புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10 
34 Posts - 52%
heezulia
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10 
17 Posts - 2%
prajai
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10 
9 Posts - 1%
Guna.D
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10 
4 Posts - 1%
jairam
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு


   
   

Page 1 of 2 1, 2  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue Jul 06, 2010 11:30 pm

பாகவதமேளா – புதுப்பிக்கப்படும் பொறுப்புணர்வு



“All mothers are great but my mother is the greatest”
என்று இருபது ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் சங்க மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசியபோது பாலுமகேந்திரா
பேசியதாக ஞாபகம்.

“எல்லோரும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதி
கொண்டவர்கள்தான், எல்லாத் தாய்மார்களும் ஆனால் எல்லாத் தாய்மார்களும்
எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப் பெற்றவள் எனது தாய்” என்று இதை
தமிழ்ப் படுத்திக் கொள்ளலாம்.

“தாய்” என்பதை ‘மொழி’ என்பதன் குறியீடாகவும் கொள்ள முடியும்.
எனில்,

“எல்லா மொழிகளும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப்
பெற்ற மொழி எனது தாய் மொழி” என்று ஆகும். அவரவரும் அவரவர் தாயை, தாய்மொழியை
இப்படிப் பொருத்திப் பார்த்து பூரித்துக் கொண்டாட உரிமை உண்டு.

தனது மொழியின் தொன்மத்தை, பழமையை, வளத்தைக் குறித்து
வறட்டுப் பெருமை பேசும் எந்த மொழியைச் சார்ந்த மேதைகளைக் காட்டிலும், தனது
மொழியோடு தன்னை அடையாளப்படுத்தி, அதனைப் புழங்கி, காலாகாலத்திற்கும் தன்
மொழி உயிர்த்திருப்பதற்கு பங்காற்றும் சனத்திரளின் மொழி அக்கரையே மெச்சத்
தக்கதாகும்.

தங்களது மொழிப்பற்றை, மொழி குறித்த அக்கறையை, தங்கள்
கலாச்சாரத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கும் பணியை எந்த ஆராவாரமும் இன்றி,
விளம்பரமின்றி ஓராண்டு, ஈராண்டல்ல முன்னூற்றி அறுபத்தைந்து ஆண்டுகளாக
உழைத்துவரும் ஒரு தெருவின் சனங்களை சமீபத்தில் சந்திக்க முடிந்தது.

“சாலியமங்களம்” என்றதும் அங்கு 365 ஆண்டுகளாக விடாது,
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வைகாசி சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும்
‘பாகவத மேளா’ தான் நினைவுக்கு வரும்.

முன்னூற்றி அறுபத்தைந்து ஆண்டுகளா? அதுவும் விடாது
தொடர்ந்தா? சாத்தியமா?

சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் சாலியமங்களத்தின்
அக்ரஹாரத்தை சாந்த தொன்னூறு குடும்பத்தினர்.

பதினேழாம் நூற்றாண்டின் தஞ்சையை விசயநகர அரசர் அச்சுதப்ப
நாயக்கர் வெற்றி கொள்கிறார். மன்னர், மந்திரிமார்கள், மற்றும் தம்மோடு
வந்திருக்கும் தமது உறவினர்களது சமயச் சடங்குகளை நிறைவேற்றவும், தமக்கு ராச
ஆலோசனைகள் வழங்கவும் தனது சொந்த நாட்டிலிருந்து தெலுங்கு பேசும்
பிராமணர்களை அழைத்து வருகிறார். அவர்களை, “சாலியமங்களம்”, ‘மெலட்டூர்’
“தேபெருமாநல்லூர்”, ‘ஊத்துக்காடு’ மற்றும் சூலமங்களம் ஆகிய கிராமங்களில்
அக்ரஹாரங்களை ஏற்படுத்தி குடியமர்த்துகிறார். அவர்களுக்கு ஏராளமான
விளைநிலங்களை தானமாக வழங்குகிறார்.

அந்த வகையில் சாலியமங்களம் அக்ரஹாரத்தில் சற்றேரக்குறைய
தொன்னூறு தெலுங்கு பிராமணக் குடும்பங்கள் குடியேறுகிறார்கள். வெற்றியின்
விளைவாக தம்மோடு தஞ்சை நாட்டில் குடியேறிய தனது குடிகள் இந்த மண்ணோடும்,
மக்களோடும் கலந்து, கரைந்து பையப் பையத் தமது மொழியை, கலாச்சாரத்தின்
விழுமியங்களை மறந்து போவார்களோ, என்ற அச்சம் மன்னருக்கு வருகிறது.

உடனே அய்ந்து கிராமங்களிலும் உள்ள தெலுங்கு பிராமணர்களை
அழைத்து தனது கவலையை அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். தமது மொழியை
கலாச்சாரத்தின் வேர்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கிறார்.
“ஏதாவது செய்யுங்கள்” என்று உத்தரவிடுகிறார்.

விளைவு, மேற்சொன்ன அய்ந்து கிராமங்களிலும் பாகவத மேளாக்கள்.
இதில் சாலியமங்களம் தவிர மற்ற ஊர்களில் நின்றுபோகிறது அல்லது
தொடர்ச்சியற்று விட்டுவிட்டு நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் சாலியமங்களத்தில்
மட்டும் விடாது 365 ஆண்டுகளாக தொடர்ந்து “பாகவத மேளா” நடைபெற்று வருகிறது.

“வெள்ளி விழா” ‘பொன்விழா’ ‘வைரவிழா’ என்பது போன்று 365
ஆண்டுகளாக தொடர்ந்து சாலியமங்களத்தில் நடைபெற்று வரும் பாகவதமேளாவை என்ன
பெயரிட்டு அழைக்கலாம்.

1645 ஆண்டு முதல் தொடர்ந்து நடப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக
பக்த சமாசத்தின் பொருளாளர் எஸ்.சி.வெங்கடகிருஷ்ணன் கூறுகிறார். அவரும்,
சென்னை ரயில்வேயில் உயர் அதிகாரியாகப் பணியாற்றும் திரு.சுப்பிரமணியன்
அவர்களும் நிறையப் பகிர்ந்து கொண்டார்கள்.

பாகவத மேளாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடகம். ஒரு நாள்
“சீதா கல்யாணம்” ஒரு நாள் “ருக்மணி கல்யாணம்” ஒரு நாள் ‘ருக் மாங்கதா’ ஒரு
நாள் “பிரகலாத சரித்திரம்” என்று கடந்த காலங்களில்
அமர்க்கலப்பட்டிருக்கிறது. அந்தத் தெருவின் சனங்கள்தான் நடிப்பதும்
பார்ப்பதும். நரசிம்ம அவதாரம் பூண்டு இறைவன் இரணியனை வதம் செய்யும்
காட்சிகாண மொத்த ஊரும் திரண்டு விடுமாம்.

ஏறத்தாழ தொண்ணூறு குடும்பங்களில் இருந்தும் வெளியூர்களிலும்
வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். எவர் எங்கு இருப்பினும், என்ன
செலவேயாயினும் அனைவரும் அந்த காலத்தில் வந்துவிடுகின்றனர்.

இப்போது நாடகங்களைக் கொஞ்சம் குறைத்திருக்கிறார்கள்.
இளந்தலை முறையினருக்கு தெலுங்கு எழுதப்படிக்கத் தெரியாததே காரணம் என்பதை
கவலையோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

“இங்க நாங்க குடியேறியபோது எல்லா குடும்பத்து சனங்களுக்கும்
தெலுங்கு எழுதப் படிக்க பேசத் தெரிந்திருந்தது. இப்போது ஒன்றிரண்டு
குடும்பத்து இளைய தலைமுறை தவிர ஏனையோருக்கு இது இயலாததாகி உள்ளது. நாங்கள்
எங்கள் மொழியை, கலாச்சாரத்தை என்ன செய்தேனும் காப்பாற்ற வேண்டும் என்ற
கவலை கலந்த அக்கறை எங்களுக்கு” வேதனையோடு சொல்கிறார் வெங்கடகிருஷ்ணன்.
பாகவத மேளாவில் கூடும் பெரியவர்கள் இது குறித்து ஆலோசித்து வருவதாகவும்
சொல்கிறார்.

பாகவத மேளாவில் பக்தி உண்டு. ஆனால் அதில் உள்ள பக்தியை
மட்டுமே நாம் தவறாகக் கண்டிருக்கிறோம். நாயக்க மன்னரோடு புலம் பெயர்ந்த
ஒரு நூறு குடும்பத்தினரின் மொழி மற்றும் கலாச்சார விழுமியங்களைக்
காப்பாற்றத் துடிக்கும் கவலை கலந்த அக்கறையை எடுத்துக் கொள்ளத்
தவறியிருக்கிறோம்.

படாதபாடு பட்டு, வருடா வருடம் இங்கு கூடுவது பக்தியோடு
சேர்ந்து தங்களது மொழி மற்றும் கலாச்சார வேரினை தரிசிக்கவும், அதனைக் காக்க
வேண்டிய தங்களது பொறுப்புணர்வினை புதுப்பித்துக் கொண்டு போகவும்
சேர்த்துதான்.

அவசர அவசரமாக அழிந்துவரும் மொழிகளுள் தமிழும் ஒன்று என்கிறது
யுனெஸ்கோ. மொழி குறித்து அக்கறையுள்ள தமிழர்களுக்கு கற்றுக்கொள்ள
சாலியமங்களத்து அக்ரஹாரத்தில் நிறைய இருக்கிறது.

( "கல்கி" யில் வெளி வந்த கட்டுரை )
_______________________________________________

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 06, 2010 11:43 pm

சாலிய மங்களத்து பாகவதமேளா பற்றிய கட்டுரை அனைவருக்கும் சிறந்த படிப்பினையைக் கற்றுத் தரும் என்பதில் மாற்றுக் கருத்திலை! நாம் எங்கிருந்தாலும் நம் தாய்மொழியையும், நம் கலாச்சாரத்தையும் மறக்காமல் பேணிக்காக்க வேண்டும்!

யுனெஸ்கோ அமைப்பின் தமிழ் மொழி அழிவு பற்றிய தகவல் மிகவும் கவலை தரும் விடயமாக உள்ளது! ஆனால் அவர்களின் தகவல் முற்றிலும் உண்மை! தமிழர்கள் தமிழ் மொழியை மறந்து, வெறுத்து ஒதுக்கி வருவது நாம் காணும் நிகழ்வுதான்! அதற்காக அப்படியே ஒதுங்கி விட முடியாது! நம்மால் முடிந்தவரை நம் தாய்மொழியின் வளர்ச்சிக்கு ஏதாவது செய்யவேண்டும்! தமிழ் படித்தால் பயனுண்டு, பலனுண்டு என்பதற்கு அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும்!



பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Wed Jul 07, 2010 4:47 pm

சிவா wrote:சாலிய மங்களத்து பாகவதமேளா பற்றிய கட்டுரை அனைவருக்கும் சிறந்த படிப்பினையைக் கற்றுத் தரும் என்பதில் மாற்றுக் கருத்திலை! நாம் எங்கிருந்தாலும் நம் தாய்மொழியையும், நம் கலாச்சாரத்தையும் மறக்காமல் பேணிக்காக்க வேண்டும்!

யுனெஸ்கோ அமைப்பின் தமிழ் மொழி அழிவு பற்றிய தகவல் மிகவும் கவலை தரும் விடயமாக உள்ளது! ஆனால் அவர்களின் தகவல் முற்றிலும் உண்மை! தமிழர்கள் தமிழ் மொழியை மறந்து, வெறுத்து ஒதுக்கி வருவது நாம் காணும் நிகழ்வுதான்! அதற்காக அப்படியே ஒதுங்கி விட முடியாது! நம்மால் முடிந்தவரை நம் தாய்மொழியின் வளர்ச்சிக்கு ஏதாவது செய்யவேண்டும்! தமிழ் படித்தால் பயனுண்டு, பலனுண்டு என்பதற்கு அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும்!

புழங்காத எதுவும் அழிந்து போகும் என்பது மொழிக்கும் பொருந்தும் என்பதை தொடர்ந்து நாம் அலட்சியம் செய்தே வருகிறோம் சிவா

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Jul 11, 2010 10:17 am

சிவா wrote:சாலிய மங்களத்து பாகவதமேளா பற்றிய கட்டுரை அனைவருக்கும் சிறந்த படிப்பினையைக் கற்றுத் தரும் என்பதில் மாற்றுக் கருத்திலை! நாம் எங்கிருந்தாலும் நம் தாய்மொழியையும், நம் கலாச்சாரத்தையும் மறக்காமல் பேணிக்காக்க வேண்டும்!

யுனெஸ்கோ அமைப்பின் தமிழ் மொழி அழிவு பற்றிய தகவல் மிகவும் கவலை தரும் விடயமாக உள்ளது! ஆனால் அவர்களின் தகவல் முற்றிலும் உண்மை! தமிழர்கள் தமிழ் மொழியை மறந்து, வெறுத்து ஒதுக்கி வருவது நாம் காணும் நிகழ்வுதான்! அதற்காக அப்படியே ஒதுங்கி விட முடியாது! நம்மால் முடிந்தவரை நம் தாய்மொழியின் வளர்ச்சிக்கு ஏதாவது செய்யவேண்டும்! தமிழ் படித்தால் பயனுண்டு, பலனுண்டு என்பதற்கு அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும்!

சாளிய மங்களத்துப் படங்கள்கூட உள்ளன. எப்படி இணைப்பது என்றுதான் தெரிய வில்லை.

ரவிசிதார்தன்
ரவிசிதார்தன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 18/07/2010

Postரவிசிதார்தன் Sun Jul 18, 2010 3:12 pm

பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு 677196 பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு 677196 பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு 677196 பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு 677196 பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு 677196

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Jul 18, 2010 3:27 pm

ரவிசிதார்தன் wrote:பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு 677196 பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு 677196 பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு 677196 பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு 677196 பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு 677196

நன்றி ரவி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 18, 2010 6:46 pm

நல்ல அறிவுறுத்தல் கட்டுரை.. ஆனால் இன்று தமிழ் தாய்மர்ர்கள் தன் மொழியைக் குழந்தை பேசினால் அடித்துத் துன்புறுத்தும் வேற்று மொழி விரும்பிகளாக மாறிவிட்டனர். இதற்கு அவர்களைக் குறை கூறியும் பயனில்லை. பிழைப்பு என்று ஒன்று இருக்கிறதே. கணினி வேலையானாலும் கண்டக்டர் வேலையானாலும் ஆங்கிலம் அவசியம் என்று கூறத்தொடங்கி விட்டனரே.. இது சென்னை அனுபவம்.. தெருவெங்கும் என்று தமிழோசை கேட்கும் என்று ஏக்கத்துடன்!!!!!!!!!! நல்ல பகிர்வுக்கு நன்றி எட்வின் அவர்களே..



பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Aபாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Aபாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Tபாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Hபாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Iபாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Rபாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Aபாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 18, 2010 6:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Jul 18, 2010 8:18 pm

Aathira wrote:நல்ல அறிவுறுத்தல் கட்டுரை.. ஆனால் இன்று தமிழ் தாய்மர்ர்கள் தன் மொழியைக் குழந்தை பேசினால் அடித்துத் துன்புறுத்தும் வேற்று மொழி விரும்பிகளாக மாறிவிட்டனர். இதற்கு அவர்களைக் குறை கூறியும் பயனில்லை. பிழைப்பு என்று ஒன்று இருக்கிறதே. கணினி வேலையானாலும் கண்டக்டர் வேலையானாலும் ஆங்கிலம் அவசியம் என்று கூறத்தொடங்கி விட்டனரே.. இது சென்னை அனுபவம்.. தெருவெங்கும் என்று தமிழோசை கேட்கும் என்று ஏக்கத்துடன்!!!!!!!!!! நல்ல பகிர்வுக்கு நன்றி எட்வின் அவர்களே..


ஏமாறப் போகிறோம் தோழர்.

அன்பானவர்களின் உள்ளம் என்பது சென்னையா?
முகவரி அனுப்புங்கள் எனது நூல் அனுப்ப வேண்டும்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Jul 18, 2010 8:19 pm

ரபீக் wrote: பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு 677196 பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு 677196 பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு 677196 பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு 677196

நன்றி ரபீக்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக