புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_m10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10 
53 Posts - 47%
heezulia
சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_m10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_m10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_m10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_m10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10 
3 Posts - 3%
jairam
சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_m10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10 
2 Posts - 2%
சிவா
சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_m10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10 
1 Post - 1%
Manimegala
சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_m10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_m10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_m10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_m10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10 
15 Posts - 4%
prajai
சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_m10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_m10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10 
6 Posts - 2%
jairam
சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_m10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_m10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_m10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10 
3 Posts - 1%
Rutu
சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_m10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_m10சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?


   
   
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Mon Jan 22, 2018 9:18 pm

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?


பிரதமர் நரேந்திர மோடி நெருக்கடிநிலையை அறிவிப்பார் என்று அவரது கட்சிக்காரர்களே அச்சம் தெரிவித்தார்கள். ‘தடா’.. ‘பொடா’போல ஒரு பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவருவார் என்று மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் எச்சரித்தார்கள். பாகிஸ்தானுடன் போர் துவங்கக்கூடும், பொதுத் தேர்தலே நடத்தப்படாமல்கூடப் போகலாம் என ஊடகங்களில் சிலர் எழுதினார்கள். இதில் எதுவுமே நடக்கவில்லை.

புதிதாக எதையும் செய்யாமலேயே இந்திய ஜனநாயகத்தைச் சர்வாதிகாரமாக மாற்றிவிட முடியும் என இன்றைய ஆட்சியாளர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஹஜ் மானிய ஒழிப்பில், எப்படி உச்ச நீதிமன்றத்தின் பழைய தீர்ப்பு ஒன்றைப் பயன்படுத்திக்கொண்டார்களோ, அதுபோலவே முந்தைய ஆட்சிகளில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளைச் செயல்படுத்தியே ஒரு சர்வாதிகார ஆட்சியை அமைப்பதற்கு அவர்கள் இப்போது திட்டமிடுகிறார்களோ என்று தோன்றுகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் திட்டம் அவர்களுக்கு வரப்பிரசாதமாக வாய்த்திருக்கிறது. அடுத்ததாக அவர்களது கண்ணில் பட்டிருப்பது, வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்ட மலிமத் கமிட்டி அறிக்கை.

தூசு தட்டப்படும் மலிமத் அறிக்கை

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் எல்.கே.அத்வானி துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்தபோது, இந்தியாவின் குற்றவியல் சட்டங்களையும், நீதி நிர்வாக முறையையும் ‘சீர்திருத்தும்’ நோக்கத்தோடு 2000-ல் அமைக்கப்பட்டதுதான் மலிமத் கமிட்டி. அப்போது சட்ட அமைச்சராக இருந்தவர் வேறு யாருமல்ல, இப்போது பிரதமர் தலைமையிலான மூவர் அணியின் முக்கியமான உறுப்பினராக இருக்கும் அருண் ஜேட்லிதான்.

கர்நாடக, கேரள நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி அனுபவம் கொண்ட நீதிபதி மலிமத் தலைமையிலான கமிட்டி 2003-ல் தனது அறிக்கையை அளித்தது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையில், ‘தேசியக் குற்றவியல் கொள்கை’ ஒன்றை உருவாக்க, 2007-ல் பேராசிரியர் மாதவ மேனன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது காங்கிரஸ் அரசு. அந்தக் குழுவும் வரைவுக் கொள்கை ஒன்றை உருவாக்கி வழங்கியது. ஆனால், அதற்கு மேல் எதுவும் நடக்கவில்லை. இப்போது திடீரென்று மலிமத் கமிட்டி அறிக்கையை மோடி அரசு தூசு தட்டி எடுத்திருக்கிறது. அதன் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது பற்றி தீவிரமான பரிசீலனையிலும் இறங்கியிருக்கிறது. இந்தியாவின் குற்றவியல் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்காக மலிமத் கமிட்டி முதலில் ஒரு வினாப் பட்டியலைத் தயாரித்தது. அதைப் பிரதமர், முதலமைச்சர்கள், காவல் துறை அதிகாரிகள், பார் கவுன்சில் தலைவர்கள் உள்ளிட்ட 3,164 பேருக்கு அனுப்பியது. ஆனால், வெறும் 284 பேர் மட்டுமே அதற்குப் பதில் தந்தனர்.

சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்புகொண்ட மாநில அரசுகளுக்கும் அவர்களது கருத்துகளைக் கேட்டு மலிமத் கமிட்டி கடிதம் எழுதியது. ஆறு மாநிலங்கள் மட்டுமே பதிலளித்தன. தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பான்மையான மாநிலங்கள் அதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை.

பிரச்சினைக்குரிய பரிந்துரைகள்

ஒரு சில இடங்களில் கருத்தரங்குகளை நடத்திவிட்டுத் தனது அறிக்கையை அது தயாரித்துவிட்டது. இரண்டு பாகங்கள் கொண்ட அந்த அறிக்கையில், 23 தலைப்புகளின்கீழ் 158 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அந்தப் பரிந்துரைகள், நீதி நிர்வாக முறையின் அடிப்படைகளையே மாற்றுவதாக இருக்கின்றன என்பதுதான் பிரச்சினை.

‘குற்றம்சாட்டப்பட்டவர் அது நிரூபிக்கப்படும்வரை அப்பாவியாகவே கருதப்பட வேண்டும். அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்களுக்கு அவரையே சாட்சியாக்கக் கூடாது. குற்றத்தை நிரூபிக்க வேண்டியது பிராசிகியூஷன் தரப்பின் பொறுப்பு. எவர் ஒருவருக்கும் நியாயமான விசாரணை கோருவதற்கான உரிமை உள்ளது’ - இதுதான் குற்றவியல் நீதிமுறையின் அடிப்படை. இந்த அடிப்படைகளையே மலிமத் கமிட்டி உடைக்கச் சொல்கிறது. ‘குற்றம்சாட்டப்பட்டவரிடமிருந்து நீதிமன்றம் எழுத்துபூர்வமாக வாக்குமூலம் பெற வேண்டும், அவரை முன்னறிவிப்பு இல்லாமல் அழைத்து விசாரிக்க வேண்டும், அவரது வாக்குமூலத்தை அவருக்கு எதிரான சாட்சியமாகப் பயன்படுத்த வேண்டும்’ எனக் கூறியுள்ள மலிமத் கமிட்டி, அதற்காகக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 313-ல், மூன்று உட்பிரிவுகளைச் சேர்க்க வேண்டும் எனக் கூறுகிறது.

‘ஒரு குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும் என்று தற்போதுள்ள நடைமுறையைத் தளர்த்தி, ‘நீதிமன்றம் நம்பினால் போதும்’ என்று அதை மாற்ற வேண்டும்’ என மலிமத் கமிட்டி கூறியுள்ளது. நீதிபதிகளின் எண்ணிக்கையைத் தற்போது உள்ளது போல ஐந்து மடங்கு கூட்ட வேண்டும் எனக் கூறியிருக்கும் மலிமத் கமிட்டி, ‘உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்குச் சில சிறப்பு அதிகாரங்கள் தரப்பட வேண்டும்’ எனப் பரிந்துரை செய்துள்ளது. ‘சக நீதிபதி எவரையும் குறிப்பிட்ட வழக்குகளை விசாரிக்காமல் தடுக்கவும், அவருக்குக் கண்டனம் தெரிவிக்கவும், குறிப்பிட்ட காலம் வரை அவருக்கு வழக்குகளே தராமல் நிறுத்திவைக்கவும், அவரை விருப்ப ஓய்வில் செல்லுமாறு அறிவுறுத்தவும், அவர் மீது ‘இம்பீச்மென்ட்’ நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கவும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அதிகாரம் வழங்க வேண்டும்’ என்கிறது மலிமத் கமிட்டி.

மாநில உரிமைக்கு ஆபத்து

தற்போது, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிராக நான்கு மூத்த நீதிபதிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், இந்தப் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால் என்ன ஆகும் என்பதை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

‘சட்டம் - ஒழுங்கு இப்போது மாநிலப் பட்டியலில் இருக்கிறது. பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்படும் குற்றங்களை விசாரிக்க ஃபெடரல் சட்டம் இயற்றப்பட வேண்டும். அந்த வழக்குகளை மாநில நீதிமன்றங்களில் விசாரிக்காமல், அதற்கென உருவாக்கப்படும் ஃபெடரல் நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும். இந்த அதிகாரத்தை மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் சேர்க்க வேண்டும்’ என்கிறது மலிமத் கமிட்டி. இது அப்பட்டமாக மாநில உரிமையைப் பறிக்கும் யோசனையாகும்.

‘ஒருவர், துப்பாக்கி போன்ற ஆயுதம் எதையேனும் வைத்திருந்தாலே அவருக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கலாம்’ என்பது மலிமத் கமிட்டியின் ஆபத்தான பரிந்துரைகளில் ஒன்று. சில வரவேற்கத்தக்க பரிந்துரைகளும் உள்ளன. ‘கர்ப்பிணிப் பெண்ணுக்கோ, ஏழு வயதுக்குக் கீழே குழந்தை உள்ள பெண்ணுக்கோ தண்டனை விதிக்கப்பட்டால், அவரை வீட்டுக் காவலில் வைக்கலாம். திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் பெண்ணுக்கும் மனைவியைப் போலவே உரிமை இருக்கிறது.

சாட்சி சொல்பவர்களுக்குப் பாதுகாப்பு, பயணப்படி வழங்க வேண்டும்’ என்பன போன்றவை அவை. ஆனால், ஆகப்பெரும்பாலான பரிந்துரைகள் தற்போதுள்ள தண்டனைச் சட்டத்தையும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தையும் ‘தடா’, ‘பொடா’ போன்ற பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களாக மாற்றுவதாகவே இருக்கின்றன.

‘போலீஸ் அதிகாரியின் முன்னால் அளிக்கும் வாக்கு மூலத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு பொடா சட்டத்தின் பிரிவு 32-ஐப் போலத் தற்போதுள்ள சாட்சிய சட்டத்தைத் திருத்த வேண்டும். தகவல் தொடர்பை இடைமறித்து ஒட்டுக் கேட்பதற்கு ஏதுவாக பொடா சட்டத்தில் 36 முதல் 48 வரை உள்ள பிரிவுகளை முன்மாதிரியாகக் கொண்டு, சட்டத் திருத்தங்களைச் செய்ய வேண்டும்’ என்பன போன்ற பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்தால், சாதாரண குடிமகனின் அடிப்படை உரிமை என்பது, ஆவியாகிப் போய்விடும்.

மலிமத் கமிட்டியின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால், அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்ப்பதாகத்தான் இருக்கும். தனது அடிப்படை உரிமைகளின்மீது மதிப்புகொண்ட எந்தவொரு குடிமகனும், மத்திய அரசின் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க முடியாது.

- ரவிக்குமார், எழுத்தாளர்,

நன்றி - தமிழ் இந்து

அழுகை அழுகை அழுகை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 23, 2018 9:50 am

புதிய இந்தியா பிறந்துவிட்டது



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக