புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_c10நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_m10நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_c10 
30 Posts - 50%
heezulia
நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_c10நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_m10நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_c10நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_m10நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_c10நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_m10நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_c10 
72 Posts - 57%
heezulia
நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_c10நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_m10நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_c10நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_m10நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_c10நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_m10நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Apr 02, 2024 6:35 pm

நம்பிக்கை நல்கும் சங்ககால பொற்பனைக்கோட்டை XyTfgVN

தொல் தமிழரின் பண்டைய த் தொழில் நுட்பம் ,அவர்களது பாரம்பரிய அறிவியல் திறமைகள் இன்னமும் சரிவர வரலாற்றில் எடுத்துக்கூறப்படவில்லை .
தமிழரின் அயல் வணிகம் என்றதும் என்னமோ நறுமணப்பொருள்கள் ,முத்து , மயில் தோகை போன்ற இயற்கைப்பொருள்கள் மட்டுமே என்பதுபோல என சுருக்கிவிடுகின்றனர் .
நான் கூட முன்பே தமிழர்களின் போர்க்கருவிகளின் சிறப்பு , போர்வாட்களின் திறன் அவைகளின் உலகின் தேடுதல் பற்றி சில கட்டுரைகள் எழுதியிருந்தேன் .இன்னமும் அவர்களைப்பற்றி நிறைய எழுதவேண்டும் .
அவைகளுக்குத்தேவையான நுட்பமான அரியவகை இரும்புவகைகள் செய்வதிலும் ,அரிய வகை நுண்ணிய கண்ணாடி மணிகள் செய்வதிலும் அந்த கண்ணாடி மணிகளில் நுட்பமாக துளையிட்டு மாலைகளாக செய்வதிலும் திறன் பட்டு விளங்கினார்
அதற்க்கு மிக அதிக வெப்பம் தேவைப்படும் கொதிகலங்கள் எரியூட்டும் கலன்களும் தேவை அவைகள் தொல் தமிழர்களிடம் மட்டும் அப்போது இருந்ததால் , .அத்தகைய தொழில் நுட்பங்கள் இல்லாத ரோமர்களை இங்குவந்து தங்கி அவைகளை தொல்தமிழரிடம் இருந்து வாங்கி சென்றிருக்கிறார்கள்
.அவைகளையே கொடுமணல் ,அரிக்கமேடு இவைகள் மூலம் கிடைக்கும் சான்றுகள் தெரிவிக்கின்றன .
அதேப்போல் பொற்பனைக்கோட்டையில் பண்டைத்தமிழனின் தொழிநுட்ப அறிவை பதுக்கி வைத்திருக்கும் அந்த உருக்கு ஆலை அமைந்துள்ளது .
இதுவரை தமிழகத்தில் கண்டுபிடிக்கப் பட்ட உலோகம் உருக்கும் தொழிற்சாலைகளிலேயே இது ஒன்றுதான்  பாறைகளில் அமைக்கப்பட்டிருக்கிறது
அதுவே ஒரு அதிசயம் தான்
சமதளமான கருங்கல் பாறையில், குறிப்பிட்ட இடைவெளியில் ஆங்காங்கே கல்லில் வடிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட வட்ட வடிவ உலோகம் உருக்கும் தொட்டிகள். அந்தத் தொட்டிகளுக்குப் பக்கத்தில், தொட்டிக்குள் காற்றைச் செலுத்தி நெருப்பை வேகப்படுத்தும் துருத்திக்கான துளைகள். நடு நயமாக நீள்வடிவில் உலோகத்தைக் குளிர்விக்க ஒரு தொட்டி.
தொட்டியையும் துருத்தியையும் கருங்கல் தரைப்பரப்புக்கு கீழாக இணைத்திருக்கும் துளைகளை எந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துளைத்திருப்பார்கள் குழாய்கள் எப்படி அடியில் கொடிபோல் பிரிந்து செல்கிறது என்பதே வியப்பளிக்கிறது
ஆலை அமைந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் 100அடித் தொலைவிலேயே கற்களை உடைத்தெடுத்து உலோகத்துக்கான மூலப் பொருட்களைப் பிரித்தெடுத்ததற்கான தடயம் கண்முன்னே காணக்கிடைக்கிறது
பொதுவாக இந்தப் பகுதியில் அலுமினியத்தை அடிப்படைத் தாதுப்பொருளாகக் கொண்ட லேட்டரைட்கற்கள் எனப்படும் செம்பூரான் கற்கள் அதிகமாகக் கிடைக்கிறது. மேலும் வெபப உலைப்பூச்சு மற்றும் உருக்கு வேலைக்குப் பயன்படும் குவார்ட்சைட் எனப்படும் சீனிக்கற்களும் மிகுதியாகக் காண ப்படுகிறது
இதில் அதிசயம்  என்னவென்றால் கற்களை உடைக்க நட்ட நடுநயமாக துளையிட்டிருக்கிறார்கள். இவ்வாறு துளைக்க , துளைக்குள் வெடிமருந்தைப் பயன்படுத்தித்தான் பாறைகளைப் பிளந்திருக்க வேண்டும்  எனவே அப்போது  வெடிபொருள்களிலும் அதன் நுட்பமும் தொல்  திமிழ்ர்கள் வசமாக இருந்திருக்கவேண்டும் .
அங்கு கற்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மூலப்பொருட்கள் உருக்கு ஆலையின் தொட்டிக்குள் இடப்பட்டு உருக்கப் பட்டிருக்கிறது. எந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அதற்குரிய அதிக வெப்பம் உண்டாக்கி அவைகளை எப்படி  உருக்கினார்கள் என்பது இன்னும் ஒரு அற்புதமே !
தொட்டியின் பக்கவாட்டுச் சுவர்களைக் கவனித்தால் பல அடுக்கு வண்ணங்கள் படிந்திருக்கிறது. ஆகக் கீழே மண்ணின் வண்ணத்தைப் பிரதிபலிக்கும் செவ்வண்ணம். அடுத்து சற்று அடர்சிவப்பு. இப்படியாக மாறிமாறி ஆக மேல் புறத்தில் அடர்கருப்பு. அதுதான் இரும்பாக இருக்க வேண்டும்.
சில தொட்டியின் மேற்புறத்தில் மிகச்சிறு அகலத்தில் வாய்க்கால் தோண்டப் பட்டு பள்ளம் நோக்கி விடப்பட்டுள்ளது. உலோகத்தில் படிந்திருக்கும் கழிவுகளை வெளியேற்றவாக இருந்திருக்கும்
வட்ட வடிவத் தொட்டிகளிலிருந்து நீள்வடிவத் தொட்டிக்கு உலோக உருக்குக் குழம்புகளை எடுத்துக்கொண்டு சொன்றதற்கான தடயங்கள் அப்பட்டமாகத் தெரிகிறது.
சான்றாக , ஆங்காங்கே சிந்தி கல்லில் படிந்திருக்கும் உலோகத்தின் அடையாளம். மேற்குப் புறத்து நடுத்தொட்டியின் அருகே சிந்தியிருந்த வண்ணம் சற்று வித்தியாசமாக இருந்தது. அனேகமாக அதுதான் அலுமினியம் உருக்கும் தொட்டியாக இருக்க வேண்டும்.
அருகில் இருக்கும் திருவரங்குளம் பகுதியிலிருந்து பொற்பனைக்கோட்டை வரை உள்ள கோயிற்காடுகள் மற்றும் இரும்புக்கழிவுகளுடன் கூடிய மேடான சில பகுதிகளில் இரும்பு உருக்கு ஆலைகளின் மண்ணாலான உலைகள் பகுதியளவு சிதைந்த நிலையிலும் , இரும்புக்கழிவுகளை பிரித்தெடுக்க பயன்படுத்தப்பட்ட கலன்கள் பல இடங்களிலும் , இரும்பு வார்ப்புக்கு பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சுடுமண்ணாலான உருக்கு குழாய்கள் உருக்குடன் உறைந்த நிலையிலும் , தனியாகவும், பகுதியளவு சிதைந்த நிலையிலும் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல அப்போதைய புதுக்கோட்டை சமஸ்தானத்தால் வெளியிடப்பட்ட கே.ஆர் வெங்கட்ராம அய்யர் அவர்களால் தொகுக்கப்பட்டு 1938 ல் வெளியிடப்பட்ட புதுக்கோட்டை ஸ்டேட் மேனுவல் புத்தகத்தில் “13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த வீரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டில் திருவரங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உருக்குத்தொழிற்சாலைகள் இயங்கிவந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதுமட்டுமின்றி 1813 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் புள்ளிவிவரக் குறிப்பேட்டில் இரும்புத் தொழிற்சாலைகள் இயங்கிய இடங்களுக்கு பல வழித்தடங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறது.
இதற்கு முன்னதாகப் சமஸ்தானத்தால் 1811-ல் பெறப்பட்ட பெய்லி அறிக்கையின்படி ஒரு ஆண்டிற்கு ரூபாய் 1300 மதிப்புள்ள இரும்பு உருக்கு தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதே அறிக்கையின் மூலம் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இரும்பு உருக்கும் ஆலைகள் இயங்கிவந்ததற்கான தரவுகளை அறியலாம்.
இவ்வாறு தொடர்ச்சியாக 2500 ஆண்டுகளாக இரும்பு உருக்கு ஆளை இருந்த இடம் இப்போது மறக்கப்பட்டுவிட்டது .தமிழகத்தின் தொல்லியல் சிறப்பே இவ்வாறு  தொடர்ச்சி இருப்பதே ஆகும் ஆனால் அவைகள் அண்மையில் அயலாரின் புறக்கணிப்பால்  போட்டியைத் தவிர்க்கவும் ,தங்களது உருக்குபொருள்களை இங்கு விற்கவும் இவைகளை மக்கள் மறக்குமாறு செய்திருக்கிறார்கள் .
2500 ஆண்டு பழமையானது பொற்பனைக்கோட்டை அங்கே சுமார் 2500 ஆண்டுகள் பழமையான உலோக உருக்கு ஆலையாக செயல்பட்டிருப்பது அதிசயமே
. தொல்லியல் ஆய்வுத் துறையினரால் கண்டறியக்கட்டுள்ள இங்கு கிடைக்கப்பெற்ற கல்வெட்டுக்களின் மூலமும், முன்னோர்களின் எச்சங்கள் மூலமும் இதனை உறுதி செய்ய முடிகிறது. இயற்கைச் சீற்றத்தினாலோ, அல்லது படையெடுப்பினாலோ அழிந்து போன இக்கோட்டை தற்போது மண்ணில் புதையுன்டு கிடக்கிறது.
அதற்கடுத்த படியாக தஞ்சை தமிழ் பலகலைக்கழக பேராசிரியர் முனைவர் சு.ராஜவேலு ஆய்வு மாணவர்கள் த.தங்கதுரை , சா.பாண்டியன்,ஆ.மோசஸ் குழு வினரால் அடையாளங் காணப்பட்ட பொற்பனைக் கோட்டை நடுகல்(புதுக்கோட்டை) ஒன்றும் உள்ளது.
பொற்பனைக்கோட்டை நடுகல்
1.கோவென்கட்டிற் நெதிர –
2.ணாறு பொன்கொங்கர் விண்ண கோன்
3.ஆஎறிஇத்து ஏவ அதவ்வனாரு
4) அங்கபடை தாணைத் தணயன் கணங்
5) குமாரன் கல்
என்று வாசிக்கப்பட்டுள்ள பொற்பனைக்கோட்டையில் கிடைத்த நடுகல் முக்கோண வடிவத்தில் உள்ளது.
இதில் 5 வரிகள் இடம்பெறுகின்றன.
கோ வென்கட்டி என்பவர் காலத்தில் பொன்கொங்கர் விண்ணக்கொன் பசுக்கூட்டத்தை கவர அதவ்வன் என்பவருடைய மெய்க்காவல் படைத் தலைவனும் கோட்டையின் காவலருமாகிய “அங்கப்படை தாணையன் கணங்குமரன்” இறந்துபட்ட மைக்காக இந்த நடுகல் நட்டுவிக்கப்பட்டதை குறிப்பதாக 2013 ல் வெளிவந்துள்ள ஆவணம் இதழில் கண்டுபிடிப்பு செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்னமும் சொல்ல நிறைய உள்ளது அதை அடுத்ததில் காணலாம்
தொடரும் ..
.அண்ணாமலை சுகுமார 25/3/2021REPOST 25/3/2024
படங்கள்  மற்றும் செய்திகள் இணையத்தில் இருந்து பெற்றவை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 03, 2024 1:52 pm

அருமை அண்ணாமலை சுகுமாரன் ! நீங்கள் குறிப்பிட்ட வேலைப்பாடுகளைச் செய்த தமிழர்களின் வாரிசுகள் விசுவகர்மர்கள் என்ற பெயரில் இன்னும் நம் தமிழ் மண்ணில்தான் வாழ்கிறார்கள்! யாரும் அவர்களை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை ! தமிழ் , தமிழ் என்ற சத்தம் மட்டும் பெரிதாகக் கேட்கிறது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக