புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருடனாக போலீஸ் Poll_c10திருடனாக போலீஸ் Poll_m10திருடனாக போலீஸ் Poll_c10 
42 Posts - 63%
heezulia
திருடனாக போலீஸ் Poll_c10திருடனாக போலீஸ் Poll_m10திருடனாக போலீஸ் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
திருடனாக போலீஸ் Poll_c10திருடனாக போலீஸ் Poll_m10திருடனாக போலீஸ் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
திருடனாக போலீஸ் Poll_c10திருடனாக போலீஸ் Poll_m10திருடனாக போலீஸ் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருடனாக போலீஸ்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 14, 2017 4:56 am

திருடனாக போலீஸ்

திருடனாக நடித்த போலீஸ்! தெரியாமல் பொறியில் விழுந்த திலீப்


பாவனா வழக்கில், 'போலீஸ் கஸ்டடி'யின் போது வாய்திறக்க மறுத்த பல்சர் சுனில், சிறைக்குள் அனைத்தையும்
ஒப்பித்தது எப்படி, அவரை பொறியில் சிக்க வைக்க சிறப்பு புலனாய்வுக்குழு கையாண்ட, 'ஆபரேஷன் எம்.டி.,'
தந்திரங்கள் என்னென்ன என்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.


தென்னகத் திரையுலகை திடுக்கிடச் செய்த, முன்னணி நடிகை பாவனா பாலியல் பலாத்கார வழக்கின்,
'கிளைமாக்ஸ்' காட்சியாக, மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நடவடிக்கையால் கலங்கிப்போயிருக்கும் மலையாளத் திரையுலகம், 100 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு
ஏற்பட்டிருப்பதாக புலம்புகிறது. காரணம், பல படங்களில் திலீப் கதாநாயகனாக நடித்துகொண்டிருந்தார்.
இப் படங்களில் முதலீடு செய்திருக்கும் தயாரிப் பாளர்கள், படங்களை எப்படி முடிக்கப் போகிறோம் என,
தெரியாமல் முடங்கிப் போயுள்ளனர்.

பாவனா வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்கத் துவங்கியதுமே, திலீப் மீது சந்தேகம் எழுந்தது.
ஆனால், 'திலீப்பிற்கு தொடர்பு இருக்காது' என, ஆளுங்கட்சி தலைவர்களே பேட்டியளித்ததால், அவரை
நெருங்காமல் பின்வாங்கியது போலீஸ். அதன்பிறகு எப்படி அவரை பொறியில் சிக்க வைத்து கைது செய்தது,
அதற்காக என்னென்ன தந்திரங்களை எல்லாம் போலீசார் கையாண்டனர் என்பதுதான் இந்த கைது நடவடிக்கையின்
ஹைலைட்.

சம்பவம் நடந்த அன்று...

கடந்த பிப்.,17, இரவு 10:30 மணியளவில், 'டப்பிங்' முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் நடிகை பாவனா.
வழியில், அங்கமாலி என்ற இடத்தில் வழிமறித்த இருவர் காரில் ஏறி அவரது வாயைபொத்திகத்தி முனை யில் மிரட்டி கடத்தினர்.வழியில் மேலும் மூவர் ஏறிக்கொண்டனர். எதிர்ப்பு தெரிவித்தால் போதை ஊசி போட்டுவிடுவோம் என
மிரட்டி, பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவிலும் பதிவு செய்தனர்.

அதன்பின் அவரை வழியில், அரை குறை ஆடையுடன் இறக்கி விட்டுவிட்டு தப்பியது அந்த கும்பல்.இதுதொடர்பாக,
பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டினை கைது செய்த போலீஸ், ஒட்டுமொத்த கூட்டுச்சதியை கண்டறிந்தது. கடத்தல் திட்டத்தின், 'மாஸ்டர் மைண்ட்' பல்சர் சுனிலை கைது செய்து சிறையில் அடைத்தது. இதன்பின்தான் இவ்வழக்கில்
பரபரப்பு தொற்றிக்கொண்டது.

மலையாளத் திரையுலகின் முப்பெரும் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் திலீப்தான், 'பாவனா பாலியல்
பலாத்கார வழக்கின் முக்கிய குற்றவாளி' என, கண்டுபிடித்தது. இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு
(எஸ்.ஐ.டி.,), திலீப்புக்கு பொறி வைக்கக் கிளம்பியபோதுதான், கேரளாவை ஆளும் மா.கம்யூ., தலைவர்களில் சிலர்,
திலீப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். ஏன், முதல்வர் பினராயி விஜயனே அளித்த ஒரு பேட்டி யில்,
''பாவனாவழக்கில் கூட்டு சதி இல்லை,'' என ஒருபோடு போட்டார்.

முதல்வரே முட்டுக்கட்டை போட்டுவிட்டதால் பின்வாங்கிய ஸ்பெஷல் டீம், தகுந்த ஆதாரங்களை திரட்டாமல்
திலீப்பை துாக்கினால் பிரச்னை வரும் என கணித்தது. ஏற்கனவே, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட
'மாஸ்டர் மைண்ட்' பல்சர் சுனிலும், அவனைச் சார்ந்தவர்களும் 'வாய்திறக்காத'தால், திலீப்பிற்கு எதிரான
ஆதாரங்களை திரட்ட, அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. அதுதான்,'
ஆபரேஷன் - எம்.டி.,' (ஆங்கிலத்தில் 'எம்' என்றால் மொபைல் போன் - 'டி' என்றால் திலீப்)

சிறையில் 'செட்டப் கைதி'

போலீஸ் கஸ்டடியின் போது, உண்மையை மறைத்து திலீப்பை காப்பாற்றிய மிதப்பில், காக்க நாடு சிறையில்
ஜாலியாக படுத்து பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தான் பல்சர் சுனில். அவன் அடைக்கப்பட்டிருந்த 'பிளாக்'கில்
அன்றைய தினம் கூடுதலாக மூன்று கைதிகள் அடைக்கப்பட்டனர்.

அவர்களில் இருவர் வழிப்பறித் திருடர்கள்; ஒருவர் புலனாய்வுப்பிரிவு போலீஸ்காரர். திருட்டு வழக்கில் கைது
செய்தது போன்று, 'செட்டப்' செய்து அனுப்பி வைத்திருந்தது ஸ்பெஷல் டீம். பல்சர் சுனிலுடன் நெருங்கிப்பழகிய
'செட்டப்' கைதி, அவனது முன் ரகசியமாக பேசுவது போல, தன்னிடம் இருந்த மொபைல்போனை பயன்படுத்தி
வெளியில் உள்ள நபர்களிடம் பல முறை பேசினார்.

தொ.அ.ப



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 14, 2017 4:59 am

தொடர்ச்சி

இதைப்பார்த்த பல்சர் சுனிலுக்கு, 'நாமும் வாங்கி பேசலாமே' என்ற ஆசை துளிர்த்தது. அந்த போனை வாங்கி, திலீப்பின் உதவியாளர் மூலமாக, திலீப்பி டம் பேசத்துடித்தான்.'சிறைக்குள் உனக்கு மொபைல் போன் கொடுத்தது யார்?' என, விசாரித்தான். தனக் கும் ஒன்று வேண்டுமென கெஞ்சினான். 'வெளியில் யாரிடமும் சொல்லாதே' எனக்கூறி, அந்த மொபைல் போனை பல்சர் சுனிலிடம் கொடுத்தார் 'செட்டப்' கைதி.

'இது ஸ்பெஷல் டீம் விரித்த மாய வலை' என்பதை அறியாத பல்சர் சுனில், திலீப்பின் உதவியாளர் அப்புன்னி உள்ளிட்ட சிலருக்கு போன் போட்டு பேசினான். ஒரு கட்டத்தில் பணம் கேட்டு மிரட்ட வும் துவங்கினான். இதை எல்லாம், ரகசியமாக 'கேட்டுக்கொண்டிருந்தது', சிறப்பு புலனாய்வுக்குழு. ஒரு கட்டத்தில் திலீப்பிற்கும், பல்சர் சுனிலுக்கும் போனில் வாக்குவாதம் முற்றியது.

பாவனா பாலியல் பலாத்காரம் தொடர்பாக பல்வேறு

விஷயங்களை போனில் அக்குவேறு, ஆணி வேறாக விளாசிய சுனில், அதன் வீடியோ பதிவுகள் குறித்தும் கோபத்துடன் பேசினான். அனைத்தையும், 'ரெக்கார்டு' செய்த போலீஸ், அடுத்த நாளே, 'ஸ்கெட்ச்' போட்டு சில இடங்களில் சோதனை நடத்தியது.

திலீப் பின் மனைவி காவ்யாமாதவன் பொறுப் பில் இருந்த, 'பாவனா பலாத்கார வீடியோ' அடங்கிய மெமரி கார்டை பறிமுதல் செய்தனர். இவ் விவகாரத்தில், இரு எம். எல்.ஏ.,க்கள் - ஒரு எம்.பி.,யிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அட, அதிலும் தொடர்பா?

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணத்திற்கும், திலீப்பிற்கும் தொடர்பு இருப்ப தாக புதிதாக ஒரு பூகம்பம் கிளம்பி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி, கேரள மாநிலம், கொச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க் கப்பட்ட, மலையாள காமெடி நடிகர் கலாபவன் மணி உயிரிழந்தார். கலாபவன் மணி அருந்தி யிருந்த மதுவில் ரசாயனக் கலப்பு இருந்தது அம்பலமானது. இவ்வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ.,யின் பார்வை, தற்போது திலீப்பின் மீது விழுந்துள்ளது.

கலாபவன் மணியும், திலீப்பும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்ததாகவும், அதில் பிரச்னை எழுந்த நிலையில்தான், கலாபவன் மணி மர்மமான முறையில் மரணம் அடைந்த தாக, அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் புகார் கிளப்பியுள்ளார்.

முன்பே சொன்னார் மஞ்சு!
நடிகை காவ்யாமாதவனுடன் திலீப் நெருங்கிப் பழகுவதை, முதல் மனைவி மஞ்சுவாரியாரி டம் தெரிவித்ததே நடிகை பாவனாதான். இதுதான், அவர் மீதான திலீப்பின் பழிவாங்கும் செயலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

மஞ்சுவாரியார் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில்தான் காவ்யாமாதவனை, திலீப் இரண்டாம் திருமணம் செய்தார். பாவனா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோதே, திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக முதலில் புயலை கிளப்பியவரும் மஞ்சுவாரியார் தான். தற்போது அவரது கூற்று உறுதியாகி இருக் கிறது.

நன்றி -தினமலர்  கேரளா நிருபர் -

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 14, 2017 5:03 am

சினிமா படம் எடுக்கலாம் போலுள்ளதே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 14, 2017 4:56 pm

T.N.Balasubramanian wrote:சினிமா படம் எடுக்கலாம் போலுள்ளதே.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245460

ஆமாம் .... அப்படித்தான் உள்ளது .. இதோ நிலை தமிழகத்தில் என்றால் இந்த வழக்கு எப்படி முடித்துவைப்பார்கள் ...

மீண்டும் மின்சார ஒயரா .....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 14, 2017 6:37 pm

சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு
பாராட்டுகள்....
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக