புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 27%
சிவா
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
310 Posts - 42%
heezulia
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
6 Posts - 1%
prajai
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 1%
manikavi
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெடுதலைக்காரர்கள்……..! (ஒருபக்கக் கதை)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 09, 2017 12:00 pm

கெடுதலைக்காரர்கள்……..! (ஒருபக்கக் கதை)

நெல்லியான் அவனுடைய பெயர்; நெல்லியானும் நானும்தான் ஒன்றாகத் திரிவோம்; ‘இரட்டையர்கள்’என்று எங்களைச் சொல்வார்கள்!

நான் ஒன்றாம் வகுப்பில் சேரப்போகும்போது அவனும் கூடவந்ததால் அவனையும் எங்கப்பாவிடம் சொல்லி ஒன்றாம் கிளாசில் சேரச் செய்தேன்! “எப்பா! எங்களுக்கு ஒண்ணும் தெரியாதுப்பா; நீ எப்படிப் படிக்கிறாயோ அதே படிப்பில் நெல்லியானையும் சேர்த்து விட்டுடுப்பா” என்ற அவனின் அப்பா சொன்னதை நான் நெடு நாட்களுக்கு மறக்காமல் அப்படியே செய்துவந்தேன்!

பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரிப் படிப்பிலும் இரண்டு பேரும் ஒரே வகுப்பில் சேர்ந்தோம்! அதன்பிறகு , நான் முனைவர் பட்டப் படிப்பிற்காக சென்னை வந்தபோது நெல்லியானையும் கூட்டிக்கொண்டு வந்தேன்! எனது பேராசிரியர் மூலமாக ஓர் அச்சகத்தில் பொறுப்பாளர் வேலையும் கிடைக்கச் செய்தேன்; இருவரும் அப்போதும் ஒரே அறையில்தான் தங்கினோம்!

ஒருநாள் இருவரும் எங்கள் சொந்த ஊருக்குப் போயிருந்தபோது , என் அம்மா , “ஏண்டா! நீ உனது உதவித் தொகையை எனக்கு அனுப்புகிறாய் சரி! அதை நான் கண்டபடி செலவு செய்யறதா எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு இருக்கிறாயாமே? … இந்தாப்பா ! ..நீ இனி ஒத்தப் பைசா எனக்கு அனுப்பவேண்டாம்! தெரிஞ்சதா?” – என்றைக்குமில்லாமல் சத்தம் போட்டார்கள்!

எனக்குள் ஒரு மின்னல்! - நான் வீட்டுக்குப் பணம் அனுப்புவது பற்றி நெல்லியானிடம் மட்டும்தான் கூறியுள்ளேன்! வேறு யாருக்கும் தெரியாது! .. அப்படியானால் அவன்தான் ஏதோ கூடுதல் குறைச்சலாக அம்மாவிடம் போட்டுக்கொடுத்துள்ளான் !

நேரே நெல்லியானைப்போய்ப் பிடித்துவந்தேன் !

அம்மா பக்கத்தில் நிற்கவைத்தேன்! “டேய்! அம்மா கிட்ட என்னடா சொன்னே? . பணத்தை அம்மா கண்டபடி செலவு பண்றதா நான் ஒங்கிட்டே சொன்னேனாடா?” என்று இரைந்தேன்!

அவன் அப்படியே திருடன் மாதிரி திருதிருன்னு முழித்தான் !

“இல்லியே ! நீ எங்கே அப்படிச் சொன்னாய்?” – மென்று முழுங்கினான் !

“சரிப்பா! இனி உன் சமாச்சாரமே எனக்கு வேண்டாம் ! என் முகத்திலே முழிக்காதே போ!” – என்று துரத்திவிட்டேன் !

அதற்கு முன் நடந்த சில சம்பவங்கள் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தன!

என் அக்காள் ஒருநாள் “ஏண்டா! எனக்கு அத்தான் வீட்டில் செய்த தாலியில் அரக்கு எவ்வளவு இருக்குன்னு ஒன்னக் கேட்டாங்களா? நீ ஏன் அதப்பத்தி மத்தவங்க கிட்ட சொல்லிக்கொண்டு இருக்கிறாய்?” என்று சண்டைக்கு வந்தார்கள் !
- அதுவும் நெல்லியான் வேலைதான் என்று இப்போது புரிந்தது !

இன்னொருநாள், “டேய் ! உங்க சித்தப்பா சொத்து விஷயத்தில் ஒன்ன ஏமாத்திட்டதா , சொல்லிக்கொண்டிருக்கிறாயாமே?” என்று அம்மா என்னைச் சத்தம் போட்டார்கள்!
- அதுவும் நெல்லியான் வேலைதான் என்று இப்போ தெரிந்தது !

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாக இருந்து எத்தனையோ நன்மைகளைச் செய்து அவனை மனிதனாக்கிய எனக்கு ஒரு சமுதாய உண்மையைச் சொல்லித் தந்துள்ளான் நெல்லியான் !

‘கெடுதலைக்காரர்கள்’ எனத் தனியாக நன்றிகெட்ட மனித இனமே நமிடையே ஒன்று உள்ளது !




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 09, 2017 11:31 pm

எதிர்மறையாக தாம் சொல்ல நினைப்பதை ,
மற்றவர் சொன்னதாக கூறி ,மகிழும் ஜென்மங்கள்,
இன்றளவும் நம் கூட இருக்கிறார்கள் ,என்பது நான் கண்கூடாக
கண்டதுண்டு.

சூப்பருங்க

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 10, 2017 6:31 am

வெளிப்பகை கண்ணுக்குத் தெரியும் ; ஆனால் உட்பகை கண்ணுக்குத் தெரியாது . எனவே வெளிப்பகையைவிட உட்பகை மிகவும் ஆபத்தானது ,

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு .

என்பது ஐயனின் வாக்கு .

நெல்லியான் போல உட்பகை என்றும்
....நீங்க நிழலாய் நம்முடன் இருந்து
தொல்லை தருவர் தினமும் ஒன்றாய் !
...தொல்லை எல்லை மீறும் முன்பாய்
புல்லைப் பிடுங்கி எறிதல் போல
...புல்லர் தொடர்பை அறவே நீக்கும்
வல்லமை ஒன்றே நம்மைக் காக்கும்
...வழியென அறிந்து அதனை செய்வோம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 10, 2017 11:54 am

கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) 1571444738 கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 10, 2017 7:47 pm

ஐயா !

" கெடுதலைக்காரர்கள் " என்ற தங்களது சொற்பயன்பாடு புதுமையாக உள்ளது .

கெடுதல் செய்வோரை கெடுதலைக்காரர்கள் என்று அழைத்தால்
நன்மை செய்வோரை நன்மைக்காரர்கள் என்றும்
உண்மை பேசுவோரை உண்மைக்காரர்கள் என்றும் ,
பொய் பேசுவோரை பொய்மைக்காரர்கள் என்றும் அழைப்பது
சரியாகுமா ?


மற்றவர்களுக்குக் கெடுதல் செய்பவனை  " கேடன் "  என்ற சொல்லால் வள்ளுவர் அழைக்கின்றார் .

அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின் .  

என்பது ஐயனின் வாக்கு .

" கெடுதலைக்காரர்கள் " என்ற சொற்பயன்பாடு நம் தமிழிலக்கியங்கள் எங்காவது பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் அறிய ஆவலாக உள்ளேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 10, 2017 8:09 pm

அருமை ஜெகதீசன் அவர்களே!
முகவை மாவட்டத்தில் , ‘கெடுதலைக் காரன்’ என்று கூறும் வழக்கு உள்ளது!
இடையில் வந்த ‘ஐ’ , சாரியை (Euphonic extention)ஆகும் !
‘நன்மைக்காரர்’ , ‘உண்மைக்காரர்’ என்பவற்றில் இடையே உள்ள ‘ஐ’ , சாரியை அல்ல! விகுதியே !
மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக