புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
30 Posts - 50%
heezulia
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
72 Posts - 57%
heezulia
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 5:34 pm

சாத்தான்குளம் வட்டாரத்தில் நிலமோசடி கும்பல் அதிகரித்துள்ளதால் நில
உடைமையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். பல மாவட்டங்களில் உள்ளவர்களும்
சம்பந்தப்பட்டிருப்பதால் புகார் வாங்க போலீசார் தயங்குகின்றனர். எனவே
மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என
பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தான்குளம்
தாலுகாவில் அம்பலசேரி, கட்டாரிமங்கலம், பேய்க்குளம், பன்னம்பாறை,
பழங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் தரிசு
நிலங்கள் உள்ளன. இவற்றின் உரிமையாளர்கள் பலர் தொழில் சம்பந்தமாக பல
ஊர்களில் குடியேறி நிரந்தமாக வசிக்கின்றனர். சிலர் வெளிநாடுகளிலும்
வசிக்கின்றனர். கோயில் விசேஷங்கள், திருமணம் மற்றும் சில நிகழ்வுகளுக்காக
எப்பொழுதாவது ஊருக்கு வருவர். இந்த பகுதியில் பல உடை மரங்கள் மட்டுமே
உள்ளதால் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை உடைமரங்களை உறவினர்கள்
மூலம் விற்று வருகின்றனர்.

மற்ற நாட்களில் அந்த இடங்களை பலர் போய் பார்ப்பதே இல்லை. இதை
பயன்படுத்திய சிலர் வெளியூரில் இருக்கும் நில உடைமையாளர்களைத் தொடர்பு
கொண்டு நிலத்தை விற்க முயற்சி செய்து வருகின்றனர். டாட்டா நிறுவனத்தினர்
டைட்டானியம் தொழிற்சாலை ஆரம்பிக்க முயற்சி செய்ததும், சாத்தான்குளத்தின்
தென்பகுதியான செம்மண் தேரி நிலங்கள் பல மடங்கு விலை உயர்ந்தது. டாட்டா
நிறுவனம் வந்தால் அவர்கள் குடியிருப்பதற்கும் மற்றும் பட்டா நிலத்தில்
உள்ளவர்களை வேறு இடத்தில் குடியமர்த்துவதற்காகவும் நிலம் தேவைப்படும் என்ற
எண்ணத்தில் அதன் அருகில் உள்ள இடங்களின் நில விலை அதிகரித்தது. டாட்டா
நிறுவனம் தொடங்கப்படுவது கிடப்பில் போடப்பட்ட நிலையில் சாஸ்தாவிநல்லூர்,
பள்ளக்குறிச்சி பஞ்., பகுதிகளில் தனியார் அனல்மின் நிலையம் அமைக்க இடம்
வாங்கியவுடன் சாத்தான்குளத்தில் மற்ற தரிசு நிலங்களின் விலையும்
உயர்ந்தது. இதனால் பல நில உடைமையாளர்கள் தங்களது நிலத்திற்கு கூடுதல் விலை
கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் நிலங்களை விற்க தயங்கினர். இவர்களில் பலர்
தங்களது இடங்களை வருடத்திற்கு ஒருமுறை கூட வந்து பார்ப்பது என்பது அரிதான
செயலாகும். இதைப் பயன்படுத்தி போலியாக ரிக்கார்டு தயாரித்து பட்டா மற்றும்
பவர் ஆவணங்கள் தயார் செய்து மோசடியாக நிலங்களை விற்று வருகின்றனர். இது
சம்பந்தமாக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் சிறிதுகாலம்
ஓய்ந்திருந்த இந்த கும்பல் மீண்டும் தங்களது மோசடி வேலைகளில்
இறங்கியுள்ளது. தற்போது ஒருவருடைய நிலத்தை விற்பனை செய்யவும், அடமானம்
வைக்கவும் பவர் ஏஜெண்ட் நியமனம் செய்ய வேண்டுமென்றால் சொத்து எந்த
பத்திரப்பதிவு அலுவலக ஏரியாவில் வருகிறதோ அந்த அலுவலகத்தில்தான் பவர்
எழுதிக் கொடுக்க முடியும். பவர் எழுதி வாங்குபவர், எழுதிக் கொடுப்பவர்
மற்றும் சாட்சிகள் அனைவரும் புகைப்படம் மற்றும் அடையாள அட்டையுடன் வந்தால்
மட்டுமே பதிவு செய்ய இயலும் என சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம்
அமலாவதற்கு முன் பவர் எழுதிக் கொடுப்பவர் மற்றும் சாட்சிகள் போட்டோ
தேவையில்லை. எந்த பத்திரப்பதிவு அலுவலகத்திலும் 100 ரூபாய் பத்திரத்தில்
பவர் எழுதிக் கொடுத்துவிடலாம் என்பது தான் பழைய நடைமுறை. இதை பயன்படுத்தி
புதிய சட்டம் நடைமுறைக்கு வருவதைத் தெரிந்து கொண்டு சிலர் அதற்கு முன்பே
போலியாக பவர் பத்திரம் வேறு மாவட்டங்களில் பதிவு செய்துள்ளனர். தற்போது
அந்த சொத்தை கிரையமாகவோ, அடமானமாகவோ வைத்து விடுகின்றனர். உண்மையான நில
உடைமையாளர்கள் வில்லங்க சான்றிதழ் பார்க்கும் பொழுது தங்களது நிலம்
போலியாக ஆவணம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதை அறிந்து
அதிர்ச்சியடைந்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்போனால் போலீசார் புகார்
வாங்க தயங்குகின்றனர். அவர்களிடம் கேட்டால் பவர் பத்திரம் எங்கள்
எல்கைக்குள் பதிவு செய்யப்படவில்லை என கூறுகின்றனர். இதனால்
பாதிக்கப்பட்டவர்கள் கட்டப் பஞ்சாயத்தை அணுகுகின்றனர். இதுவும் போலீசாரின்
கவனத்திற்கு வருகிறது. இது சம்பந்தமாக போலீசாரிடம் கேட்டால் வேலைப்பளு
அதிகமாக உள்ளது. அந்த அளவிற்கு போலீசார் எண்ணிக்கை இல்லை. மிகக் குறைவான
போலீசாரை வைத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் இரவு ரோந்து
செல்ல வேண்டியுள்ளது. சொந்த குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூட
விடுப்பு கிடைப்பதில்லை. இந்த லட்சணத்தில் இரண்டு, மூன்று மாவட்டங்களில்
உள்ள குற்றவாளிகளை பிடிக்க என்று போலீசார்களை எங்கிருந்து அனுப்ப முடியும்
என கேள்வி எழுப்புகின்றனர். குறைந்த பட்சம் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும்
10 முதல் 15 போலீசார்களை கூடுதலாக பணியமர்த்தினால் சிறப்பாக குற்ற
நடவடிக்கைகளை தடுக்கவும், விரைந்து குற்றவாளிகளை பிடிக்கவும் முடியும் என
தங்கள் மனக்குமுறல்களை கொட்டி தீர்க்கின்றனர். எனவே இது போன்ற சொத்து
மோசடி வழக்குகளை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினரே தங்களது பொறுப்பில்
எடுத்து விசாரித்தால் விரைந்து நீதி கிடைக்கும். மேலும் சொத்தையும் இழந்து
புகார் கொடுக்க செல்லும் போது ஏச்சும் பேச்சும் வாங்கி கடைசியில்
கட்டப்பஞ்சாயத்தை அணுக வேண்டிய அவல நிலை ஏற்படாது என பாதிக்கப்பட்டவர்கள்
பரிதாப குரல் எழுப்புகின்றனர். நிலமோசடியை தடுக்க குற்றவாளிகளுக்கு
கடுமையாக தண்டனை வழங்க சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும்
எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக