புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_m10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 
68 Posts - 53%
heezulia
 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_m10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_m10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_m10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_m10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_m10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 
1 Post - 1%
Guna.D
 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_m10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 
1 Post - 1%
Shivanya
 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_m10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_m10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_m10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_m10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_m10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 
15 Posts - 3%
prajai
 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_m10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_m10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 
9 Posts - 2%
jairam
 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_m10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_m10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 
4 Posts - 1%
Jenila
 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_m10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_m10 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 11, 2019 9:13 pm

🔥 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா ???
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🍄 காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள்.

🍄  நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் விவரத்தை கூறிவிட்டு ஹாலில் அமர்ந்து நேர்காணல் அழைப்புக்கு காத்திருந்தேன்.

🍄  சற்று நேரத்தில் முருகவேல் என்று அழைப்பு வந்தது.

🍄 உள்ளே சென்றவுடன் சில கேள்விகள் கேட்டு விட்டு உங்கள் பயோடேட்டாவில்  வயது 40 என்று இருக்கே நிஜமா ?

🍄 ஆமாம் சார் உண்மை தான்.

🍄  அப்படியா ..? எங்கள் நிறுவனத்தில் இளைஞர்களை தான் வேலைக்கு எடுக்கின்றோம். உங்கள் வயது 40 என்று சொல்கிறிர். கொஞ்சம் யோசனை செய்ய வேண்டி இருக்கும் முருகவேல் என்றார்கள்.

🍄 பரவாயில்லை சார் நான் வேலை செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறினேன்.

🍄 மேலும் இதற்கு முன் வேலை செய்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால் திடீர் என்று மூடிவிட்டார்கள். அதனால் வேறு வேலை தேடும் சூழ்நிலை உருவாகிவிட்டது சார்..

🍄 அந்த அதிகாரி சற்று யோசிப்பது போல் பாவனை செய்து விட்டு . முருகவேல் உங்கள் பயோடேட்டாவை கொடுத்து விட்டு செல்லுங்கள் தேவைப்படும்போது அழைக்கின்றோம் என்றார்.

🍄 மிக்க நன்றி சார் என்று கூறி விட்டு வெளியே வந்தேன்.இங்கும் வேலை இல்லை.

🍄 மனம் கனத்தது கூடவே தலையும் வலித்தது. பெரும்பாலான இடங்களில் வயதை காரணம் காட்டி தவிர்த்து விடுகிறார்கள்.

 🍄இறைவா என்ன சோதனை...

🍄 அனைத்தும் நல்லபடியாக தான் போய்க்கொண்டு இருந்தது முன்பு வேலை செய்த நிறுவனம் மூடும் வரை.. அந்த வேலையை நம்பி வாங்கிய கடன்கள் கழுத்தை நெறிக்க தொடங்கியது..

🍄 ஒரே மகனின் படிப்பு செலவு , வீட்டுக்கு தேவையான செலவு மேலும்.. மேலும்.. ஐயனே ஈசனே எப்படி சமாளிக்க போகிறேன்.

🍄 தலை மேலும் வலித்தது. பேருந்துக்கு வைத்து இருக்கும் காசில் காபி சாப்பிட்டு நடந்து வீட்டுக்கு செல்லலாம் என்று முடிவு செய்து காபி சாப்பிட்டு நடக்க துவங்கினேன். வாங்கிய வண்டியும் ஒரமாக இருக்கிறது.

🍄 ஆழ்ந்த சிந்தனையில் நடந்து செல்லும்போது ரோட்டின் ஓரத்தில் ஒரு தோல் பை அனாதையாக கிடந்தது.

🍄 சின்னதாக ஒரு சபலம் எடுத்து திறந்து பார்த்தேன் . குப்பென்று வியர்த்து கொட்டியது.

🍄 பையில் கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள்.. கை கால்கள் உதறல் எடுத்தது. இருப்பினும் எடுத்து வைத்து கொண்டேன்.

🍄 மனம் பலவிதமாக என்னுள் பேசியது. ஒரு பக்கம் எச்சரிக்கை செய்தது. அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம் தோன்றியது.

🍄 ஆனாலும் கட்ட வேண்டிய கடன்களும் , குடும்ப செலவுகளும் கண் முன்னே நின்று பயமுறுத்தியது.

🍄 வீடு வந்து சேரும் வரை மனச்சத்தங்கள் ஏராளம் , உடல் முழுவதும் வியர்வை ஊற்றியது. வீட்டில் உள்ள அலமாரியில் பணத்தை பத்திரமாக வைத்தேன்.

🍄 வெளியே சென்று திரும்பிய மனைவி என்னங்க ஒரு நடுக்கமா இருக்கறிங்க என கேட்டாள்.

🍄 வள்ளி அந்த கதவை சாத்திட்டு உள்ளே வா என்றேன்.

🍄 நடந்த விவரங்களை சொல்லி . யாராவது கேட்பார்கள் என்று திரும்பி, திரும்பி பார்த்தேன் யாரும் வரவில்லை , எனப் பொய் கூறினேன். பணத்தை எண்ணி பார்த்தேன் மொத்தமாக 12 லட்சம்.

🍄 வள்ளி சில மாதங்கள் வேலை கிடைக்கும் வரை நமக்கு கவலை இல்லை.நம் செலவுக்கு இது போதும் என்றேன்.

🍄 மனைவி அமைதியாக இருந்தாள். ஏதாவது பேசு என்றேன்.

🍄 இந்த பணம் நமக்கு வேண்டாங்க என்றாள் மனைவி.

🍄 வள்ளி என்ன பேசுற நீ இறைவனா பார்த்து தான் நமக்கு துன்பங்கள் தீர வழி காட்டி இருக்காரு..

🍄 உங்க அல்ப புத்திக்கு இறைவன் மேல் பழிபோடாதீங்க என்றாள்.

🍄 வள்ளி எனக்கு இன்னும் வேலை கிடைக்கல கட்ட வேண்டிய கடன்களும் செலவுகளும் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த பணம் நமக்கு எவ்வளவு உதவியாக இருக்குமே நினைத்து பார் வள்ளி.

🍄  இன்னொருவர் பணத்தில் வாழ்வது தப்புங்க. அதுக்கு பதிலா இருவருமே கஷ்டப்பட்டு சம்பாதிக்கலாம் என்றாள் மனைவி.

🍄 அப்போ வீட்டு செலவுக்கு என்னதான் நான் செய்வேன் என்று கோபமாய் குரலை உயர்த்த..

🍄 இறைவன் சோதிபாருங்க ஆன கைவிடமாட்டார். என்று கூறி டக்கென்று கழுத்திலிருந்த தாலியை கழற்றி இதை விற்று விடுங்கள் எனக்கு மஞ்சள் கயிறு போதும் என்றாள்.

🍄 வள்ளி என அதிர்ந்து விட்டேன்.

🍄 அடுத்தவங்க பணத்துல வயிற்றை நிரப்பிக் கொள்வதைவிட இது எவ்வளவோ மேலுங்க. இந்த பணம் யாருக்கு சொந்தமோ அவர்களிடம் கொடுத்து விட்டு தான் நீங்கள் வீட்டில் நுழைய வேண்டும் என்று ஓடி கதவை சாத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

🍄 மனைவியின் தாலி கையில் கனத்தது. பணப்பையில் ஆராய்ந்து பார்த்தேன் முகவரி இருந்தது.

🍄 அந்த பங்களாவுக்கு நான் நுழைந்த போது கோயிலில் நுழைந்த உணர்வு. மெல்லிய ஓசையில் சிவனைப் பற்றி பாடல்கள்.

🍄 அழைப்பு மணியை அடித்தேன். நெற்றி நிறைய விபூதியுடன் ஒரு பெரியவர் வந்து பார்த்தார்.

🍄 நடந்த விவரங்களை அவரிடம் கூறி பணப்பையை கொடுத்தேன். மகிழ்ந்த அவர் உள்ளே அழைத்து சென்று குளிர்பானம் கொடுத்து உபசரித்தார்.

🍄 தம்பி நிறுவனத்தில் இருந்து காரில் வரும் போது பணப்பை தவறி விழுந்தது விட்டது. திரும்பி தேடி செல்லும் போது கிடைக்கவில்லை.

🍄 உங்களை போல் நல்லவர்களும் இருக்கிறார்கள் . அதான் தவறவிட்ட பணம் திரும்ப வந்து விட்டது என்றபடி என்னை பற்றிய விவரங்களை கேட்டார்.

🍄 என்னுடைய சூழ்நிலை பற்றிய விவரங்களை கூறினேன்.

🍄 அப்படியே யோசித்து தம்பி கொஞ்சம் இருங்கள். இதே ஒரு போன் செய்து விட்டு வருகிறேன் என்று உள்ளே சென்றார்.

🍄 திரும்பி வந்தவர் தம்பி என்னோட நிறுவனத்தில் வேலை செய்ய உங்களுக்கு விருப்பமா? அடுத்த வாரம் எங்கள் மேலாளர் ஓய்வு பெறுகிறார். அவரோட இடத்தில் யாரை நியமிப்பது என நினைத்து கொண்டு இருந்தேன்.

🍄 நீங்கள் ஏன் அந்த வேலையில் சேரக்கூடாது?

🍄 நீங்கள் நாளைக்கு சேர்ந்து நிறுவனத்தில் டிரைனிங் எடுங்கள். வேலைக்கான உத்தரவு கடிதம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடும்.

🍄 வேறு யாராவது உங்களுடைய சூழ்நிலையில் இருந்து இருந்தால் இந்த 12 லட்சம் பணம் திரும்ப வந்து இருக்காது.

🍄 இந்த வேலை உங்கள் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும். நான் கொடுக்கும் பரிசு என்றார்.

🍄 நமச்சிவாயா !!!  என் கண்ணில் கண்ணீர். கண்ணீரில் ஆயிரம் நன்றிகள் என் மனைவி வள்ளிக்கு...

🍄  அந்த வீட்டின் ஒலிநாடாவில் குரு உபதேசம் மெல்லியதாக கேட்டது. "மூவுலகையும் ஆளும் சிவபெருமான் சோதிப்பான் ஆனால் நம்பியோரை கைவிட மாட்டார்." என்று கேட்டது.
🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஓய்ப் பெறுவ தெவன்.
          (குறள்)

அறநெறியில் இல்வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட முடியுமோ ???

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
நமசிவாயம் போற்றி...

நன்றி வாட்சப் 

ரமணியின்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 11, 2019 9:48 pm

கதை அருமை ; ஆனால் இறுதியில் எடுத்தாண்ட  திருக்குறள்தான் , பொருத்தமில்லாமல் உள்ளது .

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஓய்ப் பெறுவ தெவன்.

இக்குறளின் பொருள் : இல்லறவாழ்க்கையில் இருந்துகொண்டே எல்லா அறங்களையும்
செய்யலாம் . துறவற நெறியில் எதுவும் பெறமுடியாது . புறத்தாறு என்பது துறவற நெறி .

" இல்லறமல்லது நல்லறமன்று " என்பதே வள்ளுவர் கொள்கை .

இக்கதைக்குப் பொருத்தமான குறட்பா :

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல் .

பொருள் : முறைதவறி வந்த பொருள் , நமக்கு நல்லது செய்தாலும் அதை நாம் விரும்பக் கூடாது .  அன்றைய தினமே  விட்டுவிட வேண்டும் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jun 12, 2019 9:16 am

 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  3838410834  உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 12, 2019 9:24 am

M.Jagadeesan wrote:கதை அருமை ; ஆனால் இறுதியில் எடுத்தாண்ட  திருக்குறள்தான் , பொருத்தமில்லாமல் உள்ளது .

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஓய்ப் பெறுவ தெவன்.

இக்குறளின் பொருள் : இல்லறவாழ்க்கையில் இருந்துகொண்டே எல்லா அறங்களையும்
செய்யலாம் . துறவற நெறியில் எதுவும் பெறமுடியாது . புறத்தாறு என்பது துறவற நெறி .

" இல்லறமல்லது நல்லறமன்று " என்பதே வள்ளுவர் கொள்கை .

இக்கதைக்குப் பொருத்தமான குறட்பா :

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல் .

பொருள் : முறைதவறி வந்த பொருள் , நமக்கு நல்லது செய்தாலும் அதை நாம் விரும்பக் கூடாது .  அன்றைய தினமே  விட்டுவிட வேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1299157


நன்றி ஜெகதீசன் அவர்களே.
அந்த காணொலி கனவான் கவனத்திற்கு எடுத்து செல்கிறேன். புன்னகை 
இருப்பினும் ஒரு சந்தேகம் தீர்ப்பீர்.


"அறநெறியில் இல்வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை", அதாவது அவரது மனைவி எடுத்து சொல்லிய அறநெறி படி பணப்பையை திருப்பி கொடுத்ததால் அடைந்த பயனாக இருக்குமோ.

ரமணியன்
@M.Jagadeesan



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jun 12, 2019 11:51 am

Code:

வேறு யாராவது உங்களுடைய சூழ்நிலையில் இருந்து இருந்தால் இந்த 12 லட்சம் பணம் திரும்ப வந்து இருக்காது.

🍄 இந்த வேலை உங்கள் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும். நான் கொடுக்கும் பரிசு என்றார்.

🍄 நமச்சிவாயா !!!  என் கண்ணில் கண்ணீர். கண்ணீரில் ஆயிரம் நன்றிகள் என் மனைவி வள்ளிக்கு...

🍄  அந்த வீட்டின் ஒலிநாடாவில் குரு உபதேசம் மெல்லியதாக கேட்டது. "மூவுலகையும் ஆளும் சிவபெருமான் சோதிப்பான் ஆனால் நம்பியோரை கைவிட மாட்டார்." என்று கேட்டது.


இறைவன் இருக்கிறார் என்பதற்கு அருமையான கதை.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jun 14, 2019 12:04 pm

 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  3838410834  உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா  3838410834



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக