புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_m10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10 
85 Posts - 51%
heezulia
காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_m10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10 
62 Posts - 37%
T.N.Balasubramanian
காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_m10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_m10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10 
7 Posts - 4%
prajai
காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_m10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_m10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_m10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_m10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10 
127 Posts - 54%
heezulia
காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_m10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_m10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_m10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10 
9 Posts - 4%
prajai
காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_m10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_m10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_m10காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 09, 2019 8:57 am


By -பி.காந்தி சுதந்திரப் போராட்ட வீரர் | தினமணி
-
காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது! Gandhi-h
----
இந்திய சுதந்திரப் போராட்டம் எழுச்சி பெற நாடெங்கிலும் சுற்றுப்பயணம் செய்தவர் மகாத்மா காந்தி. குமரி முதல் இமயம் வரை அவர் கால்படாத இடமே இல்லை. அனைத்து மாகாணங்களுக்கும் சென்றார். சுதந்திரப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றினார். அதன் விளைவாக அனைத்துப் பிரிவினரும் ஜாதி, மதம், இனம், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி சுதந்திர வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.

தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி பல்வேறு காலகட்டங்களில் வருகை தந்து பாரதி, வ.உ.சிதம்பரனார், ராஜாஜி, காமராஜர், முத்துராமலிங்கதேவர் உட்படப் பல தலைவர்களைச் சந்தித்து உரையாடி சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் தந்தார். தென் ஆப்பிரிக்காவில் சந்தித்த தமிழ்நாட்டைச் சார்ந்த தில்லையாடி வள்ளியம்மை, வேதியப்ப பிள்ளை ஆகியோரும் சுதந்திர போராட்டக் களத்தில் காந்திஜிக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

தமிழகத்தின் தென்மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி நகருக்கு மூன்று முறை சுதந்திரப் போராட்ட எழுச்சிக்காகவும், இலங்கை செல்வதற்காகவும் வந்துள்ளார். இது பற்றிய குறிப்புகள் தமிழ்நாட்டில் காந்தி என்ற நூலில் உள்ளன.
முதன் முதலாகத் தூத்துக்குடி மாநகருக்கு 27.03.1919 அன்று வருகை தந்துள்ளார். ரயில் மூலம் வருகை தந்த காந்திஜிக்கு நகர மக்கள் சிறப்பான வரவேற்பினை தந்து ஊர்வலமாக அழைத்து வந்துள்ளனர். தூத்துக்குடி கீழுர் பகுதி மட்டக்கடை பஜார் அருகில் உள்ள கோபால்சாமி தெருவில் உள்ள எஸ்.ராஜகோபால் நாயுடு இல்லத்தில் அன்று இரவு தங்கியிருந்தார். மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் தென்இந்தியாவில் உள்ள ஆலயங்களையும், சமய மரபையும் புகழ்ந்துப் பேசினார். மறுநாள் காலை மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அதன் பின்னர், 8 ஆண்டுகள் கழித்து 06.10.1927-இல் வருகை தந்த காந்திஜி
பெரைரா தெருவில் உள்ள ஐ.எஸ்.

பெரைரா இல்லத்தில் தங்கினார். ஐ.எஸ்.பெரைரா இலங்கையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற குறிப்பு உள்ளது. அன்று மாலையில் வட்டக்கிணறு மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஐ.எஸ்.பெரைரா தலைமை தாங்கினார். திலகர் தேசிய பள்ளி மாணவர்கள் கடவுள் வணக்கம் பாடினர். நகராட்சி மன்றத்தின் வரவேற்பு பத்திரத்தை அதன் தலைவர் ரோச் விக்டோரியா அளித்தார். காந்திஜியின் உரையை ராஜாஜியும், மாசிலாமணி பிள்ளையும் தமிழில் மொழிப் பெயர்த்தார்கள்.

"ஆங்கிலம் கற்பதற்கு முன் தமிழ் கற்க வேண்டும். தாய் மொழியில் கல்வி கற்பிக்க வேண்டும்' என்றார். மேலும் திருக்குறளை மூலத்திலேயே படிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன், குறிக்கோளுடனும் தான் இருபது ஆண்டுகளுக்கு முன் தமிழைக் கற்க தொடங்கியதை கூறினார்.


அதன் பிறகு 7 ஆண்டுகள் கழித்து 24.01.1934}ஆம் ஆண்டு தூத்துக்குடி வருகை தந்த காந்திஜிக்குப் பாளையங்கோட்டை பிரசன்ன விநாயகர் கோயில் முன்பு பூரண கும்ப மரியாதை வரவேற்பு கொடுக்கப்பட்டது. நகர மக்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

காரை விட்டு காந்திஜியால் இறங்க கூட முடியவில்லை. அந்த அளவுக்கு மக்கள் காந்திஜியை பார்க்க முண்டியடித்தனர். அன்று தூத்துக்குடி கீழுர் நாட்டுக்கோட்டை செட்டி தெருவில் இருக்கும் சுதந்திரப் போராட்ட தியாகியும், வழக்கறிஞருமான மு.சி. வீரபாகு வீட்டில் காந்திஜி தங்கினார். பின்னர் கடற்கரை தருவை மைதானத்தில் பொதுக்கூட்டம்.

இக்கூட்டத்தில் பேசிய காந்திஜி ""மூட நம்பிக்கையை விட்டுவிட வேண்டும். தீண்டாமையைத் துரத்த வேண்டும்'' என்றார்.

வழி நெடுக அலங்கார வளைவுகளும், ஒளி விளக்குகளும் இருந்தன. இவ்வளவு பெரிய அலங்கார ஏற்பாட்டை காந்திஜி விரும்பவில்லை. தன் உதவியாளரை அழைத்து இப்படி ஆடம்பரமாக ஏற்பாடு செய்தது தனக்குப் பிடிக்கவில்லை என்று கடிந்து கொண்டார்.

வழக்கமாக ஒவ்வொரு நாளும் தூங்கப் போவதற்கு முன் அன்றைய வரவு செலவினை பார்த்து ஒப்புதல் தருவது காந்திஜியின் வாழ்க்கை முறைகளுள் ஒன்றாகும். ஆனால் அன்றைக்கு 24.01.1934 பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு முன்"" இவ்வளவு செலவினை ஏன் செய்தீர்கள். அதற்கான கணக்கினை தாருங்கள் அப்போது தான் ஆரம்பிப்பேன்'' என்றார்.

தங்களின் மீது உள்ள அன்பின் காரணமாக தூத்துக்குடி மக்களும், ஒலிபெருக்கி உரிமையாளர்களும் தங்களின் கைப்பணத்தில் இருந்து அவர்களாகவே செலவு செய்துள்ளார்கள். உரிய கணக்கினை இரவினில் தருகிறோம் என்று கூட்ட ஏற்பாட்டாளர்கள் கூறினர். அதை அரைகுறை மனதுடன் ஏற்றுக்கொண்டு காந்திஜி கூட்டத்தில் பேசினார்.

கூட்டம் முடிந்து தங்கும் இடத்திற்கு வந்தபின் கணக்கினைப் பார்த்து சில திருத்தங்களைக் கூறினார். ""செலவு கணக்கைப் பார்த்து ஐந்தில் ஒரு பங்கை செலவழிப்பது நியாயமில்லை. பொதுப்பணத்தைக் கையாளுவதில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்'' என்றார். அன்று மு.சி.வீரபாகு வீட்டில் அனைவருக்கும் விருந்து ஏற்பாடாகி இருந்தது.

காந்திஜி சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே இரவு உணவினை உட்கொள்வது வழக்கம். எனவே அந்த விருந்தில் காந்திஜி சாப்பிடவில்லை எனத் தெரிகிறது. ஆனால் நிறைய பேர் கலந்து கொண்ட விருந்தினை கண்டு மு.சி.வீரபாகுவை அழைத்துப் பாராட்டி இந்த இல்லம் ஒரு தருமச்சாலை என்று பாராட்டினார். அன்று இரவு மு.சி. வீரபாகு வீட்டில் தங்கினார்.

மறுநாள் 25.01.1934 அன்று காலை 6 மணிக்கு போல்டன்புரம், சிவந்தாகுளம் சென்று சேரிகளையும், அங்குள்ள மக்களையும் சந்தித்தார். அப்பகுதியில் இருந்த படுக்கை போன்ற நீள கல்லில் அமர்ந்தார் என்று கூறுவதும் உண்டு.
பின்னர் சிவந்தாகுளம் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்றார்.

காந்தி வந்ததால் காந்தி விநாயகர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் பண்ணையார் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்டதாக இருக்கிறது. பின்னர் மீண்டும் பிரசன்ன விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு காலை 6.50 மணிக்கு எட்டையாபுரம் புறப்பட்டுச் சென்றார். இந்தச் சுற்றுப்பயணத்தின் போது ரோச் விக்டோரியா, வடிவேல் நாடார், காசுக்கடைச் சங்கத்தார் வரவேற்புப் பத்திரம் வாசித்து அளித்தனர்.

காந்திஜியின் வருகை தூத்துக்குடி மாநகரில் சுதந்திர போராட்டத்திற்கு உத்வேகத்தை ஏற்படுத்தியதோடு அதிகமானோரை பங்கு பெறச் செய்தது. காந்தியின் மீது கொண்ட அன்பினால் மக்கள் பலர் எளிய வாழ்க்கையைப் பின்பற்றினர். அவரது உபதேசங்களை மனதில் கொண்டு வாழ்ந்தனர். காந்திஜி மறைந்த போது தங்களின் அன்பின் அடையாளமாக நூற்றுக்கணக்கான அன்பர்கள் மொட்டை அடித்துத் தனது அஞ்சலியை செலுத்தினர்.

தூத்துக்குடிக்கு மூன்று முறை வந்த போது காந்திஜி தங்கிய வீடுகளில் முதன்முதலாக காந்திஜி வந்து தங்கிய வீடான தெருவில் உள்ள வீடு மட்டுமே இன்றைக்கும் அப்படியே உள்ளது. உரு மாறாமல் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. மற்றைய வீடுகளான மு.சி.வீரபாகு பெரைரா வீடுகள் பழைய நிலைமையில் இருந்து மாறிவிட்டன.
-
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 09, 2019 9:38 am

நல்லதொரு தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக