புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_c10நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_m10நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_c10 
64 Posts - 50%
heezulia
நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_c10நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_m10நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_c10நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_m10நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_c10நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_m10நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_c10நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_m10நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_c10நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_m10நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_c10நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_m10நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_c10நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_m10நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 13, 2023 8:41 pm

நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  VVtSSnA

1999 ஆண்டுவாக்கில், மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள பன்றிகளுக்கும் மக்களுக்கும் புதிய வைரஸ் நோய் பரவியது. ஆய்வில், அது நிபா வைரஸ் தொற்று என்று கண்டறியப்பட்டது. அப்போது, 100-க்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்தியது. நோயைத் தடுக்க 10 லட்சத்துக்கும் அதிகமான பன்றிகளும் கொல்லப்பட்டன.

அதன் பிறகு, நமது நாட்டிலும் வங்கதேசத்திலும் இந்த நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டு பலரும் இறந்தார்கள். 2018-ம் ஆண்டில், கேரளாவில் இந்தத் தொற்று ஏற்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், பல ஆசிய நாடுகளிலும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எப்படிப் பரவுகிறது?


பழம் தின்னும் வெளவால்களின் உடலில் இந்த வைரஸ் இருக்கும். இது ஹெனிபா வகை வைரஸாகும். அவற்றில் இருந்து பன்றிகள், குதிரை, ஆடு, பூனை, நாய் போன்ற பிற விலங்குகளுக்கும் வைரஸ் பரவும். ஆகவே, இந்த விலங்குகளைக் கையாளும் நபர்களுக்குத் தொற்று ஏற்படும் அல்லது இந்த விலங்குகளின் ரத்தம், சிறுநீர் அல்லது உமிழ்நீர் போன்ற உடல் திரவங்கள் பட்ட உணவுகளை உட்கொள்வதால் இந்த வைரஸ் பரவிவிடும்.

பதநீரில் வெளவால்களின் சிறுநீர் அல்லது உமிழ்நீர் கலக்க வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், வெளவால்கள் கடித்த பழங்களை உண்பவர்களுக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படும். நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிப் பழகும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இதேபோன்றே உடல் திரவங்களால் நோய் ஏற்பட்டுவிடும்.

நிபா அறிகுறிகள்


நிபா வைரஸ் உடலில் நுழைந்த இரு வாரங்களுக்குள் (4 - 14 நாள்கள்) நோய் அறிகுறிகள் தென்படும். சிலருக்கு அறிகுறிகள் தெரியாமலும் இருக்கலாம்.

தொடக்கத்தில், பாதிக்கப்பட்டவருக்கு இருமல், காய்ச்சல், தொண்டைவலி, தலைவலி, வாந்தி என பொதுவான அறிகுறிகள் இருக்கும். ஆனால், இவற்றைத் தொடர்ந்து நோயாளிக்கு சுவாசிப்பதில் சிரமம், வலிப்பு, குழப்பம், தன்னிலை இழந்து பிதற்றுதல், வாய் குழறுதல் ஆகிய மோசமான அறிகுறிகள் தோன்றும். இந்த வைரஸால் மூளை அழற்சி உண்டாகிவிட்டது; மூளை பாதிக்கப்பட்டுவிட்டது என்பதற்கான அறிகுறிகள் இவை.

இதைத் தொடர்ந்து மயக்கம் ஏற்பட்டு, கோமா நிலைக்குச் சென்று நோயாளி இறந்துவிடலாம். தொற்று ஏற்பட்ட இடத்தையும், அங்கு செய்யப்படும் மருத்துவ நடவடிக்கைகளையும் பொறுத்து, இறப்பு விகிதம் 40 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை அமையலாம்.

பரிசோதனைகள்


பாதிக்கப்பட்டவரின் உடல் திரவங்களில், ஆர்டி-பிசிஆர் மற்றும் எலீசா பரிசோதனைகள் செய்வதன் மூலம் இந்த வைரஸ் தொற்றைக் கண்டறிய முடியும்.

சிகிச்சைகள்


நிபா வைரஸை அழிப்பதற்கான மருந்துகள் தற்போதுவரை கண்டறியப்படவில்லை.

அறிகுறிகளுக்கான சிகிச்சைகளும், உடலைப் பராமரிக்க, உயிரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான தீவிர சிகிச்சைகளும் மட்டுமே அளிக்கப்படுகின்றன.

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவரைத் தனி வார்டில் வைத்து, மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

தடுப்பு முறைகள்


நிபா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, அனைத்து மருத்துவர், செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் என அனைவரும் முழு பாதுகாப்பு உடைகளை அணிய வேண்டும்.

இந்த வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆகவே, தொற்று ஏற்படாமல் தடுப்பது, தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவைதான், இந்த வைரஸ் நோயின் பிடியில் இருந்து மக்களைக் காப்பதற்கான ஒரே வழி!

நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த உறவினர்கள், நண்பர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர்களது உடல் திரவ மாதிரிகளை புனேயில் உள்ள வைரஸ் தொற்று பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும்.

மேலும், இந்த வைரஸுக்கான நோய் அறிகுறிகள் உள்ளவர்களையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளை அழிக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. பாதிக்கப்பட்ட விலங்குகளை அப்புறப்படுத்தும்போதும், கொல்லும்போதும் முழுப் பாதுகாப்பு உடைகளை அணிய வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நிபா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

பொதுவான தடுப்பு முறைகள்


கேரளா போன்ற மாநிலங்களில், பழம் தின்னும் வெளவால்களின் சூழலியல் பற்றிய ஆராய்ச்சி மிகவும் அவசியமாகும். அவற்றிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதைப் புரிந்துகொள்ள ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

மனிதர்களைப்போல பன்றி உள்ளிட்ட விலங்குகளுக்கும் தொற்று பரவுகிறதா என்பதையும் கண்டறிய வேண்டும்.
நோய்வாய்ப்பட்ட வெளவால்கள் மற்றும் பன்றிகளைத் தொடக் கூடாது. மரத்திலிருந்து கீழே விழுந்த பழங்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, கடிபட்ட பழமாக இருந்தால் அதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

சிலர், அணில் கடித்த பழம், கிளி கொத்திய பழம், வண்டு விழுந்த பழம் சுவையாக இருக்கும் என்று சாப்பிடுவார்கள். கிளி, அணில், குரங்கு, வெளவால் என எதுவும் அந்தப் பழங்களைக் கடித்திருக்கலாம். அதனால் அத்தகைய பழங்களைத் தவிர்ப்பது நல்லது.

வாழைப்பழம், மாம்பழம், கொய்யா, பேரீச்சப்பழம், ரம்புட்டான் என வெளவால்கள் பல பழங்களையும், மலர்களையும், இலைகளையும்கூட தின்னக்கூடியவை. மலர்களில் இருந்து இனிப்பு நீரையும் குடிக்கும். ஆகவே, கடைகளில் பழங்கள் வாங்குவதாக இருந்தாலும், நன்றாகப் பார்த்து வாங்க வேண்டும்.

பல் பதிந்த, துளை விழுந்த, கோடுகள் கீறல்கள் நிறைந்த, ஓட்டை உள்ள, சிதைந்த, கடிபட்ட பழங்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும். வீட்டுக்குக் கொண்டுவந்த பிறகு, பழங்களை நீரில் நன்கு சுத்தம் செய்த பிறகே உண்ண வேண்டும். திறந்த நிலையில் விற்கப்படும் பதநீர், கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பழக் கடைகள், பழச்சாறு விற்கும் கடைகள் ஆகிய இடங்களில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுசெய்து, அங்குள்ள பழங்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து விலகி இருக்க வேண்டும். நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவும், நோய் பரவாமல் தடுக்கவும் சுகாதார நெறிமுறைகளை முறையாகச் செயல்படுத்த வேண்டும். வெளவால்கள் அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

- பேராசிரியர், மருத்துவர் முத்துச் செல்லக்குமார்

குறிச்சொற்கள் #நிபா_வைரஸ் #Nipah_virus




நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 13, 2023 8:54 pm

பயனுள்ள தகவல்கள்,
மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும்.

நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  1571444738 நிபா வைரஸ் - நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?  103459460



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Thu Sep 14, 2023 12:38 am

மீண்டும் மாஸ்க் போட வேண்டுமா அய்யோ, நான் இல்லை

நிபா Dengu நோய் மீண்டும் மீண்டும் வருகிறது, அதிர்ச்சி அறியாமை?

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக