புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விந்தை மனிதர்கள் Poll_c10விந்தை மனிதர்கள் Poll_m10விந்தை மனிதர்கள் Poll_c10 
30 Posts - 71%
heezulia
விந்தை மனிதர்கள் Poll_c10விந்தை மனிதர்கள் Poll_m10விந்தை மனிதர்கள் Poll_c10 
11 Posts - 26%
mohamed nizamudeen
விந்தை மனிதர்கள் Poll_c10விந்தை மனிதர்கள் Poll_m10விந்தை மனிதர்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விந்தை மனிதர்கள் Poll_c10விந்தை மனிதர்கள் Poll_m10விந்தை மனிதர்கள் Poll_c10 
72 Posts - 66%
heezulia
விந்தை மனிதர்கள் Poll_c10விந்தை மனிதர்கள் Poll_m10விந்தை மனிதர்கள் Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
விந்தை மனிதர்கள் Poll_c10விந்தை மனிதர்கள் Poll_m10விந்தை மனிதர்கள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
விந்தை மனிதர்கள் Poll_c10விந்தை மனிதர்கள் Poll_m10விந்தை மனிதர்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விந்தை மனிதர்கள்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Aug 02, 2010 9:44 pm

விந்தை மனிதர்கள்

நூல் ஆசிரியர் : கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

நூலின் அட்டைப்பட ஓவியம் சிறப்பாக உள்ளது. நூல் ஆசிரியர் மதுக்கூர்
இராமலிங்கம் நாடறிந்த நல்ல பேச்சாளர். எழுத்து ஆற்றலும் வரும் என்று
நிரூபித்து உள்ள நூல் இது. இந்நூலிற்கு சாகித்ய அகதெமி விருது பெற்ற
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி, கலைமாமணி முனைவர் கு. ஞானசம்பந்தன்
பெண்ணிய எழுத்தாளர் அ.வெண்ணிலா ஆகியோரின் அணிந்துரை அழகு சேர்க்கின்றது.
ஒவியர் ஸ்ரீரசா அவர்களின் ஓவியங்கள் நூலிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
இயந்திமயமாகி விட்ட காலத்தில் மனித மனங்களும் இயந்திரமாகி விடுகின்றது.
இயல்பான நிலைக்குத் திரும்ப இது போன்ற நகைச்சுவை விதைக்கும் நூல்கள்
உதவுகின்றன. செம்மலர் இதழில் பிரசுரமானவற்றை தொகுத்து நூலாக வழங்கி
உள்ளனர். நல்ல முயற்சி, பாராட்டுக்கள்.
கிராமத்து மனிதர்களை படம்பிடித்து, கிராமிய மொழியிலேயே வடித்து உள்ளார்.
‘பாவாடை ராசு” முதல் கட்டுரை இவர் பற்றி, ‘ராசு அண்ணன் சட்டை போட்டிருந்து
யாரும் பார்த்ததில்லை. அவர் கல்யாணத்தின் போது ஒரே ஒரு நாள் சட்டை
போட்டிருந்ததாகவும், தாலி கட்டிய உடனேயே உடம்பெல்லாம் அரிக்கிறது என்று
சொல்லி உடனே கழற்றி எறிந்து விட்டதாகவும் தகவல் உண்டு, இருந்தாலும் இதை
நேரடியாகப் பார்த்ததற்கு இப்போது யாரும் சாட்சியில்லை”.
கிராமத்தில இன்றும் சட்டை போடாத மனிதர்கள் பலர் உண்டு. அவர்கள் நம்
நினைவிற்கு வந்து விடுகின்றனர். ஒரு நாள் இரவு அவசரத்தில் துண்டுக்குப்
பதிலாக மனைவியின் பாவாடையை தோளில் போட்டு சென்றதன் காரணமாக அவருக்கு
பாவாடை ராசு என்று பெயர் வந்த காரணம் கட்டுரையில் உள்ளது. இரண்டு ரூபாய்
சாப்பாடு என்று நினைத்து சாப்பிட்டவரிடம், கூச்சப்படாமல் சாப்பிடுங்க
என்று சொல்லி, சின்னச் சின்ன கண்ணங்களில் கறி, கோழி, மீன் வைத்து இவை
எல்லாம் தனிக்கணக்கு என்று ரூ.150 ஆகியதால், கடைசியில் ஊருக்கு நடந்த வந்த
கதை. இப்படி சின்னச் சின்ன நிகழ்வுகளின் தொகுப்பில் நகைச்சுவை ஊருக்கு
நடந்த வந்த கதை. இப்படி சின்னச் சின்ன நிகழ்வுகளின் தொகுப்பில் நகைச்சுவை
விதைக்கிறார் நூல் ஆசிரியர். ஆனால் இன்றைக்கு அளவு சைவ சாப்பாடே 45 ரூபாய். விலைவாசி விலா எலும்பை முறிக்கும் காலம் இது.
‘கவர்மெண்டு கந்தசாமி”. கந்தசாமி வாயிலிருந்து ஒரு நாளைக்கு நூறு
முறையாவது கவர்மெண்ட் என்கிற வார்த்தை வெளியே வந்து விடும். இன்றைக்கு
தமிங்கிலம் நகரத்தை மட்டுமல்ல கிராமங்களையும் பிடித்து ஆட்டுகின்றது
என்பதை அழகாகப் பதிவு செய்துள்ளார். இவரை வில்லங்கம் கந்தசாமி, சுருட்டல்
கந்தசாமி என்றெல்லாம் அழைப்பது அவருக்குத் தெரியும். ஏனென்றால். ஏப்ப
சாப்பையானவர்கள் பெயரில் நிலமிருந்தால் தனது பெயரில் அதை மாற்றிச்
சுருட்டிக் கொள்வதிலும் யாராவது தன்னை எதிர்ப்பதாகத் தெரிந்தால் போலீசில்
சொல்லி வில்லங்கத்தில் மாட்டி விடுவதிலும் அவர் பலே கில்லாடி.
கிராமத்தில் உள்ள பாமரர்களை கொள்ளையடிக்க ஒரு கூட்டம் உள்ளது என்ற கருத்தை
நகைச்சுவை கலந்து விளக்குகின்றார் நூலாசிரியர். அய்யப்பனுக்கு மாலை
போடுகிறேன் என்ற பெயரில் பலர் தாடி வளர்ப்பது, வண்ணத்துண்டு அணிவது என
தோற்றம் மாறி காணப்படுவார்கள், ஆனால் சில காவல்துறை காவலர்களும் இந்தக்
கோலத்தில் காட்சியறித்து விடுவதை கிண்டல் செய்யும் விதமாக ‘அய்யப்ப
போலீஸ்” என்ற கட்டுரை உள்ளது. நமது அய்யப்ப போலீஸ் பனிரெண்டு மாதமுமே
அய்யப்பன் கெட்டப்பில் தான் இருப்பார். டூட்டியின் போது காக்கி உடை
போட்டிருந்தாலும், வீபதி, சந்தனம், குங்குமம் வைத்துக் கொள்வதோடு, ஒரு
கலர் துண்டும் போட்டிருப்பார். இவர் எப்போது அய்யப்பனாக இருக்கிறார்,
எப்போது சாதாவாக இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாது.
மதசார்பற்ற நாட்டின் காவல்துறைக் காவலர்களுக்கு இதுபோன்ற விதிவிலக்கு
வழங்கக் கூடாது. பணியில் இருக்கும் போது இவற்றை அனுமதிக்கக் கூடாது என்று
பல்வேறு சிந்தனைகளை விதைக்கின்றது. பல்பொடி வடுவாயி, எம்.ஜி.ஆர். கிழவி,
எலக்சன் ஏகாம்பரம், பொடி பொன்னுசாமி, சிரிப்புக்காட்டி செல்லையா, சிலோன்
ஜெயபால், பண்டிதர் பரமசிவம், நூலகர் பூவலிங்கம், உடுக்கு முனி இப்படி
பல்வேறு பாத்திரங்களை அவர் கண்டு ரசித்த, கேள்விப்பட்ட நபர்களை மிகச்
சிறப்பாக கட்டுரையாக்கி வழங்கி உள்ளார். பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு
விதம்.
கவிஞர் ஸ்ரீ ராசா ஓவியம் பாத்திரங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றது.
நூலைப் படித்து முடிந்தவுடன் ஒவ்வொரு பாத்திரமும் நம் மனக்கண் முன் வந்து
விடுகின்றனர். அது தான் ஒரு படைப்பாளியின் வெற்றி. கிழவி எம்.ஜி.ஆர் படம்
பார்த்தால் அடுத்த படம் வருகிற வரை முதல் படத்தின் கதையையே சொல்லிக்
கொண்டிருக்கும், எந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எந்தக் காட்சியில் எந்த உடை
அணிந்திருந்தார், எந்தச் செருப்புப் போட்டிருந்தார் என்ற புள்ளி விபரம்
கிழவிக்கு அத்துப்படி, எம்.ஜி.ஆர். படக்கடை வசனத்தை கிழவி. அந்தப்பட
இயக்குநரை விட சிறப்பாகச் சொல்லும். எம்.ஜி.ஆர். கண்ணாடி போட்ட கிழவி
ஓவியம் மிகச் சிறப்பு.
உண்மைதான், இது போன்ற கிழவிகள் கிராமங்களில் வாழ்கிறார்கள். நானும்
பார்த்து இருக்கிறேன், கேட்டும் இருக்கிறேன். எம்.ஜி.ஆரிடம் ஒரு கிழவி,
யாரை கூட வைத்தாலும், நம்பியாரை கூட வைக்காதே என்று சொன்ன நிகழ்வு
நினைவுக்கு வந்தது. எலக்சன் ஏகாம்பரம், இவர் வாக்களித்தால், வாக்களித்த
நபர் தோற்று விடுவார் என்ற மூட நம்பிக்கை, அதன் காரணமாகக இவரிடம் யாரும்
வாக்குக் கேட்பதில்லை. இது போன்ற பல மூட நம்பிக்கைகள் கிராமங்களில்
இன்றும் உள்ளது. சாப்பாடு இலையில் தண்ணீர் தெளிப்பது தூசி போக, ஆனால்
இரவில் இரவில் இலைக்குத் தண்ணீர் தெளிக்கக் கூடாது என்பார்கள். இப்படி
மூடநம்பிக்கை உண்டு.
சிரிப்புக்காட்டி செல்லையா, மயான வெட்டியான் அவர் சொல்லும் வசனம்,
‘எல்லாப் பயலும் கடைசியா எங்கிட்டாத் தான் வரணும்” இப்படி நூல் முழுவதும்
மறக்க முடியாத கதாபாத்திரங்களை நகைச்சுவை கலந்து வழங்கி உள்ளார். பேச்சில்
நகைச்சுவை எளிது, எழுத்தில் நகைச்சுவை கடினம், கடினமான பணியை மிக எளிதாகச்
செய்து உள்ளார். மனம் இலகுவாக இந்த நூல் உதவும். மனபாரம், கவலை, சோர்வு
உள்ளவர்கள் இந்த நூலைப் படித்து நகைச்சுவை உணர்வை, புத்துணர்வைப் பெறலாம்.
நூலாசிரியர் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களுக்குப் பாராட்டுக்கள். கிராமங்களிலும் திமிங்கிலம் தவழ்வது உண்மை தான். ஆனால் படைப்பாளிகள் அவற்றைத் தவிர்த்து எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக