புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவர்கள்! Poll_c10அவர்கள்! Poll_m10அவர்கள்! Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
அவர்கள்! Poll_c10அவர்கள்! Poll_m10அவர்கள்! Poll_c10 
13 Posts - 25%
prajai
அவர்கள்! Poll_c10அவர்கள்! Poll_m10அவர்கள்! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
அவர்கள்! Poll_c10அவர்கள்! Poll_m10அவர்கள்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அவர்கள்! Poll_c10அவர்கள்! Poll_m10அவர்கள்! Poll_c10 
2 Posts - 4%
Rutu
அவர்கள்! Poll_c10அவர்கள்! Poll_m10அவர்கள்! Poll_c10 
1 Post - 2%
சிவா
அவர்கள்! Poll_c10அவர்கள்! Poll_m10அவர்கள்! Poll_c10 
1 Post - 2%
viyasan
அவர்கள்! Poll_c10அவர்கள்! Poll_m10அவர்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவர்கள்! Poll_c10அவர்கள்! Poll_m10அவர்கள்! Poll_c10 
10 Posts - 83%
Rutu
அவர்கள்! Poll_c10அவர்கள்! Poll_m10அவர்கள்! Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
அவர்கள்! Poll_c10அவர்கள்! Poll_m10அவர்கள்! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவர்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 9:27 pm

அவர்கள்!

''பிரமாதம் தர்மா... உன்னோட முயற்சி, வளர்ச்சி அபாரம்,'' என்றான், ஆறுமுகம்.
''ஒரு நாள், நீ இப்படி உயரத்துக்கு வருவேன்னு எனக்கு தெரியும்,'' என்றான், கந்தன்.
மையமாக புன்னகைத்தான், தர்மா.
தர்மாவை சிறிய வயதிலிருந்தே அறிந்த இருவரும், ஒரே ஊர்க்காரர்கள்.
அப்போது, சாப்பாட்டுக்கு சிரமம். அப்பா இல்லை. அம்மாவோடு வயல் வேலை. உழைத்து கூலி வந்தால் தான் சாப்பாடு, பள்ளிக்கூட கட்டணம், புத்தகம் எல்லாம்.
பணம் இல்லாத போது, ஆறுமுகத்திடமோ, கந்தனிடமோ போய் நிற்பான்.
இருவரும், அப்பாவின் நெருங்கிய நட்பு மற்றும் உறவினர்கள்.
ஆறுமுகம் சட்டை பையில் பணம் இருக்கும்; அதை வெளியில் எடுக்க மனம் வராது.
'காலையில் வந்து பாரு... சாயங்காலம் வா... அவசர வேலையா வெளியில் போறேன்... என்னையே சுத்தி வந்தால் எப்படி... எந்த நேரமும் பையில் பணம் இருக்குமா, இரண்டு நாள் கழிச்சு வா...' என்றெல்லாம் அலைய விடுவார்; கடைசியில், சொற்பமாக கொஞ்சம் தருவார். அது, பள்ளிக்கூட கட்டணம் கட்டவும் போதாது, புத்தகம் வாங்கவும் போதாது.
கந்தன், வேறு விதம்.
'ஏட்டு சுரக்கா கறிக்கு உதவாது, எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கு இல்லை ஒப்புக்கொள்ன்னு, பெரியவங்க சொல்லியிருக்காங்க. பெரிய படிப்பு படிச்சவனெல்லாம் வேலை கிடைக்காமல், அஞ்சுக்கும், பத்துக்கும் அலையறான். படிப்பை விடு, போய் ஏதாவது வேலையை பார்...' என்று, அறிவுரை சொன்னவன்.
இப்போது, 'எனக்கு அப்பவே தெரியும், நீ நல்லா வருவே...' என்று சொல்கின்றனர்.
மழை இன்றி, விவசாயம் பொய்த்து, வேலையோ, வருவாயோ இல்லாத நாளில், 'டவுன் பக்கம் போனால் கட்டட வேலை கிடைக்கும்...' என்று, ஊரை விட்டு, 10 பேர் புறப்பட்டனர். அதில், தர்மாவும், அவன் அம்மாவும் அடக்கம்.
ஓரிடத்தில் சித்தாள் வேலை கிடைத்தது. கல், மணல், ஜல்லி, கலவை என்று தலையில் சுமந்தாள்.
அவனுக்கு போதிய வயதில்லை என்று ஒதுக்கினர். அவர்கள் தங்கியிருக்க, கட்டுமானம் நடக்கும் இடத்துக்கு பக்கத்தில் போட்டிருந்த ஓலை குடிசையினுள் அவனை இருக்கச் சொல்லி, தான் மட்டும் வேலைக்கு சென்றாள், அம்மா.
வேலை நடக்கும் இடத்தை சுற்றி சுற்றி வந்தான், தர்மன்.
பள்ளியில் படிக்க முடியாத குறையை, வேலை நடக்கும் இடம் சொல்லிக் கொடுத்தது.
மணல் ஒரு லோடு எவ்வளவு, கல் விலை என்ன, சிமென்ட் விலை என்ன, ஜல்லி, மணல் மற்றும் சிமென்ட் கலவை எப்படி போடுகின்றனர், அஸ்திவாரம் எப்படி கட்டுகின்றனர் என்று வேடிக்கை பார்த்து, ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டான்.
சின்னதாக, 'கான்ட்ராக்ட்' எடுத்து செய்யும்போது, வயது, 18. மொத்தமாக ஒரு கட்டடத்தை கட்டும் திறமை வந்த போது, வயது, 24. சொந்தமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து தலைவரானது, 26வது வயதில்.
அவனோடு வந்த, 10 பேரில், சிலர், அடிக்கடி ஊருக்கு போவர், வருவர். மழை பெய்தால் விவசாயம் பார்க்க, ஊரிலேயே இருந்து விடுவர்.
'நாமும் போவோம்...' என்பாள், அம்மா.
'அங்கு போனால், கூலி வேலை தான். இங்கும், அது தான். ஒரு இடமாக இருந்தால் நல்லது...' என்றான்.
ஏற்றுக் கொண்டாள்.
உறவுகள் விட்டுப் போய்விடக் கூடாது என்று, நாலும் கிழமையும் வந்தால், ஊருக்கு போய் எட்டிப் பார்த்து வருவாள், அம்மா.

இந்த முறை பயணத்தின்போது, 'நாங்களும் வர்றோம்...' என்று, தொற்றிக் கொண்டனர், ஆறுமுகமும், கந்தனும்.
அவனது நிறுவனத்திற்கு வந்திருந்த, அவர்களைப் பார்த்ததுமே, சுருக்கென்று கோபம் வந்தது, தர்மனுக்கு. 'நறுக்'கென்று கேட்க வேண்டும் என்று துடித்தான்.
அடக்கியபடி, ''எப்படி இருக்கீங்க,'' என்றான்.
''ஏதோ இருக்கோம்.''
''நல்லா இருக்கோம்ன்னு சொல்லுங்க... நம் நிலைமை எதுவாக இருந்தாலும், வார்த்தையில் தொய்வு வரக்கூடாது; நிமிர்ந்து உட்காருங்க,'' என்றான்.
ஆசிரியருக்கு கட்டுப்பட்ட மாணவர்கள் போல், இருவரும் நிமிர்ந்து, அமர்ந்தனர்.
''உங்களை கடைசியா இப்படிதான் தோரணையோடு பார்த்திருக்கேன். பேச்சும் அப்படி தான் இருக்கும்.''
'அது அப்போ...' என்றனர்.
''வயசானால், தெம்பா இருக்கக் கூடாதா என்ன,'' என்றான்.
அவர்களுக்கும் சேர்த்து சாப்பாடு அனுப்பி இருந்தாள், அம்மா.
மூவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.
''பெரிய ஆளாகியும் கர்வமில்லாமல் எங்களோடு சேர்ந்து சமமா உட்கார்ந்து சாப்பிடற பாரு... இந்த குணம் தான் உன்னை உயர்த்தி இருக்கு,'' என்றான், ஆறுமுகம்.
''அம்மா வளர்ப்பு அப்படி,'' என்றான், கந்தன்.
'உன் அப்பாவுக்கு ஒரு கனவு இருந்தது. தன் மகன், எதிர்காலத்தில் ஒரு நல்ல இடத்துக்கு வந்து, சவுக்கியமா இருக்கணும்ன்னு, அதை நீ நிறைவேத்திட்டே. அப்பா நினைவாக, ஊருக்கு ஏதாவது நீ செய்யணும், தர்மா...' என்றெல்லாம் பேசினர்.
''நிச்சயம் செய்வோம்; அதற்கு உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசியும், உதவியும் தேவை,'' என்றான்.
'ஆஹா... என்ன வேணும் சொல்லு, செய்ய காத்திருக்கோம்...' என்றனர்.
''நேரம் வரும்போது சொல்றேன்,'' என்ற தர்மா, ஆளுக்கொரு கவரை கொடுத்து, ''செலவுக்கு வச்சுக்கங்க,'' என்றான்.
அவர்கள் புறப்பட்டனர். ஒவ்வொரு கவரிலும், 10 ஆயிரம் ரூபாய் இருந்தது.

ஊர் திரும்பும்போது, கந்தனிடம், ''தருமா, சின்னவனா இருக்கும்போது, படிக்க வசதி இல்லாம, உதவி கேட்டு என்கிட்ட வருவான். நான் அவனை சுத்தல்ல விட்டு, ஏதோ கொஞ்சம் கொடுத்து, அவனை வேதனைப்படுத்தி இருக்கேன். அதையெல்லாம் மனசுல வச்சுக்காம, சோறு போட்டு, பணமும் கொடுத்து, கவுரவமா வழியனுப்பி இருக்கான்,'' என்றான், ஆறுமுகம்.
''எனக்கும் ஒரு உதைப்பு இருக்கு. படிக்க பணம் கேட்டு வந்தவனை, உழைக்க போன்னு விரட்டினேன். ஏதோ நல்ல நேரம், மேலே வந்துட்டான். இல்லைன்னா, காலத்துக்கும் என்னை கரிச்சுக் கொட்டியிருப்பான்,'' என்றான், கந்தன்.
''இனிமே, யார் உதவி கேட்டாலும், சட்டுன்னு செய்துடணும்,'' என்றான், ஆறுமுகம்.
''நானும், அந்த முடிவுக்கு தான் வந்திருக்கேன்,'' என்றான், கந்தன்.
இதை தான் இவர்களுக்கு சொல்ல இருந்தான், தர்மா.

படுதலம் சுகுமாரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 9:28 pm

கதைகள் எப்பொழுதுமே அருமையாக இருக்கும் புன்னகை.......இந்தக் கதை இல் வரும் ஆறுமுகமும் கந்தனும் நல்ல மனதுடைய மனிதர்கள், அதனால் தான் தங்கள் பிழையை உணர்ந்தார்கள், அதற்கும் ஒரு மனம் வேண்டும்...புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sun Aug 09, 2020 6:17 am

ஆம் அக்கா இதுதான் எங்க தலைவர் சொல்லி இருக்கிறார்

" மன்னிக்கரவன் மனுஷன் மன்னிப்பு கேட்கரவன் பெரிய மனுஷன் "



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 09, 2020 6:59 pm

SK wrote:ஆம் அக்கா இதுதான் எங்க தலைவர் சொல்லி இருக்கிறார்

" மன்னிக்கரவன் மனுஷன் மன்னிப்பு கேட்கரவன் பெரிய மனுஷன் "
மேற்கோள் செய்த பதிவு: 1327212

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக