புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_m10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10 
59 Posts - 50%
heezulia
நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_m10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_m10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_m10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_m10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_m10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10 
1 Post - 1%
Guna.D
நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_m10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10 
1 Post - 1%
Shivanya
நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_m10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_m10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_m10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_m10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_m10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10 
12 Posts - 2%
prajai
நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_m10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_m10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10 
9 Posts - 2%
jairam
நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_m10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_m10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10 
4 Posts - 1%
Jenila
நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_m10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_m10நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் அறியாத இறுதி பகுதி --ஸ்ரீமத் ராமாயணத்தில்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 21, 2022 6:07 pm

ராமாயணத்தில் இறுதி பகுதி ஒன்று உண்டு. இந்த பகுதி நம்மில் பலருக்கு தெரியாது.
சீதையை பூமாதேவி பூமியை பிளந்து அழைத்து சென்றதுடன் ராமாயணம் முடிந்தது என்பதே நமது எண்ணம்.
ஆனால் அதற்கு பிறகு நடந்த நிகழ்வுகள் மிகவும் சுவாரசியமானது.
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் பெரியவா துணையில் படித்ததை பக்தி மார்க்க நண்பர்களுக்காக இங்கு பதிவிடுகிறேன்.
மிதிலைராஜசபையில் அரியாசனத்தில் அமர்த்திருந்தார் மாமன்னர் ஜனகர்.அவர் அருகே வீற்றிருந்தாள் மகாராணி சுனயனா.
அயோத்தியிலிருந்து தூதுவன்
கொண்டு வந்திருந்த செய்தி முற்றிலும் வித்தியாசமான ஒரு செய்தி.

ஓலையை பிரித்து செய்தியை வாசித்த ஜனகர் ஏதொன்றும் பேசாமல் அந்த ஓலையை அப்படியே தன மனைவியிடம் கொடுத்தார்.
அவர் ராஜரிஷிஅவர் முகத்தில் அந்த செய்தி எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால் ஓலையை வாங்கி வாசித்த,
சுனயனாதேவியின் விழிகளிலிருது, சரசரவென கண்ணீர் அருவியென வழியத்தொடங்கியது. அவள் வாழ்வில் அடுத்தடுத்து எத்தனையெத்தனைத் துயரங்களை தாங்கிக்கொண்டிருக்கிறாள் அவள்.

பட்டாபிஷேகம் முடிந்து தன் மகள் சீதை பட்டத்து ராணியாகப் பொறுப்பேற்றபோது, அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள்.
ஆனால் சிறிது காலத்திலேயே, ஏதோ ஒரு துணிவெளுப்பவன் சொன்ன அபவாதத்தால் சீதை காட்டுக்கு அனுப்பப்பட்ட போது அவள் மாளாத துயரமடைந்தாள்.
சில ஆண்டுகளுக்கு பிறகு, லவ குசன் என்ற இரண்டு ஆண்மக்களைப் பெற்றெடுத்து, அவர்களை வளர்த்து சிறுவர்களாகத் தன் நாயகன் ராமனிடம் ஒப்படைத்த சீதை, அயோத்தி வராமல், கானகத்திலேயே மண்ணுக்குள் புகுந்து மறைந்தாள்.
சீதை மறைந்த துயரம் அவளின் வளர்ப்புத்தாய் சுனயனாவை மிகவும் பாதித்தது.

தொடருகிறது --

நன்றி முகநூல்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 21, 2022 6:09 pm

--------2------

லட்சுமணன் சிறிது காலத்திற்கு முன்,
சரயு நதியில்* இறங்கி சித்தி அடைந்தான். லட்சுமணனை பிரிந்த தன் மகள் ஊர்மிளையின் நிலையை எண்ணி எண்ணி சுனயனா அளவற்ற துக்கமடைந்தாள்.

இதெல்லாம் முடிந்ததே, இனியாவது சற்று நிம்மதியாக இருக்கலாம் என்றால், இதோ இப்போது அயோத்தியிலிருந்து வந்திருக்கிறது மிக கடுமையான செய்தியைத் தாங்கிய ஓலை.
ராமனும் பரதனும், சத்ருக்கனனும் சரயு நதியில் இறங்கி சித்தி அடையப் போகிறார்களாம்.
சீதை காலமானாலும், தன் மகனைப் போன்ற ராமனை அடிக்கடிப் போய்ப் பார்த்து ஆறுதல் அடைவாள் சுனயனா.
இனி அது நடக்காது. அவளது மூன்று புதல்விகளான மாண்டவி, ஊர்மிளை, சுருதகீர்த்தி மூவரும் கணவரை இழந்தவர்களாய்த்தான் இனி வாழவேண்டும்.
ராமனும், பரதனும், சத்துருக்கனனும் சித்தி அடையும் நாளில் நாமும் அயோத்தியில் இருப்பதுதான் நல்லது. கணவரை இழந்து நம் புதல்விகள் உணர்ச்சிவசப்பட்டு அழுவார்கள். அவர்களுக்கு நேரில் சென்று,அந்த சந்தர்ப்பத்தில் கூட இருந்து ஆறுதல் கூற வேண்டியது நம் கடமை!’ என உணர்ச்சியற்ற குரலில் முகத்தில் சாந்தி தவழச் சொன்னார் ஜனகர்.
தன் கணவர் ஜனகர் எதற்கும் எப்போதும் பதற்றப்படமாட்டார் என்பதை சுனயனா அறிவாள். ஒரு பெருமூச்சோடு அரியாசனத்தை விட்டு எழுந்த அவள், தேரைப் பூட்டச் சொல்லுங்கள். நாம் அயோத்தி செல்வோம்’எனப் புறப்பட்டாள்.
அவர்கள் இருவரையும் ஏற்றிச் சென்ற தேர் மிதிலையிலிருந்து உருண்டோடி அயோத்தி மாநகரை வந்தடைந்தது.
அயோத்தி வீதிகளில்மக்கள் இல்லாததால் வெறிச்சென்று தென்பட்டன.
மக்களெல்லாம் சரயு நதிக்கரைக்குச் சென்றிருக்கவேண்டும்._
நேரே தேரை, சரயு நதிக்கரைக்கு விடச் சொன்னார் ஜனகர்.தேரோட்டி சாட்டையை சொடுக்கியதும் புரவிகள் பறந்தன. தேர் நதிக்கரைக்குப் போகும் வழியெங்கும் மக்கள் வெள்ளம்.
நதியின் கரையில் ராமனும் பரதனும் சத்ருக்கனனும் தங்கள் மாமனார் மாமியாரின் வரவுக்காக காத்திருந்தார்கள்.
மூவர் முகத்திலும் தாங்கள் சித்தி அடைய முடிவேடுத்துள்ளதைப் பற்றி, எந்த சலனமும் இல்லை.
அவர்கள் மரியாதை நிமித்தம் தங்கள் மாமனார் ஜனகரை வணங்கினார்கள். பின்னர் சுனயனாவிடமும் ஆசிபெற்ற அவர்கள், மெல்ல நடந்தார்கள்.
பரதன், சத்ருக்கனன் இருவரும் மாண்டவியிடமும் சுருதகீர்த்தியிடமும்
விடை பெற்றுக் கொண்டார்கள்.

மக்கள் வியப்போடும் கலவரத்தோடும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த நிகழ்ச்சி நடந்தது.
அவர்கள் மூவரும் ஒன்றாக சரயு நதியின் பெருகிய வெள்ளத்தில் இறங்கி அதன் ஓட்டத்தோடு சேர்ந்து வெள்ளத்திலேயே மெல்ல மெல்ல நடக்கலானார்கள். சிறிது நேரத்தில் வெள்ளம் அவர்கள் தலைக்குமேல் ஓடத்தொடங்கியது._
தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டதை உணர்ந்த மக்கள் “ராமா ! ராமா !”என பிரலாபிக்கலானார்கள்.
ஊர்மிளை, மாண்டவி, சுருதகீர்த்தி மூவரிடமிருந்தும் பெரிய விம்மல்கள் வெடித்தெழுந்தன. அவர்கள் தங்கள் தாயைக் கட்டிக் கொண்டார்கள்.
தாய் சுனயனா அவர்கள் மூவரின் தோள்களையும் தட்டி தன்னால் இயன்ற அளவு அமைதிப் படுத்த முயன்றாள். அவள் விழிகளிலிருந்தும் கண்ணீர் இடைவிடாமல் வழியத் தொடங்கியது.
ஆனால் ஜனகர் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஊர்மிளை வியப்போடு கேட்டாள்:_
தந்தையே ! ஸ்ரீராமர் நம்மைவிட்டு நிரந்தரமாய் பிரிந்துவிட்டாரே ! இனி நாம் அறத்தின் திருவுருவாக விளங்கிய அந்த அற்புதமான மனிதரைப் பார்க்கவே இயலாதே ! உங்களுக்கு வருத்தமாக இல்லையா ?”
ஜனகர் முகத்தில் ஒரு மெல்லிய புன்முறுவல் இழையோடியது.சுனயனா ஜனகர் என்ன பதில் சொல்லப் போகிறார் என எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அவர் தரும் பதிலின் மூலம் தன் மனதில் ஓர் ஆறுதல் கிட்டாதா ? என அவள் ஏங்கினாள்.
மாண்டவி, சுருதகீர்த்தி
இருவரும் விழிகளைத் துடைத்துக் கொண்டு தங்கள் தந்தை சொல்லப் போகும் பதிலுக்காக அவர் முகத்தையே கூர்மையாகப் பார்த்தவாறு இருந்தார்கள். பொதுமக்கள் கூட ஜனகரின் பதிலை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தார்கள்.

எங்கும் அமைதி நிலவியது. ஜனகர் சாந்தம் தவழும் முகத்துடன் இனிய குரலில் பரிவு பொங்கச் சொன்னார்:
மனித உடல் என்பது உறை, ஆன்மா
என்பது அந்த உறையிலிருக்கும் வாள். உடலுக்குத்தான் அழிவுண்டே தவிர ஆன்மாவுக்கு அழிவு கிடையாது. உடல் பயன்படாத நிலை தோன்றுமானால் இறைச் சக்தி உடல் என்ற உறையிலிருக்கும் வாளை உருவித் தன கையில் வைத்து கொள்கிறது. அவ்வளவுதான்.

வாழ்க்கை அநித்தியமானதுதான். பிறக்கும்போதே, இறப்பும் உறுதி செய்யப்பட்டு விடுகிறது. எந்த நாள் என்பது வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.
ஆனால் எல்லோரும் ஒருநாள் இறக்கப் போவது உறுதி. இதை என் மாப்பிள்ளைகள் உணர்ந்து விட்டார்கள். இந்தப் பிறவியில் நிறைவடைந்து விட்டார்கள். தாங்கள் வந்த கடமை முடிந்துவிட்டதை உணர்ந்து கொண்டு விட்டார்கள். அதனாலேய தாங்களே விரும்பி சித்தி அடைந்து விட்டார்கள்.


அடுத்தப்பதிவில் முடிவு.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 21, 2022 6:10 pm

---3----
ஆனால் அவர்களுக்கு மரணமென்பது இல்லை. ஏனென்றால் என் மாப்பிள்ளைகள் நால்வரும் என் வளர்ப்பு மகள் சீதையும், தெய்வ வடிவங்களே என்ற பரம இரகசியத்தை நான் முன்பே அறிவேன். அவர்கள் மண்ணுலகில் மானிடர்களாக வசிக்கும்போது, அந்த ரகசியத்தை வெளிப்படுத்த எனக்கு உரிமை வழங்கப்பட வில்லை. இப்போது அவர்கள் விண்ணுலகம் சென்று விட்டதால், நான் அதைப் பகிரங்கப்படுத்தலாம். !”
சுனயனா வியப்போடு கேட்டாள் . அப்படியானால் நம் மாப்பிள்ளைகள் தெய்வங்களா ?என் செல்ல *வளர்ப்பு மகள் சீதை தெய்வமேதானா ?
ஆமாம். ஒன்றை யோசி. அவர்கள் தெய்வங்களாய் இல்லாவிட்டால் இத்தனை துன்பங்களை எப்படிச் சாந்தமாகத் தாங்கியிருக்க முடியும் ?. மானிடர்கள் அறநெறியில் வாழவேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே திருமால் இவ்விதம் அவதாரமெடுத்து வந்தார். அவதார நோக்கமும் காலமும் பூர்த்தியடைந்து விட்டதால் தெய்வங்கள் விண்ணுலகிற்கு சென்று விட்டன.
ஆனால் மண்ணிலும் அவர்கள் சக்தி நிரந்தரமாய்க் குடியிருக்கும். அவர்களை பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனைகள் நிறைவேறும். இனி அவர்களுக்கு ஊர்கள் தோறும் ஆலயங்கள் எழும். அந்த ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களில் அவர்களின் அருள் சக்தி குடி கொள்ளும்.”
இதெல்லாம் உண்மைதானா ? இதற்கு உங்களால் சாட்சி காட்ட முடியுமா ?”
சாட்சி என்ன, என் தெய்வம் ராமன் திருவருளால் உங்களுக்கு ராமனையே நேரில் காண்பிக்கிறேன். எல்லோரும் அண்ணாந்து ஆகாயத்தை பாருங்கள் !”_
ஜனகர் ஒரு கட்டளை போல் இந்த வாக்கியத்தை கூறினார்.
பிரமிப்போடு அனைவரும் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்கள். வானில் சடாரென மேகங்கள் விலகி ராமபிரானும் சீதா தேவியும் லட்சுமணனும் பரத சத்துருக்கனர்களும் வலக்கரம் உயர்த்தி அனைவருக்கும் ஆசி கூறினார்கள்.
எல்லோரும் அவர்களைத் தரிசித்துக் கொண்டிருக்கும் போதே, விந்தையான பல சம்பவங்கள் நிகழ்ந்தன.
லட்சுமணன் உடல் ஒரு கணத்தில்
ஆதிசேஷனாக மாறியது. ராமன்
திருமாலாய் மாறி அந்தப் பாம்பணையில் பள்ளி கொண்டான். மறுகணம் பரத சத்துருக்கனர்கள் சங்கு சக்கரங்களாக
மாறி திருமாலின் கரங்களில் பொருத்திக் கொண்டார்கள்.

ஜனகரின் வளர்ப்பு மகளான சீதை, இப்போது லட்சுமி தேவியாக விண்மகளானாள். அவள் திருமாலின் பாதங்களைப் பிரியமாய்ப் பிடித்துவிடத் தொடங்கினாள்.
மெல்ல மெல்ல அந்த காட்சி மறைந்தது. மேகங்கள் மீண்டும் வைகுண்டத்திற்குத் திரையிட்டன._
மக்களனைவரும் அளவற்ற மகிழ்ச்சியோடு, ஜெய் ஸ்ரீராம் ‘ என உரத்து முழங்கினார்கள். அந்த முழக்கம் அந்த பிரதேசமெங்கும் நிறைந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரின் குரல்களும் அந்த முழக்கத்தில் ஒன்றாய் இணைந்தன.
ஜனகரின் மனைவி சுனயனாதேவி புதல்விகள் மாண்டவி, ஊர்மிளை, சுருதகீர்த்தி அனைவரின் மனங்களும், இன்னதென்றறியாத சாந்தியிலும், நிறைவிலும் ஆழ்ந்தன.
அவர்கள் இந்த அற்புத காட்சியைத் தங்களுக்குத் தரிசனம் செய்வித்த ஜனகரை நோக்கிக் கரம் கூப்பி வணங்கினார்கள்._
ராஜரிஷி ஜனகரின் மனம் ‘ராம ராம’ என ஓயாமல் ஸ்ரீராமபிரானைத் தியானம் செய்யத் தொடங்கியது

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக