புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
120 Posts - 54%
heezulia
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
81 Posts - 36%
T.N.Balasubramanian
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
1 Post - 0%
Shivanya
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
1 Post - 0%
eraeravi
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
22 Posts - 4%
T.N.Balasubramanian
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
16 Posts - 3%
prajai
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
4 Posts - 1%
jairam
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
4 Posts - 1%
Jenila
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திண்ணை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 29, 2009 4:10 am

திண்ணை Dsc01710


கிராமத்து வீடுகளில் திண்ணையில்லா


வீடு தேடினாலும் கிடைக்காது


பெரிய திண்ணை, சின்ன


திண்ணை ஒட்டுத் திண்ணை.


பெரிய மருது, சின்ன மருதுவாய்


மகுடம் தரிக்காத மகாராஜாக்கள்


ஆண்டு சரித்திரம் படைத்தவை ;


ஒன்றா இரண்டா? எடுத்துச் சொல்ல மாளாது;


வெற்றிலைப் பெட்டியும், வெங்கலக்கூஜாவுமாக


திண்ணையில் உட்கார்ந்து


வயல்வரப்பு, மடவாய்ச்சண்டை,


அண்ணன் தம்பி குடும்பச் சண்டை


பாகப்பிரிவினை, பண்ணை ஆட்களுக்கு


பஞ்சாயத்து, கோர்ட்டுக்குப் போகாம


காசு வாங்காத நியாயமான கட்டைப்


பஞ்சாயத்து நடக்கும்;


பிள்ளைகள் நிறைந்து ஒரு திண்ணை,


பள்ளிக்கூடமாய் ஆகிவிடும்;


சீனா மாமாவீட்டுத் திண்ணையிலே


தினம் தினம் நடக்கும் சீட்டுக்கச்சேரி


சாயங்காலம் வரைக்கும் ஓயாது.



குருக்கள் வீட்டுத “திண்ணையிலே விபூதி மந்திரிக்க,


தாயத்து, குறிகேட்க வரும் கூட்டம்,



தெருக்குழந்தைகளுடன்,


கட்டம், சோழி பல்லாங்குழி, கல்லாங்காய்,


புளியங்கொட்டை ஆட்டம்


ஆடும் சங்கரி அத்தை திண்ணை,


நாட்டுச்சேதி, வீட்டுச்சேதி


அரசியல் சேதி, அக்குவேறு ஆனி


வேறாக அலச


தெருவே கூடும், நியூஸ்பேப்பர்


மாமா வீட்டுத் திண்ணை.



வீட்டுப் பசங்க ராத்திரி,


திண்ணையிலே படுக்கிறேன்.


காத்துவரலே"' உள்ளே எனச்


சொல்லி, தலையணைமேலே போர்வையால்


மூடித்தூங்குவது போல வைத்துவிட்டு


இரண்டாம் பிளே சினிமாவுக்குப்


போக உதவிய திண்ணை.


காற்றாட உட்கார்ந்து களிப்பும்


சிரிப்புமா இயற்கைக்காற்றை


அணு அணுவா ரசித்து,


மகிழ்ந்திருந்த திண்ணை.



அத்தனையும் விட்டுவிட்டு


நாம் பட்டணத்துப்


பகட்டுக்கு ஆசைப்பட்டு ஓடிவந்து,


அலங்காரமாய் நிற்கும்


அடுக்குமாடிக் கட்டடங்களில்


மூடிப்போட்ட ஜாடியாய்


அடைபட்டு மூச்சு முட்ட சாத்திய


கதவுக்குள், காற்றைகாசு


கொடுத்து ஃபேன், ஏஸி என வாங்கி


கரண்ட் போய், வியர்வை வெள்ளத்தில்


மூழ்கி, சோபாவில்


உட்கார்ந்தால், ஐயகோ! கூர்முள்ளாய்க்


குத்துது, குஷன் வைத்தசோபா!



கிராமத்துத் திண்ணை நினைவுகளில்


அலைபாயும் நெஞ்சில் ஏக்கம்வடியுது;


இனித் திண்ணையோடு வீடு கிடைக்குமா?


கிடைக்குமா?


- பிச்சை சுவாமிநாதன், தேதியூர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 29, 2009 4:16 am

திண்ணை

திண்ணை என்பது என்ன என்று கேட்டால் இன்றைய சமூகத்தில் பல பேருக்கு தெரிவதில்லை. திண்ணை என்பது என்ன அதன் பயன் என்ன, அதனுடைய சமுக பயன்பாடுகள் பற்றி பார்ப்போம்.

அமைப்பு:

திண்ணை என்பது ஒரு திண்டு போன்ற அமைப்பு. இது வீட்டின் முன் பகுதியில் பிரதான வாயில் அல்லது தலைவாசல் பகுதியில் உள்ள ஒரு திறந்த வெளி அமைப்பாகும். இது காலை தொங்கவிட்டு அமர்வதற்கு வசதியாக இருக்கும்.இன்னொருபுறம் சுவரில் சாய்ந்து இருப்பதற்கு வசதியாக இருக்கும். திண்ணையில் இருக்கும் தூண்கள் வீட்டின் கூரையை தாங்கி பிடிப்பதற்க்கு உதவியாக இருக்கும்.


பயன்:

பழங்காலத்தில் போக்குவரத்து இல்லாத காலகட்டத்தில் மக்கள் கால்நடையாக ஒரு இடத்தில் இருந்து வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம்.அந்த நேரங்களில் மக்கள் தங்களை கொஞ்சம் இளைப்பாற்றி கொள்ள வீதி ஓரங்களில் இருக்கும் எதாவது ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து செல்வார்கள். அல்லது வீடிற்கு நெருக்கம் இல்லாத நபர்களை உபசரிபதர்க்கும் பயன்படுத்துவார்கள்.
காலையில் வேலைக்கு செல்லும் மக்கள் மாலையில் தங்களை இளைப்பாற்றி கொள்ளவும் தங்கள் உறவினர்களோடு பேசி மகிழவும் திண்ணையை பயன் படுத்துவார்கள்.

சமுகபயன்பாடுகள்:

பழங்காலத்தில் திண்ணையில் பள்ளி கூடங்களை நடத்தினார்கள்.ஊரில் உள்ள சிறார்கள் எதாவது ஒரு வீட்டின் திண்ணையில் கூடி குரு அதாவது ஆசிரியர்கள் சொல்லிகொடுக்கும் பாடங்களை படிப்பார்கள். இதை திண்ணை பள்ளிக்கூடம் என்பார்கள்.
ஊரில் எதாவது முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டும் என்றாலும் அல்லது குடும்பங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளை ஊரில் உள்ள ஒரு பெரியவரின் வீட்டு திண்ணையில் ஒன்று கூடி முடிவு எடுப்பார்கள்.

இன்றைய மக்களின் மனநிலையும் திண்ணை காலத்து மக்களின் மனநிலையும்:

இன்றைய காலத்து மக்கள் படிக்கிறார்கள் அறிவு வளர்கிறது நல்லதுதான் ஆனால் அவ்ர்கள் மனநிலை சுருங்குகிறது. அவர்கள் மனநிலை நான்,என் மனைவி குழந்தைகள் என ஒரு குறுகிய வட்டத்துக்குள் வந்து விடுகிறது.அவர்கள் தங்கள் கட்டும் வீடுகளுக்கு சுற்று சுவர் போடுகிறார்கள் கேட்டால் பாதுகாப்பாக இருக்கும் என்பார்கள் நல்லதுதான்.சுற்று சுவர் போட்டாலே என் அனுமதி இன்றி உள்ள வராதே என்று சொல்லாமல் சொல்வதுதான் பொருள்.இப்பொழுது எந்த வீட்டிலும் திண்ணை வைத்து கட்டுவதில்லை கேட்டால் பழங்காலத்தில் போக்குவரத்து இல்லை இப்பொழுதுதான் எல்லாம் இருக்கிறதே வழிபோக்கர்கள் இல்லையே என்று சொல்வார்கள். அல்லது திண்ணை இருந்தால் யாராவது வந்து வெட்டியாக பேசிக்கொண்டு இருப்பார்கள் என்பார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து நேரத்தை வீணடித்து கொண்டு இருப்பார்கள். தங்கள் உறவினர்களிடம் பேசுவதை விட தொலைபேசியில் வேறு யாரிடமாவது கதையடித்து கொண்டிருப்பார்கள். வெளியே சென்று பேசினால் யாரும் உதவி கேட்டுவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள்.

ஆனால் திண்ணை வீட்டு காலத்து தங்கள் கட்டியிருக்கும் வீடு சிறிது என்றாலும் அதில் ஒரு பகுதியை மற்றவர்கள் பயன்படுத்தி கொள்ள திண்ணை வைத்து வீடு கட்டும் பெரிய மனதுகாரர்களாக இருந்தார்கள்.திண்ணையில் கூடி வெட்டியாக பேசி பிரச்சனைகளை இழுப்பார்கள் என்று ஒரு வாதம் இருந்தாலும், பொதுவாக திண்ணை என்பது உறவினர்கள் நண்பர்கள் ஒன்று கூடி பேசி மகிழ்ந்து தங்கள் துன்பங்களயும்,பிரச்சனைகளயும் தங்கள் மகிழ்ச்சிகளையும் அனுபவங்களயும் பகிர்ந்து கொள்ளும் உறவின் பாலமாகவே இருந்துள்ளது. இன்று கண்டு பிடிக்கப்படும் புதிய சிந்த்னனைகளும், புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளும் திண்ணை காலத்து ஞானிகளின் வாதங்களையும் அவர்களின் சிந்தனயும் மேற்கோள் காட்டியே கண்டு பிடிக்கபடுகிறது.திண்ணை காலத்து மக்களிடம் மூடநம்பிக்கை உண்டு என்னும் வாதம் இருந்தாலும் அவர்களின் உண்மையான அன்பான உபசரிப்பாலும் எதையும் எதிர்பார்க்காமல் செய்யும் உதவியினாலும் மூடநம்பிக்கை மறைந்துவிடுகிறது.

பொதுவாக திண்ணை என்பது உறவின் பாலமாகவும், அறிவின் பல்கலைகழகமகவும் இருந்துள்ளது.

குழந்தை மனது போல் இருக்க வேண்டும் என்றால் குழந்தை போல் நாம் ஆக வேண்டும் என்பது பொருள் அல்ல. அது போல நாம் திண்ணை வீடு கட்டவேண்டும் என்று கட்டாயம் இல்லை அந்த சாத்தியகூறுகளும் இல்லை. ஆனால் நமது மனநிலையை மாற்றிகொள்வோம். நமது குழந்தைகளையும் அதன் படி வளர்ப்போம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 29, 2009 4:17 am

திண்ணை Thinna10

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 29, 2009 4:18 am

திண்ணை Thinna11

http://makkalai-thedi.blogspot.com/2008/07/blog-post.html

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 29, 2009 7:16 am

சூப்பர் அ௫மையான கட்டுரை மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக