புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கிய நயம் Poll_c10இலக்கிய நயம் Poll_m10இலக்கிய நயம் Poll_c10 
306 Posts - 42%
heezulia
இலக்கிய நயம் Poll_c10இலக்கிய நயம் Poll_m10இலக்கிய நயம் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
இலக்கிய நயம் Poll_c10இலக்கிய நயம் Poll_m10இலக்கிய நயம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இலக்கிய நயம் Poll_c10இலக்கிய நயம் Poll_m10இலக்கிய நயம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இலக்கிய நயம் Poll_c10இலக்கிய நயம் Poll_m10இலக்கிய நயம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலக்கிய நயம் Poll_c10இலக்கிய நயம் Poll_m10இலக்கிய நயம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இலக்கிய நயம் Poll_c10இலக்கிய நயம் Poll_m10இலக்கிய நயம் Poll_c10 
6 Posts - 1%
prajai
இலக்கிய நயம் Poll_c10இலக்கிய நயம் Poll_m10இலக்கிய நயம் Poll_c10 
5 Posts - 1%
manikavi
இலக்கிய நயம் Poll_c10இலக்கிய நயம் Poll_m10இலக்கிய நயம் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இலக்கிய நயம் Poll_c10இலக்கிய நயம் Poll_m10இலக்கிய நயம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கிய நயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 23, 2010 11:22 pm

"இலக்கியம்" என்றதும் நம் எண்ணத்தில் முதலில் தோன்றுவது "காதல்" என்ற பொருள் தானே? காரணம், "காதல்" மனித உணர்வுகளில் பின்னிப் பிணைந்து, உணர்வுகளை தட்டிச் சீக்கிரம் தூண்டி விடுகிறது. காதல் சுவை சொல்லாத இலக்கியங்களே இல்லை என்று கூறுமளவிற்கு இலக்கியத்தில் "காதல்" பின்னிப் பிணைந்து இழையோடுகிறது.

இங்கு காதலில் கட்டுண்டு, கன்னி ஒருத்தி தன் காதல் ஜெயித்து, திருமணத்தில் கொண்டு வந்து சேர்த்த சேதியை அறிந்து கட்டுக் கடங்காத மகிழ்வினில் துள்ளிக் குதிக்கின்றாள்.

"காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம்
பழம் போல் கனிந்ததம்மா"
.....

என்று காத்திருந்த காதல், பழம் போல் கனிந்ததை கவிஞர் கூறுகிறார்.

"தாய்" ஒரு பெண்ணிற்கு பிறந்த போதிலிருந்து, அவளிற்குரிய தேவை அறிந்து, நேரம் அறிந்து, அன்பும் பாசமும் கலந்து கொடுத்து, அவள் மனதின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து, அரவணைத்து வளர்க்கின்றாள். அத்தகைய அன்பும் பாசமும், மண நாள் சேதியை காதலன் கூறுவதைக் கேட்ட மாத்திரத்தில் மறைந்து விடும் என்று கூறுகிறாள்.

இதையே கவிஞர்.....

"காதல் உன்பால் இல்லை என்றால்
கன்னி உள்ளம் கருகி விடும்
தேதி வைத்து சேதி சொன்னால்
தாய் முகமும் மறந்து விடும்"
.....என்று கூறுகிறார்.

அடுத்து, பெண்கள் கூந்தலுக்கு பூச்சூடும் அழகு, அந்தக் கூந்தலுக்கு ஒரு தனி அழகைக் கொடுத்து, அவர்கள் எழிலுக்கு மேலும் மெருகு சேர்த்து விடுகிறது. தாயானவள் தன் மகளிற்கு கூந்தலில் பூச்சூடி, தன் மகளின் அழகை இரசித்து மகிழ்வாள். அந்தப் பூச்சூடும் உரிமை கூட மணமானதும் கணவனுக்குச் சொந்தமாகி விடுகிறது.

இதையே மிக இயல்பாக, யதார்த்தமாக கண்ணதாஸன் அந்தப் பெண்ணின் உள்ளப் பாங்கில் நின்று....

"தங்க மகள் கூந்தல் என்று
தாய் முடித்துப் பூவும் வைப்பாள்
மங்கை மணம் முடித்து விட்டால்
மணவாளன் பூ முடிப்பான்"
..... என்று வடித்து விடுகிறார்.

அடுத்து இன்னொரு தத்துவத்தை மிக அழகாக, நாமாக விரும்பிக் கொண்டு வந்து இவ்வுலகில் பிறந்து விடுவதில்லை என்பதையும், பிறந்தவர்கள் யாவரும் பெற்றவர்களாலே வளர்க்கப்படுகின்றார்கள் என்பதையும் கூறி, தம்மை விரும்பி மணம் முடிப்பவர்கள் தம்முடைய உயிரில் தம்மை இணைத்து வளர்ப்பார்கள். என்று "தம் கணவனே தமக்கு உயிர்" என்றும், ஒரு கணவனுக்கே மனைவியானவள் சொந்தமாகி விடுகிறாள் என்பதையும், மிக நயமாக, பண்பாடு, நாகரீகம் தவறாமல், காதலால் பிணைக்கப் பட்டு, உயிரோடு கலந்து கொண்ட உறவாக இணைத்து விடுகிறார்.

தாய்க்குப் பின் தலைவனே தனது வழிகாட்டி, வாழ்க்கை என்று கூறிவிடும் அழகு கண்ணதாஸனுக்கே உரிய நடையில் நான்கு வரியில் வடித்து கொடுத்திருக்கிறார்.

"நாம் விரும்பிப் பிறப்பதில்லை
பெற்றவளே வளர்ப்பதில்லை
தாம் விரும்பி மணமுடிப்பார்
தம் உயிரில் நமை வளர்ப்பார்"
.....என்று கூறுகிறார்.

அடுத்து வரும் வரிகளில் "காதல்" என்றாலே தோல்விதான், என்ற ஒரு உண்மையை நாம் உலகில் பரவலாக பார்க்கக் கூடியதாக இருக்கின்ற காலத்தில், இந்தக் கன்னி தன் காதல் ஜெயித்த பூரிப்பில் திளைக்கின்றாள்.

"காதலிலே தோல்வி கண்டோர்
கதைகளை நான் படித்ததுண்டு
காதலிலே வெற்றி கண்ட
கன்னி என்போல் யாருண்டு".....


என்று, களிப்பில், பெருமிதத்தில் இருக்கும் பெண்ணில் தன்னை நிலைப் படுத்தி கவிஞர் கூறுகிறார்.

அடுத்து, ஒரு பெண் ஒருவனுக்கு மனைவியாகி விட்டாலே, அவளைத் தென்றல் தீண்டுவதைக் கூட அவள் விரும்ப மாட்டாள். தன் கணவனன்றி தன் உடலை வருடுவதற்கு தென்றலுக்குக் கூட உரிமை கிடையாது, தன் உடல் முழுக்க முழுக்க தன் கனவனுக்கே சொந்தம் என்று கூறும் பாங்கு தமிழர் பெருமை கூறும் கற்பு நெறி நிலைப் படுத்தப் பட்டிருக்கும் பாங்கு, "கற்பு" என்னும் அணிகலன் பெண்ணிற்கு என்றும் பெருமை தேடித் தரும் என்பதை மிக நயமாக எளிய நடையில் கூறுவதில் கண்ணதாஸனுக்கு நிகர் கண்ணதாஸனே.

"தனித்திருந்த என்னுடலை
தழுவி வந்த தென்றலுக்கு
துணை அடைந்த என் உடலை
தொடுவதற்கும் உரிமை இல்லை"
.....என்று கூறுகிறார்.

அடுத்து வரும் வரிகளில் இலக்கியச் சிறப்பின் உச்சிக்கே நம்மை இழுத்துச் சென்று விடுகிறார்.

"கண் திறந்து நானிருந்தேன்
கட்டழகர் குடி புகுந்தார்
கண் திறந்தால் போய் விடுவார்
கண் மூடிக் காத்திருப்பேன்".....


என்று, தன் கண்ணைத் திறந்து விட்டால் தன் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ என்ற பயம் கலந்த ஏக்கம் அந்தப் பெண்ணில் பின்னி நிற்கிறது. தன் கணவனை தன்னை விட்டுக் கணமேனும் பிரித்துப் பார்க்க இயலாதவளாக, கண்ணைத் திறந்த நேரத்தில் உள் புகுந்தவர், மீண்டும் கண்ணைத் திறந்து விட்டால் போய் விடுவாரோ என்ற பயத்துடனும், எங்கே கண் திறந்தால் கணவன் வேறு இடம் நாடி விடுவாரோ என்ற தாபமும் இணைந்து நிற்க, தன் கணவனை உள்ளத்தில் நிறுத்தி தனக்கே உரிமையாக்கி வைத்திருக்க விரும்புகிறாள் என்பதை நல்ல நயத்துடன் சிலேடையாக்கி, கவிதையாக்கி அந்தப் பெண்ணின் உணர்வுகளில், ஏக்கங்களில், களிப்பில் நின்று வடித்திருக்கும் நயம் அற்புதம்!... அற்புதம்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 23, 2010 11:26 pm

"காதல்" மனித உணர்வுகளில் பின்னிப் பிணைந்து, உணர்வுகளை தட்டிச் சீக்கிரம் தூண்டி விடுகிறது. காதல் சுவை சொல்லாத இலக்கியங்களே இல்லை என்று கூறுமளவிற்கு இலக்கியத்தில் "காதல்" பின்னிப் பிணைந்து இழையோடுகிறது. இதோ மீண்டும் ஒரு கண்ணதாசனின் பாடல் ஒன்று பற்றி சற்றுப் பார்ப்போமே..........

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ எங்கே நான் அங்கே.

உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தால் என்ன
பூ முகம் சிவந்தா போகும்

பாவை உன் முகத்தைக் கண்டேன்
தாமரை மலரைக் கண்டேன்
கோவை போல் இதழைக் கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்ததே கனவோ என்று
வாடினேன் தனியே நின்று
வண்டு போல் வந்தாய் இன்று
மயங்கினேன் உன்னைக் கண்டு.


உலகத்தில் இனம், மதம், மொழி எல்லாவற்றையும் கடந்து தோன்றும் உணர்வுகளில் பின்னிப் பிணைந்து காணப்படுவது "காதல்" என்ற உணர்வே. முன் பின் தெரியாத ஓர் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போது, தம் உணர்வுகளிற்குள் இனம் புரியாத பற்றுப் பாசம் பின்னிப் பிணைந்து; ஒரு வித துடிப்பு ஏற்படுகிறது! இந்தத் துடிப்பு முன் பின் உணராத துடிப்பாகவும், புதுமையான தாகவும் ஏற்பட்டு விடுகிறது. இத்தனைக்கும் இவர்கள் எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, எங்கேயோ சந்தித்திருப்பார்கள். இருப்பினும் இந்த உணர்வுகள் சந்தித்துக் கொள்கிறது. ஒன்றை ஒன்று கவ்வியும் கொள்கிறது.

குறுந்தொகைப் பாடல் ஒன்று இப்படிக் கூறுகிறது:.............

"யாயும், ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளீர்!
யானும் நீயும் எவ்வழி அறிந்தும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம்தான் கலந்தனவே"


"நான் யாரோ? நீ யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் யார் யாரோ? எந்தவகை உறவும் இல்லாதவர்கள். ஆனாலும் நானும் நீயும் செம்பாட்டு மண்ணில் நீர் கலந்து, அந்த மண்ணில் ஒன்றாகி ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதது போல்; நம் இருவருடைய அன்பும் ஒன்று கலந்து விட்டதே" என்கின்றான் அந்தத் தலைவன்.

இது உலகியல்."காதல்" உயிர் வாழும் எல்லா இனங்களிற்கும் இருந்து விடுகிறது. " காதல், காதல், காதல்! காதல் போயிற் சாதல், சாதல்"...என்றான் பாரதி.

காதல் இல்லாத இலக்கியங்களே இல்லை எனலாம். இலக்கியங்கள் யாவும் மனித வாழ்வைப் பின்னிப் பிணைத்துக் காட்டுகின்றன. சங்க கால இலக்கியங்களில் எங்கு பார்க்கும் போதும் காதல்தான் நிறைந்திருக்கின்றன.

சங்க கால இலக்கியத்தை எளிமைப்படுத்தி இலகு தமிழில் எடுத்து வருகின்றன அநேகமான திரை இசைப் பாடல்கள். பாமரரும் புரியும்படி கவி கொடுத்த, பாரதி வழிவந்த கண்ணதாசனும் பல திரை இசைப் பாடல்களில் இணைத்திருக்கிறார். அந்த வகையில் இந்தக் குறுந்தொகைப் பாடலை கண்ணதாசன் இப்படிக் கொடுத்திருக்கிறார்.

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ எங்கே நான் அங்கே.


என்று "வாழ்க்கைப் படகு" படத்தில் இலக்கியக் காதலைப் புகுத்தியிருக்கிறார்.

அதே வேளை இந்தப் பாடலில் கண்ணதாசன் வள்ளுவனின் குறள் தரும் இலக்கியத்தையும் இணைத்திருக்கிறார் இப்படி:............

"யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக் கால்
தான் நோக்கி மெல்ல நகும்.


என்றான் வள்ளுவன். காதலிற்கு மெருகூட்டுவது "நாணம்" என்ற பொருளாகும். காதல் வயப்பட்ட ஆணும், பெண்ணும் பேசிக் கொள்ளும் போது, ஆணானவன் நிமிர்ந்து பெண்ணின் முகம் பார்த்துப் பேசிக் கொள்வான். ஆனால் பெண்ணானவள் ஆண் தன்னைப் பார்க்கும் போது நிலம் பார்த்து காலால் கோலம் போட்டு கொள்வாள். அதேவேளை ஆண் தன்னைப் பாராத நேரம், அவனைப் பார்த்து சந்தோஷித்துக் கொள்வாள். இது காதலில் பெண்மையின் சிறப்பு. அவள் நாணுவதில் காதலில் பெருமை பின்னிப் பிணைந்து இருக்கிறது. அதுவே ஒரு பெண்மைக்கும் சிறப்பு என்கிறான் வள்ளுவன்.

இதையே கண்ணதாசன் இந்தப் பாடலில் இப்படிக் கூறுகிறார்.

"உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே !
விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே !


என்று மிகவும் அழகாகவும், நல்ல நயத்துடனும் யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறியிருக்கிறார்.

சத்தியா



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Jan 23, 2010 11:59 pm

சிவா அண்ணா உங்கள் இருவருகம்கும் வாழ்த்துக்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக