புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
68 Posts - 53%
heezulia
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
1 Post - 1%
Guna.D
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
1 Post - 1%
Shivanya
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
15 Posts - 3%
prajai
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
9 Posts - 2%
jairam
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
4 Posts - 1%
Jenila
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
4 Posts - 1%
Rutu
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மை என்ன விலை?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 14, 2010 4:18 pm

தங்களுக்கென்று ஒரு குடும்பம் அமைந்ததும், பெற்ற தாயைத் தங்களுடன் வைத்துக் கொள்ள மகன்கள் தயங்குவதும், மறுப்பதும்கூட சாரதாவால் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. வீட்டுக்கு வீடு நடப்பதுதானே? ஆனால், அதற்காக இன்று அவர்கள் சொன்ன காரணத்தைத்தான் அவளால் ஜீரணிக்க முடியவில்லை. என்ன அநியாயம்? பல நாட்களாகவே மகேஷும், ரமேஷும் அவர்கள் மனைவியரும் நகர்ப்புறத்திலுள்ள சாந்தி நிலையம் என்ற முதியோர் இல்லத்தைப் பற்றி அடிக்கடி புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.

ரொம்ப நன்றாக கவனிக்கிறார்களாம். சாப்பாடு ரொம்ப நல்லா இருக்காம். பேச்சுத் துணைக்கு சமவயதில் நிறையபேர் இருப்பாங்க. போரடிக்காது.

கட்டணம்கூட ரொம்பக் குறைவாம் அதுதானே முக்கியம்.

இலவசப்பகுதியே ரொம்ப நல்லா இருக்காம்! என்றாள் சின்னவள் அவசரமாக.

இத்தனைக்கும் வீட்டில் தன்னாலான உதவிகளைச் செய்ய சாரதா என்றுமே தயங்கியதில்லை என்றாலும் அவள் தண்டச்சோறு தான். ஜாடைப் பேச்சுக்களை அவள் கண்டுகொள்ளாமல் இருந்ததால்தான் இன்று இப்படி அபாண்டமாகப் பழி சுமத்தி விட்டார்களோ?

என்னதான் கஷ்டம் வந்தாலும் ஒரு குடும்பப் பெண் இப்படியா செய்வது? சீ.... என்று காலையில் தொடங்கி வைத்தாள் பெரிய மருமகள்.

வாடகைக்கு எதைத்தான் கொடுப்பது என்று இல்லையா?

விதவைக்குக் குழந்தை பிறந்தது என்று கேட்கவே கூசுகிறது. உண்மையில் என்னவெல்லாம் நடந்ததோ.. யார் கண்டது?

அந்த வெள்ளைக்காரன் கிட்டத்தட்ட ஒரு வருடம் இங்கேதான் இருந்தானாம்.

இப்படிப்பட்டவர்களை வீட்டில் வைத்துக் கொண்டால் குழந்தைகள் கதி? இன்னும் பிறக்காத குழந்தைகளுக்காக இருவருமே கவலைப்பட்டனர்.

சாரதாவுக்கு மருமகள்கள் நாக்கூசாமல் பேசியதைவிட மகன்கள் பேப்பரையும் தொலைக்காட்சியையும் பார்க்கும் பாவனையில் உட்கார்ந்திருந்ததைக் காணத்தான் அருவருப்பாக இருந்தது. இவர்களா என் மகன்கள்? இவனுக்காகவா...?

எல்லோரும் அலுவலகம் சென்றுவிட தனிமையில் விடப்பட்ட சாரதாவின் மனம் இருபத்தேழு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது.

அன்பான கணவன், மாமியார், நான்கும் இரண்டும் வயதில் இரு மகன்கள், என அருமையான குடும்பம் அவளுடையது. ஆனால் அதைப் பார்க்க விதிக்குப் பொறுக்கவில்லை.

ஓருநாள் மூத்தவன் மகேஷுடன் சைக்கிளில் கடைக்குப் போன கணவன், திரும்பி வரவேயில்லை. சாலையில் ஒரு லாரி மோத, சம்பவ இத்திலேயே போய்விட்டான். பின்னால் உட்கார்ந்திருந்த குழந்தை தூக்கி எறியப்பட்டு, ஒரு வைக்கோற்போரின் மேல் விழுந்து உயிர் பிழைத்தது.

சாரதாவுக்கு அழக்கூட அவகாசம் கிடைக்கவில்லை. ஒரு தனியார் கம்பெனியில் கிடைத்த சிறு வேலையையே மிகப் பெரிய வரமாக எண்ணிப் போகத் தொடங்கினாள்.

விதிக்கு அதுவும் பொறுக்கவில்லை. மூன்று மாதங்களிருக்கும், மகேஷ் ஒரு நாள் திடீரென மயங்கி கீழே விழுந்தான். மருத்துவமனையில் தங்கி, பல பரிசோதனைகளுக்குப் பின் டாக்டர் கூறியதைக் கேட்டு சாரதாவுக்கும் மயக்கம் வந்துவிட்டது.

விபத்தின்போது மகேஷுக்கு மூலையில் இலேசாக இரத்தக் கசிவு ஏற்பட்டு கட்டியாகியிருக்கிறது. அது மூளையை அழுத்துவதால்தான் இந்த மயக்கம். இது இன்னும் பெரிதானால் உயிருக்கே ஆபத்து. அதனால் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும். ஆபரேஷனுக்கும் அதற்கு முன்னும் பின்னுமாக வைத்தியச் செலவுக்கும் குறைந்தது ஒரு லட்சம் தேவை. அதுவும் உடனடியாக.

வெறும் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் மாதச் சம்பளக்காரி இவ்வளவு பணத்துக்கு எங்கே போவது? நகைகளை விற்றும் கடன் வாங்கியும் முப்பதாயிரம் ரூபாய் கூடத் தேறவில்லை. குழந்தையைக் காப்பாற்றும் வெறியில், சில பல குறுக்கு வழிகளைக் கூட எண்ணிப் பார்த்துச் சோர்ந்தது அந்தத் தாய்மை.

அப்போது அவள் வாழ்வில் நுழைந்தவர்கள்தாம் லூயியும் காஸ்ப்ரோவும். ஜெர்மனியைச் சேர்ந்த பணக்காரத் தம்பதி. இவளுக்கு உதவுவதற்காகவே தெய்வம் அவர்களுக்கு வேறு சோதனை கொடுத்ததோ?

திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளாகியும் அவர்களுக்குக் குழந்தையில்லை. பரிசோதித்துப் பார்த்ததில் லூயிக்கு கர்ப்பப்பையில் ஏதோ கோளாறு. கருமுட்டை உருவாவதில் அவளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாததால், அவளது முட்டையையும் காஸ்ப்ரோவின் உயிரணுவையும் இணைத்து ஒரு சோதனைக் குழாயில் கருவை உருவாக்கிவிடலாம் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படி உருவாகும் கருவை ஒரு நார்மல் கர்ப்ப்பபையில் வைத்து வளர்க்க வேண்டும். இப்போது அவர்களுக்குத் தேவை வாடகைக்குஒரு கர்ப்பப்பை. வாகைத்தாய். பல்வேறு நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்கள் இதற்காக சென்னை வந்திருக்கிறார்கள். உடல் மற்றும் மன ஆரோக்கியமுள்ள, நேர்மையான இளம்பெண்தான் இன்னும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மகேஷின் வைத்தியத்தின் போது பழக்கமான நர்ஸ், அவர்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள். ஒருவருக்கொருவர் உதவலாம் என்பதை எடுத்துரைத்தாள்.

முதலில் சாரதாவுக்கு மிரட்சியாக இருந்தது. லூயி நேரில் அவளிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். மருத்துவர்கள் சிகிச்சை முறையை விரிவாக விலக்கினர். காஸ்ப்ரோவை நேரில் சந்திக்கவே தேவையில்லை என்றனர். விவரமறிந்து மாமியாரும் தைரியம் கொடுத்தார். கடைசியில் சாரதா சம்மதித்தாள்.

அதன்பின் எல்லாமே மின்னல் வேகத்தில் சட்டப்படி நடந்து முடிந்தன. ஒருபுறம் மகேஷின் வைத்தியம் வெற்றிகரமாக நடக்க மறுபுரம் சாரதாவின் கர்ப்பப்பையில் வைக்கப்பட்ட கரு சீராக வளரத் தொடங்கியது. சரியாக பத்தாவது மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தையைப் பிரியும்போது ஓர் இனம்புரியாத வலி தோன்றவே செய்தது. ஆனால் ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததால் சாரதா சமாளித்துவிட்டாள்.

அதன்பின் மீண்டும் வேலைக்குப் போய் குழந்தைகளை வளர்த்து, படிக்க வைத்து.... எப்போதாவது யாராவது ஐரோப்பியரைப் பார்க்க நேர்ந்தால் தான் பெற்ற அந்தப் பிஞ்சுமுகம் அவளுக்கு ஞாபகம் வரும். நன்றாக இருக்கட்டும் என்று எண்ணிக் கொள்வாள்.

இப்போது மகன்களுக்கு நல்ல வேலை கிடைத்தது. திருமணமும் நடந்தாயிற்று. இனியென்ன கவலை என்ற இறுமாப்புடன் கொஞ்சம் உடல் பலவீனமும் சேர்ந்து கொள்ள சாரதா தன் வேலையை விட்டுவிட்டாள். அன்று தொடங்கியதுதான் வீட்டில் பிரச்னை. மாதச் சம்பளம் கொண்டு வரவில்லை என்றதும் அவள் சுமையாகிவிட்டாள். ஆனால் அதற்காக இப்படியா சேற்றை வாரியிறைப்பது? தாங்கமுடியவில்லை. இரண்டு தலைமுறை முந்தைய தன் மாமியாருக்கு அன்று புரிந்த வாடகைத் தாய் விவரம், இவர்களுக்குப் புரியவில்லையா? உயர்ந்த ஒரு விஷயத்தை அசிங்கப்படுத்திவிட்டாங்களே.

அழைப்பு மணி பலமாக இருமுறை அடித்துது. பெருமூச்சுடன் மெள்ளச் சென்று கதவைத் திறந்தாள். அவள் பெயருக்குத்தான் வெளிநாட்டிலிருந்து ஒரு பதிவுத்தபால்.

பிரித்துப் படித்தவளுக்கு பிரமிப்பாக இருந்தது. ஜெர்மனியிலிருந்து அந்த லூயி, காஸ்ப்ரோவின் மகன், மார்க் öன்று பெயராம், அனுப்பியிருந்தான்.

மார்க்கின் வக்கீல் மூலமாக வந்திருந்த நீண்ட கடிதத்தின் சுருக்கம் இதுதான். குழந்தையுடன் இங்கிரந்து சென்ற சில வாரங்களிலேயே தனிப்பட்ட சில காரணங்களுக்காக லூயியும் காஸ்ப்ரோவும் விவாகரத்து செய்து கொண்டார்களாம். நிறைய செல்வத்துடன் தன் உறவுக்காரப் பாட்டியிடம் வளர்ந்த மார்க்குக்கு இந்தியர்களிடம் ரொம்பவும் மரியாதை. சுயநலத்துக்காக சின்னஞ்சிறு குழந்தையை அநாதையாக விட்டுச் சென்ற தன் பெற்றோர் எங்கே? தன் குழந்தையைக் காப்பாற்றப் பத்து மாதம் ஒரு சிசுவை வயிற்றில் சுமந்த சாரதா எங்கே?

இந்தியர்களின் குடும்ப அமைப்பை, பாசப்பிணைப்பை, குறிப்பாகப் பெண்களின் தியாகம் கலந்த தாய்மையை அவன் மிகவும் மதிக்கிறான். அதற்கு அடையாளமாக இத்துடன் ஒரு காசோலையை இணைத்துள்ளான். இது அவன் சுயசம்பாத்தியம். தன் இந்திய, வாடகைத்தாயுடன் உறவு ஏற்படுத்திக் கொள்ள அவன் விரும்புகிறான். சாரதாவுக்கு சம்மதமென்றால் இத்துடன் இணைத்துள்ள படிவத்தில் கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும்.

காசோலையை எடுத்துப் பார்த்தாள். இந்தியப் பணம் சுமார் பத்து லட்சத்துக்கான ஜெர்மன் காசோலை. இந்தப் பணத்தால், இந்த வீட்டில் அவள் செல்வாக்குப் போலியாகவாவது நிச்சயம் உயரும். ஏச்சு பேச்சுக் கேட்காமல் சௌகரியமாகவே வாழலாம். ஆனால்... என்றோ ஒரு நெருக்கடியில் பரஸ்பரம் உதவிக்கொண்டதற்கு இன்று இவள் மட்டும் பலன் பெறுவது நியாயமா? தன்னிடம் இந்தியர்களிடம் இந்தப் பையனுக்கு இருக்கும் அபிமானத்தைப் பணமாக்குவதா?

பிள்ளைகள் இந்த மார்க்கை மேலும் மேலும் சுரண்டமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? அதற்கு இவளே வழி வகுக்கலாமா? அது மார்க்குக்கு செய்யும் துரோகம் அல்லவா? உண்மை நிலையை மார்க் அறிந்தால் எவ்வளவு அசிங்கம்?

சாரதா நிதானமாக காசோலையைக் கிழித்துப் போட்டாள். மார்க் நன்றாக இருக்கட்டும் என்று வழக்கம்போல் மனமார வாழ்த்திக் கொண்டே சிவப்புப் படிவத்தில் அழுத்தமாகக் கையெழுத்திட்டாள். இனி அந்த சாந்தி நிலையத்தின் வழியைத் தேடிப் பிடிக்க வேண்டும்.



- லலிதா விஸ்வநாதன்



தாய்மை என்ன விலை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 14, 2010 5:38 pm

பாதிக்கப்பட்ட சாரதாவை நினைக்கும் போது மனம் கலங்குகிறது
அமைதியாகப் படித்தேன் அருமையான கதை நன்றி.




தாய்மை என்ன விலை? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக