புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
64 Posts - 58%
heezulia
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
106 Posts - 60%
heezulia
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரத்தின் விளைவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 01, 2010 3:50 am

ஒரு காட்டில் உள்ள பெரிய மரத்தில் காகங்களும், கிளிகளும் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. அருகில் உள்ள மரத்தில் கருநாகம் ஒன்று வசித்து வந்தது. அது தினமும் மரத்தில் ஏறி பறவைகளின் கூட்டில் இருக்கும் முட்டைகளையும், குஞ்சுகளையும் தின்று வந்தது. தங்களுடைய கூட்டினுள் இருந்த முட்டைகளும், குஞ்சுகளும் தினமும் காணாமல் போவது கண்டு பறவைகள் வருந்தின. எல்லாப் பறவைகளும் ஒன்றுகூடி, நாம் வெளியில் இரைதேடச் செல்லும்போது ஒரு பறவை மட்டும் மரத்தில் அமர்ந்து காவல் காக்க வேண்டும். அத்துடன் முட்டைகளையும், குஞ்சுகளையும் தின்று வரும் எதிரியையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தன.

அதன்படி அன்றைய தினம் கிளி இரைதேடச் செல்லாமல் காவல் காத்தது. அப்போது, கருநாகம் `உஸ்...' என்ற சத்தத்துடன் மெல்ல மெல்ல மரம் ஏறி வந்து கொண்டிருந்தது.

அவ்வளவுதான் அச்சம் அடைந்த கிளி, `கிரீச்... கிரீச்...' என்று கத்தி மற்றப் பறவைகளையும் அழைத்தது. உடனே அனைத்துக் கிளிகளும் பறந்து வந்தன. அப்போது காக்கைக் கூட்டினுள் இருந்த முட்டைகளை உறிஞ்சிக் கொண்டிருந்தது பாம்பு. அதைப் பார்த்த தலைவன் கிளி மற்ற கூட்டினுள் இருந்த காக்கை முட்டைகளையும், குஞ்சுகளையும் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லுமாறு கட்டளையிட்டு, காக்கைகள் இரை தேடும் இடத்திற்குப் பறந்து சென்றது.


"நண்பா, எதிரி யார் என்று கண்டுபிடித்தாகி விட்டது. கருநாகம் தான் தினமும் மரம் ஏறி வந்து கூட்டில் இருக்கும் முட்டைகளையும், குஞ்சுகளையும் விழுங்கி இருக்கிறது. இன்றைக்கும் உங்கள் கூட்டில் உள்ள முட்டைகளை விழுங்கியிருக்கிறது. அதைக்கண்ட கிளி உடன் தகவல் கொடுக்க, நாங்கள் சென்று முட்டைகளையும், குஞ்சுகளையும் பாதுகாப்பான இடத்தில் வைக்கச் சொல்லிவிட்டு, உங்களிடம் விவரம் சொல்ல ஓடி வந்தேன். அந்தப் பாம்பை எங்கள் இனப் பறவைகளால் மட்டும் விரட்டி அடிக்க முடியாது. அதனால் நீங்கள் அனைவரும் சேர்ந்து அந்தப் பாம்பை விரட்டி அடிக்க வேண்டும். இல்லையென்றால் எல்லா முட்டைகளையும், குஞ்சுகளையும் அது விழுங்கிவிடும்'' என்று எச்சரித்தது தலைவன் கிளி.

"உங்கள் முட்டைகளையும், குஞ்சுகளையும் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு, எங்கள் குஞ்சுகளையும், முட்டைகளையும் பாம்பு விழுங்கட்டும் என்று சாவகாசமாக வருகிறாய். இப்போது எங்களுக்கு எதிரி முக்கியமில்லை, துரோகிதான் முக்கியம். எதிரியைவிட துரோகிதான் மோசமானவன்'' என்று சொல்லிக் கொண்டே அனைத்துக் காகங்களும் ஒன்று சேர்ந்து கிளியைக் கொத்தின. தலைவன் கிளி எவ்வளவோ சொல்லியும் காகங்கள் கேட்பதாக இல்லை.

எல்லா காகங்களும் தாங்கள் கூடு கட்டியுள்ள மரம் நோக்கி வெறியுடன் சென்றன. அங்கு பாம்பு ஏதோ ஒரு கூட்டினுள் நுழைந்து முட்டைகளை விழுங்கிக் கொண்டிருந்தது. அவ்வளவுதான், அத்தனைக் காகங்களும் `கா... கா...' என்று அலறியபடி அந்தப் பாம்பை சுற்றிச் சுற்றி வந்து மோதின. கோபம் கொண்ட பாம்பு சீற, `தொபேல்' என கீழே விழுந்தது.

அங்கு வயலில் வேலை செய்த விவசாயி ஒருவன், களைப்பு தீர மரத்தின் கீழ் படுத்திருந்தான். அந்த வேளையில் தான் பாம்பு அவன் மீது விழுந்தது. சட்டென விழித்த அவன், அருகில் இருந்த மண்வெட்டியால் அந்தப் பாம்பை அடித்துக் கொன்றான். மரத்தில் அமர்ந்திருந்து வேடிக்கை பார்த்த காக்கைகள் அதைப்பார்த்து நிம்மதிப் பெரு மூச்சுவிட்டு தங்கள் கூட்டை நோக்கிச் சென்றன.

கூட்டில் ஒரு குஞ்சுகள் கூட இல்லாததால், கவலை அடைந்தன. அருகிலுள்ள மரத்தில் சத்தம் கேட்கவே அதை நோக்கிச் சென்றன. அங்கு குஞ்சுகளுக்கு இரை கொடுத்துக் கொண்டிருந்த கிளிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தன. ஆம்! அத்தனையும் காகங்களின் குஞ்சுகள். அப்படி என்றால்... தலைவன் காகம் யோசிப்பதைப் பார்த்த ஒரு கிளி பேசியது.

"காகங்களின் தலைவனே! வணக்கம். கருநாகம் மரத்தில் ஏறி தங்களின் ஒரு கூட்டினுள் நுழைந்ததும் எங்கள் தலைவன் ஆணைப்படி உங்கள் இனத்தின் அத்தனைக் குஞ்சுகளையும், முட்டைகளையும் தூக்கி வந்து பத்திரமாக வைத்து, அவைகளுக்கு உணவும் கொடுத்து விட்டோம்'' என்று கூற தலைவன் காகம் அதிர்ச்சி அடைந்தது.

அப்போது கிளிகளால் கொத்துப்பட்ட தலைவன் கிளி, காயங்களுடன் வந்து சேர்ந்து. அதைப்பார்த்த மற்ற கிளிகள் பதறின.

"எங்களை மன்னித்து விடுங்கள், கிளிகளே! அவசரத்தில் புரிந்து கொள்ளாமல் நாங்கள் தான் உங்கள் தலைவனை இப்படிக் காயப்படுத்தி விட்டோம். ஆனால், நீங்கள் எங்கள் குஞ்சுகளையும், முட்டைகளையும் காப்பாற்றியதை அறிந்தபோது எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது. உங்களைப் பற்றிக் கவலைப்படாமல் எங்கள் சந்ததிகளைக் காப்பாற்றியுள்ளீர்கள்'' என வருத்தத்துடன் கூறியது தலைவன் காகம்.

மனம் திருந்திய காகங்களும், கிளிகளும் நீண்ட காலம் அந்த மரத்தில் ஒன்றாக வாழ்ந்தன.

***
ஜி. சுப்பிரமணியன்




அவசரத்தின் விளைவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக