புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:54

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 17:26

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_m10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_m10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10 
77 Posts - 43%
prajai
மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_m10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_m10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10 
6 Posts - 3%
Jenila
மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_m10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10 
2 Posts - 1%
jairam
மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_m10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_m10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_m10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10 
2 Posts - 1%
kargan86
மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_m10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_m10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_m10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_m10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_m10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10 
10 Posts - 4%
prajai
மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_m10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10 
9 Posts - 4%
Jenila
மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_m10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10 
4 Posts - 2%
Baarushree
மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_m10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10 
3 Posts - 1%
Rutu
மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_m10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10 
3 Posts - 1%
jairam
மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_m10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_m10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_m10மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82064
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 25 Jul 2020 - 19:55


“என்னப்பா! முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண
எவ்வளவு?” என்று கேட்டார் பண்டிதர்

அவரும், “முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா
சாமி!” என்று பணிவுடன் கூறினார்…

பண்டிதர் சிரித்தபடியே,
“அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு…” என்று
கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்…

வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக
எடுத்துக் கொள்ள வில்லை…

வேலையை ஆரம்பித்தார்…

‘நாவிதர் கோபப்படுவார்’ என்று எதிர்பார்த்திருந்த
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்…

பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்…

“ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது…
உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே… அப்புறம்
எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப்
படுத்தி நாவிதன்னு சொல்றாங்க…?”

இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார்.
ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.

“நல்ல சந்தேகங்க சாமி…
நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.
முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத்
தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை
பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்…
எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர்
எங்களைத் தேடி வராங்க தெரியுமா…?”

இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.

அடுத்த முயற்சியைத் துவங்கினார்…
“இதென்னப்பா, கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி
மட்டுந்தானே இருக்கு… கோல் எங்கே போச்சு?”

இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக
வந்தது நாவிதரிமிருந்து.

“சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க…” என்று சொல்லி
நிறுத்திக் கொண்டார்…

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம்.
கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்…

“எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற…
ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு…”

இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம்
காயப்படுத்திவிட்டது…

அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்…

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்.

கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக்
கொண்டிருந்தார்….

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்… பண்டிதரின்
பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார்,

“சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?”

பண்டிதர் உடனே, “ஆமாம்…” என்றார்…

கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை
வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து,
“மீசை வேணுமுன்னிங்களே சாமி! இந்தாங்க…”

பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது
வெறும் மயிர்க் கற்றையாய்…

அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்…

நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்.

அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக்
கேட்டார்,
“சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா…?”

இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
‘வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல
குடுத்துடுவான்…’ என்ற பயத்தில் உடனே சொன்னார்,
“இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்… வேண்டவே
வேண்டாம்…”.

நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும்
வழித் தெடுத்தார்…

“சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல?
அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே
கிடையாது…” என்றபடி கண்ணாடியை பண்டிதரின்
முகத்துக்கு முன்பாகக் காட்டினார்…

நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்…

முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்…

அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது…

கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை
அவர் கையில் கொடுத்து விட்டு, விரக்தியில் தளர்ந்து போய்
நடையைக் கட்டினார் பண்டிதர்…

நம்முடைய அறிவும்…
புத்தியும்…
திறமையும்…
அதிகாரமும்…
அந்தஸ்தும்…
பொருளும்…
மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல…”

இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்…
தலைக்கனம் நம் தலையெழுத்தை மாற்றி விடும்…
இந்த பிரபஞ்சம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது…

அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு
வாய்ந்தவைகளே…நாம் பெற வேண்டியது நல்ல

அனுபவங்களை தவிர வேறோன்றுமில்லை…
-----------------------------
பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக