புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமலாம்பா தேவி காதல்! Poll_c10திருமலாம்பா தேவி காதல்! Poll_m10திருமலாம்பா தேவி காதல்! Poll_c10 
19 Posts - 95%
Geethmuru
திருமலாம்பா தேவி காதல்! Poll_c10திருமலாம்பா தேவி காதல்! Poll_m10திருமலாம்பா தேவி காதல்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமலாம்பா தேவி காதல்! Poll_c10திருமலாம்பா தேவி காதல்! Poll_m10திருமலாம்பா தேவி காதல்! Poll_c10 
146 Posts - 57%
heezulia
திருமலாம்பா தேவி காதல்! Poll_c10திருமலாம்பா தேவி காதல்! Poll_m10திருமலாம்பா தேவி காதல்! Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
திருமலாம்பா தேவி காதல்! Poll_c10திருமலாம்பா தேவி காதல்! Poll_m10திருமலாம்பா தேவி காதல்! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
திருமலாம்பா தேவி காதல்! Poll_c10திருமலாம்பா தேவி காதல்! Poll_m10திருமலாம்பா தேவி காதல்! Poll_c10 
9 Posts - 4%
prajai
திருமலாம்பா தேவி காதல்! Poll_c10திருமலாம்பா தேவி காதல்! Poll_m10திருமலாம்பா தேவி காதல்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
திருமலாம்பா தேவி காதல்! Poll_c10திருமலாம்பா தேவி காதல்! Poll_m10திருமலாம்பா தேவி காதல்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
திருமலாம்பா தேவி காதல்! Poll_c10திருமலாம்பா தேவி காதல்! Poll_m10திருமலாம்பா தேவி காதல்! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
திருமலாம்பா தேவி காதல்! Poll_c10திருமலாம்பா தேவி காதல்! Poll_m10திருமலாம்பா தேவி காதல்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமலாம்பா தேவி காதல்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 14, 2023 8:36 am


இந்திய திருநாட்டில் எத்தனையோ பேரரசுகள் தோன்றி வளர்ந்து செயற்கரிய செயல் பல செய்து பின்னர் மறைவுற்றன. அதில் ஒன்றுதான் #விஜய_நகரப்_பேரரசு. விஜய நகரப் பேரரசுகளில் மிகவும் புகழ் வாய்ந்தவர் கிருஷ்ண தேவராயர். அவருடைய சகோதரர் அச்சுத தேவராயர். இவருடைய மனைவிகளில் மிகவும் அன்புக்குரியவரும், நெஞ்சில் கலந்தவருமாகிய #திருமலாம்பா_தேவி தன்னுடைய தங்கை மூர்த்திமாம்பா தேவியை பெண் கொடுத்த வகையில் தஞ்சைக்கு தன் நாயகனுடன் வருகிறார்.

ஆம், தஞ்சை செவ்வப்ப நாயக்கரின் மனைவியே மூர்த்திமாம்பா. விஜய நகரத்திலிருந்து அச்சுத தேவராயருடன் தஞ்சை வந்தார். விஜய நகரத்தில் இருந்தபோது அச்சுத தேவராயர் வரதாம்பிகா என்பவரை திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வை தேவி திருமலாம்பா எழுதிய வரதாம்பிகா பரிணய சம்பூ என்ற நூலின் மூலம் அறியலாம். இந்நூல் வடமொழியில் எழுந்த சம்பூ காவியங்களில் மிகச்சிறந்த ஒன்றாகும்.

அச்சுத தேவராயரின் பட்டத்து அரசியான வரதாம்பிகை பற்றி எழுதிய நூலின் கடைசிப் பகுதியில் தன்னைப் பற்றியும், தன் அறிவு, ஆற்றல், திறமை பற்றியும் தெளிவாகக் கூறியுள்ளார். இதில் எந்த ஒன்றையும் பார்த்தாலோ, படித்தாலோ, கேட்டாலோ அது காவியமாகவோ, நாடகமாகவோ, கவிதையாகவோ எதுவாக இருந்தாலும் அது அப்படியே மனதில் பதித்துக் கொள்ளும் ஆற்றல் தனக்குள்ளது என்று கூறுகிறார். தான் பல துறைகளில் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும், பல மொழிகள் தனக்கு தெரிவதாகவும் அதன் வாயிலாக தான் வெளிப்படுவதாகவும் கூறுகின்றார்.

இவை அனைத்தையும்விட தாம் அச்சுத தேவராயரின் மனதுக்கு இனியவளாகவும், காதலியாகவும் இருப்பதோடு அவரின் மனைவி என்பதையும் இந்நூலில் தெளிவுபட உரைக்கின்றார். மேலும் திருமலாம்பா தேவியின் கரங்கள் கமலம் போல சிவந்து இருப்பதற்குக் காரணம் புலவர்களுக்கு பரிசில்களை அள்ளி அள்ளித் தருவதாலும் பல மொழிகளில் எப்போதும் எழுதிக்கொண்டே இருப்பதாலும் இவ்வாறு சிவந்துள்ளது என்று கூறுகிறார்.

வாஜ்பேய யாகம், புண்டரீக யாகம், சர்வதோமுக யாகம் ஆகியவற்றைச் செய்த பெரியோர்களின் ஆசியை எப்போதும் பெற்றவர் என்றும், அதற்கெல்லாம் மேலாக அவருடைய பஞ்சமம் பாடும் குரலானது எப்போதும் குயிலைவிட இனிமையானதாகவும், வாணியின் வீணை ஒலிக்கு நிகரானதாகவும் இருந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன. இவரைப்பற்றி தஞ்சை அரசவைப் பெண் கவியான இராமபத்ராம்பா, அச்சுத தேவராயரின் மனம் கவர்ந்த தேவி திருமலாம்பா என்றும் இவள் அழகும், சிறப்பும் பொருந்தியவள் என்றும், நற்குணம் மிக்கவள் என்றும் கூறுகிறார்.

கி.பி. 1532 ஆம் ஆண்டு அச்சுத தேவராயர் தம் இரு மனைவியரோடும் மகவோடும் தஞ்சைக்கு வருகிறார். அப்போது வரும் வழியில் திருவரங்கத்தில் பல நாட்கள் தங்கியிருந்து அறச்செயல்கள் பல செய்தார். அப்போது திருமலாம்பா தாம் இயற்றிய பக்த சஞ்சீவி எனும் நிகழ்ச்சியை திருஅரங்கன் முன்பு வைணவர்கள் நடத்திக் கொள்வதற்காக நிலம் அளித்ததை கல்வெட்டு கூறுகிறது. அதே போன்று விஜய நகரத்து ஹம்பியில் உள்ள விட்டலா கோயில் கல்வெட்டு அச்சுத தேவராயர் கொடுத்த கொடை பற்றி கூறுகின்றது. இக்கல்வெட்டு அழகிய பாடல் வடிவில் வெட்டப்பட்டுள்ளது. இப்பாடலை இயற்றியவர் திருமலாம்பா என்ற குறிப்பும் காணப்படுகிறது. இப்பாடலின் வழி திருமலாம்பாவின் கவி புனையும் ஆற்றலையும், புலமையையும் அறிய முடிகிறது. திருவரங்கத்தில் அச்சுதராயர் மன்னர் துலாபார மகாதானம் அளித்த செய்தியினையும் திருமலாம்பா கவிதையாக வடித்துக் கொடுத்துள்ளார்.

தஞ்சையில் இவரது பெயரில் ஒரு பேட்டையும், அதனுள் ஒரு கோயிலையும் எழுப்பிய பெருமை இவருக்குண்டு. கி.பி. 1538 ஆம் ஆண்டு தஞ்சையை செவ்வப்ப நாயக்கர் ஆட்சி செய்த போது அக்கோயிலுக்கு மகா பிரதிஷ்டையும் செய்யப்பெற்றது. அக்கோயில் இராஜகோபால சாமி கோயிலாகும். கோயிலின் கர்ப்ப கிரகத்தில் காணும் செய்தியானது திருமலாம்பா தேவி தர்மமாக திருமலையம்மன் பேட்டை மதனகோபால பெருமாள் திருபிரதிஷ்டை செய்கையில் அச்சுத தேவராயர் அதிட்டானமாக கட்டளையிட்ட திருவுள்ளம் பட்டினப்படி என்ற ஆணை குறிக்கப்பட்டுள்ளது. அதன்படி இக்கோயில் தஞ்சை வடக்கு வீதியிலிருந்து எல்லையம்மன் கோயில் தெரு செல்லும் வழியில் மிகப்பெரிய இராஜகோபுரத்துடன் கருங்கற்கள் கொண்டு கட்டப்பெற்றுள்ளது. அழகிய கோயிலாக கட்டப்பெற்றுள்ள அப்பகுதி திருமலாம்பா பெயரில் திருமலையம்மன் பேட்டை என்றும், இவரது தருமமாக இக்கோயில் கட்டப்பெற்றுள்ளது என்றும் இரண்டு கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மேலும் இங்கு காணப்படும் கிரந்த கல்வெட்டு ஒன்று அச்சுத தேவராயரின் புகழைப் பாடுகிறது. பாடல் அமைப்பை ஒப்புநோக்கும் போது இப்பாடல் திருமலாம்பா எழுதியதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

தஞ்சை - திருச்சி சாலையில் தற்போது சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் ஊர்ப்பகுதி திருமலை சமுத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் முந்தைய பெயர் திருமலையம்மன் சமுத்திரமாகும். அன்றைய காலகட்டத்தில் நீர்நிலைகளை ஏற்படுத்தும்போது மன்னரின் பெயரிலோ அல்லது மாதேவியரின் பெயரிலோ அமைப்பது வழக்காகும். அந்த வகையில் இவ்வூருக்கு இப்பெயர் ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம். தன் தேவியின் மீது மன்னர் கொண்டிருந்த அளவற்ற அன்பும், காதலும், அத்தேவியின் மீது கொண்ட ஈடுபாடும் அத்தேவியின் பெயரில் நீர்நிலையையும், ஒரு ஊரையும் ஏற்படுத்தியது. மன்னன் கொண்ட காதலால் தோற்றுவிக்கப்பட்ட மகத்தான கொடையே மேலே கண்ட கோயிலும், இவ்வூரும் என்றால் மிகையல்ல. இன்றும் கூட அந்த மன்னர், அந்த தேவி அதாவது அச்சுத தேவராயரையும், திருமலாம்பாவையும் வடக்கு வீதி எல்லையம்மன் கோயில் தெரு சந்திப்பில் உள்ள இராஜகோபால சாமி கோயிலில் காணலாம்.

தினமணி


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 14, 2023 12:38 pm

திருமலாம்பா தேவி காதல்! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக