புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வல்லபாய் படேல் சிலை
Page 1 of 1 •
சிறப்பு அம்சங்கள்
உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன தெரியுமா?
உயரம்: 182 மீட்டர் (நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலையைக் காட்டிலும் சுமார் இரண்டு மடங்கு உயரமானது)
இடம்: நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் சுமார் 3.5 கி.மீ. சுற்றளவு.
மதிப்பு: ரூ.2,989 கோடி (தோராயமாக)
சிற்பி: 93 வயதான பத்ம பூஷண் விருது பெற்ற பிரபல சிற்பி வி.சுதர்
கட்டுமான காலம்: 2 வருடங்கள், 10 மாதங்கள் (2015, டிசம்பர் 19-ல் தொடங்கப்பட்டது)
பயன்படுத்தப்பட்ட பொருட்கள்: சிமெண்ட் 70 ஆயிரம் டன்கள், வலுவூட்டப்பட்ட எஃகு 18,500 டன்கள், 6000 டன்கள் கட்டமைப்பு எஃகு மற்றும் 1,700 மெட்ரிக் டன்கள் வெண்கலம்
சிறப்பம்சங்கள்: உயரமான சிலைகள் பின்பற்றும் விதிகளில் இருந்து மாறுபட்ட வடிவமைப்பு. அடித்தளத்தில் குறுகி, மேலே செல்லச் செல்ல விரிவடையும் போக்கு.
மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றின் வேகத்தை எதிர்த்து நிற்கும் வகையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்கள், படேலை நேரில் சந்தித்தவர்களுடன் கலந்துரையாடி, சுமார் 2 ஆயிரம் புகைப்படங்களின் கலவையில் இருந்து ஒரு புகைப்படம் இறுதி செய்யப்பட்டது.
சிலை ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் பாகம் - கணுக்காலுக்கு மேலே வரை. (நினைவுப் பூங்காவும் மியூசியமும் அமைக்கப்பட்டுள்ளது)
இரண்டாம் பாகம் - தொடை வரை
மூன்றாம் பாகம் - 153 மீட்டர் உயரத்தில் பொதுமக்கள் சுற்றுலாத் தலம்
நான்காம் பாகம் - பராமரிப்புப் பகுதி
ஐந்தாம் பாகம் - தலை மற்றும் தோள்கள் வரை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கடந்த வந்த சவால்கள்
93 வயது சிற்பி
அந்த சவால்கள் வருமாறு:படேல் சிலையை வடிவமைத்தவர் 93 வயதான சிற்பி ராம் வி.சுதார். சீனாவில் உள்ள புத்தர் சிலையும், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஏசு கிறிஸ்து சிலையும் கற்பனை உருவம் அடிப்படையில் உருவானவை. ஆனால், படேல் சிலை சம காலத்தில் வாழ்ந்த ஒரு நபரின் புகைப்படத்தை அடிப்படையாக கொண்டு உருவானது.அந்த புகைப்படத்தில் படேல் வேஷ்டி மற்றும் மேல் சட்டை அணிந்தபடி காட்சி அளிக்கிறார். அதில் உள்ள நுட்பமான விஷயங்கள் அனைத்தையும் சிலையில் கொண்டு வருவது வடிவமைப்பாளர்களுக்கு பெரிய சவாலாக இருந்தது.இந்தியாவில் 14 பெரிய வெண்கல வார்ப்பு ஆலைகள் உள்ளன. ஆனால், அவை 597 அடி உயர சிலையை உருவாக்க தேவைப்படும் வெண்கல உறைபூச்சு தகடுகளை செய்யும் அளவுக்கு திறன் படைத்தவை இல்லை என்பது அடுத்த பெரிய சவாலாக இருந்தது.
2,000 புகைப்படங்கள்
அச்சு அசலாக படேலின் முக தோற்றம் இருக்க வேண்டும் என்பது அடுத்த சவால். இதற்காக படேலின் 2,000 புகைப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இறுதியில், 1949ம் ஆண்டு எடுக்கப்பட்ட படேல் புகைப்படம் தான் சரியானதாக இருக்கும் என இறுதி செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தில் தான் படேல் தன் வாழ்வின் பெரிய சிக்கல்களை சந்தித்து கொண்டிருந்தார்.
பிறந்த ஊரில் மக்களிடம் கருத்து கேட்பு
தேர்வு செய்யப்பட்ட புகைப்படங்களை கொண்டு துவக்கத்தில், 18 அடி உயர வெண்கல சிலை உருவாக்கப்பட்டது. குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கரம்சாத் என்பது தான் படேல் பிறந்த ஊர். அந்த ஊருக்கு 18 உயர சிலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு இருந்த மக்களிடம் சிலை குறித்து கருத்து கேட்கப்பட்டது.படேலை உயிருடன் பார்த்தவர்கள் அங்கு உள்ளனர். அவர்களிடம் சிலை சரியாக உள்ளதா என கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் கூறிய கருத்துக்களின்படி, சிற்பி சுதார், 30 அடி உயர சிலையை தயாரித்தார். அதன்பிறகே சிலையின் இறுதி வடிவம் முடிவு செய்யப்பட்டது. இதன் பிறகு 597 அடி உயர சிலையின் டிஜிட்டல் மாடல் தயாரிக்கப்பட்டது.
சீனாவில் உள்ள வார்ப்பு ஆலை
இதன் பிறகு சிற்பி சுதார் சீனாவுக்கு சென்றார். அவருடன் குஜராத் அரசுக்கு சொந்தமான சர்தார் சரோவர் நர்மதா அணையை பராமரித்து வரும் சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவன அதிகாரிகளும் சென்றனர். சிலைக்கு தேவையான வெண்கல உறைபூச்சு தகடுகளை தயாரிப்பது இந்தியாவில் சாத்தியம் இல்லை என்பதால் அவற்றை பெறவே அவர்கள் சீனாவிற்கு சென்றனர்.உலகளவில் பெரிய வார்ப்பு ஆலை சீனாவில் உள்ள ஜியாங்ஸி டொகைன் மெட்டல் கிராப்ட்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் தான். படேல் சிலைக்கு தேவையான வெண்கல உறைபூச்சு தகடுகளை தயாரிக்க அந்த நிறுவனம் தான் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிற்பி சுதார் நான்கு முறை சீனா சென்று பணிகளை பார்வையிட்டார். பல்வேறு அளவுகளில், 7,000 வெண்கல தகடுகள் தயாரிக்கப்பட்டன. 3டி ஸ்கேனிங் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் ஒவ்வொரு நுட்பமான விஷயமும் கணக்கிடப்பட்டன. இதன் பிறகு வெல்டிங் மூலம், உறைபூச்சு தகடுகள் எண்ணிக்கை 550 ஆக குறைக்கப்பட்டது.
மூன்று அடுக்கு கட்டுமானம்
மூன்று அடுக்கு கொண்டதாக இந்த சிலையை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டது. முதலில், 127 மீட்டர் உயரத்திற்கு இரண்டு தூண்கள் சிமென்ட் கான்கிரீட் மூலம் உருவாக்கப்பட்டன. அதைச் சுற்றி இரும்பு சட்டங்கள் அமைக்கப்பட்டன. சட்டங்கள் மீதே வெண்கல உறைபூச்சு தகடுகள் பொருத்தப்பட்டன. இப்படி தான் இந்த சிலை உருவாக்கப்பட்டது.
அகலமான அடித்தளம் இல்லை
அமெரிக்காவில் உள்ள சுதந்திரா சிலை மற்றும் பிரேசிலில் உள்ள ஏசு கிறிஸ்து சிலை ஆகியவை போன்று படேல் சிலைக்கு அகலமான அடித்தளம் இல்லை. ஒரு சிலை நிலையாக இருக்க, அகலமான அடித்தளம் தேவை. வேஷ்டி அணிந்த நிலையில் படேல் சிலை அமைக்கப்பட வேண்டும் என்றால் சிலையின் அடித்தளம் ஒல்லியதாகவும், சிலையின் மேல் பகுதி தடிமனாகவும் இருக்க வேண்டும்.இது வடிவமைப்பாளர்களுக்கு சவாலாக இருந்தது. பொதுவாக உயரமான கட்டடங்கள் அமைக்கும் போது 8:14 விகித்தை பின்பற்றுவார்கள். ஆனால், இந்த சிலையின் அகலம் மற்றும் உயரம் ஆகியவற்றுக்கான விகிதம் 16:19 என்ற நிலையில் மேற்கொள்ளப்பட்டது.
அதிவேக லிப்ட்கள்
சிலையின் கீழ்பகுதி வேஷ்டி கட்டிய கால்கள். இதன் உயரம் மட்டுமே 25 மீட்டர். அதாவது எட்டு மாடி உயர கட்டடத்திற்கு இணையானது. இந்த பகுதியில் இரண்டு பெரிய லிப்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஒரே நேரத்தில் 25 பேரை சுமந்து 135 மீட்டர் உயரத்தில் இருக்கும் சிலையின் மார்பு பகுதியை அரை நிமிடத்தில் சென்றடையும் திறன் படைத்தவை. அதிர்வை உருவாக்கும் இந்த லிப்ட்கள் சிலையின் முதல் அடுக்கில் உள்ள தூண்களில் உள்ளன. இதை அமைப்பதும் இன்ஜினியர்களுக்கு சவாலாக அமைந்தது.
காற்று, நில நடுக்கம், வெள்ளம்
அடுத்து, சர்தார் சரோவர் அணை பகுதியில் வீசும் காற்றின் வேகம், நில நடுக்கம் மற்றும் வெள்ள அபாயத்தை சிலை எதிர்கொள்ள வேண்டும் என்பது இன்ஜினியர்கள் முன் இருந்த அடுத்த சவால். நர்மதை நதியின் நடுவே உள்ள தீவில் தான் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நதி செல்லும் பாதையில் ஆக்ரோஷமாக காற்று வீசும்.
இத்துடன் சிலையின் இரண்டு கால்களுக்கு இடையே 6.4 மீட்டர் இடைவெளி உள்ளது. ஆக்ரோஷமாக காற்று வீசும் போது சிலைக்கு சிக்கல் ஏற்படும். இதை தவிர்க்க சிலையின் உறைபூச்சு ஒன்றின் மேல் ஒன்று இருக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளன. இத்துடன் 250 டன் எடை கொண்ட பிரமாண்டமான இரண்டு தடுப்புகளும் சிலையின் உட்புறம் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் காற்று வீசினாலும், 6.5 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் அளவுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
பாதையே இல்லாத தீவு
நர்மதை ஆற்றின் நடுவே உள்ள தீவில் தான் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது மலையடிவாரத்தில் வாகன போக்குவரத்துக்கு வாய்ப்பு இல்லாத பகுதி.. பருவமழை காலத்திற்கு பிறகு எட்டு மாத காலத்திற்கு நதியின் ஒரு கரையில் இருந்து தீவுக்கு செல்ல முடியும். அப்போது நதியில் குறைந்த அளவு தண்ணீரே செல்லும். அந்தக் காலத்தில் கற்களால் ஆன பாலத்தை உருவாக்கி இன்ஜினியர்களும், ஊழியர்களும் தீவுக்கு சென்றனர். பருவமழை காலத்தில் நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும் காலத்தில் தற்காலிக பாலம் அமைத்து சென்றனர். இந்த சிலையை உருவாக்க, 2.10 லட்சம் கன மீட்டர் சிமென்ட் கான்கிரீட், 18,500 டன் இரும்பு கம்பிகள், 6,500 டன் இரும்பு சட்டங்கள், 1,700 டன் வெண்கலம், 1,850 டன் வெண்கல உறைபூச்சு தகடுகள் ஆகியவற்றை கொண்டு 565 பெரிய பேனல்கள், 6,000 சிறிய பேனல்கள் உருவாக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் இந்த பாலங்களின் மூலம் தான் தீவுக்கு எடுத்து செல்லப்பட்டன.
40 மாதங்கள்
இவ்வளவு சவால்களையும் சந்தித்து தான் இந்த பேருருவ சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள புத்தர் சிலையை உருவாக்க 11 ஆண்டுகள் ஆகியது. ஆனால், படேல் சிலையை, 300 இன்ஜினியர்களும், 3,000 ஊழியர்களும் 40 மாதங்களில் உருவாக்கி உள்ளனர். இந்த சிலை அமைப்பு பணி 2015ம் ஆண்டு மே மாதம் துவங்கியது. மூன்று ஆண்டுகளுக்குள் பணியை முடித்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வள்ளுவர் சிலையும், வல்லபாய் சிலையும் - சிலை அரசியல்
இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலை திறக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகின் மிக உயரமான சிலை என்பது கூடுதல் சிறப்பு. இந்தியாவை ஒருங்கிணைத்தவர் என்ற பெருமையை கூறும் விதமாக 'STATUE OF UNITY' என்ற பெயரில் இந்த சிலை அழைக்கப்படுகிறது.
இந்த சிலை அமைப்பதற்காக 2010ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி வல்லபாய் படேலின் சிலையை நிறுவுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி அதற்கு 'யுனிட்டி ஆஃப் இந்தியா' என பெயரிட்டார். அதன்பின் அக்டோபர், 2010ல் சிலை கட்டுமானத் திட்டம் முறைப்படி தொடங்கப்பட்டது. 2011 மார்ச்சில் சிலை திட்டத்திற்காக சர்தார் வல்லபாய் படேல் ராஷ்ட்ரிய ஏக்தா டிரஸ்ட் என்ற ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டது. ஜூன் 2012ல் சிலை வடிவமைப்புக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அக்டோபர் 2013ல் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். நவம்பர் 2013ல் சிலை கட்டுமான பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு, ஜூன் 2014ல் எல் & டி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதன்பின் கிட்டத்தட்ட 3 வருடங்கள் 4 மாதங்கள் கட்டுமானப்பணிகள் நடந்தன. இதில் 70,000 மெட்ரிக் டன் சிமெண்ட், 18,500 மெட்ரிக் டன் வலுவூட்டப்பட்ட எஃகு, 6000 மெட்ரிக் டன் கட்டுமான இரும்பு, 1,700 மெட்ரிக் டன் வெண்கலம், ஆகியவை பயன்படுத்தப்பட்டன. மேலும் இந்தப் பணியில் 250 பொறியாளர்களும், 3,700 தொழிலாளர்களும் ஈடுபட்டு, இந்த மாபெரும் சிலையை உருவாக்கினர். இன்று (31.10.2018) பிரதமர் நரேந்திரமோடி இந்த சிலையை திறந்துவைத்தார்.
இந்த சிலை அமைக்கும் முடிவுக்குப் பின்னால் பல அரசியல் காரணங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது, கூறப்படுகிறது. காங்கிரஸின் அடையாளமாக, முகமாக இருக்கும் தலைவர்கள் காந்தி, நேரு. காந்தியை போற்றும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்ட பாஜக, சர்தார் வல்லபாய் படேலையும் தங்கள் திட்டத்தில் சேர்த்தது. குஜராத்தில் வலிமையான சமூகமாக திகழும் பட்டேதார் சமூகத்தில் அப்பொழுதே சிறிது அதிருப்தி உண்டாவதை உணர்ந்து தொடங்கிய இந்த சிலை திட்டம் பின் ஹர்திக் படேல் தலைமையில் பட்டேதார் சமூகம் காட்டிய எழுச்சியையும் எதிர்ப்பையும் சமாளிக்க இப்போது பயன்படுகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்திய பாஜக தரப்பில். இந்திய ஒருமைப்பாட்டுக்கு முழு காரணமான சர்தார் வல்லபாய் படேல் நேருவுக்கு இணையான தலைவர், ஆனால் அவரை காங்கிரஸ் மதிக்கவில்லையென்றும் அவரது புகழை மறைத்துவிட்டது என்றும், சர்தார் படேலின் புகழை பறைசாற்றவே இந்த சிலையை உருவாக்கியதாகவும் கூறுகிறது. இப்படி குஜராத்தில் எழுப்பப்பட்ட இந்த பிரம்மாண்ட சிலைக்குப் பின்னான காரணங்கள் இருக்கின்றன. குஜராத் என்றாலே மகாத்மா காந்தி என்ற தன்மையை இது அசைத்துப் பார்ப்பதாக இருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தின் வரலாற்றில் மிக முக்கிய இடம் பெற்றிருப்பது உலகப்பொதுமறை திருக்குறளையும், பொய்யில் புலவர் திருவள்ளுவரையும் வணங்கும் (கௌரவிக்கும்) விதமாக முக்கூடல் நகரம் கன்னியாகுமரியில் 133 அடியில் அமைக்கப்பட்ட வள்ளுவர் சிலை. திருக்குறளின் அதிகாரங்களை கூறும் வகையில் 133 அடியில் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலைக்கான திட்டம் அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் மனதில் உதித்து பின் செயலானது.
டிசம்பர் 31, 1975ல் கூடிய திமுக அமைச்சரவைக் கூட்டத்தில் வள்ளுவர் சிலை அமைக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் 1976 லேயே அதாவது கிட்டதட்ட ஒரு மாதத்திலேயே திமுக அரசு கலைக்கப்பட்டது. அதற்குபின் 1989ல் திமுக அரசு அமைந்தவுடன் மீண்டும் அந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. 1990 செப்டம்பர் 6ம் தேதி கலைஞர் தலைமையில் சிலை அமைப்புப் பணிகள் தொடங்கின. 1991ல் ஆட்சி மாறியது. அதன்பின் 25.06.1997 அன்று கூடிய அமைச்சரவைக்கூட்டத்தில் வள்ளுவர் சிலைக்காக 9 கோடி ரூபாயும், சிலை அளவு உள்ளிட்ட பல பணிகள் குறித்து முடிவெடுக்கப்பட்டு வேலை ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் இரண்டரை வருடங்களுக்குபிறகு 01.01.2000ல் அப்போதைய முதல்வராக இருந்த கலைஞரால் வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது.
இந்திய தேசத்தின் தென் கோடி எல்லையும் தமிழகத்தின் பெருமையுமாகத் திகழும் கன்னியாகுமரியில், விவேகானந்தர் பாறைதான் அதுவரை அடையாளமாகத் திகழ்ந்தது. இந்திய தேசத்தின் எல்லையில் தமிழை அடையாளமாக நிறுத்த நினைத்த கலைஞர், திருவள்ளுவர் சிலையை நிறுவினார். இப்படி இரண்டு மாநிலங்களின் அடையாளங்களை மாற்றி முக்கிய அடையாளமாக மாறியிருக்கின்றன இந்த இரண்டு சிலைகள்.
இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலை திறக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகின் மிக உயரமான சிலை என்பது கூடுதல் சிறப்பு. இந்தியாவை ஒருங்கிணைத்தவர் என்ற பெருமையை கூறும் விதமாக 'STATUE OF UNITY' என்ற பெயரில் இந்த சிலை அழைக்கப்படுகிறது.
இந்த சிலை அமைப்பதற்காக 2010ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி வல்லபாய் படேலின் சிலையை நிறுவுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி அதற்கு 'யுனிட்டி ஆஃப் இந்தியா' என பெயரிட்டார். அதன்பின் அக்டோபர், 2010ல் சிலை கட்டுமானத் திட்டம் முறைப்படி தொடங்கப்பட்டது. 2011 மார்ச்சில் சிலை திட்டத்திற்காக சர்தார் வல்லபாய் படேல் ராஷ்ட்ரிய ஏக்தா டிரஸ்ட் என்ற ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டது. ஜூன் 2012ல் சிலை வடிவமைப்புக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அக்டோபர் 2013ல் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். நவம்பர் 2013ல் சிலை கட்டுமான பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு, ஜூன் 2014ல் எல் & டி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதன்பின் கிட்டத்தட்ட 3 வருடங்கள் 4 மாதங்கள் கட்டுமானப்பணிகள் நடந்தன. இதில் 70,000 மெட்ரிக் டன் சிமெண்ட், 18,500 மெட்ரிக் டன் வலுவூட்டப்பட்ட எஃகு, 6000 மெட்ரிக் டன் கட்டுமான இரும்பு, 1,700 மெட்ரிக் டன் வெண்கலம், ஆகியவை பயன்படுத்தப்பட்டன. மேலும் இந்தப் பணியில் 250 பொறியாளர்களும், 3,700 தொழிலாளர்களும் ஈடுபட்டு, இந்த மாபெரும் சிலையை உருவாக்கினர். இன்று (31.10.2018) பிரதமர் நரேந்திரமோடி இந்த சிலையை திறந்துவைத்தார்.
இந்த சிலை அமைக்கும் முடிவுக்குப் பின்னால் பல அரசியல் காரணங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது, கூறப்படுகிறது. காங்கிரஸின் அடையாளமாக, முகமாக இருக்கும் தலைவர்கள் காந்தி, நேரு. காந்தியை போற்றும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்ட பாஜக, சர்தார் வல்லபாய் படேலையும் தங்கள் திட்டத்தில் சேர்த்தது. குஜராத்தில் வலிமையான சமூகமாக திகழும் பட்டேதார் சமூகத்தில் அப்பொழுதே சிறிது அதிருப்தி உண்டாவதை உணர்ந்து தொடங்கிய இந்த சிலை திட்டம் பின் ஹர்திக் படேல் தலைமையில் பட்டேதார் சமூகம் காட்டிய எழுச்சியையும் எதிர்ப்பையும் சமாளிக்க இப்போது பயன்படுகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்திய பாஜக தரப்பில். இந்திய ஒருமைப்பாட்டுக்கு முழு காரணமான சர்தார் வல்லபாய் படேல் நேருவுக்கு இணையான தலைவர், ஆனால் அவரை காங்கிரஸ் மதிக்கவில்லையென்றும் அவரது புகழை மறைத்துவிட்டது என்றும், சர்தார் படேலின் புகழை பறைசாற்றவே இந்த சிலையை உருவாக்கியதாகவும் கூறுகிறது. இப்படி குஜராத்தில் எழுப்பப்பட்ட இந்த பிரம்மாண்ட சிலைக்குப் பின்னான காரணங்கள் இருக்கின்றன. குஜராத் என்றாலே மகாத்மா காந்தி என்ற தன்மையை இது அசைத்துப் பார்ப்பதாக இருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தின் வரலாற்றில் மிக முக்கிய இடம் பெற்றிருப்பது உலகப்பொதுமறை திருக்குறளையும், பொய்யில் புலவர் திருவள்ளுவரையும் வணங்கும் (கௌரவிக்கும்) விதமாக முக்கூடல் நகரம் கன்னியாகுமரியில் 133 அடியில் அமைக்கப்பட்ட வள்ளுவர் சிலை. திருக்குறளின் அதிகாரங்களை கூறும் வகையில் 133 அடியில் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலைக்கான திட்டம் அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் மனதில் உதித்து பின் செயலானது.
டிசம்பர் 31, 1975ல் கூடிய திமுக அமைச்சரவைக் கூட்டத்தில் வள்ளுவர் சிலை அமைக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் 1976 லேயே அதாவது கிட்டதட்ட ஒரு மாதத்திலேயே திமுக அரசு கலைக்கப்பட்டது. அதற்குபின் 1989ல் திமுக அரசு அமைந்தவுடன் மீண்டும் அந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. 1990 செப்டம்பர் 6ம் தேதி கலைஞர் தலைமையில் சிலை அமைப்புப் பணிகள் தொடங்கின. 1991ல் ஆட்சி மாறியது. அதன்பின் 25.06.1997 அன்று கூடிய அமைச்சரவைக்கூட்டத்தில் வள்ளுவர் சிலைக்காக 9 கோடி ரூபாயும், சிலை அளவு உள்ளிட்ட பல பணிகள் குறித்து முடிவெடுக்கப்பட்டு வேலை ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் இரண்டரை வருடங்களுக்குபிறகு 01.01.2000ல் அப்போதைய முதல்வராக இருந்த கலைஞரால் வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது.
இந்திய தேசத்தின் தென் கோடி எல்லையும் தமிழகத்தின் பெருமையுமாகத் திகழும் கன்னியாகுமரியில், விவேகானந்தர் பாறைதான் அதுவரை அடையாளமாகத் திகழ்ந்தது. இந்திய தேசத்தின் எல்லையில் தமிழை அடையாளமாக நிறுத்த நினைத்த கலைஞர், திருவள்ளுவர் சிலையை நிறுவினார். இப்படி இரண்டு மாநிலங்களின் அடையாளங்களை மாற்றி முக்கிய அடையாளமாக மாறியிருக்கின்றன இந்த இரண்டு சிலைகள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரும்பு மனிதரா சர்தார் படேல்?
இந்தியாவின் வீரப்பெண்மணி இந்திரா துப்பாக்கி ரவைகளால் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட 35 ஆவது நினைவுதினத்தை பின்னுக்குத் தள்ளும்வகையில், அந்த நாளை திசைதிருப்பும் வகையிலேயே படேலின் பிறந்தநாளை முன்னிறுத்துகிறது பாஜக.
மேக் இந்தியா என்ற கோஷத்தை அறிமுகப்படுத்திய மோடி, இந்தியாவை ஒருங்கிணைத்ததாக புகழ்கிற படேலின் சிலையை செய்து ஒருங்கிணைக்க சீனாவின் உதவியை நாட வேண்டியதாயிற்று. 33 மாதங்களில் 182 மீட்டர் உயரத்துக்கு இந்தச் சிலையை நிறுவியிருப்பதாக மோடி மக்களுக்கு வானவேடிக்கை காட்டியிருக்கிறார்.
ஆட்சிக்காலம் முடிய சில மாதங்களே இருக்கும் நிலையில், இந்தியாவின் நிர்வாகத்துறை, நீதித்துறை என எல்லாவற்றையும் சீர்குலைத்துவிட்டு, அவற்றிலிருந்து மக்கள் கவனத்தை திருப்ப படேல் சிலைத்திறப்பு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.
காங்கிரஸ் அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்த, காந்தி கொலையைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடைவிதித்து படேலை இப்போது ஏன் பாஜக தலையில் தூக்கி வைத்து உரிமை கொண்டாடுகிறது? வேறு காரணம் என்னவாக இருக்கமுடியும்?
காங்கிரஸில் இருந்த இந்துத்துவாவை வலியுறுத்திய தலைவர் என்பதைத் தாண்டி என்னவாக இருக்க முடியும்? மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், மக்கள் மத்தியில் சொல்லிக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு தலைவர்கள் இல்லை. அந்தக் குறையைப் போக்கத்தான் காங்கிரஸிடம் கடன்வாங்கிய தலைவரான வல்லபபாய் படேலின் பிறந்தநாளை பாஜக முன்னிலைப்படுத்துகிறது. அரசு அவர்கள் வசம் இருப்பதால் கவனம் அவர் மீது திருப்பப்பட்டுள்ளது. படேலை இரும்பு மனிதர் என்று அடையாளப்படுத்தும் பிரதமர் மோடி, அவருடைய புகழை முந்தைய அரசுகள் மறைத்துவிட்டதாக குறைகூறுவதை வழக்கமாகவே கொண்டிருக்கிறார். அது குஜராத்தில் அவருக்கு ஏதேனும் ஒருவகையில் உதவியாக இருக்கலாம். இந்தியா முழுமைக்கும் எந்தக் காலத்திலும் உதவப் போவதில்லை என்பதை காலம் நிரூபிக்கத்தான் போகிறது.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று படேலை உருவகப்படுத்துவது சரியா என்ற கேள்விகளுக்கு பலவிதமான விமர்சனங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்றைய இந்தியாவை ஒருங்கிணைக்க படேல் சொந்த மக்கள் எத்தனை ஆயிரம் பேரை ராணுவத்தைப் பயன்படுத்திக் கொன்று குவித்தார் என்பதை மறைத்துவிட்டு அவருக்கு புகழ்மாலை சூட்டுவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி அப்போதும் இருந்தது. இப்போதும் இருக்கவே செய்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எப்படி ராணுவத்தைப் பயன்படுத்தி இந்தியாவைக் கைப்பற்றினார்களோ, அதே பாணியில்தானே விடுதலைக்கு பிறகான இந்தியாவின் உள்துறை அமைச்சரான படேலும் இந்தியாவுடன் இணைய மறுத்த காஷ்மீர், ஹைதராபாத் நிஜாம் உள்ளிட்ட பெரிய சமஸ்தானங்களையும், குட்டிக்குட்டி சமஸ்தானங்களையும் ராணுவத்தை பயன்படுத்தி சொந்த மக்களின் ரத்தத்தைக் குடித்து ஒன்றிணைத்தார்?
ராணுவம் இருந்தால் அதற்கு தலைமைப் பொறுப்பு கிடைத்தால் ஒருவர் இரும்பு மனிதர் ஆகிவிடுவாரா?
இது கேலிக்குரியது இல்லையா? இணைய விரும்பாத மக்களை அச்சுறுத்தி அவர்களைக் கொன்று குவித்து இந்தியாவை ஒருங்கிணைத்துவிட்டேன் என்று மார்தட்டுவது பெருமையா என்றுதான் இப்போதும் ஒருபகுதி மக்கள் கேட்கிறார்கள்.
வீரம் அதுவல்ல, அன்பு காட்டி அரவணைப்பதே மிகச்சிறந்த ராஜதந்திரம் என வரலாறு பேசுகிறது. இந்தியரை கொன்று குவித்தாலும் அவர்களுக்கு முந்தைய ஆட்சியாளர்களால் மறுக்கப்பட்ட அனைத்தையும் கொடுத்து உலகின் பிறபகுதி மக்களுக்கு நிகராக அவர்களையும் மாற்றிய பெருமை மிக்க பிரிட்டிஷாரை கொடுங்கோலர்கள் என்கிறார்கள்.
ஆனால், தங்களுடன் இணையாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என்று மிரட்டல் விடுத்து, போதுமான ராணுவ பலம் இல்லாத குட்டி சமஸ்தானத்தை வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் இணைத்ததை வீரம் என்கிறார்கள்.
அதேசமயம், இந்தியாவின் வீரப்பெண்மணி என்ற புகழுக்கு மிகவும் பொருத்தமான இந்திராவை இவர்கள் மறைக்க முயற்சிக்கிறார்கள். இருந்தாலும் இந்திராவின் புகழை யாரும் மறைத்துவிட முடியாது என்பதே உண்மை.
அவருடைய அரசியலில் குறைகள் இருக்கலாம். ஆனால், அவர் இந்தியாவின் முன்னேற்றத்துக்காக மேற்கொண்ட முயற்சிகளை அனைத்தும் சமத்துவம் சார்ந்தவை. அவர் இந்திய மக்களை மிகவும் நேசித்தார் என்பதை மறுக்க முடியாது.
பஞ்சாபை தனிநாடாக பிரித்து காலிஸ்தான் உருவாக்கக் கோரிய தீவிரவாதிகளை ஒடுக்க சீக்கியர்களின் பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பி தீவிரவாதிகளின் தலைவனை கொன்றார். இதற்கு அடுத்த சில மாதங்களில் 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி சீக்கிய பாதுகாவலர்களால் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவருடைய இடுப்புப்பகுதி அனைத்தும் சல்லடைக் கண்களாக துளைக்கப்பட்டது. இந்திரா குண்டுதுளைக்காத உடை அணிவார் என்று நினைத்த பாதுகாவலர்கள், அவருடைய மார்புப்பகுதியை தவிர்த்துவிட்டு இடுப்புப்பகுதியை குறிவைத்து சுட்டதாக பின்னர் தெரியவந்தது.
இன்னொரு தகவலும் கூறப்பட்டது. ஆம், சீக்கியர்களின் மனம் புண்படும் வகையில் அவர்களுடைய புனிததலமான பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியிருக்கிறீர்கள். எனவே, சீக்கியர்களை உங்கள் பாதுகாப்புக்கு அனுமதிக்க வேண்டாம் என்று இந்திராவிடம் உளவுத்துறை அதிகாரிகள் யோசனை கூறினார்கள்.
ஆனால், அந்த யோசனையை இந்திரா ஏற்கவில்லை. எனது நாட்டினரை நானே சந்தேகிப்பதா? தேவையில்லை. அப்படி இந்த உயிர் போனால் அதுவும் எனக்கு பெருமைதான் என்றார் இந்திரா.
ஆனால், அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் இந்தியாவின் முக்கிய பகுதிகளில் சீக்கியர்கள் ஏராளமாக கொல்லப்பட்டனர். இதற்கு இந்திரா எப்படி பொறுப்பாவார்?
எனினும், காங்கிரஸ் மீது படிந்த கறையாகவே சீக்கியர் படுகொலைகள் நீடித்தன. ஆனால், நடந்த அந்த சம்பவத்துக்காக காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக மன்னிப்புக் கோரியது. பிராயச்சித்தமாக மன்மோகன் சிங் என்ற சீக்கியரை பிரதமராகவே ஆக்கியது காங்கிரஸ். மன்னிப்புக் கேட்பவனே மிகப்பெரிய மனிதன் என்பார்கள். அன்பால் அரவணைப்பதே வீரம் என்று ஆபத்தையும் பொருட்படுத்தாமல் சீக்கிய பாதுகாவலரை அரவணைத்து உயிர்துறந்தவர் இந்திரா காந்தி.
ராணுவத்தைப் பயன்படுத்தி இந்தியாவை ஒருங்கிணைத்தார் என்பதைக் காட்டிலும், அன்பால் ஒருங்கிணைத்தார் என்றிருந்தால் படேலை பாராட்டலாம் என்பதே பெரும்பாலோர் கருத்து.
இந்தியாவின் வீரப்பெண்மணி இந்திரா துப்பாக்கி ரவைகளால் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட 35 ஆவது நினைவுதினத்தை பின்னுக்குத் தள்ளும்வகையில், அந்த நாளை திசைதிருப்பும் வகையிலேயே படேலின் பிறந்தநாளை முன்னிறுத்துகிறது பாஜக.
மேக் இந்தியா என்ற கோஷத்தை அறிமுகப்படுத்திய மோடி, இந்தியாவை ஒருங்கிணைத்ததாக புகழ்கிற படேலின் சிலையை செய்து ஒருங்கிணைக்க சீனாவின் உதவியை நாட வேண்டியதாயிற்று. 33 மாதங்களில் 182 மீட்டர் உயரத்துக்கு இந்தச் சிலையை நிறுவியிருப்பதாக மோடி மக்களுக்கு வானவேடிக்கை காட்டியிருக்கிறார்.
ஆட்சிக்காலம் முடிய சில மாதங்களே இருக்கும் நிலையில், இந்தியாவின் நிர்வாகத்துறை, நீதித்துறை என எல்லாவற்றையும் சீர்குலைத்துவிட்டு, அவற்றிலிருந்து மக்கள் கவனத்தை திருப்ப படேல் சிலைத்திறப்பு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.
காங்கிரஸ் அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்த, காந்தி கொலையைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடைவிதித்து படேலை இப்போது ஏன் பாஜக தலையில் தூக்கி வைத்து உரிமை கொண்டாடுகிறது? வேறு காரணம் என்னவாக இருக்கமுடியும்?
காங்கிரஸில் இருந்த இந்துத்துவாவை வலியுறுத்திய தலைவர் என்பதைத் தாண்டி என்னவாக இருக்க முடியும்? மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், மக்கள் மத்தியில் சொல்லிக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு தலைவர்கள் இல்லை. அந்தக் குறையைப் போக்கத்தான் காங்கிரஸிடம் கடன்வாங்கிய தலைவரான வல்லபபாய் படேலின் பிறந்தநாளை பாஜக முன்னிலைப்படுத்துகிறது. அரசு அவர்கள் வசம் இருப்பதால் கவனம் அவர் மீது திருப்பப்பட்டுள்ளது. படேலை இரும்பு மனிதர் என்று அடையாளப்படுத்தும் பிரதமர் மோடி, அவருடைய புகழை முந்தைய அரசுகள் மறைத்துவிட்டதாக குறைகூறுவதை வழக்கமாகவே கொண்டிருக்கிறார். அது குஜராத்தில் அவருக்கு ஏதேனும் ஒருவகையில் உதவியாக இருக்கலாம். இந்தியா முழுமைக்கும் எந்தக் காலத்திலும் உதவப் போவதில்லை என்பதை காலம் நிரூபிக்கத்தான் போகிறது.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று படேலை உருவகப்படுத்துவது சரியா என்ற கேள்விகளுக்கு பலவிதமான விமர்சனங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்றைய இந்தியாவை ஒருங்கிணைக்க படேல் சொந்த மக்கள் எத்தனை ஆயிரம் பேரை ராணுவத்தைப் பயன்படுத்திக் கொன்று குவித்தார் என்பதை மறைத்துவிட்டு அவருக்கு புகழ்மாலை சூட்டுவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி அப்போதும் இருந்தது. இப்போதும் இருக்கவே செய்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எப்படி ராணுவத்தைப் பயன்படுத்தி இந்தியாவைக் கைப்பற்றினார்களோ, அதே பாணியில்தானே விடுதலைக்கு பிறகான இந்தியாவின் உள்துறை அமைச்சரான படேலும் இந்தியாவுடன் இணைய மறுத்த காஷ்மீர், ஹைதராபாத் நிஜாம் உள்ளிட்ட பெரிய சமஸ்தானங்களையும், குட்டிக்குட்டி சமஸ்தானங்களையும் ராணுவத்தை பயன்படுத்தி சொந்த மக்களின் ரத்தத்தைக் குடித்து ஒன்றிணைத்தார்?
ராணுவம் இருந்தால் அதற்கு தலைமைப் பொறுப்பு கிடைத்தால் ஒருவர் இரும்பு மனிதர் ஆகிவிடுவாரா?
இது கேலிக்குரியது இல்லையா? இணைய விரும்பாத மக்களை அச்சுறுத்தி அவர்களைக் கொன்று குவித்து இந்தியாவை ஒருங்கிணைத்துவிட்டேன் என்று மார்தட்டுவது பெருமையா என்றுதான் இப்போதும் ஒருபகுதி மக்கள் கேட்கிறார்கள்.
வீரம் அதுவல்ல, அன்பு காட்டி அரவணைப்பதே மிகச்சிறந்த ராஜதந்திரம் என வரலாறு பேசுகிறது. இந்தியரை கொன்று குவித்தாலும் அவர்களுக்கு முந்தைய ஆட்சியாளர்களால் மறுக்கப்பட்ட அனைத்தையும் கொடுத்து உலகின் பிறபகுதி மக்களுக்கு நிகராக அவர்களையும் மாற்றிய பெருமை மிக்க பிரிட்டிஷாரை கொடுங்கோலர்கள் என்கிறார்கள்.
ஆனால், தங்களுடன் இணையாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என்று மிரட்டல் விடுத்து, போதுமான ராணுவ பலம் இல்லாத குட்டி சமஸ்தானத்தை வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் இணைத்ததை வீரம் என்கிறார்கள்.
அதேசமயம், இந்தியாவின் வீரப்பெண்மணி என்ற புகழுக்கு மிகவும் பொருத்தமான இந்திராவை இவர்கள் மறைக்க முயற்சிக்கிறார்கள். இருந்தாலும் இந்திராவின் புகழை யாரும் மறைத்துவிட முடியாது என்பதே உண்மை.
அவருடைய அரசியலில் குறைகள் இருக்கலாம். ஆனால், அவர் இந்தியாவின் முன்னேற்றத்துக்காக மேற்கொண்ட முயற்சிகளை அனைத்தும் சமத்துவம் சார்ந்தவை. அவர் இந்திய மக்களை மிகவும் நேசித்தார் என்பதை மறுக்க முடியாது.
பஞ்சாபை தனிநாடாக பிரித்து காலிஸ்தான் உருவாக்கக் கோரிய தீவிரவாதிகளை ஒடுக்க சீக்கியர்களின் பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பி தீவிரவாதிகளின் தலைவனை கொன்றார். இதற்கு அடுத்த சில மாதங்களில் 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி சீக்கிய பாதுகாவலர்களால் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவருடைய இடுப்புப்பகுதி அனைத்தும் சல்லடைக் கண்களாக துளைக்கப்பட்டது. இந்திரா குண்டுதுளைக்காத உடை அணிவார் என்று நினைத்த பாதுகாவலர்கள், அவருடைய மார்புப்பகுதியை தவிர்த்துவிட்டு இடுப்புப்பகுதியை குறிவைத்து சுட்டதாக பின்னர் தெரியவந்தது.
இன்னொரு தகவலும் கூறப்பட்டது. ஆம், சீக்கியர்களின் மனம் புண்படும் வகையில் அவர்களுடைய புனிததலமான பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியிருக்கிறீர்கள். எனவே, சீக்கியர்களை உங்கள் பாதுகாப்புக்கு அனுமதிக்க வேண்டாம் என்று இந்திராவிடம் உளவுத்துறை அதிகாரிகள் யோசனை கூறினார்கள்.
ஆனால், அந்த யோசனையை இந்திரா ஏற்கவில்லை. எனது நாட்டினரை நானே சந்தேகிப்பதா? தேவையில்லை. அப்படி இந்த உயிர் போனால் அதுவும் எனக்கு பெருமைதான் என்றார் இந்திரா.
ஆனால், அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் இந்தியாவின் முக்கிய பகுதிகளில் சீக்கியர்கள் ஏராளமாக கொல்லப்பட்டனர். இதற்கு இந்திரா எப்படி பொறுப்பாவார்?
எனினும், காங்கிரஸ் மீது படிந்த கறையாகவே சீக்கியர் படுகொலைகள் நீடித்தன. ஆனால், நடந்த அந்த சம்பவத்துக்காக காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக மன்னிப்புக் கோரியது. பிராயச்சித்தமாக மன்மோகன் சிங் என்ற சீக்கியரை பிரதமராகவே ஆக்கியது காங்கிரஸ். மன்னிப்புக் கேட்பவனே மிகப்பெரிய மனிதன் என்பார்கள். அன்பால் அரவணைப்பதே வீரம் என்று ஆபத்தையும் பொருட்படுத்தாமல் சீக்கிய பாதுகாவலரை அரவணைத்து உயிர்துறந்தவர் இந்திரா காந்தி.
ராணுவத்தைப் பயன்படுத்தி இந்தியாவை ஒருங்கிணைத்தார் என்பதைக் காட்டிலும், அன்பால் ஒருங்கிணைத்தார் என்றிருந்தால் படேலை பாராட்டலாம் என்பதே பெரும்பாலோர் கருத்து.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|