புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_c10இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_m10இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_c10 
60 Posts - 48%
heezulia
இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_c10இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_m10இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_c10இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_m10இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_c10இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_m10இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_c10இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_m10இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_c10இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_m10இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_c10இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_m10இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி!


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 22, 2019 6:18 pm

இன்று உலக தண்ணீர் தினம். உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கு, அதாவது சுமார் இரண்டு பில்லியன் மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! ZEI6BOd6REOi0IXRCrIY+153081_thumb
நாம் வாழ்ந்துகொண்டிருப்பது நவீன யுகம். இங்கு எந்த முன்னேற்றத்துக்கும் நீண்டகாலம் தேவையில்லை. வளர்ச்சியாயினும் வீழ்ச்சியாயினும் உடனுக்குடன் நடந்துவிடும் இந்த யுகத்தைக் கச்சிதமாகப் புரிந்துகொண்ட ஐ.ஐ.டி, தன் முயற்சிகளை முழுவீச்சில் கொண்டுசென்ற வண்ணமிருக்கிறது. அவர்களின் சாதனைப் பட்டியலில் மற்றுமொரு மைல்கல்லாகச் சேர்ந்துள்ளது, சூரிய சக்தியில் இயங்கக்கூடிய கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம்.

நன்றி
விகடன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 22, 2019 6:19 pm

இன்று உலக தண்ணீர் தினம். பூமியிலுள்ள நன்னீர் இருப்பைக் கொண்டாடுவதற்காகவும் அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் தண்ணீர் தினம் மார்ச் மாதம் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கு, அதாவது சுமார் இரண்டு பில்லியன் மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எதிர்காலத்தில் இது இன்னும்கூட அதிகமாகலாம். 2025-ம் ஆண்டு சுமார் 60% சதவிகிதம் மக்கள் குறைந்த அளவிலிருந்து மிகவும் அதிகமான அளவில் தண்ணீர்ப் பிரச்னைகளைச் சந்திக்கலாம் என்கின்றனர் நீரியல் வல்லுநர்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 22, 2019 6:20 pm

இந்த ஆண்டின் தண்ணீர் தினத்தை முன்னிட்டு `தண்ணீர் அனைவருக்குமானது' என்ற முழக்கத்தோடு மேற்கண்ட அறிக்கையை ஐ.நா வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குத் தகுந்த வகையிலான திட்டங்களும் அறிவுபூர்வமான முன்னெடுப்புகளுமே நம்மை வருங்காலச் சூழலியல் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும். நீர்வள மேம்பாட்டில் பங்கு வகிக்கும் இயற்கையான நீர்நிலைகளை நிலத்தடி நீர்த்தேக்கங்களைப் பராமரிக்கவேண்டும். அதேபோல் அதிகரித்துவரும் மக்கள் தொகைக்குத் தகுந்தவாறு நீர் விநியோகமும் சாத்தியப்பட வேண்டும். உலகளவில் நகரங்கள் பெருத்துக்கொண்டே போகின்றன. அதிகரித்துவரும் மக்கள் தொகை முக்கிய பிரச்னையாகத் தலைதூக்கி நிற்கின்றது. அதற்குத் தகுந்த வகையில் நகரக் கட்டுமானங்கள் ஆரோக்கியமாக இல்லை. அதனால், அனைத்து மக்களுக்குமான அடிப்படை நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்வதும் சிக்கலாகி வருகின்றது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 22, 2019 6:21 pm

இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! Ac9ElHrmR82GqmgCZI04+maxresdefault_17259

கடலோரப் பகுதிகளில் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது, உப்புநீரைக் குடிநீராக்கும் நிலையங்கள். கடல்நீரைக் குடிநீராக மாற்றுவது அத்தனை எளிதான காரியமல்ல. அலையாத்திக் காடுகளில் வளரும் தாவர வகையொன்று உண்டு. அதன் பெயர் வெண்கண்டல். அலையாத்தித் தாவரங்கள் அனைத்துமே நன்னீரை மட்டும் எடுத்துக்கொண்டு வளர்பவைதாம். ஆனால், கடல்நீரோடு நதிநீர் கலக்கும் பகுதி என்பதால் அங்கிருக்கும் நீரில் உப்புத்தன்மை அதிகமாக இருக்கும். அதிலிருந்து உப்பை நீக்கிவிட்டு, நன்னீரை மட்டும் எடுத்துக்கொள்ள ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு முறையைக் கையாள்கின்றது. சில தாவரங்கள் உப்பைத் தவிர்த்து நன்னீரை மட்டும் உறிஞ்சிக் கொள்ளும். சில தாவரங்கள் உப்பு நீரை எடுத்துக்கொண்டு, அதிலிருக்கும் உப்பை மட்டும் இலைத் துவாரங்கள் வழியாகத் துப்பிவிடும். இரண்டாவது முறையைக் கையாளும் தாவரம்தான் இந்த வெண்கண்டல்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 22, 2019 6:21 pm

வெண்கண்டல் எப்படி உப்பு நீரை உறிஞ்சிக்கொண்டு அதிலிருக்கும் நன்னீர் மற்றும் ஊட்டச்சத்துகளைத் தனியே பிரித்துவிட்டு உப்பைத் துப்பிவிடுகிறதோ அதையேதான் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களும் செய்கின்றன. இது வெண்கண்டலின் வளர்ச்சி சார்ந்த செயற்பாடுகளில் ஒன்று. நாம் சாப்பிடுவதும் அதிலிருக்கும் ஊட்டச்சத்துகளை உடல் எடுத்துக்கொண்டு மிச்சத்தைச் செரிமானம் மூலமாக வெளியேற்றுவது போல. அதையே செயற்கையாகச் செய்ய வேண்டுமென்றால், அதற்கு அதிகமான பொருள்செலவும் ஆற்றலும் தேவை. அத்தனை செலவுகளையும் செய்தே இதுவரை நாம் இந்தச் செயல்முறையைச் செய்துவருகிறோம். ஆனால், எதிர்காலத்தில் அவ்வளவு அதிகமான ஆற்றலைச் செலவு செய்யவேண்டிய தேவையிருக்காது. ஆரோக்கியமான முறையில் எளிமையான பொருள்செலவில் அதிகமான ஆற்றலைக் கிரகித்து இயங்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்திருக்கிறது சென்னை. ஐ.ஐ.டி. இதன்மூலம், எதிர்காலத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் எளிமையாகவும் ஆக்கபூர்வமாகவும் மேற்கொள்ள வழிவகுத்திருக்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 22, 2019 6:23 pm

தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கான தீர்வுகளில் ஒன்றாகக் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டமும் இருக்கிறது. இதைப் புரிந்துகொண்டவர்கள், சரியான சமயத்தில் சரியான திட்டத்தைக் கொண்டுவந்துள்ளார்கள். அறிவியல் பார்வையோடு கூடிய சமுதாயச் சூழலியல் திட்டங்கள்தாம் இனி வரக்கூடிய பிரச்னைகளைச் சரிசெய்யக் கைகொடுக்கும்.

இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! MIEvQ5quRVOXjE8fEuNK+Shiva_Gorjian_17199
இதை உணர்ந்த ஐ.ஐ.டி இந்தியாவிலேயே முதல்முறையாக கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தா நினைவில்லத்துக்கு அருகே சூரிய சக்தியால் இயங்கும் நாட்டின் உப்பு நீக்கும் ஆலையை நிறுவியுள்ளார்கள். நில அறிவியல் துறை அமைச்சகம் இதற்கு 1.22 கோடி நிதியுதவி அளித்துள்ளது. விரைவில் இந்த உப்பு நீக்கும் ஆலையின் பரிசோதனை அடிப்படையில் செயல்படவிருக்கிறது. அது வெற்றிகரமாக முடிந்ததும், 120 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலை நாளொன்றுக்குப் பத்தாயிரம் லிட்டர் நன்னீரை உற்பத்தி செய்யும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 22, 2019 6:24 pm

சூரிய சக்தியில் இயங்கக்கூடிய உப்பு நீக்கும் ஆலைகள் மொத்தம் மூன்று கட்டச் செயல்முறைகளுடையது. முதல் கட்டத்தில் உறிஞ்சப்படும் கடல்நீர் பெரிய சேமிப்புத் தொட்டிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பல கட்ட ஃபிளாஷ் (Multi staged flash) என்ற செயல்முறையில் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் கதிர்வீச்சைச் சேமித்து வைத்து அதில் கடல்நீரைச் சூடாக்கி அடுத்த கட்டத்திற்கு அனுப்புவார்கள். இங்கு சுமார் 70 டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகமான வெப்பத்தில் கொதிக்க வைக்கப்படும் கடல்நீரை அடுத்ததாக வேறொரு தொட்டிக்கு அனுப்புவார்கள். அங்கு அனுப்பப்படும் கடல்நீர் சூரிய சக்தியால் ஆவியாக்கப்படும். அந்த நீராவி அடுத்த தொட்டியில் குளிரூட்டப்படும். அதன்மூலம், அதிலிருந்து உப்பையும் நன்னீரையும் தனித்தனியே பிரித்தெடுப்பார்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 22, 2019 6:25 pm

இந்த மூன்று கட்டங்களில் கடல் நீரிலிருக்கும் உப்பு தனியாகப் பிரிந்து தொட்டிகளில் படிந்துவிடும். இறுதியாக 2ppm என்ற அளவே உப்புத்தன்மையுடைய நன்னீர் உற்பத்தி செய்யப்படும். சூரிய வெப்பத்தைச் சேமித்து வைத்துக் கடல்நீரைச் சூடாக்கப் பயன்படுத்துகிறார்கள். அதுபோகச் சூரிய மின்சக்தித் தகடுகளின் (Solar panel) மூலம் மின்சார உற்பத்தி செய்து அந்த மின்சாரத்தை ஆலையின் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். ஆலைச் செயல்படுவதற்கு ஒரு நாளைக்குச் சுமார் 15 கிலோவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. முற்றிலும் சூரிய சக்தியிலேயே இயங்குவதால் இதனால் நீண்ட நேரத்திற்குச் செயல்பட முடியாது. சூரியனின் ஆற்றல் எவ்வளவு நேரம் இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் செயல்படும். அதன்படி பார்த்தால் தினமும் சராசரியாகச் சுமார் ஆறு முதல் ஏழு மணிநேரம்வரை இந்த வகை ஆலையால் செயல்பட முடியும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 22, 2019 6:27 pm

சூரிய சக்தியில் கிடைக்கும் மின்சாரம் நேர் மின்னோட்டம் (DC) கொண்டது. அதை மாறுதிசை மின்னோட்டமாக (AC) மாற்றுவதற்கான இன்வெர்ட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. உற்பத்தியாகும் மின்சாரத்தில் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தைப் பதினான்கு பேட்டரிகளில் சேமித்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய சக்தியில் இயங்கும் ஐந்து மோட்டார்கள் ஆலை இயங்குவதற்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுக்கும்.


இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி! ZKT7ISpNTqC0mQQSifS1+Desalination_Plant2_17042
சூரிய சக்தியில் கிடைக்கும் மின்சாரம் நேர் மின்னோட்டம் (DC) கொண்டது. அதை மாறுதிசை மின்னோட்டமாக (AC) மாற்றுவதற்கான இன்வெர்ட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. உற்பத்தியாகும் மின்சாரத்தில் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தைப் பதினான்கு பேட்டரிகளில் சேமித்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய சக்தியில் இயங்கும் ஐந்து மோட்டார்கள் ஆலை இயங்குவதற்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுக்கும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 22, 2019 6:28 pm

logo
Subscribe
மெனு
செய்திகள்
இதழ்கள்
சினிமா
ஆல்பம்
விகடன் டிவி
விளையாட்டு
ஆன்மிகம்
தொழில்நுட்பம்
ஆட்டோமொபைல்
வணிகம்
சுற்றுச்சூழல்
லைஃப் ஸ்டைல்
ஆரோக்கியம்
Archives
விகடன்செய்திகள் பல்சுவை
2 வெளியிடப்பட்ட நேரம்: 17:19 (22/03/2019) கடைசி தொடர்பு:17:19 (22/03/2019)
இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி!
க.சுபகுணம் க.சுபகுணம் Follow
Advertisement

இன்று உலக தண்ணீர் தினம். உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கு, அதாவது சுமார் இரண்டு பில்லியன் மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி!APP-ல் படிக்க
நாம் வாழ்ந்துகொண்டிருப்பது நவீன யுகம். இங்கு எந்த முன்னேற்றத்துக்கும் நீண்டகாலம் தேவையில்லை. வளர்ச்சியாயினும் வீழ்ச்சியாயினும் உடனுக்குடன் நடந்துவிடும் இந்த யுகத்தைக் கச்சிதமாகப் புரிந்துகொண்ட ஐ.ஐ.டி, தன் முயற்சிகளை முழுவீச்சில் கொண்டுசென்ற வண்ணமிருக்கிறது. அவர்களின் சாதனைப் பட்டியலில் மற்றுமொரு மைல்கல்லாகச் சேர்ந்துள்ளது, சூரிய சக்தியில் இயங்கக்கூடிய கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம்.

இன்று உலக தண்ணீர் தினம். பூமியிலுள்ள நன்னீர் இருப்பைக் கொண்டாடுவதற்காகவும் அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் தண்ணீர் தினம் மார்ச் மாதம் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கு, அதாவது சுமார் இரண்டு பில்லியன் மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எதிர்காலத்தில் இது இன்னும்கூட அதிகமாகலாம். 2025-ம் ஆண்டு சுமார் 60% சதவிகிதம் மக்கள் குறைந்த அளவிலிருந்து மிகவும் அதிகமான அளவில் தண்ணீர்ப் பிரச்னைகளைச் சந்திக்கலாம் என்கின்றனர் நீரியல் வல்லுநர்கள்.

"நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்பவராக வேண்டுமானாலும் இருக்கலாம். யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் எங்கு இருந்தாலும், யாராக இருந்தாலும் தண்ணீர் உங்கள் அடிப்படை உரிமை."

Advertisement

இந்த ஆண்டின் தண்ணீர் தினத்தை முன்னிட்டு `தண்ணீர் அனைவருக்குமானது' என்ற முழக்கத்தோடு மேற்கண்ட அறிக்கையை ஐ.நா வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குத் தகுந்த வகையிலான திட்டங்களும் அறிவுபூர்வமான முன்னெடுப்புகளுமே நம்மை வருங்காலச் சூழலியல் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும். நீர்வள மேம்பாட்டில் பங்கு வகிக்கும் இயற்கையான நீர்நிலைகளை நிலத்தடி நீர்த்தேக்கங்களைப் பராமரிக்கவேண்டும். அதேபோல் அதிகரித்துவரும் மக்கள் தொகைக்குத் தகுந்தவாறு நீர் விநியோகமும் சாத்தியப்பட வேண்டும். உலகளவில் நகரங்கள் பெருத்துக்கொண்டே போகின்றன. அதிகரித்துவரும் மக்கள் தொகை முக்கிய பிரச்னையாகத் தலைதூக்கி நிற்கின்றது. அதற்குத் தகுந்த வகையில் நகரக் கட்டுமானங்கள் ஆரோக்கியமாக இல்லை. அதனால், அனைத்து மக்களுக்குமான அடிப்படை நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்வதும் சிக்கலாகி வருகின்றது.

சூரிய சக்தியில் இயங்கும் உப்பு நீக்கும் ஆலை


கடலோரப் பகுதிகளில் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது, உப்புநீரைக் குடிநீராக்கும் நிலையங்கள். கடல்நீரைக் குடிநீராக மாற்றுவது அத்தனை எளிதான காரியமல்ல. அலையாத்திக் காடுகளில் வளரும் தாவர வகையொன்று உண்டு. அதன் பெயர் வெண்கண்டல். அலையாத்தித் தாவரங்கள் அனைத்துமே நன்னீரை மட்டும் எடுத்துக்கொண்டு வளர்பவைதாம். ஆனால், கடல்நீரோடு நதிநீர் கலக்கும் பகுதி என்பதால் அங்கிருக்கும் நீரில் உப்புத்தன்மை அதிகமாக இருக்கும். அதிலிருந்து உப்பை நீக்கிவிட்டு, நன்னீரை மட்டும் எடுத்துக்கொள்ள ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு முறையைக் கையாள்கின்றது. சில தாவரங்கள் உப்பைத் தவிர்த்து நன்னீரை மட்டும் உறிஞ்சிக் கொள்ளும். சில தாவரங்கள் உப்பு நீரை எடுத்துக்கொண்டு, அதிலிருக்கும் உப்பை மட்டும் இலைத் துவாரங்கள் வழியாகத் துப்பிவிடும். இரண்டாவது முறையைக் கையாளும் தாவரம்தான் இந்த வெண்கண்டல்.

Advertisement

வெண்கண்டல் எப்படி உப்பு நீரை உறிஞ்சிக்கொண்டு அதிலிருக்கும் நன்னீர் மற்றும் ஊட்டச்சத்துகளைத் தனியே பிரித்துவிட்டு உப்பைத் துப்பிவிடுகிறதோ அதையேதான் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களும் செய்கின்றன. இது வெண்கண்டலின் வளர்ச்சி சார்ந்த செயற்பாடுகளில் ஒன்று. நாம் சாப்பிடுவதும் அதிலிருக்கும் ஊட்டச்சத்துகளை உடல் எடுத்துக்கொண்டு மிச்சத்தைச் செரிமானம் மூலமாக வெளியேற்றுவது போல. அதையே செயற்கையாகச் செய்ய வேண்டுமென்றால், அதற்கு அதிகமான பொருள்செலவும் ஆற்றலும் தேவை. அத்தனை செலவுகளையும் செய்தே இதுவரை நாம் இந்தச் செயல்முறையைச் செய்துவருகிறோம். ஆனால், எதிர்காலத்தில் அவ்வளவு அதிகமான ஆற்றலைச் செலவு செய்யவேண்டிய தேவையிருக்காது. ஆரோக்கியமான முறையில் எளிமையான பொருள்செலவில் அதிகமான ஆற்றலைக் கிரகித்து இயங்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்திருக்கிறது சென்னை. ஐ.ஐ.டி. இதன்மூலம், எதிர்காலத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் எளிமையாகவும் ஆக்கபூர்வமாகவும் மேற்கொள்ள வழிவகுத்திருக்கிறது.

தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கான தீர்வுகளில் ஒன்றாகக் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டமும் இருக்கிறது. இதைப் புரிந்துகொண்டவர்கள், சரியான சமயத்தில் சரியான திட்டத்தைக் கொண்டுவந்துள்ளார்கள். அறிவியல் பார்வையோடு கூடிய சமுதாயச் சூழலியல் திட்டங்கள்தாம் இனி வரக்கூடிய பிரச்னைகளைச் சரிசெய்யக் கைகொடுக்கும்.

உப்பு நீக்கும் செய்முறை

Photo Courtesy: Shiva Gorjian

இதை உணர்ந்த ஐ.ஐ.டி இந்தியாவிலேயே முதல்முறையாக கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தா நினைவில்லத்துக்கு அருகே சூரிய சக்தியால் இயங்கும் நாட்டின் உப்பு நீக்கும் ஆலையை நிறுவியுள்ளார்கள். நில அறிவியல் துறை அமைச்சகம் இதற்கு 1.22 கோடி நிதியுதவி அளித்துள்ளது. விரைவில் இந்த உப்பு நீக்கும் ஆலையின் பரிசோதனை அடிப்படையில் செயல்படவிருக்கிறது. அது வெற்றிகரமாக முடிந்ததும், 120 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலை நாளொன்றுக்குப் பத்தாயிரம் லிட்டர் நன்னீரை உற்பத்தி செய்யும்.

Advertisement

சூரிய சக்தியில் இயங்கக்கூடிய உப்பு நீக்கும் ஆலைகள் மொத்தம் மூன்று கட்டச் செயல்முறைகளுடையது. முதல் கட்டத்தில் உறிஞ்சப்படும் கடல்நீர் பெரிய சேமிப்புத் தொட்டிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பல கட்ட ஃபிளாஷ் (Multi staged flash) என்ற செயல்முறையில் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் கதிர்வீச்சைச் சேமித்து வைத்து அதில் கடல்நீரைச் சூடாக்கி அடுத்த கட்டத்திற்கு அனுப்புவார்கள். இங்கு சுமார் 70 டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகமான வெப்பத்தில் கொதிக்க வைக்கப்படும் கடல்நீரை அடுத்ததாக வேறொரு தொட்டிக்கு அனுப்புவார்கள். அங்கு அனுப்பப்படும் கடல்நீர் சூரிய சக்தியால் ஆவியாக்கப்படும். அந்த நீராவி அடுத்த தொட்டியில் குளிரூட்டப்படும். அதன்மூலம், அதிலிருந்து உப்பையும் நன்னீரையும் தனித்தனியே பிரித்தெடுப்பார்கள். இந்த மூன்று கட்டங்களில் கடல் நீரிலிருக்கும் உப்பு தனியாகப் பிரிந்து தொட்டிகளில் படிந்துவிடும். இறுதியாக 2ppm என்ற அளவே உப்புத்தன்மையுடைய நன்னீர் உற்பத்தி செய்யப்படும். சூரிய வெப்பத்தைச் சேமித்து வைத்துக் கடல்நீரைச் சூடாக்கப் பயன்படுத்துகிறார்கள். அதுபோகச் சூரிய மின்சக்தித் தகடுகளின் (Solar panel) மூலம் மின்சார உற்பத்தி செய்து அந்த மின்சாரத்தை ஆலையின் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். ஆலைச் செயல்படுவதற்கு ஒரு நாளைக்குச் சுமார் 15 கிலோவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. முற்றிலும் சூரிய சக்தியிலேயே இயங்குவதால் இதனால் நீண்ட நேரத்திற்குச் செயல்பட முடியாது. சூரியனின் ஆற்றல் எவ்வளவு நேரம் இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் செயல்படும். அதன்படி பார்த்தால் தினமும் சராசரியாகச் சுமார் ஆறு முதல் ஏழு மணிநேரம்வரை இந்த வகை ஆலையால் செயல்பட முடியும். சூரிய சக்தியில் கிடைக்கும் மின்சாரம் நேர் மின்னோட்டம் (DC) கொண்டது. அதை மாறுதிசை மின்னோட்டமாக (AC) மாற்றுவதற்கான இன்வெர்ட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. உற்பத்தியாகும் மின்சாரத்தில் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தைப் பதினான்கு பேட்டரிகளில் சேமித்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய சக்தியில் இயங்கும் ஐந்து மோட்டார்கள் ஆலை இயங்குவதற்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுக்கும்.

கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம்

இந்தச் செயற்பாடுகள் தடையின்றிச் செயல்பட வேக்கம் அழுத்தம் (Vacuum pressure) கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அதற்காகப் பிரத்யேகமான வேக்கம் குழாய் அமைக்கப்பட்டிருக்கிறது. கடல்நீரில் 15,000 முதல் 35,000ppm வரை இருக்கும். அதிலிருக்கும் உப்பு சுத்தமாக நீக்கப்பட்ட பிறகு 2ppm அளவு உப்புத்தன்மை கொண்ட தண்ணீர் இந்த ஆலையிலிருந்து உற்பத்தி செய்யப்படும். ஆனால், உலக சுகாதார நிறுவன விதிகளின்படி குடிநீரில் 500ppm அளவு இருக்கவேண்டும். அதனால், நகராட்சிக் குடிநீரை இதோடு கலந்து சமநிலைக்குக் கொண்டு வருகிறார்கள். கடலோர மாவட்டங்களில் இந்தத் தொழில்நுட்பத்தின் தேவை அதிகமாகவே உள்ளது. சூழலியல் ரீதியாகப் பார்க்கும்போது நன்னீர் உற்பத்திக்குப் பின் இதில் சேரும் உப்புக் கழிவுகளைச் சிறப்பாகக் கையாளவும் சுற்றுச்சூழலுக்குப் பிரச்னை ஏற்படாத வகையில் மேலாண்மை செய்யவும் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவர வேண்டிய தேவையும் இதன்மூலம் அதிகமாகின்றது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக