புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_c10கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_m10கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_c10 
306 Posts - 42%
heezulia
கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_c10கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_m10கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_c10கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_m10கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_c10கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_m10கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_c10கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_m10கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_c10கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_m10கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_c10கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_m10கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_c10 
6 Posts - 1%
prajai
கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_c10கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_m10கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_c10 
5 Posts - 1%
manikavi
கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_c10கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_m10கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_c10கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_m10கோபம் உங்கள் உயிருக்கு எமன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம் உங்கள் உயிருக்கு எமன்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 02, 2010 4:52 pm

கோபம் உங்கள் உயிருக்கு எமன்
கோபம் உங்கள் உயிருக்கு எமன் Angry-woman150_1 கோபம் வந்துச்சுன்னா நான் மனுஷனாவே
இருக்கமாட்டேன்!' இன்றைய தலைமுறையில் நிறையப் பேருக்கு இது தினசரி டயலொக்.
யானைக்கு மதம் பிடிக்கும்போது செய்கின்ற அழிவை, மனிதன் கோபப்படும்போது
செய்கிறான். சின்ன கோபம், பெரிய இழப்பை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தை
தற்காலிக பைத்தியம் என்றே சொல்கின்றனர்.
நாம் கோபப்படுவதால் நமது உயிர், நம் முடைய அறிவுக்கு அப்பாற்பட்டு உடலிலி
ருந்து வெளியேறத் தயாராகிவிடுவதை யாரும் உணர்வதில்லை.

பெரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி அவர். வயது 50க்குள். எடை 100
கிலோவுக்கு மேல். சதா சர்வ காலமும் பிரச்சினைகளை பேசித் தீர்ப்பவர். நல்ல
வேளையாக அவருக்கு நீரிழிவு வரவில்லை. ஆனால், கோபம் அடிக்கடி வந்து இரத்த
அழுத்தம் 160/80 என எகிறுகிறது..


அடிக்கடி நெஞ்சு படபடப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்த வர், ஒரு நாள் படபடப்பு
அதிகமாகி மருத்துவ மனைக்கு வந்தார், இ.சி.ஜி. பார்த்த போது லேசான மாற்றம்
இருந் தது.
ஆஞ்சியோ கிராம் பார்த்ததில், இருதய இத்தக் குழாயில் லேசான அடைப்பு தெரிந்
தது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் மருந்து செலுத்தி, அடை ப்பை
நீக்கிவிட்டார் கள். அவரும் நலம் பெற்றுத் திரும்பினார்.
அவருக்கு இருதயத்தில் பிரச் சினை ஏற்பட காரணம், அவரது வாழ்க்கை முறைதான்.
அடிக்கடி வந்து போகும் கோபம், இனம் புரியாத வருத்தத்தின் வெளிப்பாடுதான்..


நாம் எண்ணியது நடக்காவிட்டால், சொல் வதை யாராவது கேட்காவிட்டால், நமக்குக்
கோபம் வருகிறது. கோபம் தற்காலிக உணர்வு தான். ஆனால் அந்த நேரத்தில் செயற்
பாடுகளை நாம் உணர்வதில்லை.
அதனால்தான் கோபத்தை தற்காலிக பைத்தியம் என்கிறோம். கோபம் வரும்போது
அட்ரினலின் ஹோர்மோன் சுரக்கிறது. அதுவே உடலின் இரத்தக் குழாயை
சுருக்கிவிடுகிறது. உடலில் இரத்தம் செல்வது குறைவதால், முகத்தில் அதிக
இரத்தம் தேங்கி, முகம் சிவப் பாகிறது..


அதிக கோபம் வரும்போது, அதிக மான அளவு இரத்தத்தை இருதயம் பம்ப் செய்ய
வேண்டியிருக்கிறது. கோபப்படுவதால் மனம் மட்டுமின்றி உடலும் கெட்டுப்
போகிறது. கோபத்தால் பணம், பதவி, மரியாதை எல்லாமே போய்விடுகிறது.
உச்சகட்டமாய் உயிரும் போய் விடுகின்றன.
எது கிடைக்கவில்லை என்று கோபப்படு கிறோமோ, அதனால் ஏற்படும் இழப்பு,
கிடைக்கிறதைவிட அதிக மதிப்புள்ளதாக யிருக்கிறது. கோபத்தைக் குறைக்க என்ன
செய்ய லாம்?
தண்ணீர் குடிக்கச் செல்வார்கள். அந்த இடத் தைவிட்டு வெளியேறி,
கூல்டிரிங்ஸ், கோப்பி குடிக்கலாம் என்பார்கள். அதெல்லாம் வேண் டாம்,
கோபத்தை உங்களுக்குப் பிடித்த கட வுளுக்கு காணிக்கையாகப் படைத்துவிடுங்
கள்.
பட்டுப்புடைவை, தங்கமாலை, துலாபாரம், எடைக்கு எடை ஏதாவது ஒன்று என எத்தனை
விதமாக நீங்கள் கடவுளுக்கு காணிக்கை செலுத்துவீர்களோ, அதேபோல உங்கள்
கோபத்தை ஒரு கற்பனைத் தட்டில் வைத்து கடவுளின் காலடியில் கொட்டி
விடுங்கள்..


கடவுளிடம் கொடுத்ததை நீங்கள் நிச்சயம் திருப்பி வாங்க மாட்டீர்கள். அவரும்
உங்கள் கோபத்தை வாங்கிக் கொண்டு அன்பை உங்களுக்கு வரமாய் அளிப்பார்கள்.



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 02, 2010 5:27 pm

கோபம் உங்கள் உயிருக்கு எமன் 677196 கோபம் உங்கள் உயிருக்கு எமன் 677196 உண்மை கோபம் விட முடியலயே என்ன செய்வது...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கோபம் உங்கள் உயிருக்கு எமன் Ila
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Tue Mar 02, 2010 5:32 pm

கோபப்படுவதால் மனம் மட்டுமின்றி உடலும் கெட்டுப்
போகிறது. கோபத்தால் பணம், பதவி, மரியாதை எல்லாமே போய்விடுகிறது.
உச்சகட்டமாய் உயிரும் போய் விடுகின்றன.
எது கிடைக்கவில்லை என்று கோபப்படு கிறோமோ, அதனால் ஏற்படும் இழப்பு,
கிடைக்கிறதைவிட அதிக மதிப்புள்ளதாக யிருக்கிறது


உண்மை கோபம் உங்கள் உயிருக்கு எமன் 677196 கோபம் உங்கள் உயிருக்கு எமன் 677196 கோபம் உங்கள் உயிருக்கு எமன் 677196 கோபம் உங்கள் உயிருக்கு எமன் 677196



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 02, 2010 5:34 pm

கோபம் உங்கள் உயிருக்கு எமன் 678642 கோபம் உங்கள் உயிருக்கு எமன் 678642 கோபம் உங்கள் உயிருக்கு எமன் 154550 கோபம் உங்கள் உயிருக்கு எமன் 154550

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 02, 2010 5:35 pm

"மனசே ரிலேக்ஸ் ப்ளீஸ்" - கோபம்

ஒருவரை மற்றவர்களிடத்து அந்நியப்படுத்தும் காரணிகளில் முக்கியமான ஒன்று கோபம் ஆகும். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள் (இது அனைத்து சமயங்களிலும் சரியாக வருவதில்லை), அவர்களிடத்தே அதிக நண்பர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே!

அதிகமாக கோபம் வரும் நபர்களை பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காது அல்லது அவரை சரியாக புரிந்து கொள்ளாதவர்களுக்கு பிடிக்காது. எதுக்குடா வம்பு! கொஞ்சம் இவங்க கிட்ட விலகியே இருப்போம் என்று இருப்பார்கள்.

எனக்கு சிறு வயதில் அதிகமாக கோபம் வரும் அதன் தாக்கம் எனக்கு சரியாக புரியவில்லை ஆனால் நான் சென்னை வந்து நண்பர்களுடன் அறையில் தங்கி இருந்த போது தான் என்னுடைய கோபம் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. காரணம் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி இருந்த போது நண்பர்கள் வட்டம் அதிகம் மற்றும் ஒரே வயதுடையவர்கள் அதனால் பெரியளவில் ஒன்றும் தெரியவில்லை.

சென்னையில் ஒரே அறையில் ஐந்து பேருடன் இருக்க நேரிட்ட போதும், எங்கள் ஊரை விட்டு வெகு தொலைவு வந்து விட்டதாலும் மற்றும் அறையில் இருந்தவர்கள் என்னை விட வயது மூத்தவர்கள் என்பதாலும் (ரொம்ப அல்ல)அவர்களுடன் என்னால் ஒத்து போக முடியவில்லை.

அதிலும் ஆரம்பத்தில் எங்கள் அறையில் இருந்த ஒருவனோடு என்னால் ஒத்தே போக முடியவில்லை, அவன் எது செய்தாலும் எனக்கு கோபம் வரும் அல்லது எனக்கு கோபம் வரும்படி அவன் செய்வதாக தோன்றும், அதனால் அவனை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. மதியம் மெஸ் க்கு சாப்பிட சென்றால் கூட அவன் ஒரு பக்கம் சாலையில் நடந்தால் நான் ஒரு பக்கம் நடப்பேன் :-) அந்த அளவிற்கு ஒத்து வராது.

அவன் எப்போ சிக்குவான் என்று நான் சமயம் பார்த்துக்கொண்டே இருப்பேன், ஏதாவது கிண்டலடிக்க வாய்ப்பு கிடைத்தால் செம ஒட்டு ஓட்டுவேன், அதற்க்கு அவன் இப்ப சந்தோசமா என்று கேட்பான். நாங்கள் இருந்த அறையில் அதிக பேர் இருக்கிறார்கள் என்று ஓனர் கூறியதால் அதே காலனியில் அருகில் காலியாக இருந்த அறையில் தங்கி கொண்டேன், குறிப்பாக இவங்க தொல்லை இல்லாமல் இருக்கலாம் என்று உடனே சென்று விட்டேன். இந்த அறைக்கு வந்த பிறகு அங்கு எட்டி கூட பார்ப்பதில்லை, அவங்க சவகாசமே வேண்டாம் என்று இருந்து விட்டேன். இருந்தாலும் எப்பவாது வழியில் சந்திக்க நேர்ந்தால் புன்னகையுடன் சென்று விடுவோம்.

நாட்கள் இப்படி கடந்தது கிட்டத்தட்ட 8 மாதம், பிறகு எனக்கே நான் அதிகம் கோபப்படுவதாக தோன்றியது சரி கோபத்தை நிறுத்த வேண்டும் எதற்கும் அவசியமில்லாமல் கோபபடக்கூடாது என்று முடிவு செய்தேன், இப்படி ஏதாவது முடிவு செய்தால் அதை ஒரு தினத்தில் செய்வது தானே நம் வழக்கம் ;-) அதன் படி ஒரு புத்தாண்டு முதல் இனி கோபப்படக்கூடாது என்று முடிவு செய்தேன்.

சொன்னா நம்ப மாட்டீங்க..அப்ப சொல்லாதீங்கன்னு சொல்லிடாதீங்க! :-))) அதன் பிறகு என் வாழ்க்கையே மாறி விட்டது, இத்தனை நாள் வரை எதிரியாக நான் கருதி கொண்டு இருந்தவன் என் நண்பன் ஆகி விட்டான்..சாதா நண்பன் இல்லைங்க உயிர் நண்பன். இன்று வரை என்னிலும் என் குடும்பத்திலும் ஒருவனாகி விட்டான். இப்ப தவறு யார் பக்கம்? இத்தனை நாள் பிரச்சனைக்கு யார் காரணம்? சந்தேகமில்லாமல் நான் தான் என்று தெளிவாகி விட்டது, நான் எப்போதுமே தோல்வியை ஒப்புக்கொள்வேன், இதையும் சந்தோசமாகவே ஏற்றுக்கொண்டேன், காரணம் நாம் கோபம் ஒன்றை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்று இருக்கிறோம் என்பதால்.

கோபம் கண்டிப்பாக வேண்டும் என்னையா இது! இப்ப தான் கோபப்படக்கூடாது என்று எவ்வளவு நேரம் சொல்லிட்டு இப்ப கோபப்படுன்னு சொல்றாரேன்னு நினைக்கறீங்களா! நான் சொல்வது அவசியமானதிற்கு. கோபம் இல்லை என்றால் நமக்கு சுரணையே இல்லமால் போய் விட்டதாகவே அர்த்தம், ஆனால் நாம் கோபப்படுவதில் அர்த்தம் இருக்க வேண்டும். ஒன்றுமில்லாத விசயத்திற்க்கெல்லாம் தய்யா தக்கான்னு குதிச்சுட்டு இருந்தா நமக்கு தாங்க இழப்பு. கோபப்படுவதால் நாம் எதையும் சாதிக்க போவதில்லை யோசித்து பார்த்தால் இழப்பே நமக்கு அதிகம்.

பதிவுலகம் வந்த பிறகு பல சமயங்களில் கோபப்பட்டதுண்டு, கோபமாக பல இடுகைகள் எழுதியதுண்டு, ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் ஒரு அனுபவமாகவே நான் எடுத்துக்கொள்வதால் தற்போது அதிலும் ஒரு தெளிவான நிலையை ஓரளவு அடைந்து விட்டேன், பொதுவாக கஷ்டப்படுவது அல்லது சிரமமான நிலை வரும் சமயங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும், அவை நம் தவறுகளை நமக்கு உணர்த்துகின்ற ஒரு வாய்ப்பாகவே கருதுகிறேன், எனவே அதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு அதை போல பின்னாட்களில் ஏற்படுவதை தவிர்த்து விடுகிறேன்.

எனக்கு சென்னை வந்த புதிதில் உதவியாக இருந்தது நான் உருப்படியாக என்னை மேம்படுத்தி கொள்ள படித்தது சுவாமி சுபபோவனந்தாவின் "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" புத்தகம் தான். இதை படித்த பிறகே என் வாழ்வில் பல மாற்றங்கள். இதை பலர் கேள்வி பட்டு இருப்பீர்கள், விகடனில் இவர் தொடர் வந்தது, அதை புத்தகமாக வெளியிட்ட போது அதற்க்கு பலத்த வரவேற்ப்பு. சும்மா பெயரை பார்த்ததும் எதோ வழக்கமான சாமியார் புத்தகம் என்றே நினைத்தேன் ஆனால் இவர் ப்ராக்டிகல் நபராக அனைத்தையும் புட்டு புட்டு வைத்து இருந்தார், அவர் புத்தகத்தில் கூறிய பல நிகழ்ச்சிகள் என் வாழ்விலும் நடந்து இருந்தது, அதை ஒப்பிட்டு பார்த்து என்னால் பல விசயங்களை மாற்றி கொள்ள முடிந்தது. அனைவரும் கேட்பார்கள் உங்கள் வாழ்வில் ஏதாவது புத்தகம் மாற்றத்தை ஏற்படுத்தியதா என்று? என்னை கேட்டால் (ஒரு வேளை கேட்டால் ;-) ) தயக்கமின்றி இதை கூறுவேன். வாய்ப்பு கிடைத்தால் படித்து பாருங்கள்.

இந்த கலியுகத்தில் கோபம் அவசியமான ஒன்றே என்பது என் கருத்து, ஆனால் நம் கோபம் சரியான புரிந்து கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். அவசியமற்ற கோபங்கள் நம்மை கண்டிப்பாக சிக்கலிலே கொண்டு சென்று விடும், நம் வாழ்க்கையையும் நிம்மதி அற்றதாக்கி விடும்.



கோபம் உங்கள் உயிருக்கு எமன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 02, 2010 5:39 pm

கோபம் உங்கள் உயிருக்கு எமன் 677196 கோபம் உங்கள் உயிருக்கு எமன் 677196 சூப்பர் தல அருமையாக உள்ளது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக