புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை மகளிர் கபடிப் போட்டியில் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற குருசுந்தரி
Page 1 of 1 •
-
ஒய்.ஆண்டனி செல்வராஜ் - இந்து தமிழ் திசை
--------------
பார்வையாளராக இருந்தவர் பங்கேற்பாளராக ஆன கதை
தான் குருசுந்தரி யுடையதும். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச்
சேர்ந்த இவர் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் போன்ற
விளையாட்டுகளில் ஜெயித்திருந்தால் நாடே இவர் புகழ்
பாடியிருக்கும்.
ஆனால், உலகக் கோப்பை மகளிர் கபடிப் போட்டியில்
வென்ற இந்திய அணியில் இடம்பெற்றதாலோ என்னவோ
குருசுந்தரியின் பெயர் அவரது ஊரைத் தாண்டி வெளியே
போதுமான அளவுக்கு எதிரொலிக்கவில்லை.
இத்தனைக்கும் இந்திய அணியில் இடம்பெற்ற ஒரே தமிழக
வீராங்கனை இவர் மட்டுமே.
பள்ளியில் தொடங்கிய ஆர்வம்
மக்கள் தன் இருப்பைப் புகழ்கிறார் களா இல்லையா
என்றெல்லாம் கவலைப்படாமல் வீசிக்கொண்டிருக்கும்
காற்றைப் போலத்தான் அங்கீகாரம் குறித்து எந்தப் புகாரும்
இல்லாமல் தன் பாதையில் நிற்காமல் ஓடிக்
கொண்டிருக்கிறார் குருசுந்தரி.
வழிகாட்டியோ விளையாட்டுப் பின்புலமோ இல்லாத
நிலையில்தான் இப்படியொரு சாதனையை குருசுந்தரி
நிகழ்த்தியிருக்கிறார். இவருடைய அப்பா கோபால்சாமி,
மதுரை கோச்சடை டிவிஎஸ் ரப்பர் தொழிற்சாலையில்
வேலை செய்து ஓய்வுபெற்றவர்.
அம்மா சுப்புலெட்சுமி, இல்லத்தரசி. குருசுந்தரிக்கு இரண்டு
சகோதரிகள்; இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
அக்காக்கள் இருவருக்கும் விளையாட்டில் பெரிய அளவில்
ஆர்வம் இல்லை. அவர்களின் வழியொற்றி குருசுந்தரியும்
சிறு வயதில் விளையாட்டில் ஆர்வம் இல்லாமல்தான்
இருந்துள்ளார்.
ஈவேரா மாநகராட்சி பெண் கள் மேல்நிலைப்பள்ளியில்
ஒன்பதாம் வகுப்பு படித்தபோதுதான் இவருக்குக் கபடி மீது
ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
அதுவரை கபடிப் போட்டியைப் பற்றித் தனக்கு எதுவும்
தெரியாது எனப் புன்னகைக்கிறார் குருசுந்தரி.
ஒரு முறை தனது பள்ளி கபடி அணியினர் பயிற்சி செய்து
கொண்டி ருப்பதை குருசுந்தரி பார்த்திருக்கிறார். பொழுது
போகவில்லையே என அவர் கள் விளையாடுவதைப் பார்த்துக்
கொண்டிருந்தவருக்கு அந்த விளை யாட்டின் மீது ஈர்ப்பு
ஏற்பட்டுள்ளது. தானும் கபடி விளையாட வேண்டும் என
விரும்பினார்.
விருப்பத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் பயிற்சியிலும்
ஈடுபட்டார். பள்ளி சீனியர் கபடி அணித் தேர்வில் கலந்து
கொண்டு தேர்வானார். பத்தோடு பதினொன்றாக நின்று
விடாமல் பத்தில் ஒன்றாகத் தனித்துத் தெரிவதை இலக்காகக்
கொண்டார்.
அதைச் சாத்தியப்படுத்த பயிற்சியில் ஈடுபட்டார்.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக அணிக்காகப் பல முறை
விளையாடி வெற்றிகளைக் குவித்தார். பத்து முறை இந்திய
அணியில் இடம்பெற்றுள்ளார். நான்கு முறை தமிழ்நாடு
சீனியர் கபடி அணியில் இடம்பெற்றுள்ள இவர், தற்போது
உலகக் கோப்பைவரை உயர்ந்திருக்கிறார்.
பெண்களின் பங்கேற்பு
கிரிக்கெட்டும் கால்பந்தும் கிராமங்களை ஆக்கிரமித்தாலும்
கபடிக்கும் குறிப்பிட்ட அளவுக்கு ரசிகர்கள் இருக்கத்தான்
செய்கிறார்கள் என்கிறார் அவர். “அந்தக் காலத்துல எல்லாம்
நிறைய ஊர்ல இரவு நேரத்துல டியூப் லைட் வெளிச்சத்தில்
கபடிப் போட்டி நடத்துவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.
இந்தப் போட்டியைப் பார்க்க கிராமத்துல ஆண்களும்
பெண்களும் ஆர்வமா இருப்பாங்க. ஒரு காலத்துல ஆண்கள்
மட்டுமே விளையாடிய கபடியை இப்போ பெண்களும்
விளையாடத் தொடங்கியாச்சு.
பார்வையாளர்களா மட்டும் இருந்தவங்க இப்போ
பங்கேற்பாளர்களாக ஆகிட்டாங்க” என்று தனது வெற்றியைப்
பெண்கள் அனைவருக்குமான வெற்றியாகப்
பகிர்ந்தளிக்கிறார்.
துணை நின்ற பெற்றோர்
பெரும்பாலான பெற்றோர் விளையாட்டைத் தேர்ந்தெடுப்பதில்
தங்கள் மகனுக்கும் மகளுக்கும் பாரபட்சம் காட்டுவதும் பெண்
குழந்தைகள் சில விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க
மறுப்பதும் தவறு என்கிறார் குருசுந்தரி
. “பள்ளிப் பருவத்தில் தொடங்கி 15 வருஷமா நான் கபடி
விளையாடிக்கிட்டு இருக்கேன். கபடி விளையாடினா கை,
கால் அடிபட்டுவிடும் என்பதால் விளையாட்டு ஆசையைப்
பாதியிலேயே மூட்டைகட்டி வைத்த பலரைப் பார்த்திருக்கேன்.
பல வீடுகளில் பெண்களை ஒரு குறிப்பிட்ட வயசுக்குப் பிறகு
விளையாட அனுமதிப்பதில்லை. நானும் பல சோதனைகளைக்
கடந்தே இந்த உயரத்தை அடைய முடிந்தது.
ஆனால், சோதனையான நாட்களில் என் குடும்பம் என்னை
ஆதரித்தது.
என் அப்பாவும் அம்மாவும் என் விருப்பத்துக்குத் துணையா
இருந்தாங்க. எப்படியாவது இந்திய அணியில் இடம்பிடிக்கணும்
என்பதுதான் என் கனவுன்னு அவங்களுக்கும் தெரியும்.
என் கனவுக்கு அவங்க பக்கபலமா இருந்தாங்க. எதைப் பத்தியும்
கவலைப்படாம விளையாடுன்னு தோளில் தட்டிக்கொடுத்து
உற்சாகப்படுத்தினாங்க. அந்தத் தெம்புதான் என்னை இந்திய
அணியில் இடம்பெற வைத்ததோடு உலகக் கோப்பை அணியிலும்
இடம்பெற வைத்திருக்கு.
எனக்கு இப்போ இரட்டைச் சந்தோஷம்” என்று தன்
பெற்றோரைப் பெருமிதத்துடன் பார்க்கிறார் குருசுந்தரி.
வாழ்க்கையிலும் வெற்றி
கபடியின் மீதான ஆர்வம் மட்டுமல்ல; வாழ்க்கையில் ஜெயிக்க
வேண்டும் என்பதும்தான் கபடியைத் தான் தேர்ந்தெடுக்கக்
காரணம் என்கிறார் குருசுந்தரி. “பள்ளியில் கபடி விளையாட
ஆரம்பித்தபோது, கல்லூரியில் விளையாட்டுக்கான இட
ஒதுக்கீட்டில் இலவசக் கல்வி பெறலாம், அரசு வேலைவாய்ப்பில்
முன்னுரிமை கிடைக்கும் என எங்கள் கபடி பயிற்சியாளர்
கொடுத்த ஊக்கமே என்னைச் சர்வதேச அளவில் பங்கேற்க
உந்துசக்தியாக அமைந்தது” என்கிறார் குருசுந்தரி.
அதற்கேற்ப கடந்த ஏப்ரல் மாதம் விளையாட்டு இட ஒதுக்கீட்டில்
தமிழக வனத் துறையில் வனக்காவலர் பணிக்குத் தேர்வாகி,
தற்போது கோவை பயிற்சி முகாமில் இருக்கிறார்.
வேண்டாமே பாரபட்சம்
சுடர்விடுவது விளக்கின் தன்மையாக இருந்தாலும் அதைக்
குன்றின் மேல் வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும்
அரசுக்கு உண்டு என்று சொல்லும் குருசுந்தரி, கபடிக்கு அரசு
போதுமான முக்கியத்துவம் அளித்தால் இன்னும் நிறைய
கபடி வீராங்கனைகள் உருவாகலாம் என்கிறார்.
‘‘அரசு உதவினால் என்னைப் போன்ற பல வீராங்கனைகள்
கபடி மட்டுமல்லாமல் பல விளையாட்டுகளில் சர்வதேச அளவில்
ஜொலிப்பார்கள்” என்று சொல்வதோடு பெற்றோர்களுக்கும்
ஒரு கோரிக்கையை வைக்கிறார்.
“கபடி விளையாட மன வலிமையும் உடல் ஆரோக்கியமும்
மிக முக்கியம். இந்த ரெண்டும் இருக்கும் பெண் குழந்தைகளைப்
பெற்றோர் விளையாட அனுப்புவதில்லை. இது மாறணும்.
விளையாட்டில் பாகுபாடு பார்க்காமல் பெண் குழந்தைகளை
ஊக்கப்படுத்தணும்” என்று சொல்லிவிட்டு, ஏன் ஊக்கப்படுத்த
வேண்டும் என்பதற்கான பதிலாகத் தான் வாங்கிய கோப்பையை
உயர்த்திப் பிடிக்கிறார் குருசுந்தரி.
-
------------------------
Similar topics
» மகளிர் டி20 உலகக் கோப்பை: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
» கபடி விளையாட்டில் பெண்களுக்கான முதல் உலகக் கோப்பை போட்டிகளை இந்திய மகளிர் கபடி அணி வென்றுள்ளது.
» ஐசிசி டெஸ்ட் அணியில் இந்திய அணியில் 3 பேருக்கு இடம்
» உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பது கனவாக இருந்தது: தினேஷ் கார்த்திக்
» உலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை!
» கபடி விளையாட்டில் பெண்களுக்கான முதல் உலகக் கோப்பை போட்டிகளை இந்திய மகளிர் கபடி அணி வென்றுள்ளது.
» ஐசிசி டெஸ்ட் அணியில் இந்திய அணியில் 3 பேருக்கு இடம்
» உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பது கனவாக இருந்தது: தினேஷ் கார்த்திக்
» உலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|