புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_m10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10 
74 Posts - 44%
heezulia
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_m10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10 
71 Posts - 43%
prajai
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_m10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_m10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10 
6 Posts - 4%
Jenila
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_m10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10 
2 Posts - 1%
jairam
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_m10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_m10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_m10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_m10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_m10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_m10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_m10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_m10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10 
10 Posts - 5%
prajai
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_m10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10 
8 Posts - 4%
Jenila
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_m10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_m10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_m10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10 
2 Posts - 1%
jairam
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_m10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_m10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_m10தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 21, 2009 12:34 pm

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Newi

ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக
வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள்
அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய
அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள்.


நெருங்கி வரும் சிங்கள ராணுவ
வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான்
அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத்
தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே
நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால்
கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Prabhakaran1
களத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள்
அறிவார்கள். ஆனால், தங்களின் இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை
இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள்.
அதனால், மே 17-ந் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு
வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர்
என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற
வேண்டிய தருணம் இது. ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி
விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள்
மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான
தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக்
கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால்
கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள்
அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும்.
எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான்
இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம்
கொடுத்திருக்கிறார்கள்.

தளபதிகளின்
கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச்
செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து
பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித் துள்ளார்.


இதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று
இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள்
திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந்
தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம்.
மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான்
என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Prabhakaran1

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 21, 2009 12:36 pm

5000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில்
கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற
திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள
ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற
படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர்.


தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Prabhakaran3
தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை
எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது
காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த
முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன்
பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி,
பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.

புலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள்
காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை
அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை
உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு
அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை
ஏறச் செய்தனர்.

அதேவேளையில்,
வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப்
படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர்
சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது
திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும்,
மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில்,
கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்
பட்டது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 21, 2009 12:40 pm

தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை.
அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான்
ஆகின்றன. மனதை கல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காக
பாதுகாப்பாக வெளியேறினார் சூசை.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Prabhakaran4
புலிகளின் அடுத்தடுத்து 23 தற்கொலை தாக்குதல் சம்பவங்
களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத்
தாக்குதல்களை முன்னின்று நடத் திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள
ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலி யானார். புலிகளின் கடைசிநேர அதிரடித்
தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத்
தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை
மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை
மறைத்து, முன்னேற் றத்தை முடக்கியது.

இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும்
பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின்
ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள
ராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச்
செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விட லாம்.
மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும்
பயணித்து, இலங்கையி லிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப் பய ணத்தில்
பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங் கள்
தெரிவிக்கின்றன.

சிங்கள கடல்
எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த
கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை
மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட
முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக்
கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும்
படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித
பிரஷர்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச்
சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும்
மேற்கொள்ளவில்லையாம்.

ஞாயிறன்று
புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான்,
திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை
சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில்
பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன்
தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல்
நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும்
சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன.

அந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட
ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க
முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை
நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம்
ஏவியபோது, பிரபா கரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும்
கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின்
ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.

ஞாயிறு இரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம்
நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன்
உள்ளிட்ட அனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு
கொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப்
முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய
வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர் பாளரே பிரஸ் மீட்டில்
தெரிவித்தார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 21, 2009 12:41 pm

வன்னிக்காட்டில்
சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந் தனர்.
சில உடல் கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர் களை
அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது
சிங்கள ராணுவம். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த
கருணா, அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு,
உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப் பட்டிருந்த
சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.

சிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின்
தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப்
பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, "மொக்கச் சிங்களனுங்க கோட்டை விட்டுட்டானுங்க'
எனத் தனது சகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருக்கிறார் Prabhakaran5
இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்
பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில்,
நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள
ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புங்கு களை மீடியாக்களுக்குக் கொடுத்தது.


பிரபாகரனின் தோற்றத்தை விட
மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை.
கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம்.
ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு
காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புங்கு களைக் காட்டியதுடன்,
மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக
உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.

தண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள்
மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது
பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க்
அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க
முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப
ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம்
கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிர
பாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.


தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை
சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை
சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங்
களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி
றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். நக்கீரனுக்கு கிடைத்துள்ள இந்தத் தகவல், ஆயிரம்
மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக்
கொள்கிறோம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 21, 2009 12:42 pm

நன்றி :- நக்கீரன் வாரஇதழ்

avatar
basheer82_k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 27/04/2009

Postbasheer82_k Thu May 21, 2009 5:27 pm

நல்லதே நடக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக