இளைஞர்களும் கேட்கிறார்கள்.
ஆத்மாவுக்கு அமைதிப் பயிற்சி அளிப்பது பற்றியும், மனத்தின்
கடிவாளங்களை இழுத்துப் பிடிப்பது பற்றியும், ஸ்ரீராம் சந்த்ரஜியின்
கருத்துகள் சுவையாக இருக்கின்றன.
முழுப் பிரயத்தனத்தோடு தனியாக தியானம் செய்வதை
அவர் வற்புறுத்துகிறார்.
-
----------------------------------------------
இவை அனைத்தையும்விட, லெளகீக வாழ்க்கையில்
இருப்பவர்களுக்கு ஒட்டுமொத்தமாக பற்றற்ற
வாழ்க்கையையும், துறவி வாழ்க்கையையும் போதிப்பதை
அவர் கண்டிப்பதில் அர்த்தமிருக்கிறது.
குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே பற்றுகளை
சமநிலைப்படுத்தி, அளவற்ற ஆசையின்றி பண்பாடாக
வாழும் வாழ்க்கையிலே மதபோதனைகளை போதிக்க
வேண்டுமென்கிறார்.
நூற்றுக்குத் தொண்ணூறு பேர் லெளகீக வாழ்க்கையின்
இச்சைக்கு ஆட்பட்டு வாழ விரும்புகிறார்கள்.
தொல்லைகளையும், துன்பங்களையும் காணும்போது,
அவர்கள் வேதனை அடைகிறார்கள். அந்த வேதனையை
சாக்காகக் கொண்டு, ‘அவர்களை வீட்டைவிட்டு ஓடு’
என்று போதிப்பது என்ன நியாயம் என்று கேட்கிறார்.
அவர் கூறுகிறார், ‘‘உபத் திரவங்களும் இடுக்கண்களும்
ஜீவிதத்தில் பூரணமாக இல்லாமற் போவதென்பது நடக்காத
காரியம்; இயற்கைக்கும் மாறானது.
உண்மையில், அவை நமது மேன்மைக்காகவே ஏற்பட்டவை.
அவை நோயாளிக்கு ஆரோக்கியம் உண்டாவதற்காகக்
கசப்பு மாத்திரைகள் கொடுப்பது போலாகும்.
மிக உயர்ந்த நல்ல வஸ்துவானாலும், சரியான முறையில்
உபயோகப்படுத்தாது போனால், உபத்திரவங்களை
விளைவிக்கும். துன்பங்களின் விஷயமும் இப்படியே
எவற்றையும் சரியான காலத்தில், சரியான முறையில்,
சரியாக உபயோகித்தால், நாளடைவில் அவை நற்பலனை
அளிப்பது திண்ணம்.
உண்மையில் துன்பங்களே நமக்கு மேன்மையான
வழிகாட்டிகள். அவற்றால் நமது மார்க்கம் செம்மைப்படு கிறது.
சாமானிய வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள மனிதனுக்கு அவனை
சரியான முறையிலிருக்கச் செய்ய துன்பங்கள் மிகவும்
உதவியாயிருக்கும்.
குடும்பக் கஷ்டங்களையும், உலக வாழ்க்கையில் உண்டாகும்
துயரங் களையும் பற்றி எனது குருநாதர் இப்படிச்
சொல்வதுண்டு: ‘நமது இல்லமே அமைதியும் பொறுமையும்
அடைய நாம் பயிலுமிடம். கிருஹஸ்தாச்ரமத்தில் நாம் படும்
வறுமை, இடுக்கண்களைப் பதறாது பொறுப்பது நாம் இயற்றும்
பெருந்தவம். இதனிலும் உயரிய தவம் வேறொன்றுமில்லை.
-
-------------------------------------------
இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் நாம் என்ன செய்ய
வேண்டுமென்றால், கோபத்திற்காவது, துக்கத்திற்காவது
இடங்கொடாமல், குறைகூறும் மனப்பான்மையை ஒழித்து
நமது குற்றத்திற்காகவே நாம் அனுபவிக்கிறோம் என்று
நினைத்து, சாந்த மனத்துடன் பொறுமையாய் இருக்க
வேவண்டும். காட்டில் தனித்த வாழ்வும், உலக விஷயங்களில்
கலக்காது விலகி நிற்றலும் சிலருக்குப் பொறுமையையும்,
அமைதியையும் பழகச் சாதனங்களாகும்.
ஆனால், நமக்குப் பந்துமித்திரர்களின் இகழ்ச்சியும்,
சுடுசொற்களும் அரிய பெரிய தவத்திற்கொப்பாகி வெற்றிக்கு
ஒப்பற்ற சாதனங்களாகின்றன.’
‘‘உண்மையில் துன்பங்களையும், சடங்குகளையும் நாம்
அமைதியுடன் பொறுத்தோமேயாகில், அவை நம்மை மேம்
பாட்டடையச் செய்து, மேல்நிலைகளுக்குச் செல்வதற்கு
வேண்டிய முக்கிய சாதனங்களாக ஆகும்.
அங்ஙனம் அல்லாது முரணான வழியில்
உபயோகித்தோமேயாகில், நற்பலன் அழிந்துபோய்
நாமடையவிருக்கும் ஆதாயம் கெட்டுப் போகும்’’
‘‘பரித்தியாகம், அதாவது, பற்றுதலற்ற தன்மை, ஒரு முக்கிய
நிலை என்பதில் சந்தேகமில்லை.
பற்றற்றாலன்றி மாயையின் சிக்கல்களிலிருந்து தப்பமுடியாது.
ஆனால், நாம் மனையை விட்டகன்று, குடும்பம், லெளகீக
விஷயங்கள் எல்லாவற்றையும் புறக்கணித்துத் துறவு பூண்டு
சந்நியாசியாக வேண்டியதில்லை.
இல்லறத்தையும், இல்வாழ்க்கையையும் துறந்து உலக
பந்தயங்களை விட்டுவிட்டு ஏகாந்தத்தை நாடி நிற்பதே
பற்றற்றுப் போவதற்கு ஒரே சாதனம் என்னும் கொள்கையை
நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்.
பலாத்கார முறையில் சர்வசங்க பரித்தியாகம் செய்வது
நிஜமானதன்று. ஏனெனில் உலகத்தைத் துறந்துவிட்டாற்
போலத் தோன்றினாலும்கூட, உட்கருத்தில் அவர்கள்
உலகத்தைப் பற்றிக்கொண்டே நிற்கக் கூடும்.
இல்லற வாழ்க்கையில் நாம் அநேக விஷயங்களை கவனிக்க
வேண்டுமென்பதில் சந்தேகமில்லை. சம்சாரத்தைத் தாங்க
வேண்டும். மக்களின் கல்விக்கு வேண்டிய ஏற்பாடுகளைச்
செய்ய வேண்டும். அவர்கள் வேண்டுவனவற்றை அளித்து,
அவர்களை வெப்பம், குளிர், நோய், துன்பங்கள்,
மற்றெல்லாவற்றிலிருந்தும் காப்பாற்ற வேண்டும்.
இப்படி முக்கியமாக வேண்டியவற்றிற்காக நாம் பணமும்
ஆஸ்தியும் சம்பாதிக்கிறோம்.’’
‘‘இப்படி நாம் சம்பந்தப்பட்டுள்ள விஷயங்களில் அளவு
கடந்து பற்றுதல் கொள்வதே உண்மையில் தீமையாகும்.
இதுவே நமது இடுக்கண்களுக்கு முக்கியக் காரணம்.
ஆனால், விருப்பு, வெறுப்பற்று நமது கடமை என்று நாம்
காரியங்களைச் செய்வோமாகில், உலகப் பற்றுதல்களினின்று
ஒருவாறு விலகியவராகி, அநேக உடைமைகளைப் படைத்து
அவற்றைக் கையாளுபவராயிருப்பினும், உண்மையில்
உலகைத் துறந்தவராகிறோம்.
இத்தன்மையில் உடைமைகள் பலவானால் நமக்கு
ஒப்படைக்கப்பட்டுள்ள தர்மத்தைச் செய்வதற்காகக்
கொடுக்கப்பட்டுள்ளவை என்பதும் தெளிவாகும். சங்க
பரித்தியாகமென்பதற்கு உலகப் பற்றற்றுப் போதல் என்பது
உண்மையான பொருளாம்.
உடைமைகள் இல்லாது போவதென்பது பொருளாகாது.
ஆகையால், இன்றியமையாதவாறு ஆஸ்திகளைப் பெற்று
உலகத்துடன் சம்பந்தம் கொண்டுள்ள இல்லற வாழ்க்கையை,
விஷயங்களில் அளவுக்கு மிஞ்சிய பற்றற்று நடத்தினால்,
பரித்தியாகத்திற்கும், அதன் விளைவான சத்திய நிலை
எய்துவதற்கும் இவை தடையாக மாட்டா.
-
---------------------------------------------
‘‘எண்ணற்ற மகான்கள் ஆயுள் முழுவதும் இல்லற
வாழ்க்கையை நடத்திக் கொண்டே மகோன்னதமான
பூர்ணத்துவத்தை அடைந்திருக்கின்றனர். பரித்தியாகம்
என்பது மனத்தின் உள்நிலை, அது வஸ்துகளின்
நிலையற்றதும் மாறுபடுவதுமான தன்மையை
உணர்த்துவதோடு அவற்றின்மேல் அநிச்சையை உண்டு
பண்ணும்.
மேலும் நித்தியமானதும், மாறுபாடே இல்லாததுமான
சத்தியத்தின் மேலேயே நோக்கம் நிலைத்து, விருப்பு,
வெறுப்பு என்னும் உணர்ச்சிகளும் அற்றுப் போகும்.
உண்மையான வைராக்கியம் (Renunciation) என்பது
இதுவே.’’
‘‘நமது மனத்தின்கண் இந்தப் பாவம் ஏற்பட்டதும் நமக்குப்
பற்றற்றுப்போகும். கிடைத்த மட்டும் திருப்தியடைந்திருப்போம்.
பற்றற்றுப் போகவே, ஸம்ஸ்காரங்கள் உண்டாவது நின்று
போகும். இப்பொழுது எஞ்சியுள்ளது யாதெனில், இதுவரை
சேமித்த ஸம்ஸ்காரங்களை, ஜீவிதத்தில் அனுபவித்துக்
கழிப்பதே.
பிரகிருதியும் ஸம்ஸ் காரங்களை காரண சரீரத்துடன்
அனுபவித்துத் தீர்த்துக் கொள்வதற்காகத் தக்க இடத்தைச்
சிருஷ்டி செய்து நமக்கு உதவி செய்யும்.
இப்படியாகப் புரைகள் கரைந்து போனதும் நாம் சூக்ஷ்மரூபம்
அடைந்து நிற்கின்றோம்’’ ‘‘நமது எண்ணங்களையும்,
செயல்களையும் அடக்குவதற்கு சதா ஒலித்துக்
கொண்டேயிருக்கும் மனம் சரியான முறையில் வேலை
செய்கின்றதா என்பதை கவனிக்க வேண்டும்.
மதபோதகர்கள் மிக்க கசந்த வார்த்தைகளால், மனதைக்
கடிந்து தூஷித்து, அதற்கு கெட்ட பெயர்கள் எல்லாம் இட்டு,
அதை நமது பெரிய விரோதி என்று பழிப்பதைப் பலமுறை
கேட்டிருக்கின்றேன்.
இதன் காரணம் வெட்ட வெளிச்சமாகத் தெரியும். அவர்கள்
நம்மிலுள்ள தீமைகள் எல்லாவற்றிற்கும் மனமே காரணம்
என்று நினைக்கிறார்கள். அதன் காரணமாக மனம் போன
போக்கே போகாது. அதை நசுக்கிவிட வேண்டுமென்று
ஜனங்களுக்குப் புத்தி புகட்டுவர்.
ஆனால், ஜனங்கள் மனத்தின் கவனத் தன்மையைக் கட்டுப்
படுத்தவோ, அதன் சொற்படி கேளாதிருக்கவோ முடியாமல்
இருக்கின்றனர்.
‘‘கோட்பாடுகளைச் சார்ந்து சொல்லப்பட்ட புத்திமதிகளும்,
உபந்நியாசங்களும் கொஞ்சமும் உபயோகப்படுவதில்லை.
உபந்நியாசங்களைக் கேட்ட எவரும் மனமடக்குதல் என்பதை
நடைமுறையில் அடைந்ததேயில்லை. மேலும் தற்காலச்
சூழ்நிலைகளும், சந்தர்ப்பங்களும், மனத்தை மேன்மேலும்
சலிக்கச் செய்கின்றன.
இக்காலத்தில் ஒவ்வொருவரும் ஜீவிதம் நடப்பதே கடும்
போரெனவும், வறுமை, பாதுகாப்பில்லாமை, இடுக்கண்கள்,
போட்டிகள் என்னுமிவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்
அவற்றின் விளைவினின்று தாம் விலகி நிற்க முடியாதென்றும்
நினைப்பர்.
இதனால் எப்போதும் அமைதியின்மையும், மன சஞ்சலமும்
ஏற்படும். இந்தப் பாவம் நமது சுவாசத்திலும் கலந்து உட்சென்று
சூழ்நிலை சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப இழுத்துச் செல்லும்.
நமது தனிமையானது காற்றுக் காட்டிபோல் நமது பாதம்
போகும் போக்கிலேயே போகும் தனது தைரிய சாகஸங்களால்,
இதை எவன் எதிர்த்து நின்று பாதிக்கப்படாமல் தன்னைக்
காத்துக் கொள்கிறானோ அவனே தீரன்’’
. ஸ்ரீராம்சந்த்ரஜியின் இந்தக் கருத்தை நான் முழு மனத்தோடு
ஒப்புக் கொள்கிறேன்.
இந்தத் தொடர் கட்டுரையின் ஆரம்பக் கட்டத்திலேயே இதை
நான் கூறியிருக்கிறேன்.
வாழ்க்கையை வாழ்க்கையாக ஒப்புக் கொண்டு, துன்பங்கள்
வந்தே தீரும் என்பதைப் போதித்து, வருகிற துன்பங்களை
எப்படிச் சமாளிப்பது என்று யோசனையும் சொன்னால்,
சராசரி மனிதனுக்கு அது வழி காட்டும்.
மதத்தின் மீது பற்றுதலையும் ஏற்படுத்தும். நான் படித்தவரை,
பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுளை அடையும் வழி எ
ன்று சொன்னவை எல்லாம் முழுக்க முழுக்கப் பந்தபாசங்களை
அறுத்தெறிந்துவிட்டு வாழ்க்கை பற்றியனவாகவே இருக்கின்றன.
குடும்ப வாழ்க்கையை நடத்திக் கொண்டே ஒருவன் யோகியாக
முடியும். மகான் ஆக முடியும்; முக்தியடையவும் முடியும்;
அதற்கான வழியை இந்துமத போதகர்கள் அதிகம்
சொல்லவில்லை என்பதே என் கருத்து.
வள்ளுவன் அதை வலியுறுத்தியிருக்கிறான். இல்லறத்தில்
துறவறம் என்ற தலைப்பில் சொன்னவர்கள்கூட ஒரு கட்டத்தில்
மனைவியைத் தாய்போலப் பாவிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
உடல் இச்சைகளிலிருந்து விடுபடச் சொல்லியிருக்கிறார்கள்.
ஸ்ரீராம்சந்த்ரஜி எதிலிருந்தும் விடுபடச் சொல்லவில்லை.
அதற்கு ஒரு அளவை நிர்ணயித்து கொள்ளச் சொல்லுகிறார்.
அந்த அளவு என்பது ஏறக்குறையத் திருக்குறளை ஒட்டியே
இருக்கிறது. பகவத் கீதையில் பரந்தாமன் கூறும் மனத்தின்
சமநிலையே, வள்ளுவரும் ஸ்ரீராம்சந்த்ரஜியும் வலியுறுத்தும்
அளவாகும். இன்பங்களையே அனுபவிக்காமல் ஒருவன் துறவு
பூண்டால், அந்த இன்பத்தை நோக்கியே அவன் மனம் ஓடிக்
கொண்டிருக்கும்.
அவன் எந்தக் காலத்திலும் முழு ஞானம் பெற முடியாது.
அனுபவித்து ஞானம் பெற்றவர்கள்தான் தலைசிறந்த
ஞானிகளாகக் காட்சியளிக்கிறார்கள். பற்றற்ற வாழ்க்கை
என்பதற்கு ஸ்ரீராம்சந்த்ரஜி கொடுக்கும் விளக்கத்தை நவநாகரிக
இளைஞர்கள்கூட விரும்பி ஏற்றுக் கொள்ளுவார்கள்.
சத்தியம் உதயமாவதற்குத் தத்துவரீதியாகவும், பிரத்தியட்சக்
கண்ணோட்டத்திலும் அவர் சொல்லும் வழிகளைச் ‘சத்யோதயம்’
என்ற நூல் தெளிவாக விவரிக்கின்றது.
இந்நூலைக் கல்லூரிகளில் பாடப் புத்தகமாக வைப்பதுகூட
பொருத்தமானது என்பது என் கருத்து. இந்தத் தமிழ் நூல்
கிடைக்குமிடம் :
ஸ்ரீராம்சந்த்ரமிஷன், ஷாஜகான்பூர். (உ.பி.)
வரும் - ஏற்றுக்கொள்; தரும் - பெற்றுக்கொள்!
லெளகீக வாழ்கையில் நாம் தவம் செய்கிறோம் என்றும்,
அந்தத் தவம் எத்தகையது என்றும் விளக்கி,
ஸ்ரீராம்சந்த்ரஜி கூறியுள்ள கருத்துகளை நாம் பார்த்தோம்.
உலக இச்சைகளுடனேயே உடைமைகளையும் பெற்று பற்றற்று
வாழ்வது என்ற கருத்து மிகவும் புதியது.
நம்முடைய சுற்றத்தாரும், நண்பர்களும், ஊழியர்களும்
நமக்கு இழைக்கின்ற துயரங்களால் நமது மனம் பக்குவப்
படுகிறது என்கிறார் அவர்.
அது மிகவும் உண்மை. சிலர் நாக்கிலும் உடம்பிலும் ஊசியைக்
குத்திக் கொள்கிறார்கள். சிலர் கூர்மையான ஆணிகளின் மீது
படுத்துப் புரளுகிறார்கள்.
சிலர் கண்ணாடித் துண்டுகளை விழுங்கிக் காட்டுகிறார்கள்.
இந்த யோகங்கள் எல்லாம் சரீரத்தின் புறத்தோற்றம் பதப்படுத்தப்
பட்டு பக்குவம் பெற்றுவிட்டதைக் குறிக்கின்றன.
கடுந்துன்பங்களைத் தாங்கிக் கொள்வதன் மூலம் சரீரம் யோகம்
செய்வதுபோல், பிறர் நமக்கு இழைக்கும் துன்பங்களைத் தாங்கிக்
கொள்வதன் மூலம் உள்ளம் தவம் செய்கிறது. ஆரம்பக் கட்டத்தில்
சிறிய துன்பங்கூடப் பெரிதாகத் தெரியும்.
அது வளர வளர உள்ளம் மரத்துக் கொண்டே வரும். ஒரு கட்டத்தில்
எதையும் தாங்கிக் கொள்கிற சக்தி வந்துவிடும். துன்பங்களின்
மூலம் உலகத்தைக் கற்றுக் கொண்டவன் ஒரு ஞானியைவிடச்
சிறந்த மேதையாகிவிடுகிறான். ஓரளவு துன்பம் வந்தால் அழுகை
வருகிறது.
தொடர்ந்து துன்பங்கள் வந்துகொண்டே இருந்தால், அழுவதற்கு
சக்தி இல்லாமற் போய், வெறுப்பும் விரக்தியும் கலந்த சிரிப்பு
வருகிறது. ஒரு கட்டத்தில் எந்தத் துயரம் வந்தாலும் சிரிப்பது ப
ழக்கமாகிவிடுகிறது. அதுவே ஞானம் வந்துவிட்டதென்பதற்கு
அடையாளம்.
-
ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியான் மெய்நோவ அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்
தள்ளவொணா விருந்துவர சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள்வந்து தட்சணைகள் கொடுஎன் றாரே!
-
- என்றொரு பாடல்.
-
ஒரு மனிதனுக்கேற்பட்ட துயர அனுபவமாம் இது! கற்பனைதான்!
ஆனால், ஒரே நேரத்தில் வரும் துயரங்களின் வரிசையைப்
பாருங்கள். பசு மாடு கன்று போட்டதாம். அடாத மழை பெய்ததாம்.
வீடு விழுந்து விட்டதாம். மனைவிக்குக் கடுமையான நோய் வந்ததாம்.
வேலைக்காரன் இறந்து போனானாம் வயலில் ஈரம் இருக்கிறது,
விதைக்க வேண்டுமென்று ஓடினானாம்.
வழியில் கடன்காரர்கள் மடியைப் பிடித்து இழுத்தார்களாம்.
‘‘உன் மகள் இறந்து போனாள்’’ என்று சாவுச் செய்தியோடு ஒருவன்
வந்தானாம். இந்த நேரத்தில் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து
சேர்ந்தார்களாம். பாம்பு அவனைக் கடித்துவிட்டதாம்.
நிலவரி வாங்க அதிகாரிகள் வந்து நின்றார் களாம். குருக்களும்
தட்சிணைப் பாக்கிக்காக வந்திருக்கிறாராம்.
- ஒரே நேரத்தில் இவ்வளவு வந்து சேர்ந்தால் ஒருவனுக்கு அழுகையா
வரும்? இவ்வளவு துன்பங்களையும் சந்தித்த பிறகு, ஒருவன் மனம்
மரத்துப் போகும்.
மரத்துப் போன நிலையில், துன்பங்களைக் கண்டு பிடிக்காமல்
அலட்சியப்படுத்தத் தோன்றும். ‘‘நாமார்க்கும் குடியல்லோம்,
நமனை அஞ்சோம்’’ என்ற தைரியம் வந்துவிடும்.
சிறிதளவு இன்பமும் பெரியதாகத் தோன்றும்; பேராசை அடிபட்டுப்
போகும். பல ஆண்டுகள் தவம் செய்து பெறுகிற ஞானத்தை விட
இந்த ஞானம் அழுத்தமானது; உண்மையானது; உறுதியானது.
ஆகவே, லெளகீக வாழ்க்கைதான் - அதில் ஏற்படும் இன்ப
துன்பங்கள்தான் - ஒரு மனிதனைப் பக்குவம் பெற்ற
ஞானியாக்குகின்றன.
எனக்கு இதிலும் அனுபவம் உண்டு. என் ஞானம் என்பது என் வாழ்க்கை
அனுபவங்களிலிருந்து திரட்டப் பெற்ற தொகுப்பு நூல்.
பூனையின் மலமே புனுகு ஆவது போல, மோசமான அனுபவங்களே
உண்மையான அறிவை உண்டாக்குகின்றன.
அனுபவங்களே இல்லாமல், இருபது வயதிலேயே ஒருவன் பற்றற்ற
வாழ்க்கையைத் தொடங்கினால், அடுத்துச் சில ஆண்டுகளிலேயே
அவன் லெளகீக வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவான்!
இல்லையேல் கள்ளத்தனமான உறவுகளில் இறங்குவான்.
அந்தத் துறவு போலித்தனமானது. அண்ணா ஒரு முறை சொன்னது
போல் ‘‘படுக்கையில் படுக்க வேண்டும், பாம்பு வர வேண்டும்;
கடிக்க வேண்டும்; உயிர் துடிக்க வேண்டும், ஆனால் சாவு வரக்கூடாது’’
- இப்படித் தினமும் ஒருவனுக்கு நேர்ந்தால், பாம்பே அவனுக்கு
வேடிக்கையான ஜந்து ஆகிவிடும்! பிறகு அது வருமென்று தெரிந்தே
அவன் படுப்பான். கடிக்கும் என்று தெரிந்தே தயாராயிருப்பான்.
கவலைப்பட மாட்டான்.
ஸ்ரீராம்சந்த்ரஜி கூறும் ‘லெளகீக வாழ்க்கையில் தவம்’ என்பது
இதுதான். யார் யாருக்கு நான் சோறு போட்டேனோ, அவர்கள்
எல்லோரும் என் கையைக் கடித்திருக்கிறார்கள்.
அதிலிருந்து யாருக்குப் போடலாம், யாருக்குப் போடக்கூடாது என்ற
புத்தி எனக்கு வந்துவிட்டது. என் படுக்கையிலும் பாம்பு வந்து
என்னைக் கடித்திருக்கிறது. இப்போதெல்லாம் பாம்பைப் பற்றிய
பயமே எனக்கு இல்லாது போய்விட்டது.
துன்பம் துன்பம் என்று ஒவ்வொருவரும் தலையிலடித்துக்
கொள்கிறார்களே! அவர்கள் அந்தத் துன்பந்தான் தங்களுடைய
குரு என்பதை மறந்து போகிறார்கள். கிராமங்களிலே
‘பட்டறி, கெட்டறி’ என்பார்கள். பட்டால்தான் அறிவு வரும்.
கெட்டால்தான் தெளிவு வரும். அறிவும் தெளிவும் வந்த பின்பு
ஞானம் வரும்.
அந்த ஞானத்திலே அமைதி வரும். அந்த அமைதியில் பேராசை,
கெட்ட எண்ணங்கள் எல்லாம் அடிபட்டுப் போகும். பற்று அளவோடு
நிற்கும். உள்ளம் வெள்ளையடிக்கப்பட்டு நிர்மலமாக இருக்கும்.
அதுவே ஸ்ரீராம்சந்த்ரஜி கூறும், ‘லெளகீகத்தில் நாம் செய்யும் தவம்’.
‘‘எனக்கு என்ன சீர் கொடுத்தீர்கள்!’’ என்று சகோதரி ஒரு பக்கம்
கண்ணீர் வடிப்பாள்.
‘‘ஒரு நகையுண்டா நட்டுண்டா?’’ என்று மனைவி உயிரை
வாங்குவாள். பந்துமித்திரர்கள், நாம் வாழ்ந்தாலும் ஏசுவார்கள்;
கெட்டாலும் ஏசுவார்கள். வறுமை ஒரு பக்கம் உடலை வாட்டும்.
அமைதியோடும், நிதானத்தோடும் இவற்றைச் சமாளித்து
உள்ளத்தை ஒருமுகப்படுத்திக் கொண்டால், இந்தத் தவம் பலித்து
விடும்.
எனக்கு வரும் கடிதங்களில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகைத்
துயரத்தால் விம்முவதை நான் காணுகிறேன். அந்தத் துயரங்களை
அவர்கள் அலட்சியப் படுத்தியோ ஜீரணித்தோதான் அமைதி
அடைய வேண்டும்.
-
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றால் போக - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்
-
- என்றொரு வெண்பா.
நீ வருந்தி வருந்தி அழைத்தாலும் வரமுடியாதவை வரமாட்டா!
உன்னோடு ஒட்டிக் கொள்பவை போகச் சொன்னாலும் போகா!
நினைத்து நினைத்து அழுவதேன்?
ஸ்ரீராமசந்தரஜி சொல்வதுபோல், துயரங்களை ஒரு தவம்
என்றெண்ணு. லெளகீக வாழ்க்கையிலே கிடந்து உழலு.
துயரங்களின் மூலம் அனுபவங்களைச் சேகரி.
இதுதான் உலகம் என்று முடிவு கொள். இதுதான் நமக்கு
விதிக்கப்பட்ட பாதை என்று அறிந்து கொள். இறைவனை வழிபடு!
காலை முதல் மாலை வரை நடந்தவற்றையெல்லாம் இரவிலே
மறந்துவிடு.
மறுநாள் பொழுது மயானத்தில் விடியாது -அமைதியில் விடியும்.
அளந்து வாழும் மனத்தின் சமநிலை திருடனுக்குக்கூடக் கிடைத்து
விடும்! பரிதாபத்துக்குரிய கிரகஸ்தனுக்கு அது ஏன் கிடைக்காது?
-
---------------------------------------------
-கவிஞர் கண்ணதாசன்
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை - 600 017.
நன்றி- தினகரன்
-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|