புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு Poll_c10`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு Poll_m10`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு Poll_c10 
11 Posts - 50%
heezulia
`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு Poll_c10`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு Poll_m10`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு Poll_c10`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு Poll_m10`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு Poll_c10 
53 Posts - 60%
heezulia
`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு Poll_c10`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு Poll_m10`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு Poll_c10`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு Poll_m10`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு Poll_c10`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு Poll_m10`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 11, 2018 1:45 pm

`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு 141864_thumb
-
இடம்: மெட்ராஸ்

1780-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் மைசூர்போரில்,
பிரிட்டிஷாரையும் அவர்களுடன் இணைந்து நிற்கும்
பிரெஞ்சு வீரர்களையும் எதிர்த்தே ஆக வேண்டும் என
முடிவுசெய்துவிட்டார் ஹைதர் அலி.

களத்தில் பிரிட்டிஷுக்கு எதிராக முதன்மையாக நிற்கிறார்,
அவர் மகன் திப்பு சுல்தான். முதலில் ஈட்டி தாங்கிய வீரர்கள்,
பிறகு வாள் ஏந்திய வீரர்கள், இறுதியில் குதிரைப்படை என்ற
போர்ப்படையைத்தான் இந்தியர்கள் அமைப்பார்கள் என்பது
பிரிட்டிஷாருக்குத் தெரியும்.

ஆனால், அவர்களுக்கு முதல் ட்விஸ்ட்டாக, இந்த அமைப்புக்கு
மாறாக திப்பு மற்றும் அவரின் வீரர்கள் சிறிய ஒரு படையாகக்
களத்தை நோக்கிப் பயணப்பட்டனர்.

திப்புவின் படையை நோக்கி எதிர்ப்படை தாக்க ஆயத்தமாகிய
போது, `டமார்..!' என்று ஏதோ புதிய சத்தம். சுற்றிப் புகைமூட்டம்.
ஒருவழியாக புகையை விளக்கித் தேடியபோது, சுற்றி இருந்த
பிரிட்டன், பிரெஞ்சு வீரர்கள் தெறித்து ஓடிக்கொண்டிருந்தனர்.

செய்வதறியாது கதிகலங்கிய பிரிட்டன், அந்தப் போரில் தன்
படைகளைப் பின்வாங்கியது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 11, 2018 1:48 pm

`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு DM733OzXkAEreyU_14570
-
இடம் : நாசா தலைமையகம், அமெரிக்கா

வெர்ஜீனியா ராக்கெட், தொழில்நுட்ப அலுவலக வரவேற்பறையில்
ஓர் ஓவியம், காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். குண்டுகள் பாய்ந்து
செல்வது, ஓடும் பிரிட்டிஷ் வீரர்கள், மிரளும் குதிரை என அந்த
ஓவியத்துக்கான நாயகன் திப்பு சுல்தான்.

ஆம், `அன்று போரில் ஏவுகணை மூலம் 2 கி.மீ தூரம் வரை செல்லும்
திப்பு பயன்படுத்திய பீரங்கி குண்டுதான், இன்றைய ராக்கெட்
தொழில்நுட்பத்துக்கான முன்னோடி' என்று உலகின் முன்னணி
விண்வெளி ஆய்வு நிறுவனம் புகழ்கிறது.

49 வயது வரை வாழ்ந்த திப்புவின் நிர்வாகத்தை, இன்று வரை
உலகம் கொண்டாடுகிறது.
-
வரலாற்றில் ஓர் அரசர், அளவுக்கு மீறிப் புகழப்படுபவராகவும்
அல்லது கொடுங்கோலராகவும் காட்டப்படுவார்கள்.

திப்புவின் வரலாறோ, இரண்டையும் கொண்டுள்ளது.
ஒரு சாரார் திப்புவின் செயல்பாடுகளை விமர்சித்தாலும்,
தொடர்ந்து திப்பு சுல்தான் எப்படிப்பட்டவர் என்ற ஆதாரம்
வரலாறு முழுக்கப் படர்ந்து கிடக்கிறது.

`ஹைதர் அலியின் மரணத்துக்குப் பிறகு, மைசூர் நமக்கானது
என நினைத்தோம். ஆனால், இளமைத் ததும்பும் அவன் வாரிசு
எந்தவொரு தீதுமில்லாமல், கொடுங்கோன்மையில்லாமல்
ஆட்சிக்கு வந்திருக்கிறான்.

அவனது பேராவல், கிழக்கிந்திய கம்பெனியின் அமைதிக்கும்
நலத்துக்கும் நியாயமற்றதாக மாற வாய்ப்புகள் அதிகம்
உள்ளன. அவனது குணநலன்களையும் உணர்வுபூர்வமான
எண்ணங்களையும் அவனிடமிருந்து பெற வேண்டும்.

மனிதாபிமானத்திலும் மேம்பட்ட குணத்திலும்
தன் தந்தையைக்காட்டிலும் உயர்ந்து நிற்கிறார்;
காரணங்களைப் புரிந்துகொண்டு செயலாற்றுகிறார்' என்று
அப்போதைய மெட்ராஸ் கவர்னராக இருந்த மெக்கார்ட்னியின்
எழுத்தே பிரிட்டிஷாருக்கு எரிச்சலைத் தந்தது.
-
------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 11, 2018 1:51 pm

`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு Tipu_14435

போர்க்களத்தில் திப்புவின் வீரம் நாம் அறிந்ததே.
போரைத் தாண்டி திப்புவின் குணம், நிர்வாகம்,
மன்னராட்சியிலும் அவர் வழிநடத்திய ஜனநாயக
மாண்புகள் அனைத்தும் கவனிக்கவேண்டியவை.

குறிப்பாக, மரணதண்டனை, விசாரணையின்றி தண்டனை
போன்றவற்றை திப்பு முழுவதும் மறுத்தார். உதாரணமாக,
ஆங்கிலேயருக்கு உதவிசெய்யும் வகையில் அரசின்
ஆயுதக்கிடங்கிலிருந்து திருடிய 16 குற்றவாளிகளைத்
தண்டிப்பது தொடர்பான திப்பு மற்றும் ஆலோசகர்
மீர் சாதிக் விவாதத்தைக் கூறலாம்.
--
``நீ என்னை நேசிப்பாயானால், என் தவறுகளைப்
பொறுத்துக்கொள்ள முடியாதா?'' என்று திப்பு, மீர் சாதிக்கிடம்
கேட்டார்.

``மன்னிப்பின் மூலம் நீங்கள் உங்கள் அதிகாரத்தைக்
குறைத்துக்கொள்கிறீர்கள். கருணையும் நீதியும்
ஒரே நேரத்தில் நடக்காது. நீதியை நிலைநாட்ட, சற்று
கடுமை அவசியம்.

நட்பு, கருணை, அன்பு இவையெல்லாம் ஒரு மன்னனுக்குத்
தேவையற்றவை. மன்னன் இரும்புபோல் உறுதியாக இருக்க
வேண்டும். மன்னிக்கப்படும் துரோகிகள், கழுத்துக்குக்
கத்தியாகவே நிற்பார்கள்.

மன்னர் பற்றிய பயம் மக்களுக்கு இருக்க வேண்டும்'' என்று
மீர் சாதிக் பதிலளித்தார்.

அதற்கு திப்பு, ``பயமா, அன்புக்கும் நன்றிக்கும்
அரசு முறையில் இடமில்லையா?'' என்று கேட்டார்.

ராஜத்துரோகம் செய்தவர்கள் மீதான திப்புவின் செயல்பாடு,
பலருக்கும் சலிப்பை ஏற்படுத்தியது. அதேசமயம், குற்றவாளி
தன்னை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு, குறுக்கு விசாரணை,
எழுத்துபூர்வமான ஆதாரம், குற்றம் நிரூபிக்கும் வரை
தண்டனைக்குத் தடை, மன்னிப்பு, மேல்விசாரணைக்கு வாய்ப்பு,
எந்நிலையிலும் மரண தண்டனை கூடாது...

போன்ற திப்புவின் செயல்பாடுகள் ஆச்சர்யமூட்டின. ஒவ்வொரு
புதிய சட்டத்தையும், மனித உரிமையையும் மக்கள் நலனையும்
கருத்தில்கொண்டு உருவாக்கினார்.
-
---------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 11, 2018 1:53 pm

`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு 20_tippu_sultan_14208
மக்களால் நான்... மக்களுக்காக நான்!

பெரும் வியாபாரிகளையும் அவர்கள் மூலம் பெறும்
வரிகளையும் மட்டும் நம்பி இல்லாமல், அடித்தட்டு
மக்களுக்கான நலனில் அக்கறைக்காட்டினார்.

அதில் முதன்மையான செயல், நிலவுடைமை சமுதாயத்தில்
விவசாயிகளுக்காகப் பல புதிய சலுகைகள் வழங்கப்பட்டன.

அவை,

* குத்தகைதாரர்களை, நில உரிமையாளர்கள் காரணமின்றி
நீக்க முடியாது.

* தரிசு நிலங்களை விவசாய நிலமாக மாற்றும் வகையில்
முதல் மூன்று வருடத்துக்கு விவசாயி குத்தகைத்தொகை
தரத் தேவையில்லை.

* வறட்சி, வெள்ளம் போன்ற சீற்றங்களின்போது குத்தகையைக்
குறைக்க அல்லது தள்ளுபடி செய்ய வேண்டும். ஏனெனில்,
விவசாயிகளின் நலனும் வளமுமே அரசின் லட்சியமாகும்
போன்ற சலுகைகள் வழங்கப்பட்டன.

இது, பக்கத்து நாடுகளில் வரி வசூல்செய்யும் பிரிட்டிஷார்
முதல் திப்புவின் அமைச்சர்கள் வரை பலருக்கும் அதிருப்தியை
ஏற்படுத்தியது.

``நம் மக்களின் சமூக, பொருளாதார நலனுக்காக முழுமையான
மது ஒழிப்பை அமலாக்குவோம். மது உற்பத்தியையும்
விற்பனையையும் சட்டவிரோதமாக்குவோம்'' என்றார் திப்பு.

`இதனால், அரசின் வருமானம் குறைவது முதல், இழப்பும்
அதிகமாகும்' என அமைச்சர்கள் வருத்தப்பட்டனர்.

மதவாதியா... மனிதவாதியா?

வலதுசாரி இயக்கங்களால் திப்புவின் மீது தொடர்ந்து
சுமத்தப்படும் அவதூறு, அவர் மதவாதி, இந்துக்களை
மதமாற்றம் செய்தவர். முஸ்லிம்களுக்கு மட்டுமே
பொறுப்புகளை அளித்தவர்,

இந்துக் கோயில்களை இடித்தவர் என, அவர் இஸ்லாமியர்
என்ற ஒரே காரணத்துக்காக எதிர்க்கப்படுகிறார்.
ஆனால், திப்பு சுல்தான் எப்படிப்பட்டவர் என்பதற்கு,
ஆதாரங்கள் பல உள்ளன.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 11, 2018 1:56 pm


1916-ம் ஆண்டு மைசூரில் தொல்லியல் துறையின் அப்போதைய
இயக்குநராகப் பணிபுரிந்த ராவ்பகதூர் கே.நரசிம்மாச்சார்,
கடிதங்கள் அடங்கிய கட்டு ஒன்றை சிங்கேரி கோயிலில்
கண்டெடுத்தார். அவை கோயில் மடாதிபதிக்கு, திப்புவால்
எழுதப்பட்டவை.

1791-ம் ஆண்டு மராத்திய குதிரைப்படை ஒன்று சிங்கேரிக்குள்
புகுந்து சூறையாடியதால், மடத்தில் உள்ள புனிதப் பொருள்கள்
பல அபகரிக்கப்பட்டன. பெண் தெய்வம் சாரதாவின் சிலை
தூக்கியெறியப்பட்டது; பலர், கொல்லப்பட்டனர்...

படுகாயமடைந்தனர். இதை விளக்கி, சிலையைப் புதுப்பிக்க
மடாதிபதி, திப்புவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதைப்
படித்துவிட்டு கோபமும் வருத்தமும்கொண்ட திப்பு, அந்தக்
கடிதத்துக்கான பதில் கடிதத்தில், `புனிதமான அந்த இடத்தில்
இதுபோன்ற கேவலமான பாவச்செயல்களில் ஈடுபட்டவர்கள்,
விளைவுகளை நிச்சயம் அனுபவிப்பார்கள்' என்று எழுதியதோடு,
உடனடியாக பெத்தனூர் `அசாபுக்கு' உத்தரவிட்டு
200 ரஹாதிஸ் பணம் ரொக்கமாகவும், 200 பண மதிப்பு உடைய
அரிசியும் மற்ற பொருள்களும் கொடுத்து, சாரதா சிலையைப்
புதுப்பிக்க உத்தரவிட்டார்.

தன் மக்களுக்காக இறுதிவரை களத்தில் போராடிய திப்புவைப்
பற்றி கையறுநிலையாக பிரிட்டிஷ் மூர் இப்படிக் குறிப்பிடுகிறார்.

``முற்றிலும் வெறுத்து ஒதுக்கிய, தீர்க்கமாக அழிக்கப்பட்ட அவரது
பெயரையும் குணாதிசயத்தையும் வெளிப்படுத்த முடியாதபடிக்கு
உண்மையிலேயே பிற்காலத்தில் எங்கள் மொழி, வார்த்தைகள்
இல்லாமல் சூறையாடப்பட்டிருக்கும். இழிவான சிறப்புப்
பெயர்களைக்கொண்டு எழுதுவதால் மொழி ஞானம் தீர்ந்து
போயிருக்கும்.

அவரது குணாதிசயத்தைப் போற்றிப் புகழும் அளவுக்கு
ஆங்கிலமொழியில் வார்த்தைகள் இல்லை. இதுபோன்ற
புகழின் உச்சநிலைக்கு, அவர் நினைவுகள் தகுதியானவைதான்''
என்று குறிப்பிடுகிறார்.

விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து திப்பு கூறுகிறார்,
``சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் என்றும் தொடரும்..."
-
---------------------------------
அப்துல்லா.மு
நன்றி-விகடன்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக