புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ட்ரெஸ் உடலுக்கு நல்லது... எப்பொழுது தெரியுமா?
Page 1 of 1 •
மன அழுத்தம், இதை எல்லா வயதினரும், பல அன்றாட அனுபவங்களுக்கு ‘ஸ்ட்ரெஸ்’, ‘டென்ஷன்’ என்று குறிப்பிடுவோம். இதனால் நமக்கு நன்மை, தீமை இரண்டும் நேரலாம். எந்தத் தருணங்களில் இது நமக்கு உதவுகிறது என்பதை முதலில் பார்வையிட்டு, பிறகு எப்பொழுது பாதிப்பு ஏற்படுகிறது என்பதையும், அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
‘யூஸ்ட்ரெஸ்’: ஜமாய்க்க வைக்கும் ஸ்ட்ரெஸ்
ஒன்றிற்காகக் கடினமாக உழைத்து, அல்லது தீவரமாக தயார் செய்து, செயல் படுத்தும் நேரங்களில், நாம் அனுபவிப்பது நன்மை தரும் ஸ்ட்ரெஸாகும். நம் தினசரி வாழ்வில் நிகழ்கின்றதுதான். ஓர் சில உதாரணங்கள்: நமக்குப் பிடித்த ஒருவருக்குப் பிறந்த நாள் என்று திடீரென்று ஞாபகம் வர, அவர்களுக்கு உடனடியாக நாமே ஒன்றை தயாராக்கித் தருவது, மற்றவர் முன் பேசுவதற்கு வாய்ப்பு அமைந்ததும், பேசுவதற்கு ஓர் சில நிமிடங்களுக்கு முன்னால், இன்டர்வியூவுக்குப் போகும் முன், விளையாட்டு மைதானத்தில் அந்த ஒரு பாயின்ட் வாங்கும் தருணம், என்று எவ்வளவோ சூழ்நிலைகள் பட்டியலிடலாம்.
இந்த ஒவ்வொரு தருணங்களிலும் ஆவலுடன் காத்திருப்பது நேரும். நமக்குள் ஒரு பரபரப்பு உண்டாகும். ‘நம்முடைய வாய்ப்பு எப்பொழுது வரும்?’, ‘சரியாகச் செய்வோமா?’ என்ற சிறு கேள்விகள் நமக்குள் எழும். இவை எல்லாமே நமக்கு ஆர்வமூட்டும், மறுபுறம் குதுகலமாகவும் இருப்போம். இந்தக் கலவையின் விளைவாக, சவாலைச் சந்திக்க முடியும் என்ற எண்ணம் மேலும் தீவிரமாக இயங்கச் செய்கிறது. வெல்லுவோம் என்று உறதி கொள்கிறோம்.
இது நம்மைத் தயார் படுத்திக் கொள்ள, நல்ல உணர்வுகளை எழுப்பும். இந்த நன்மை தரும் ஸ்ட்ரெஸிற்கு ‘யூஸ்ட்ரெஸ்’ என்ற பெயர். இதில், அதாவது, ‘யூஸ்ட்ரெஸ்’ என்றதில் நேர்மறையான சிந்தனையும் உணர்வும் சூழ்வதால் இதை ‘யூஸ்ட்ரெஸ்’ அதாவது, ‘நல்ல’ ஸ்ட்ரெஸ் என்று அழைப்பதுண்டு. வாட்டும் மன அழுத்தத்திற்கு இடமே கிடையாது!
இதுவே முடியுமோ, முடியாதோ என்று தத்தளித்து, தவித்து, சஞ்சலப் பட்டால், அதனால் வலுவிழந்து, முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டால், அல்ல மிக பதற்றத்துடன் எப்படியோ தேவையானதை செய்து முடித்தால், மனநலப் பிரிவில் இதைத் தான் ‘ஸ்ட்ரெஸ்’ ‘மன அழுத்தம்’ என்போம். ‘யூஸ்ட்ரெஸ்’ நிலைமைகள் இந்தத் திசைக்கு திரும்பினால் மன அழுத்தம் தோன்றலாம். உதாரணத்திற்கு, நுழைவுத் தேர்வு எழுத, பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள, அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றால், தன்னைத் தயார் படுத்திக் கொள்வது அவசியம் தான். நம் மனப்பான்மை உறுதி, தைரியம் என்று நேர்மறையாக இல்லாமல் பயம், சந்தேகம் என்ற எதிர்மறைகள் நம்மை ஆட்கொண்டால், மன அழுத்தம் தோன்றும்.
போராடுவது - ஓடுவது - உறைவது
மன அழுத்தத்தை தரக் கூடிய சூழ்நிலைகளை, நாம் கையாளும் முறைகளை ஆராய்ச்சியில் மூன்று விதங்களில் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று, வெற்றிகரமான முடிவிற்காகப் போராடுவது (ஃபைட், Fight). மற்றொன்று, முடியாதென்று விட்டு விட்டு அதிலிருந்து ஓடுவது (ஃப்ளைட், Flight). மூன்றாவதாக, என்ன செய்வதென்று புரியாமல், எந்த முடிவும் எடுக்காமல், உறைந்து நிற்பது (ஃப்ரீஸ், Freeze). இந்த ‘Fight-Flight-Freeze’ (ஃபைட்- ஃப்ளைட் - ஃப்ரீஸ்) நாம் சூழ்நிலைகளை கையாளுவதைக் குறிக்கிறது.
சூழ்நிலைகளைச் சந்திக்கும் பொழுது, நம் உடல் இரண்டு முக்கியமான ரசாயனங்களான, ஆட்ரினலின், கார்டிஸால் சுரக்க ஆரம்பிக்கும். இதனால் நமக்கு பலம் அதிகமானது போல் தோன்றும். பரபரப்பாக வேலையை முடிப்போம். வேலைகளை முடித்த பிறகு தான் அசதி, சோர்வு இருப்பதையே கவனிப்போம்.
சில தருணங்களில் மட்டும், சிறிது நேரம் மட்டும் இப்படி நிகழ்ந்தால், இவற்றால் நன்மையே. ஆனால், தினந்தோறும் எந்த வேலையை எடுத்துக் கொண்டு செய்யும் பொழுதோ, அல்ல அவற்றை ஆரம்பிக்க வேண்டுமே எனத் தோன்றியதுமே, அல்ல இயல்பாகவே ஒன்றைச் செய்வதென்றாலே பதற்றம் ஏற்பட்டு, வெகு நேரத்திருக்கு இப்படி படபடவென இருந்தால், அது மன அழுத்தப் பாதிப்பை ஏற்படுத்தும்.
காரணிகள், நம்முடைய எதிர்பார்ப்புகளினால், கோரிக்கைகளினால், நாம் தனக்காக வகிக்கும் எட்டாத குறிக்கோள்களினால் இந்த மன அழுத்தம் வரலாம். அதே போல், ஒரு இழப்பு நேர்ந்து இருந்தாலோ, ஏதோ நஷ்டம் ஏற்பட்டிருந்தால், போட்டிகளும், மற்றவர்களுடன் நாமே நம்மை ஒப்பிடுவதும் மன அழுத்தத்தின் காரணமாகலாம்.
மன அழுத்தத்தின் அறிகுறிகளும் ‘ப்ளாஸ்டீஸிடீ’யும்
மன அழுத்தத்தால் நாம் பாதிக்கப்படுகிறோம் என்று உணர்வதற்கு, அதன் அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது, பல விதங்களில் தோன்றும்: அசதி, கிடுகிடுப்பு, வியர்வை ஊற்றும், நடந்து கொண்டே இருக்கத் தோன்றும், கையைப் பிசைந்து, காலை ஆட்டிக் கொண்டே இருப்பது போன்றவை. மனதளவில், உணர்வுகளில்: சஞ்சலம், எரிச்சல், பதட்டம், கலக்கம். சமூக அளவில், தனிமையை நாடுவது, தடுமாறுவது என்று பல வகைகள் உண்டு.
இவற்றால், நம்பிக்கை இழந்து, தோல்வி தான் என்றே முடிவெடுத்து விடக் கூடும். அதனாலேயே கவனம் சிதறி, எதிலும் ஆர்வம், ஈடுபாடு இல்லாமல் போகும். இது தான் மேலே விவரித்த ஓடிப் போய்விடுவது / உறைந்து (ஃப்ளைட் - ஃப்ரீஸ்) இருப்பது.
இதே நிலைமையில் இருந்து விடுவோம் என்பதும் இல்லை. ஏனென்றால், நம்முடைய மூளையின் அமைப்பு அப்படி! இடையூறுகளிருந்து மாற்றி அமைத்துக் கொள்ளும் தன்மை உள்ளது. இதைச் சமீபத்தில், ஆராய்ச்சிகளின் மூலமாக, இந்த உருமாறும் தன்மையே நம்மை மேலும் சரி செய்து கொள்ள உதவும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். மூளையின் இந்தச் செயல் திறனை மூளையின் ‘ப்ளாஸ்டீஸிடீ’ (Plasticity) என்று பெயர் இட்டார்கள். நமக்கு ஏதோ ஒன்று நேர்ந்து விட்டால், அதே நிலையில் இருக்க வேண்டியதென்பதே இல்லை. அதிலிருந்து மீண்டு வர முடியும்!
இப்படி மீண்டு வர, நமக்கு மன அழுத்தம் எப்பொழுது தோன்றுகிறது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதை நம் உடல் எப்படி எல்லாம் தெரிவிக்கின்றது, நம் மனநிலை எவ்வாறு அதைப் பிரதிபலிக்கின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
உடல்-மனம் ஒருங்கிணைப்பு
எப்பொழுதும், உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்படும். உதாரணத்திற்கு, மன அழுத்தத்தில் நாம் பயந்து விட்டால், கை கால் நடுங்கி, நாக்கு உலர்ந்து போய், வியர்வை ஊற்றி என்று நம் உடல் பல விதங்களில் தெரிவிக்கும். மனதளவில், சந்தேகங்கள் எழும், குழப்பம் வளரும்.
அதே போல, ‘யூஸ்ட்ரெஸ்’ உணருகையில், உடலில் பல வகைகளில் தெரிவிக்கும். ஒன்றைச் செய்யப் போகிறோம் என்றால் உடலில் மெய் சிலிர்ப்பு, புன்னகை, ஒரு இடத்தில் இருக்க இருப்புக் கொள்ளாது. மனம் மிக ஆனந்தம் அடையும், புத்துணர்ச்சி பூத்துக் குலுங்கி தெம்பாக உணருவோம்.
எதுவானாலும் உடல்-மனம் இரண்டின் இணைப்பு உண்டு. அதனால் தான், மன அழுத்தத்திற்கு உடல்-மனம் இரண்டும் ஒருங்கிணைந்த விடைகளைத் தேட வேண்டும்.
மன அழுத்தத்தை எதிர் கொள்ள, தினசரி உடற் பயிற்சியினால், மனமும் சாந்தமாகி, உடலும் வலுவாகும். நடப்பது, நீச்சல், ஓடுவது, விளையாட்டு ஏதேனும் ஒன்றைத் தினம் தவறாமல் 30-40 நிமிடத்திற்குச் செய்தால் நன்மை தெரியும்.
தினந்தோறும் உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு கொடுப்பவற்றில் சிறிது நேரம் ஈடுபட்டால் அது நலனைக் கூட்டும். தோட்ட வேலை, படிப்பது, பாட்டு, நடனம், மற்றவர்களுக்கு உதவுவது என்று ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கொண்டு, செய்ய வேண்டும்.
நண்பர்கள், உறவினர்கள், பள்ளிகளில், முதியோர், அனாதை இல்லங்களில் இருப்பவருக்கு நம் திறன்களை கற்றுத் தரலாம். இப்படி, பலருடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்வதால், நமக்கும் நலன், மன நிறைவும் ஏற்படும், வாழ்க்கைக்கும் அர்த்தம் தரும். அதில் வரும் தெம்பினால், சந்திக்கும் இன்னல்களுக்கு விடை கிடைக்கும்! இப்படியெல்லாம் செய்தால் மன அழுத்தம் நமக்கு நமை தருவதாக மாறும்!
[thanks] மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்[/thanks]
‘யூஸ்ட்ரெஸ்’: ஜமாய்க்க வைக்கும் ஸ்ட்ரெஸ்
ஒன்றிற்காகக் கடினமாக உழைத்து, அல்லது தீவரமாக தயார் செய்து, செயல் படுத்தும் நேரங்களில், நாம் அனுபவிப்பது நன்மை தரும் ஸ்ட்ரெஸாகும். நம் தினசரி வாழ்வில் நிகழ்கின்றதுதான். ஓர் சில உதாரணங்கள்: நமக்குப் பிடித்த ஒருவருக்குப் பிறந்த நாள் என்று திடீரென்று ஞாபகம் வர, அவர்களுக்கு உடனடியாக நாமே ஒன்றை தயாராக்கித் தருவது, மற்றவர் முன் பேசுவதற்கு வாய்ப்பு அமைந்ததும், பேசுவதற்கு ஓர் சில நிமிடங்களுக்கு முன்னால், இன்டர்வியூவுக்குப் போகும் முன், விளையாட்டு மைதானத்தில் அந்த ஒரு பாயின்ட் வாங்கும் தருணம், என்று எவ்வளவோ சூழ்நிலைகள் பட்டியலிடலாம்.
இந்த ஒவ்வொரு தருணங்களிலும் ஆவலுடன் காத்திருப்பது நேரும். நமக்குள் ஒரு பரபரப்பு உண்டாகும். ‘நம்முடைய வாய்ப்பு எப்பொழுது வரும்?’, ‘சரியாகச் செய்வோமா?’ என்ற சிறு கேள்விகள் நமக்குள் எழும். இவை எல்லாமே நமக்கு ஆர்வமூட்டும், மறுபுறம் குதுகலமாகவும் இருப்போம். இந்தக் கலவையின் விளைவாக, சவாலைச் சந்திக்க முடியும் என்ற எண்ணம் மேலும் தீவிரமாக இயங்கச் செய்கிறது. வெல்லுவோம் என்று உறதி கொள்கிறோம்.
இது நம்மைத் தயார் படுத்திக் கொள்ள, நல்ல உணர்வுகளை எழுப்பும். இந்த நன்மை தரும் ஸ்ட்ரெஸிற்கு ‘யூஸ்ட்ரெஸ்’ என்ற பெயர். இதில், அதாவது, ‘யூஸ்ட்ரெஸ்’ என்றதில் நேர்மறையான சிந்தனையும் உணர்வும் சூழ்வதால் இதை ‘யூஸ்ட்ரெஸ்’ அதாவது, ‘நல்ல’ ஸ்ட்ரெஸ் என்று அழைப்பதுண்டு. வாட்டும் மன அழுத்தத்திற்கு இடமே கிடையாது!
இதுவே முடியுமோ, முடியாதோ என்று தத்தளித்து, தவித்து, சஞ்சலப் பட்டால், அதனால் வலுவிழந்து, முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டால், அல்ல மிக பதற்றத்துடன் எப்படியோ தேவையானதை செய்து முடித்தால், மனநலப் பிரிவில் இதைத் தான் ‘ஸ்ட்ரெஸ்’ ‘மன அழுத்தம்’ என்போம். ‘யூஸ்ட்ரெஸ்’ நிலைமைகள் இந்தத் திசைக்கு திரும்பினால் மன அழுத்தம் தோன்றலாம். உதாரணத்திற்கு, நுழைவுத் தேர்வு எழுத, பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள, அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றால், தன்னைத் தயார் படுத்திக் கொள்வது அவசியம் தான். நம் மனப்பான்மை உறுதி, தைரியம் என்று நேர்மறையாக இல்லாமல் பயம், சந்தேகம் என்ற எதிர்மறைகள் நம்மை ஆட்கொண்டால், மன அழுத்தம் தோன்றும்.
போராடுவது - ஓடுவது - உறைவது
மன அழுத்தத்தை தரக் கூடிய சூழ்நிலைகளை, நாம் கையாளும் முறைகளை ஆராய்ச்சியில் மூன்று விதங்களில் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று, வெற்றிகரமான முடிவிற்காகப் போராடுவது (ஃபைட், Fight). மற்றொன்று, முடியாதென்று விட்டு விட்டு அதிலிருந்து ஓடுவது (ஃப்ளைட், Flight). மூன்றாவதாக, என்ன செய்வதென்று புரியாமல், எந்த முடிவும் எடுக்காமல், உறைந்து நிற்பது (ஃப்ரீஸ், Freeze). இந்த ‘Fight-Flight-Freeze’ (ஃபைட்- ஃப்ளைட் - ஃப்ரீஸ்) நாம் சூழ்நிலைகளை கையாளுவதைக் குறிக்கிறது.
சூழ்நிலைகளைச் சந்திக்கும் பொழுது, நம் உடல் இரண்டு முக்கியமான ரசாயனங்களான, ஆட்ரினலின், கார்டிஸால் சுரக்க ஆரம்பிக்கும். இதனால் நமக்கு பலம் அதிகமானது போல் தோன்றும். பரபரப்பாக வேலையை முடிப்போம். வேலைகளை முடித்த பிறகு தான் அசதி, சோர்வு இருப்பதையே கவனிப்போம்.
சில தருணங்களில் மட்டும், சிறிது நேரம் மட்டும் இப்படி நிகழ்ந்தால், இவற்றால் நன்மையே. ஆனால், தினந்தோறும் எந்த வேலையை எடுத்துக் கொண்டு செய்யும் பொழுதோ, அல்ல அவற்றை ஆரம்பிக்க வேண்டுமே எனத் தோன்றியதுமே, அல்ல இயல்பாகவே ஒன்றைச் செய்வதென்றாலே பதற்றம் ஏற்பட்டு, வெகு நேரத்திருக்கு இப்படி படபடவென இருந்தால், அது மன அழுத்தப் பாதிப்பை ஏற்படுத்தும்.
காரணிகள், நம்முடைய எதிர்பார்ப்புகளினால், கோரிக்கைகளினால், நாம் தனக்காக வகிக்கும் எட்டாத குறிக்கோள்களினால் இந்த மன அழுத்தம் வரலாம். அதே போல், ஒரு இழப்பு நேர்ந்து இருந்தாலோ, ஏதோ நஷ்டம் ஏற்பட்டிருந்தால், போட்டிகளும், மற்றவர்களுடன் நாமே நம்மை ஒப்பிடுவதும் மன அழுத்தத்தின் காரணமாகலாம்.
மன அழுத்தத்தின் அறிகுறிகளும் ‘ப்ளாஸ்டீஸிடீ’யும்
மன அழுத்தத்தால் நாம் பாதிக்கப்படுகிறோம் என்று உணர்வதற்கு, அதன் அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது, பல விதங்களில் தோன்றும்: அசதி, கிடுகிடுப்பு, வியர்வை ஊற்றும், நடந்து கொண்டே இருக்கத் தோன்றும், கையைப் பிசைந்து, காலை ஆட்டிக் கொண்டே இருப்பது போன்றவை. மனதளவில், உணர்வுகளில்: சஞ்சலம், எரிச்சல், பதட்டம், கலக்கம். சமூக அளவில், தனிமையை நாடுவது, தடுமாறுவது என்று பல வகைகள் உண்டு.
இவற்றால், நம்பிக்கை இழந்து, தோல்வி தான் என்றே முடிவெடுத்து விடக் கூடும். அதனாலேயே கவனம் சிதறி, எதிலும் ஆர்வம், ஈடுபாடு இல்லாமல் போகும். இது தான் மேலே விவரித்த ஓடிப் போய்விடுவது / உறைந்து (ஃப்ளைட் - ஃப்ரீஸ்) இருப்பது.
இதே நிலைமையில் இருந்து விடுவோம் என்பதும் இல்லை. ஏனென்றால், நம்முடைய மூளையின் அமைப்பு அப்படி! இடையூறுகளிருந்து மாற்றி அமைத்துக் கொள்ளும் தன்மை உள்ளது. இதைச் சமீபத்தில், ஆராய்ச்சிகளின் மூலமாக, இந்த உருமாறும் தன்மையே நம்மை மேலும் சரி செய்து கொள்ள உதவும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். மூளையின் இந்தச் செயல் திறனை மூளையின் ‘ப்ளாஸ்டீஸிடீ’ (Plasticity) என்று பெயர் இட்டார்கள். நமக்கு ஏதோ ஒன்று நேர்ந்து விட்டால், அதே நிலையில் இருக்க வேண்டியதென்பதே இல்லை. அதிலிருந்து மீண்டு வர முடியும்!
இப்படி மீண்டு வர, நமக்கு மன அழுத்தம் எப்பொழுது தோன்றுகிறது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதை நம் உடல் எப்படி எல்லாம் தெரிவிக்கின்றது, நம் மனநிலை எவ்வாறு அதைப் பிரதிபலிக்கின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
உடல்-மனம் ஒருங்கிணைப்பு
எப்பொழுதும், உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்படும். உதாரணத்திற்கு, மன அழுத்தத்தில் நாம் பயந்து விட்டால், கை கால் நடுங்கி, நாக்கு உலர்ந்து போய், வியர்வை ஊற்றி என்று நம் உடல் பல விதங்களில் தெரிவிக்கும். மனதளவில், சந்தேகங்கள் எழும், குழப்பம் வளரும்.
அதே போல, ‘யூஸ்ட்ரெஸ்’ உணருகையில், உடலில் பல வகைகளில் தெரிவிக்கும். ஒன்றைச் செய்யப் போகிறோம் என்றால் உடலில் மெய் சிலிர்ப்பு, புன்னகை, ஒரு இடத்தில் இருக்க இருப்புக் கொள்ளாது. மனம் மிக ஆனந்தம் அடையும், புத்துணர்ச்சி பூத்துக் குலுங்கி தெம்பாக உணருவோம்.
எதுவானாலும் உடல்-மனம் இரண்டின் இணைப்பு உண்டு. அதனால் தான், மன அழுத்தத்திற்கு உடல்-மனம் இரண்டும் ஒருங்கிணைந்த விடைகளைத் தேட வேண்டும்.
மன அழுத்தத்தை எதிர் கொள்ள, தினசரி உடற் பயிற்சியினால், மனமும் சாந்தமாகி, உடலும் வலுவாகும். நடப்பது, நீச்சல், ஓடுவது, விளையாட்டு ஏதேனும் ஒன்றைத் தினம் தவறாமல் 30-40 நிமிடத்திற்குச் செய்தால் நன்மை தெரியும்.
தினந்தோறும் உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு கொடுப்பவற்றில் சிறிது நேரம் ஈடுபட்டால் அது நலனைக் கூட்டும். தோட்ட வேலை, படிப்பது, பாட்டு, நடனம், மற்றவர்களுக்கு உதவுவது என்று ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கொண்டு, செய்ய வேண்டும்.
நண்பர்கள், உறவினர்கள், பள்ளிகளில், முதியோர், அனாதை இல்லங்களில் இருப்பவருக்கு நம் திறன்களை கற்றுத் தரலாம். இப்படி, பலருடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்வதால், நமக்கும் நலன், மன நிறைவும் ஏற்படும், வாழ்க்கைக்கும் அர்த்தம் தரும். அதில் வரும் தெம்பினால், சந்திக்கும் இன்னல்களுக்கு விடை கிடைக்கும்! இப்படியெல்லாம் செய்தால் மன அழுத்தம் நமக்கு நமை தருவதாக மாறும்!
[thanks] மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்[/thanks]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010
ரொம்ப ரொம்ப அருமையான கட்டுரை.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|