புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
42 Posts - 63%
heezulia
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னதானம்


   
   
avatar
Latharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 27/04/2010

PostLatharani Thu May 06, 2010 2:51 am

அன்னதானம் (இது ஒரு பெரிய கவிதை...பொறுமையாக படிக்கவும்)



ஏழ்மை குடிகொண்டதால்

எண்ணேய் பிசுக்கேறி

எழிலழிந்த கூந்தல்

தேனூறித் ததும்பாத செவ்வாய்

வெடித்த நிலமாய் வரண்ட நிலையில்



பசியால் பள்ளத்தாக்குகளான கன்னங்கள்

முற்றிலும் மறைந்து விடாமல்

முதுகெலும்பில் ஒட்டியிருந்த வயிறு



கிழிந்த கால்சட்டையும்

கையில் தட்டுமாய் நின்ற

அவ்வெட்டு வயதுச் சிறுவனின்

இடுங்கிய கண்களில்

ஏக்கமாய் ஒரு நம்பிக்கை



நிச்சயமின்று உணவு கிட்டிடுமென்ற

நிச்சயமான நம்பிக்கையில் -நடுங்கிய கைகளால்

தேடித் தடவி ஆறுதல் அளித்தான்

தன் ஒவ்வொரு அங்கத்திற்கும்



இதோ கூடை கூடையாய் அன்னமும்

அதைக் கொடுக்கும் ஆட்களும் வந்தாயிற்று

சற்றே பொறுத்துக்கொள்"



மூன்று மணிநேரம் முட்டிய அலையில்

இன்னும் கசங்கி இயலாத நிலையிலும்

வயிற்றின் வேதனை முடிக்க வேண்டி

முந்தி அடித்து முன்னேறிப் போகையில்



கூட்ட நெரிசலில் கைத்தட்டு தொலைத்தான்

பதட்டப்படாமல் பக்குவப் பட்டவனாய்

இருகை உள்ளதே- இதிலுணவு கிட்டினால்

போதுமென் றெண்ணி முன்னே சென்று

கையேந்திய போது-



சட்டென்று விட்டதே

ஒட்டியிருந்த கால்சட்டையின் பொத்தான்



உடன் பிடித்தது ஒருகை

உணவு பெற்றதோ ஒற்றைக்கை



இருந்தும் மலர்ந்தான்

இந்த ஒரு பிடி-

அவன் மூன்று மணிநேரம்

முயன்று பெற்ற வெற்றி

கடும் உழைப்பின் ஊதியம்



நடந்த அத்தனையும்

ஆரம்பம் முதலே அளந்து கொண்டிருந்தது

அன்றைய வள்ளலான பணக்கார பக்தனின்

காருக்குள் அமர்ந்த கர்வக் கண்கள்



"எத்தனை ஏழைகளுக்கின்று

என்னால் உணவு?"

கர்வம் கலந்த திருப்தியில்

கொஞ்ச நேரக்கடவுளாய்

தன்னை வரித்துக் கொள்கிறான்



இங்கே-

பிடியுணவு கிடைத்த நிம்மதியில்

நிற்க இயலாத நிலையுணர்ந்த சிறுவன்

உட்கார்ந்து பசியாற

உகுந்த இடம் தேடினான்



மரநிழல் ஒதுங்க அடிவைத்தவனை

தொட்டுத் திருப்பியது

பசியால் அடைத்த செவிக்குள்புகுந்த

பச்சை குழந்தையின் அழுகயொலி



திரும்பிப் பார்த்தால்...

தவழும் வயதில் தனியான ஓர் பிஞ்சு



இப்பெரும் கூட்டத்தில்

இவன் தாய் யாரோ?

எப்போது இவனிடம்

அவள் வருவாளோ?

அதுவரை பொறுக்குமோ

பசியினைக் குழந்தை?



"என்பசி வெல்ல என்னால் முடியும்'

எண்ணத்தில் ஏதோ தோன்றியவனாய்

மடிமேலிருத்தி அக்குழந்தைக்குத் தன்

ஒருபிடி சோற்றையும் ஊட்டிவிட்டான்



மலர்ந்த சிறுவன் முகத்தில்

முதிர்ந்த திருப்தி



கண்ணீரோடு ஓடிவந்தான்

காரிலிருந்த வள்ளல்



ஐயா ஆண்டவரே!

அன்னதானம் எதுவென்று

என் கன்னம் அறைந்து தெளிவித்தீர்

கர்வம் ஒழித்துக் கரை சேர்த்தீர்!!



தாரை தாரையாய் கண்ணீரும்

தலைமேல் கூப்பிய கைகளுமாய்

சிறுவன் முன்னே கதறுகிறான்



புரியாத சிறுவன்

புதிராய் பார்க்கிறான்

அவன் வெடித்த உதட்டில்-

நிறைந்த புன்னகை

-லதாராணி

(என் தவத்தில் என்ன குறை?" என்ற என் கவிதை நூலிலிருந்து)

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu May 06, 2010 3:02 am

அருமையாகவும் உள்ளது கண்ணீரும் வந்து விட்டது வாழ்த்துக்கள் கண்ணீருடன் அப்புகுட்டி. அழுகை அழுகை



அன்னதானம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
Latharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 27/04/2010

PostLatharani Thu May 06, 2010 3:06 am

Thank you Appukutty

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 06, 2010 9:49 am

அவலம் அழகு வரியில் அன்னத்துக்கு இத்தனை நெரிசம் தொடருங்கள் அன்னதானம் 678642



நேசமுடன் ஹாசிம்
அன்னதானம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக