புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சப்த கன்னியர்கள் Poll_c10சப்த கன்னியர்கள் Poll_m10சப்த கன்னியர்கள் Poll_c10 
31 Posts - 55%
heezulia
சப்த கன்னியர்கள் Poll_c10சப்த கன்னியர்கள் Poll_m10சப்த கன்னியர்கள் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
சப்த கன்னியர்கள் Poll_c10சப்த கன்னியர்கள் Poll_m10சப்த கன்னியர்கள் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சப்த கன்னியர்கள் Poll_c10சப்த கன்னியர்கள் Poll_m10சப்த கன்னியர்கள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சப்த கன்னியர்கள் Poll_c10சப்த கன்னியர்கள் Poll_m10சப்த கன்னியர்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சப்த கன்னியர்கள் Poll_c10சப்த கன்னியர்கள் Poll_m10சப்த கன்னியர்கள் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
சப்த கன்னியர்கள் Poll_c10சப்த கன்னியர்கள் Poll_m10சப்த கன்னியர்கள் Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
சப்த கன்னியர்கள் Poll_c10சப்த கன்னியர்கள் Poll_m10சப்த கன்னியர்கள் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
சப்த கன்னியர்கள் Poll_c10சப்த கன்னியர்கள் Poll_m10சப்த கன்னியர்கள் Poll_c10 
17 Posts - 3%
prajai
சப்த கன்னியர்கள் Poll_c10சப்த கன்னியர்கள் Poll_m10சப்த கன்னியர்கள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சப்த கன்னியர்கள் Poll_c10சப்த கன்னியர்கள் Poll_m10சப்த கன்னியர்கள் Poll_c10 
9 Posts - 1%
jairam
சப்த கன்னியர்கள் Poll_c10சப்த கன்னியர்கள் Poll_m10சப்த கன்னியர்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சப்த கன்னியர்கள் Poll_c10சப்த கன்னியர்கள் Poll_m10சப்த கன்னியர்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சப்த கன்னியர்கள் Poll_c10சப்த கன்னியர்கள் Poll_m10சப்த கன்னியர்கள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சப்த கன்னியர்கள் Poll_c10சப்த கன்னியர்கள் Poll_m10சப்த கன்னியர்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சப்த கன்னியர்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 12, 2010 11:14 pm

1. பிராமி

பிரம்மனின் சக்தி. இவர் மஞ்சள் நிறமானவர். நான்கு முகங்களையும், ஆறு கரங்களையும் கொண்டு காணப்படுவார். வலது பக்க மூன்று கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய இருகரங்களிலும் அட்சமாலை, சிகுவா என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க மற்றையன புத்தகம், கமண்டலம் என்பனவற்றை ஏந்தியவாறு காணப்படும். அம்சுமத்பேதாகமம், ரூபமண்டனம் என்னும் நூல்கள் பிராமியை நான்கு கரங்களுடன் விபரிக்கின்றன. இவர் செந்தாமரை மீது உட்கார்ந்திருப்பார். வாகனமாகவும் கொடியாகவும் அன்னம் காணப்படும். மஞ்சள் ஆடை உடுத்தி, ஆபரணங்களை அணிந்திருப்பார். தலையில் கரண்ட மகுடம் காணப்படும்.

தியான சுலோகம்

தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்
பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா

மந்திரம்

ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:
ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.



சப்த கன்னியர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 12, 2010 11:14 pm

2. மகேஸ்வரி

சிவனின் சக்தி. வெள்ளை நிறமானவர். இவர் ஐந்து முகங்களையும், ஒவ்வோர் முகத்திலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பனவற்றிற் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீதத்துவநிதி இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது. விஷ்ணுதர்மோத்திர புராணத்தில் இவருக்கு ஆறு கரங்களும், ரூபமண்டனம், மச்சபுராணம், அம்சுமத்பேதாகமம், பூர்வ காரணாகமம் என்பனவற்றில் நான்கு கரங்களும் கூறப்பட்டுள்ளது. இவரது தலையில் ஜடா மகுடம் காணப்படும். அதில் பிறைச் சந்திரனைச் சூடியிருப்பார். எருதினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.

தியான சுலோகம்

சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.

மந்திரம்

ஓம் மாம் மாஹேச்வர்யை நம:
ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்



சப்த கன்னியர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 12, 2010 11:16 pm

3. கௌமாரி

முருகனின் சக்தி. இவர் ஆறு முகங்களையும், பன்னிரு கரங்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி கூறுகின்றது. பன்னிரு கரங்களில் இரு கரங்கள் வரத, அபய முத்திரைகளில் இருக்க மற்றைய கரங்கள் வேல், கொடி, தண்டம், பாத்திரம், அம்பு, வில், மணி, தாமரை, சேவல், பரசு என்பனவற்றினை ஏந்தியிருக்கும். அம்சுமத்பேதாகமம், ரூபமண்டனம், காரணாகமம் என்பனவற்றில் இவருக்கு நான்கு கரங்கள் கூறப்பட்டுள்ளது. அம்சுமத்பேகாமத்தின்படி இவரது நான்கு கரங்களுள் இரு கரங்கள் அபய வரத முத்திரையிலிருக்கும். மற்றையன வேல், சேவல் என்பனவற்றினை ஏந்தியிருக்கும். இவர் பதின்மூன்று கண்களைக் கொண்டிருப்பார் எனவும் இவ்வாகமம் கூறுகின்றது. கௌமாரி மயிலினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டவள்.



தியான சுலோகம்

அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை
பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி
பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா
மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்
ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள
கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!

மந்திரம்

ஓம் கெளம் கெளமார்யை நம:
ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.



சப்த கன்னியர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 12, 2010 11:17 pm

4, வைஷ்ணவி

விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். அம்சுமத்பேதாகமம், ரூபமண்டனம் என்னும் நூல்கள் வைஷ்ணவியை நான்கு கரங்களுடன் விபரிக்கின்றன. வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.

தியான சுலோகம்

சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:
தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.

மந்திரம்

ஓம் வை வைஷ்ணவ்யை நம:
ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்


ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்
சப்தகன்னியரில் ஐந்தாவதாக இருப்பவள் வராஹி.



சப்த கன்னியர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 12, 2010 11:17 pm

5. வராகி

வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் என வராகியினைப்பற்றி ஸ்ரீ தத்துவநிதி விபரிக்கின்றது. தண்டநாத வராகி, சுவப்ன வராகி, சுத்த வராகி என்னும் மேலும் மூன்று வகையான வராகியின் உருவ அமைப்பு பற்றியும் இந்நூலில் கூறப்படுகின்றது.

தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.


தியான சுலோகம்

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

மந்திரம்

ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்



சப்த கன்னியர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 12, 2010 11:19 pm

6. இந்திராணி

இந்திரனின் சக்தி. இவர் பொன்னிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி கூறுகின்றது. வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும், மற்றையனவற்றில் அட்ச மாலை, வஜ்ரம் என்பன காணப்படும். இடது பக்க கரங்களிலொன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன தாமரை, பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறும் காணப்படும். அம்சுமத்பேதாகமம், பூர்ணாகாரணாகமம் என்னும் நூல்களில் இவருக்கு நான்கு கரங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்க மற்றைய இரு கரங்கள் வேல், வஜ்ரம் என்பனவர்றினை ஏந்தியிருக்கும். தேவி புராணத்தில் அங்குசம், வஜ்ரம், என்பனவற்றினை ஏந்திய இரு கரங்களுடன் கூறப்பட்டுள்ளது. இந்திராணிக்கு ஸ்ரீ தத்துவநிதியில் ஆயிரம் கண்களும், அம்சுமத்பேதாகமத்தில் மூன்று கண்களும், பூர்வகாரணாகமத்தில் இரு கண்களும் கூறப்படுகின்றது. ரூபமண்டனம் என்னும் நூல் இவரை பல கண்களுடன் காட்டவேண்டும் எனக் கூறுகின்றது. இவரது தலையில் கிரீடம் காணப்படும். பல ஆபரணங்களை அணிந்திருப்பவர். இந்திராணி சௌமிய இயல்பினைக் கொண்டவர். இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும்.


தியான சுலோகம்

அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை
இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:

மந்திரம்

ஓம் ஈம் இந்திராண்யை நம:
ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.



சப்த கன்னியர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun Sep 12, 2010 11:20 pm

இந்த காயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது சிவா. ஒவ்வொரு நாளும், இம்மந்திரத்தை உச்சரிப்பவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்பது உண்மை.

பகிந்தமைக்கு நன்றி சிவா கண்ணு..... நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 12, 2010 11:21 pm

7. சாமுண்டி

கறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார், ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார். இவருக்குப் பத்துக்கரங்கள் காணப்படும். வலது கரங்களில் உலக்கை, சக்கரம், சாமரை, அங்குசம், வாள் என்பனவும், இடது கரங்களில் கேடயம், பாசம், வில், தண்டம், கோடரி என்பன காணப்படும் என சாமுண்டியின் உருவ அமைப்பினைப் பற்றி ஸ்ரீ தத்துவநிதி விபரிக்கின்றது. விஷ்ணு தர்மோத்திர புராணத்தில் சாமுண்டி செந்நிறத்தினைக் கொண்டிருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. தேவி மகாத்மியம் இவர் இரு கரங்களைக் கொண்டிருப்பார் எனவும் அவை வாள், பாசம் என்பன ஏந்தியிருக்கும் எனவும் விபரிக்கின்றது. இவர் நான்கு கரங்களையும், மூன்று கண்களையும் கொண்டவர் எனவும் தடித்த மேல் நோக்கிய கேசம் காணப்படுமெனவும் செந்நிறத்தினைக் கொண்டிருப்பார் எனவும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது.

தியான சுலோகம்

சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா
சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.
நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதே
நிஷண்ணசுவா!
ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா
சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.

மந்திரம்

ஓம் சாம் சாமுண்டாயை நம:
ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்



சப்த கன்னியர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 12, 2010 11:26 pm

கோயில்களில் இந்தக் கன்னிகளைப் பார்த்திருக்கிறோம்.. கதையை இப்போதே அறிந்து கொள்கிறோம்..மிக்க நன்றி சிவா..



சப்த கன்னியர்கள் Aசப்த கன்னியர்கள் Aசப்த கன்னியர்கள் Tசப்த கன்னியர்கள் Hசப்த கன்னியர்கள் Iசப்த கன்னியர்கள் Rசப்த கன்னியர்கள் Aசப்த கன்னியர்கள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 12, 2010 11:30 pm

gunashan wrote:இந்த காயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது சிவா. ஒவ்வொரு நாளும், இம்மந்திரத்தை உச்சரிப்பவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்பது உண்மை.

பகிந்தமைக்கு நன்றி சிவா கண்ணு..... நன்றி நன்றி

//காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.//
இது காயத்ரி மந்திரம் இல்ல..

குணா நீங்க சொல்வது இந்த காயத்ரி மந்திரம் இல்லன்னு நெனைக்கிறேன்..
அது
ஓம் பூர் புவஸ்ஸுவஹ
ஓம் தஸ்ஸவிதுர்வ ரேன்யம்
பர்கோதேவஸ்ய தீமஹி
தியோயோன பிரசோதாயாத்

இதை நாள் தோறும் கூறினால் ஒளி (அறிவு) வரும் என்பார்கள்....தவறிருந்தால் மன்னிக்கவும்..குணா.



சப்த கன்னியர்கள் Aசப்த கன்னியர்கள் Aசப்த கன்னியர்கள் Tசப்த கன்னியர்கள் Hசப்த கன்னியர்கள் Iசப்த கன்னியர்கள் Rசப்த கன்னியர்கள் Aசப்த கன்னியர்கள் Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக