புதிய பதிவுகள்
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாதங்களில் நான் மார்கழி Poll_c10மாதங்களில் நான் மார்கழி Poll_m10மாதங்களில் நான் மார்கழி Poll_c10 
31 Posts - 58%
ayyasamy ram
மாதங்களில் நான் மார்கழி Poll_c10மாதங்களில் நான் மார்கழி Poll_m10மாதங்களில் நான் மார்கழி Poll_c10 
20 Posts - 38%
Ammu Swarnalatha
மாதங்களில் நான் மார்கழி Poll_c10மாதங்களில் நான் மார்கழி Poll_m10மாதங்களில் நான் மார்கழி Poll_c10 
1 Post - 2%
M. Priya
மாதங்களில் நான் மார்கழி Poll_c10மாதங்களில் நான் மார்கழி Poll_m10மாதங்களில் நான் மார்கழி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாதங்களில் நான் மார்கழி Poll_c10மாதங்களில் நான் மார்கழி Poll_m10மாதங்களில் நான் மார்கழி Poll_c10 
74 Posts - 65%
ayyasamy ram
மாதங்களில் நான் மார்கழி Poll_c10மாதங்களில் நான் மார்கழி Poll_m10மாதங்களில் நான் மார்கழி Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
மாதங்களில் நான் மார்கழி Poll_c10மாதங்களில் நான் மார்கழி Poll_m10மாதங்களில் நான் மார்கழி Poll_c10 
4 Posts - 4%
Rutu
மாதங்களில் நான் மார்கழி Poll_c10மாதங்களில் நான் மார்கழி Poll_m10மாதங்களில் நான் மார்கழி Poll_c10 
3 Posts - 3%
prajai
மாதங்களில் நான் மார்கழி Poll_c10மாதங்களில் நான் மார்கழி Poll_m10மாதங்களில் நான் மார்கழி Poll_c10 
3 Posts - 3%
Baarushree
மாதங்களில் நான் மார்கழி Poll_c10மாதங்களில் நான் மார்கழி Poll_m10மாதங்களில் நான் மார்கழி Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
மாதங்களில் நான் மார்கழி Poll_c10மாதங்களில் நான் மார்கழி Poll_m10மாதங்களில் நான் மார்கழி Poll_c10 
2 Posts - 2%
Jenila
மாதங்களில் நான் மார்கழி Poll_c10மாதங்களில் நான் மார்கழி Poll_m10மாதங்களில் நான் மார்கழி Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
மாதங்களில் நான் மார்கழி Poll_c10மாதங்களில் நான் மார்கழி Poll_m10மாதங்களில் நான் மார்கழி Poll_c10 
1 Post - 1%
viyasan
மாதங்களில் நான் மார்கழி Poll_c10மாதங்களில் நான் மார்கழி Poll_m10மாதங்களில் நான் மார்கழி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதங்களில் நான் மார்கழி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82009
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 3 Jan 2023 - 19:25

மாதங்களில் நான் மார்கழி Main-qimg-49b72a7ad58d3dade00242c6fd5d3bfe-lq
-
*‘‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கின்றேன்” (மாஸானாம் மார்க்க சீர்ஷோகம் – கீதை சுலோகம்) என்றான் கண்ணன் கீதையில். மற்ற மாதங்களுக்கு இது தலைமைப் பொறுப்பு ஏற்கும் மாதம்.

கண்ணனை அடைய, கண்ணனுக்குப் பிடித்த மார்கசீர்ஷ (மார்கழி) மாதத்தில், பாவை நோன்பை ஆண்டாள் கடைப்பிடித்தாள்.

*மனிதர்களின் ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். மனிதர்களின் ஒவ்வொரு இரண்டு மாதமும் தேவர்களுக்கு இரண்டு மணி நேரம். அந்த வகையில் தேவர்களின் சூரிய உதயமாகிய ஆறு மணி என்பது தை மாதத்தைக் குறிக்கிறது.

பர தெய்வமானஸ்ரீமன் நாராயணனை, தேவர்கள் பூஜிக்கும், பிரம்ம முகூர்த்தமான, காலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள நேரத்தை, தை மாதத்தின் முந்திய மாதமாகிய, மார்கழி மாதம் குறிக்கிறது. இந்த பிரம்ம முகூர்த்த வழிபாடு தான் “மார்கழி வழிபாடு” என்று கருதப்படுகிறது.

*பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப் படும் எந்தக் காரியமும் மிகச்சீரிய பலனைத் தரும். பிரம்ம முகூர்த்தத்தில் எந்தவித நாள், வார, திதி தோஷங்கள் இல்லை. பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் வழிபாடு நூறு மடங்கு புண்ணிய பலனை தரும் என்பதால், தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலமாகிய விடிகாலை நேரத்தை, மார்கழி மாதமாக வைத்தார்கள்.

மார்கழி மாதத்தை “பீடை மாதம்’ என்று அறியாதவர்கள் சொல்லுவார்கள். ஆனால் மார்கழி மாதம் பீடுடைய மாதம். ஆன்மிகத்திற்கே உரிய மாதம். பெரும்பாலும் மாதத்தின் ஓரிரு நாளே ஆன்மிக முக்கியத்துவம் பெறும். ஆனால், மார்கழி மாதத்தின் முப்பது நாள்களும் ஆன்மிக முக்கியத்துவம் பெறும்.

*மார்கழி மாதத்தை “திருப்பாவை மாதம்” என்று சொல்வார்கள். திருப்பாவை ஆண்டாள் எழுதிய தமிழ் பிரபந்தம். திருப்பாவை பிரபந்தத்தில் 30 பாசுரங்கள் இருக்கின்றன. வைணவர்களிடம் ஒரு வழக்கம் உண்டு அவர்கள் மார்கழி மாதத்தின் தேதிகளைக் குறிப்பிடுகின்ற பொழுது, மார்கழி 1,2 என்று குறிப்பிடுவதில்லை.

திருப்பாவையின் பாசுர தொடக்க வார்த்தையை வைத்துத் தான் குறிப்பிடுவார்கள். உதாரணமாக மார்கழி 1 என்று குறிப்பிடாமல், ‘‘மார்கழித் திங்கள்’’ என்று குறிப்பிடுவார்கள். மார்கழி இரண்டாம் தேதியை, திருப்பாவை இரண்டாம் பாசுர தொடக்கமான ‘‘வையத்து வாழ்வீர்காள்’’ என்று குறிப்பிடுவார்கள். மார்கழி மூன்றாம் தேதியை ‘‘ஓங்கி உலகளந்த’’ என்று குறிப்பிடுவார்கள். மார்கழி 30 ஆம் தேதியை “வங்கக் கடல்” என்று குறிப்பிடுவார்கள்.

*தமிழில் எத்தனையோ பிரபந்தங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு மாதத்திற்கு உரிய பிரபந்தமாக, அந்த மாதத்தின் பெயரோடு தொடங்குகின்ற பிரபந்தம் திருப்பாவையைத்தவிர வேறு இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஆண்டாள் இயற்றிய பிரபந்தங்கள் இரண்டுமே மாதத்தின் பெயரோடு தான் தொடங்குகின்றது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82009
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 3 Jan 2023 - 19:26

திருப்பாவை மார்கழி என்ற மாதத்தின் பெயரோடும், நாச்சியார் திருமொழி தை என்ற மாதத்தின் பெயரோடும் தொடங்குகிறது. இன்னும் சிறப்பு இரண்டும் அடுத்தடுத்து வருகின்ற மாதங்களின் பெயர்கள் அல்லவா?

“மார்கழி” த் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,

(திருப்பாவை, முதல் பாசுரம்)

பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி
உன்னையு மும்பியை யும்தொழுதேன்,
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே.

(நாச்சியார் திருமொழி, முதல் பாசுரம்)

*வைணவத்தை வளர்த்த ராமானுஜருக்கு எத்தனையோ பட்டப் பெயர்கள் உண்டு. உடையவர், பாஷ்யக்காரர், எம்பெருமானார் என்று பல பெயர்கள் உண்டு. ஆனால், சதாசர்வகாலமும் திருப்பாவையை சொல்லிக் கொண்டும் தியானித்துக் கொண்டும் இருந்ததால் அவரை “திருப்பாவை ஜீயர்” என்றும் அழைப்பதுண்டு.

ஆண்டாள் நாறு நறும்பொழில் பாசுரத்தில் நூறு தடா (அண்டா) வெண்ணெய், நூறு தடா அக்காரவடிசில் அழகருக்கு சமர்ப்பிப்பதாக நேர்ந்து கொண்டு பாடினாள்.

அவள் வாக்கு உண்மையாக வேண்டும் என்று சுவாமி ராமானுஜர், நூறு தடா வெண்ணெய், நூறு தடா அக்காரவடிசில் அழகருக்கு, ஆண்டாளின் சார்பில் சமர்ப்பித்தார்.

அதை சமர்ப்பித்து விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த போது ஆண்டாள் ராமானுஜரை அண்ணா என்று அழைத்தாளாம்.

இதை விளக்கும் வாழித்திருநாமம்
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே

உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே.
(பெரும்புதூர் மாமுனி= ராமானுஜர்; பின்னானாள் =தங்கையானாள்)

*ராமாநுஜர் பிரம்ம சூத்திரத்திற்கு உரையெழுதியவர். பல வேதாந்த நூல்களை இயற்றியவர். ராமானுஜரிடம் திருப்பாவைக்கு ஒரு முறை உரை சொல்லும்படி கேட்ட பொழுது அவர் சொன்ன பதில் இது.“ஆண்டாள் என்ற பெண்ணின் மனதின் நிலையைச் சொல்லுகின்ற திருப்பாவை பிரபந்தத்திற்கு, ஒரு ஆடவனாக பிறந்த என்னால், முழுமையாக அவள் உணர்ச்சிகளை உணர்ந்து, உரை சொல்ல முடியாது” என்றாராம்.

—நாகலட்சுமி (குங்குமம் -ஆன்மீகம்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக