புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை மேகம் -சிறுகதை Poll_c10மழை மேகம் -சிறுகதை Poll_m10மழை மேகம் -சிறுகதை Poll_c10 
59 Posts - 50%
heezulia
மழை மேகம் -சிறுகதை Poll_c10மழை மேகம் -சிறுகதை Poll_m10மழை மேகம் -சிறுகதை Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
மழை மேகம் -சிறுகதை Poll_c10மழை மேகம் -சிறுகதை Poll_m10மழை மேகம் -சிறுகதை Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
மழை மேகம் -சிறுகதை Poll_c10மழை மேகம் -சிறுகதை Poll_m10மழை மேகம் -சிறுகதை Poll_c10 
3 Posts - 3%
Shivanya
மழை மேகம் -சிறுகதை Poll_c10மழை மேகம் -சிறுகதை Poll_m10மழை மேகம் -சிறுகதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மழை மேகம் -சிறுகதை Poll_c10மழை மேகம் -சிறுகதை Poll_m10மழை மேகம் -சிறுகதை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மழை மேகம் -சிறுகதை Poll_c10மழை மேகம் -சிறுகதை Poll_m10மழை மேகம் -சிறுகதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
மழை மேகம் -சிறுகதை Poll_c10மழை மேகம் -சிறுகதை Poll_m10மழை மேகம் -சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழை மேகம் -சிறுகதை Poll_c10மழை மேகம் -சிறுகதை Poll_m10மழை மேகம் -சிறுகதை Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
மழை மேகம் -சிறுகதை Poll_c10மழை மேகம் -சிறுகதை Poll_m10மழை மேகம் -சிறுகதை Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
மழை மேகம் -சிறுகதை Poll_c10மழை மேகம் -சிறுகதை Poll_m10மழை மேகம் -சிறுகதை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மழை மேகம் -சிறுகதை Poll_c10மழை மேகம் -சிறுகதை Poll_m10மழை மேகம் -சிறுகதை Poll_c10 
12 Posts - 2%
prajai
மழை மேகம் -சிறுகதை Poll_c10மழை மேகம் -சிறுகதை Poll_m10மழை மேகம் -சிறுகதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மழை மேகம் -சிறுகதை Poll_c10மழை மேகம் -சிறுகதை Poll_m10மழை மேகம் -சிறுகதை Poll_c10 
9 Posts - 2%
Jenila
மழை மேகம் -சிறுகதை Poll_c10மழை மேகம் -சிறுகதை Poll_m10மழை மேகம் -சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
jairam
மழை மேகம் -சிறுகதை Poll_c10மழை மேகம் -சிறுகதை Poll_m10மழை மேகம் -சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மழை மேகம் -சிறுகதை Poll_c10மழை மேகம் -சிறுகதை Poll_m10மழை மேகம் -சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
மழை மேகம் -சிறுகதை Poll_c10மழை மேகம் -சிறுகதை Poll_m10மழை மேகம் -சிறுகதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை மேகம் -சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 19 Dec 2020 - 5:45

மழை மேகம் -சிறுகதை %E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-300x169
-
ஜேஜியின் மனைவி வந்திருப்பதாக என்னுடைய
மனைவி சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

“நீங்க சொன்னாத்தான்ணே கேப்பாக”

“சரிம்மா… என்னதான் பிரச்னை?” என்றேன்.

“வருமானத்துக்கு ஒண்ணும் குறையில்லண்ணே…
ஆனா முழுசும் குடும்பத்துக்கு வராம….”

அதிர்ந்து போனேன்.

“என்னம்மா சொல்ற நீ?”

ஜேஜி என்று நாங்கள் சுருக்கமாக அழைக்கும்
ஜே.கோவிந்தன் முகம் மனதுக்குள் வந்து போயிற்று.

“நீ சொல்றதுக்கு நிறைய அர்த்தம் இருக்குதே….
ஏதாவது பொண்ணுங்க விஷயத்துல காசு போகுதா? ”

“அய்யய்யோ இல்லண்ணே… அதுல அவரு மேல
ஒரு துளி குறையில்ல… நீங்க கொஞ்சம் பேசுங்கண்ணே ”

“பையனுங்க நல்ல படிக்கறாங்களாம்மா… பெரியவன்
என்ன படிக்கிறான்?”

“பத்தாவது படிக்கிறான்… ஸ்கூல்ல வரச் சொல்லி
சொன்னாலும் இவரு போறதில்ல… கேட்டா வேலை
அதிகம்னு சொல்றாரு…. கடைசியா பையனை அறைக்கு
வெளியே நிக்க வைச்ச பிறகு போறாரு….
போனாலும் எதுக்கு வெளியில நிக்க வைச்சிங்கன்னு
வாத்தியார் கிட்ட சண்டை ”

சலிப்புடன் போய்க் கொண்டே இருந்தது ஜேஜியின்
மனைவியின் குரல்.

“சரிம்மா… இன்னிக்கு நான் ஜேஜியப் பார்த்து பேசுறேன்.
நீ ஒண்ணும் வருத்தப்படாத… போய்ட்டு வா”


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 19 Dec 2020 - 5:50

ஞாயிற்றுக்கிழமையின் சோம்பல் உடலிலும் மனதிலும்
இருந்தது. குளித்து முடித்து பத்தே கால் மணியிருக்கும்
போது “ஜீ டுடோரியல்ஸ்’ படிக்கட்டில் ஏறி முன்னால்
இருந்த சிறிய அறையில் அமர்ந்திருந்தேன்.

இன்னொரு அறையின் உள்ளே நுழையும் இடத்தில்
ஜே.கோவிந்தன் முதல்வர் என்று பெயர்ப்பலகை இருந்தது.
பெயருக்குப் பின்னால் ஜேஜியின் பட்டங்கள் அவன்
பெயரைவிட நீளமாய் இருந்தன.

அனுமதி பெறாது உள்ளே வர வேண்டாம் என்று
ஒரு அறிவிப்பு என்னைப் பயமுறுத்திற்று. அறைக்கதவு
உட்புறம் தாழிடப்பட்டிருந்ததால் எனக்குத் தயக்கமாய்
இருந்தது.

“என்ன சார் …. அட்மிஷனா?”

உள்ளே நுழைந்த அந்தப் பெண் ஜேஜியின் உதவியாளராக
இருக்க வேண்டும். பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து
பழைய மர மேஜை மீது ஏதோ ஒரு பெரிய நோட்டுப்
புத்தகத்தை வைத்து எழுதத் துவங்கிற்று.

“பெயர்… என்ன படிச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க…
என்ன தேர்வு எழுதணும்… இப்ப க்ரூப் ஐஐ- க்கு….”

“இல்லம்மா… நான் ஜேஜியோட நண்பர்… அவரைப்
பார்க்கணும்”

“மன்னிச்சுக்கங்க சார்… ஒரு முக்கியமான மீட்டிங்-ல
இருக்கார்… கொஞ்ச நேரம் ஆகும்”

பதினான்கு நிமிடங்கள் போன பிறகு அவனுடைய
அறையில் இருந்து மூன்று பேர் வெளியே போனார்கள்.
இரண்டு பேர் வெள்ளை வேட்டி சட்டையிலும் ஒருவர்
லுங்கி சட்டையிலும் போக எனக்கு ஆச்சரியமாக
இருந்தது.

உதவிப் பெண் சொல்லியிருக்க வேண்டும்.

“என்னடா அதிசயமாயிருக்கு? ”
என்றபடி ஓடி வந்து ஜேஜி என் கையைப் பிடித்துக்
கொண்டான். முரட்டுத்தனமாக கை இருந்தது.
சிறுவயதில் ஏர் பிடித்துக் கல் உடைத்து களையெடுத்த
கை.

பழைய சோற்றில் கரைந்து போன அந்த நாட்கள்
மனதிலாடிற்று. விடுமுறை நாட்களில் கிடைத்த
வேலைக்குச் சென்று கிடைத்ததை சாப்பிட்டு,
அடுத்த ஆண்டுக்கான படிப்புச் செலவுக்குக் காசு
சேர்த்த நாட்கள்.

“என்ன ஜேஜி வேலையாய் இருந்தயா? தொந்தரவு
செஞ்சிட்டனா?”

“ஒண்ணுமில்லப்பா… ஒரு பஞ்சாயத்து”

“ஏதோ மீட்டிங்கில இருக்கேன்னு அந்தப் பொண்ணு
சொல்லுச்சு ”

“ஆமாம் அதுவும் மீட்டிங்தான்… ரெண்டு பேரும்
சம்பந்திங்க. ஒத்துப் போகலை. அதான் பேசி
அனுப்பினேன்”

“என்ன இது உனக்குச் சம்பந்தமில்லாத”
பெரிதாய்ச் சிரித்தான் ஜே.ஜி.அதுவே பதிலாய்
இருந்தது.

“அப்புறம் டுடோரியல் எப்படிப் போகுது?”
“ஒண்ணும் குறையில்லை”
“எவ்வளவு பேர் படிக்கிறாங்க?”
“இப்போதைக்கு முன்னூறுக்கு மேல”

ஒருவருக்கு எவ்வளவு கட்டணம் என்று சொல்லி அதை
முன்னூறு பேருக்குக் கணக்கிட்டுச் சொன்னபோது
அது ஆறு இலக்கத்தைத் தாண்டியிருந்தது

“ஆனா என்ன? ஓய்வுங்கிறதே கிடையாது.
எது என்ன ஆனாலும் தினமும் இங்க வந்து
உட்கார்ந்தாதான் வேலை நடக்கும்”

மேஜை மேல் ஆங்கிலத்தில் ஒன்று தமிழில் இரண்டு
என மூன்று செய்தித்தாள்கள் இறைந்திருந்தன.

“சரி ஜேஜி உன் பையன் என்ன படிக்கிறான்?”

“பத்தாவதுப்பா”

அந்தப் புகழ்பெற்ற பள்ளியின் பெயரைச் சொன்னான்.

“பத்தாவதுன்னா அடிக்கடி பெத்தவங்களை வரச்
சொல்லுவாங்களே…”

“சொல்லுவாங்க… ஆனா நான் போறதில்ல ”

“போகாம விட்டா… பையனைத்தான் தண்டிப்பாங்க…
சரி… எப்படிப் படிக்கிறான் பையன்… என்ன ரேங்க்…”

இந்தக் கேள்விகளுக்கு ஜேஜியிடம் இருந்து பதில்
இல்லை. மௌனம் நீடிக்க நானே தொடர்ந்தேன்.

“இது சரியில்ல ஜேஜி… நீ செய்ற சமுதாயப் பணி
எல்லாம் எனக்குத் தெரியும். அனாதை இல்லம்…
முதியோர் இல்லம்… சுழற்சங்கம் இதுக்கெல்லாம்
உன்கிட்ட இருந்து நன்கொடை போகுதுங்கறதும்
தெரியும்.
ஆனா இது எல்லாத்தியும் விட நம்ம குழந்தைங்க…
குடும்பம். இது ரொம்ப முக்கியம்”

அதற்கு மேல் தொடர்ந்து அதை பேச நட்பு மனம்
இடம் தரவில்லை. எதுவும் தெரியாதவர்களுக்கு
வேண்டுமானால் ஏதாவது அறிவுரை சொல்லலாம்.

ஜேஜி மெüனம் கலைந்து….

“வாப்பா… வீட்டுக்குப் போகலாம்” என்று சொல்ல
அவன் வீட்டுக்கும் கிளம்பினோம்.

****

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 19 Dec 2020 - 5:55



ஜேஜியின் வீட்டில் அவன் பையனும் மனைவியும்
இருந்தார்கள்.

“”வாங்கண்ணே…”

பெரியவனை அழைத்துப் பேசினேன். அந்த
வீட்டிலும் பையன்களின் முகத்திலும் ஜேஜியின்
ஆறிலக்கு வருமானத்துக்கான சாயல் எதுவும்
இல்லாதது, எளிமையா?
இயலாமையா? என்று குழப்பமாக இருந்தது. ஒன்று
மட்டும் தெளிவாகப் புரிந்தது. ஜேஜிக்குப் பிள்ளைகள்
மேலும் வீட்டின் மேலும் கவனம் ரொம்பவும் குறைவு
என்பது.

ஜேஜியைத் தனியே அழைத்துக் கேட்க….
அவன் சிறிதும் அசராமல்….

“”இத பாருப்பா… உரம் வெச்சி… தண்ணி ஊத்தி…
வேலி போட்டு வளர்த்தா ரோஜாவும், குரோட்டன்சும்
மட்டும்தான் வளரும். காக்கா துப்பிவிட்டுப் போற
வேப்பங் கொட்டையும், புளியங்கொட்டையும் எந்த
உரமும் இல்லாம எப்படிப்பா பெரிய மரமா வளருது?”
என்று எதையோ பேசத் துவங்க… எனக்கு
எரிச்சலாயிற்று.

“”இன்னிக்கு உலகம் எங்கே போயிட்டிருக்குன்னு
புரிஞ்சு பேசறியா… இல்ல புரியமாப் பேசறியா…
உன்னோட டுடோரியல்ல மூணு செய்தித்தாள்
வாங்கற நீ வீட்டுல பையனுங்க படிக்கறதுக்காக ஏன்
எதுவுமே வாங்கறது இல்ல….

இது ஒரு சின்ன உதாரணம்… மாசம் ஒருமுறை
பையனோடு பள்ளிக் கூடம் போய் அவன் எப்படிப்
படிக்கிறான்னு பாரு… வாரம் ஒரு முறை வெளில
கூட்டிட்டுப் போய் நல்லா சாப்பிட வை…
ஒத்தை ஆளா ஏர் இழுக்குற பலம் உடம்புலயும்
வேணும்… மனசுலயும் வேணும்….”

சொல்லிவிட்டு விடை பெற்றேன்.
தொடர்ந்த அலுவல்களில் நான் ஜேஜியை மறந்து
போனேன்.

*******

ஒன்றரை மாதம் கழித்து ஜேஜியின் அழைப்பு
கைபேசியில் வந்தது.

“”என்ன ஜேஜி செüக்கியமா?”

அதற்குள் அவனுடைய மனைவி கைபேசியை
அவனிடம் இருந்து வாங்கி என்னிடம் பேசியது.

“”அண்ணே செüக்கியமா அண்ணே… நீங்க அன்னைக்கு
வீட்டுக்கு வந்திட்டுப் போனதுக்கப்புறம் மாசத்துக்கு
ரெண்டு தடவை பள்ளிக்கூடத்துல போய்ப் பார்க்குறார்.
அதைவிட செய்தித்தாள் வாங்கிப் போட்டிருக்கிறார்…
பதினஞ்சு நாளைக்கு ஒரு தடவை எல்லாரையும் வெளியே
கூட்டிட்டுப் போறார். உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்
அண்ணே ”

எனக்கு மகிழ்ச்சி கூடிற்று.

ஜேஜி பேசினான்:

“”நீ பேப்பர் வாங்கிப் போடச் சொன்னதுல இன்னொரு
நன்மையும் நடந்திருக்கு. எங்க வீட்டுக்குப் பால் ஊத்தற
பொண்ணு… பிஎஸ்சி படிச்சிருக்கு. தினமும் உட்கார்ந்து
பேப்பர் படிச்சுட்டுத்தான் போகும்.
அதுல வந்த விளம்பரத்தைப் பாத்து விண்ணப்பிச்சு
வேலைக்குச் சேர்ந்துடுச்சி… ” அவன் குரலில் மகிழ்ச்சி
கொப்புளித்தது.

ஜேஜி பேசிக் கொண்டே இருந்தான். வெளியே மழை
லேசாய் பெய்யத் தொடங்கிற்று. மழைத்துளி மண்ணில்
விழுந்தது. மண் வாசனை கிளம்பி மனதெங்கும் பரவிற்று.
மழை என்ன பேதம் பார்த்தா பெய்கிறது?

எல்லா இடத்திலும்தானே பெய்கிறது. ஜேஜி மழை மேகம்
போல. தன் மகனைப் போல பிறரையும் பார்க்கும் மழை
மேகம்.
-
--------------------------
-ஆர்.கே.ஷண்முகம்
தினமணி
- ஜனவரி 2015

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 19 Dec 2020 - 14:38

மழை மேகம் -சிறுகதை 3838410834
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக