புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_m10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_m10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_m10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_m10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10 
4 Posts - 3%
prajai
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_m10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_m10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10 
1 Post - 1%
Kavithas
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_m10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10 
1 Post - 1%
bala_t
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_m10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_m10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10 
293 Posts - 42%
heezulia
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_m10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_m10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_m10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10 
26 Posts - 4%
sugumaran
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_m10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_m10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_m10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10 
6 Posts - 1%
prajai
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_m10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10 
5 Posts - 1%
Kavithas
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_m10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10 
4 Posts - 1%
manikavi
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_m10குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள்.


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Sep 14, 2010 10:25 pm

குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள்-ஆரிய இனக் கோட்பாடு கைவிடப்பட்டால் வரலாற்றிலுள்ள பல குழப்பங்கள் விலகும் - குமரிமைந்தன்.

தமிழனுக்குக் குமரிக் கண்டம் தாயகம் என்பது குழப்பமின்றி ஏற்கப்பட வேண்டுமென்றால் முதலில் இனக் கோட்பாடு எனும் போலிக் கோட்பாடு கைவிடப்பட வேண்டும். அக்கோட்பாட்டைப் பெற்றெடுத்த மாக்சு முல்லரே அதைக் கைவிட்டுவிட்டார். (வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர், origin And spread of Tamils) இன்றுவரை ஆரியர்களுக்குரியதாக ஒரேயோர் அகழ்வாய்வுக் களம்கூடக் கிடைக்கவில்லை.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசின்கீழ் சிந்து சமவெளி வந்தது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் கிரேக்கர்கள் அதனைக் கைப்பற்றினர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை அவர்களுடைய அரசியற் செல்வாக்கு அம்மண்டலத்தில் நிலவியது. இந்தக் கட்டத்தில்தான் சமற்கிருத மொழி உருவாகி வளம் பெற்றது. வட இந்தியப் பண்பாடும் உருவம் பெற்றது. இதுதான் சமற்கிருதத்தில் ஐரோப்பிய மொழிகளின் சில சொற்கள் இடம் பெற்ற பின்னணி.

ஆரிய இனக் கோட்பாடு கைவிடப்பட்டால் தமிழர் வரலாற்றிலுள்ள பல குழப்பங்கள் விலகும்.

தொல்காப்பியத்திற் கூறப்படும் வருணனும் இந்திரனும் வேதங்களிலும் கூறப்படுகின்றனர். சோழர்களுக்கும் இந்திரனுக்கும் உள்ள நெருக்கமான உறவும் பாண்டியர்களுக்கு அவனிடமுள்ள பகையும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளன. இந்திரனும் வெள்ளையானையும் கரும்பும் இந்தோனேசியத் தீவுகளுடன் தொடர்புடையவை எனக் கூறுவர். அத்தீவுக் கூட்டங்கள் சுமத்ரா(நன்மதுரை -மூலமதுரை), பாலி(தென்பாலி-பாலிமொழி), புருனெய்(பொருனை) என்ற பெயர்களைக் கொண்டுள்ளன. அத்தீவுக் கூட்டங்களில் ஒன்றின் பெயர், இலாமுரி தேசம் என்று இராசேந்திரன் கல்வெட்டொன்று கூறுகிறது. எனவே இலெமுரியாக் கண்டம் என்ற பெயரும் பண்டையிலிருந்தே வருகிறதென்று தெரிகிறது.

இச் செய்திகளிலிருந்து குமரிக் கண்டத் தமிழர்களுக்கும் வேதங்களுக்கும் உள்ள உறவு புலப்படும்.

மணிமேகலையின் முன்பிறப்பு பற்றிய கதையில் காந்தார நாட்டில் பூருவ தேயத்தை ஆண்ட அத்திபதி என்ற மன்னனிடம் அவன் நாடு உட்பட நாகநாட்டில் நானூறு யோசனை நிலம் கடலில் முழுகுமென்று கூறப்பட்டது. அவன் விலங்குகளையும் மக்களையும் உடன்கொண்டு வடக்கு நோக்கிச் சென்று அவந்தி நாட்டில் காயங்கரை என்ற ஆற்றின் கரையில் சேர்ந்தான் என்று கூறப்பட்டுள்ளது.

சீத்தலைச் சாத்தனார் தமிழ்ப்பற்றை விட சமயப்பற்று மிகுந்தவர் என்பது அவர் நூலை மேலோட்டமாகப் பார்க்கும் போதுகூட வெளிப்படும். எனவே அவரது இந்தக் கூற்றை நாம் நம்பலாம். காந்தாரம் எனும் இன்றைய ஆப்கானிய நகரத்துக்குக் குமரிக் கண்டத்தில் முழுகிய நகர்ப் பெயரே இடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல பாண்டவர்களின் குலம் பூருவ இனமாகும். அவந்தி நாட்டிலுள்ள காயங்கரை என்ற ஆறு சிந்து சமவெளியில் ஓடிப் பின்னர் பாலைவனத்து மணலுள் மறைந்த கோக்ரா ஆறேயாகும். இதே கோக்ரா என்று பெயர் கங்கையின் கிளை நதி ஒன்றுக்கும் உண்டு. இவ்வாறு அவந்தி எனப்படும் குசராத்தின் கரைகளை அடைந்த குமரிக்கண்ட மக்கள் வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு என்று வடஇந்தியா முழுவதும் பரவினர். குமரிக் கண்டத்திலிருந்த போதும் புதிய இடத்திலும் அவர்களிடையில் உருவான பாடல்களே வேதப் பாடல்கள். அப்பாடல்களில் இன்னும் இனம் காண முடியாத இடப்பெயர்கள் குமரிக் கண்டத்திற்குரியனவாக இருக்க வேண்டும். எனவே குமரிக் கண்ட இடப்பெயர்களை அறிய வேதங்கள் உதவும். அதுபோலவே புராணங்களும் குமரிக் கண்ட மக்களின் வரலாற்றைப் புரிந்து கொள்ள மிகவும் உதவும்.

இன்று ஆரிய மொழிகள் என்ற வகைப்பாட்டில் கீழ் மேலையாரிய மொழிகள் என்ற பிரிவில் கிரேக்கமும் இலத்தீனும் வருகின்றன. அம்மொழிகளுக்கும் சமற்கிருதத்துக்கும் உறவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இம்மொழிகளுக்கு இடையில் காணப்படும் நெருக்கத்தைவிடத் தமிழுக்கும் கிரேக்க இலத்தீன் மொழிகளுக்கும், தமிழுக்கும் சமற்கிருதத்துக்கும் அடிப்படையான உறவு இருப்பதை எளிதில் காண முடியும். அதுபோல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பேசப்படும் மொழிகளுக்கும் தமிழுடன் நெருக்கமான தொடர்பிருப்பதை மெய்ப்பிக்க முடியும். இதனடிப்படையில் உலகமொழிக் குடும்பங்கள் மறுவகைப்படுத்தப்பட வேண்டும்.

பினீசியர்கள் தென்னிந்தியாவிலிருந்து பாரசீகக் குடா வழியாக ஆசியாமைனர் சென்று குடியேறியவர்கள். அவர்கள்தான் கிரேக்கர்களுக்கு எழுத்துகளும் நாகரிகமும் வழங்கியவர்கள் என்று இரோடோட்டர் கூறுகிறார். ஐரோப்பா என்ற பெயரும் அவர்கள் தொடர்பானதே. தொட்டதெல்லாம் பொன்னாகும் கதையில் வரும் மன்னவன், ஓடிப்பசின் பாட்டன் காட்மஸ் எனப்படும் கடம்பன் அனைவரும் பினீசியர்களே. பினீசியர்கள் சிவந்த படகுகளில் பயணம் செய்தவராகக் கூறப்படுகிறது. நம் நாட்டுச் செம்படவர்களைப் பற்றி ஆய்ந்தால் தடையம் ஏதாவது கிடைக்கலாம்.

மக்கள் குமரிக் கண்டத்திலிருந்து தமிழகத்தினுள் நுழைந்து வடக்கு நோக்கிப் பயணம் செய்தமைக்குக் சான்றுகளாக இடப்பெயர்கள் அமைந்துள்ளன. பறளியாறு என்ற பெயர் குமரி மாவட்டத்தில் இரண்டிடங்களிலும் கேரளத்தில் ஓரிடத்திலும் சேலம் மாவட்டத்தில் ஓரிடத்திலும் வழங்குகிறது. இலங்கைக்கு நாகத்தீவு, சேரன்தீவு, தாம்பரபரணி என்ற பெயர்கள் இருந்திருக்கின்றன. இன்றைய நெல்லை தாமிரபரணியாற்றுக்குப் பொருனை, சோழனாறு என்ற பெயர்கள் இருந்திருக்கின்றன.

குமரிக் கண்டத்தில் முதலில் ஏழு குக்குலங்கள் இருந்திருக்கின்றன. அவற்றின் மூலவர்கள் ஏழு பெண்கள். அவர்களை ஏழு கன்னிகள் என்றும் ஏழு தாய்கள் என்றும் கூறுவர். பின்னர் அக்குலங்கள் ஆண்களின் தலைமையின் கீழ் இயங்கின. அவர்களை ஏழு முனிவர்கள் என அழைப்பர். இந்த ஏழு குக்குல முதல்வர்களின் துணையுடன் இந்திரன் ஆண்டான். உண்மையான ஆட்சித் தலைவர் இந்திராணியே. இந்திரனை இந்த ஏழு குக்குலத் தலைவர்களுமே தேர்ந்தெடுத்தனர், நினைத்த போது அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் அகற்றினர். இந்திராணி தொடர்வாள். மகாபாரதத்தில் வரும் நகுசன் கதையையும் சோசப் காம்பெல் எழுதிய Masks of Gods-Primitive Mythology என்று நூலில் எகிப்திலிருந்த பண்டை நடைமுறை பற்றிய குறிப்பையும் ஒப்பிடுகையில் இதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு குமுகத்தில் அரசு தோன்றுவதற்கு முதற்படி மக்கள் குக்குலங்களாகப் பிரிந்திருப்பது மாறி நில எல்லை அடிப்படையில் பிரியத் தொடங்குவதே என்று ஏங்கெல்சு என்பார் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் குறிப்பிடுகிறார். உலக வரலாற்றில் மக்கள் நில அடிப்படையில் பிரிந்து நின்றதைத் தரும் முதல் ஆவணம் தமிழின் பொருளிலக்கணமே.

பொருளிலக்கணம் குமரிக் கண்ட மக்கள் குக்குல நிலையிலிருந்து மேம்பட்டு நிலங்களுக்கேற்ற வகையில் பொருளியலிலும் அதன் விளைவாகப் பண்பாண்டிலும் ஒருவருக்கொருவர் மாறி நின்றனர். அவர்களது குடும்ப அமைப்புகளும் போர்முறையும் மாறி நின்றன. குறிஞ்சி நில மக்கள் திருமணம் இன்றி சந்தித்த இடத்தில் கூடிப் பிரிந்தனர்; ஆ கவர்தலே போர் நோக்கமாக இருந்தது. முல்லை நில மக்கள் தாங்கள் விரும்பும்வரை சேர்ந்து ′′இருந்து′′ வேண்டாதபோது பிரிந்தனர்; போர் மேய்ச்சல் நிலத்துக்காக நடைபெற்றது. பாலை நிலம் வாணிகத்தின் வளர்ச்சியையும் பாலையின் கொடுமையையும் பொருட்படுத்தாது மருதத்துக்கும் முல்லைக்கும் பாலையினூடாக நடைபெற்ற போக்குவரத்தையும் அங்கு சிலர் வழிப்பறித்து வாழ்வதென்ற ஒரு புது நிலையையும் காட்டுகிறது; மக்கள் கூட்டுழைப்பிலிருந்து பிரிந்து வாணிகம், போர், வழிப்பறி என்று ஆணும் பெண்ணுமாக வெளியேறிதையும் ′′பொய்யும் வழுவும்′′ தோன்ற, கரணமெனும் திருமணத்தின் தேவையை உருவாக்கிய பின்புலம் பாலையில் வெளிப்பட்டது; போர் வாழ்வா சாவா என்ற நிலையில் நடைபெற்றது. மருதத்தில் திருமணத்தில் இணைந்த பெண் ஆடவனின் பரத்தையர் தொடர்பை முறியடிக்க முடியாத கையறு நிலையான பொருளியல் சார்புநிலை அடைந்தாள்; போர் கோட்டையிலுள்ள செல்வத்தைக் கொள்வதற்காக நடைபெற்றது. நெய்தலிலோ பெண் கைம்மைக் கொடுமைக்கு ஆளானாள்; போர் பேரரசுப் போராக, வெற்றி நோக்கியதாக இருந்தது.

பொருளிலக்கணம் தொல்காப்பியத்துக்கு வரும்போது அதன் மூல வடிவம் மிகவும் மாறுபட்டுவிட்டது.

ஆதாமும் ஏவாளும் ஈழத்தீவில்தான் வாழ்ந்தனர். அவர்கள் மகன் சேது என்பவன் பெயரால்தான் சேது என்ற பெயர் இலங்கை இந்திய நீரிணைக்கு ஏற்பட்டது என்று மெளலானா என்பவர் சேது முதல் சிந்து வரை என்ற நூலில் குறிப்பிடுகிறார். உடன்பிறந்த ஆபேலைப் பெண்ணுக்காகக் கொன்ற காயின் இராமனாக இருக்க வேண்டும் என்கிறார் அவர். உண்மையில் வாலிக்கும் சுக்ரீவனுக்குமே இந்த ஒப்புமை பொருந்தும்.

தமிழகத்தில் பெண்ணாட்சி நிலவியது என்ற மெகாத்தனிசின் குறிப்பு, சிலப்பதிகாரத்தில் பாண்டியர் குலமுதல்வி என்று ஒரு பெண்ணைக் குறிப்பது, திருவிளையாடற் புராணத்தில் தடாதகைப் பிராட்டி, நாட்டுப்புறக் கதைகளாக அல்லி, பவளக்கொடி போன்றோர் ஆகிய சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியம் மறைக்கும் இந்த உண்மைகளைச் சிலப்பதிகார ஆசிரியர் வெளிக்கொணருகிறார். குமரி என்ற பெயரையே அவர்தான் நமக்குச் சொல்லுகிறார்.

குமரிக் கண்டத்தில் மாபெரும் பொருளியல் வளர்ச்சி இருந்தது. அதனோடு பொருளியல், குமுகியல் கோட்பாடுகளும் உருவாகியிருந்தன. குபேரன் வடிவம் இதற்கொரு சான்று. குபேரனின் ஊர்தி மனிதனாகும். இந்த வடிவத்தின் பின்னணியில் இன்றைய மார்க்சியத்தின் கோட்பாடு புலப்படுவதைக் காணலாம். மனித மண்டை ஓடுகளில் குருதியைக் குடிப்பதுதான் மூலதனம் எனும் தெய்வம் என்று மார்க்சு கூறுகிறார்.

குமரி மக்கள் இன்றைய மேலை அறிவியலுக்குக் குறையாத அறிவியல் மேன்மை பெற்றிருந்தனர். தடயங்கள் எண்ணற்றவை:

1. 64 கலை அறிவுகளில் சில: வானில் நுழைதல், வானில் பறத்தல், நெருப்பைத் தடுத்தல், நீரைத் தடுத்தல், காற்றைத் தடுத்தல்.2. தமிழக இலக்கியங்களிலும் தொன்மங்களிலும் காந்தருவர், இயக்கர், விஞ்சையர் என்ற மக்கள் பேசப்படுகின்றனர். இவர்கள் வானூர்திகளில் பறப்போர். இராவணன் ஓர் இயக்கம் என்றே கூறப்படுகிறான்.3. இராவணனின் மாமன் மயன் எனும் அசுரத் தச்சன். இவன் பறக்கும் ஊர்தியை இயற்றியவன் என்று கூறப்படுகிறது.4. உலகிலுள்ள இசைக் கருவிப் புனைவில் வீணை எனப்படும் யாழ் ஓர் இறும்பூது. எண்ணிக்கையில் குறைந்த நரம்புகளைக் கொண்டு யாழ்த் தண்டிலுள்ள பள்ளங்களின் உதவியால் ஆயிரம்வரை நரம்புகளை (இசைகளை) எழுப்ப முடியும். இந்த யாழ் இராவணனின் கொடியாகும். சிவனை மகிழ்விக்கத் தன் தலையைக் கிள்ளி, கையை ஒடித்து, நரம்பை உருவி யாழ் அமைந்து இசைத்தான் எனும் புராணக் கூற்று இந்த யாழை அவனே புதிதாகப் புனைந்ததைக் குறிப்பதாகலாம்.5. தமிழகத்தில் ஒவ்வொரு புதுப்புனைவையும் செய்தவர் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் வகையில் தெய்வங்களுக்கு ஆயுதங்கள் உள்ளன.

சிவன் : நெருப்பு, உடுக்கு, மழு.பரசுராமன் : கோடரிபலராமன் : கலப்பைஇராவணன் : யாழ்திருமால் : சக்கரம்மூதேவி : குண்டாந்தடி.

ஒரு புராணக் கதையின்படி பருந்துகளின் தாயான பெண்ணும் நாகங்களின் தாயான பெண்ணும் முறையே அக்காள் தங்கைகள். தங்கையின் சூழ்ச்சியால் தமக்கை அவளுக்கு அடிமையாகிறாள். தமக்கையின் மகன் கருடன் பிறந்து போரிட்டு தாயின் அடிமைத்தனத்தை விலக்குகிறான்.

நாகமும் பருந்தும் தோற்றக்குறிகள். இரு மக்களுக்குள் நடந்த பூசலையே இது குறிக்கிறது. நாகங்கள் நம் தெய்வ வடிவங்கள் அனைத்திலும் உண்டு. பருந்து திருமாலின் ஊர்தியாக மட்டுமே காணப்படுகிறது.

உலகப் புராணங்களிலும் நாகத்துக்குச் சிறப்பிடம் உண்டு. பைபிள், கிரேக்கப் புராணம் போன்றவற்றிலும் ஒரு பெண்ணோடு அது தொடர்புபடுத்தப்படுகிறது, கில்காமேஷ் காவியத்தில் சாவா மருந்தாகிய கனியை அது பறித்துச் சென்று விடுகிறது.

பண்டை நாகரிகங்களில் தங்கம் அல்லது உலோக இறக்கைகள் உள்ள பருந்துதான் தங்கள் மூதாதை என்ற குறிப்பு காணப்படுகிறது. எரிக் வான் டெனிக்கான் பறவை போன்ற வானவூர்திகளில் வந்தோர் பண்டை மக்கள் மீது அணுகுண்டுகளைப் பொழிந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன என்று கூறுகிறார். அத்துடன் தாடி வைத்த நாகம் தங்களுக்கு நாகரிகத்தைத் தந்ததாகச் சில மக்கள் குறித்து வைத்துள்ளனர். கவிழ்ந்த கப்பல் மாலுமியைப் பற்றிக் கூறும் எகிப்திய தாள் குறிப்பில் நிலத்தின் அரசனாக ஒரு தாடி வைத்த நாகமே கூறப்படுகிறது.

இவற்றிலிருந்து நாம் பெறும் முடிவு:

நாகத்தையும் பருந்தையும் தோற்றக்குறிகளாகக் கொண்டிருந்த மக்களுக்குள் குமரிக் கண்டத்தினுள் கடும்பகையும் போரும் நிகழ்ந்தன. முதலில் உலகமெலாம் பரவியவர் நாகர்கள். அவர்கள் பரவிய இடமெல்லாம் பருந்தின மக்கள் தொடர்ந்து சென்று தாக்கினர். இதற்கு அவர்களது கண்டுபிடிப்பான வானவூர்தியும் அணுவாற்றலும் பயன்பட்டது. உலகமெலாம் பரவிய இந்த அணுவாயுதப் போரினால் அம்மக்களின் நாகரிகம் ஒரு முடிவுக்கு வந்தது.

எரிக் வான் டெனிகான் ஊர்திகளில் வந்து குண்டு போட்டோர் வேறு உலகங்களின்று வந்தவர் என்கிறார். மேலையர் தவிர வேறெவரும் நாகரிகமடைய முடியாது என்ற ஐரோப்பியக் கருத்தின் எதிரொலிதான் இது.

Serandipity என்ற சொல்லுக்கு அடிப்படையான The Three Princes of Serandip என்ற கதையும் முன்று கோட்டைகளோடு பறந்து சென்று எதிரிகளை அழித்த முப்புராதிகளின் கதைகளையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

குமரியை ஆண்டவர்களில் துவரைக் கோமானும் ஒருவர். துவரை என்பது வடக்கிலிருந்த துவாரகையல்ல. துவாரகா என்பதற்கு கதவகம் என்ற பொருள். இரண்டாம் கழகப் பாண்டியர் தலைநகராகிய கபாடபுரமே துவாரகை எனப்படும் துவரை. குமரி மாவட்டத்தில் 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, முத்துக்குட்டி அடிகளின் வரலாறு கூறும் அகிலத் திரட்டு அம்மானையும் ″தெற்கே கடலினுள் இருக்கும்″ துவரையம்பதி பற்றிக் கூறுகிறது.

கில்காமேஷ் சாவாமை பற்றி அறிந்துவர பாபிலோனிலிருந்து பல கடல்களைக் கடந்து ஒரு பெருங்கதவு வழியாக நுழைகிறான். அங்கு பெருவெள்ளத்திலிருந்து பிழைத்த நோவாவின் மூலவடிவமான உட்னாபிற்றிட்டிம் என்ற மனிதனைச் சந்திக்கிறான்.

சாவாமை உள்ளவனாகக் கூறப்படும் இயமனும் ஒரு பெருங்கதவுக்கு அப்புறமே வாழ்கிறான். இன்றைய உலோகம் காட்டியின் (Metal Detector) பண்டைய வடிவமோ இக்கதவு?

பாண்டிய மரபின் நீண்ட நெடும் வரலாற்றில் துவரைக் கோமான் போன்ற முல்லை நிலத்தாரும் குமரவேள் போன்ற குறிஞ்சி நிலத்தாரும் மீனவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதும் வெளிப்படை.

தமிழ் இலக்கணத்துறையில் தலையாய இரு கோட்பாடுகள் எதிரெதிராய் நிலவி வந்தனவாகத் தோன்றுகிறது. ஒன்று அகத்தியம் இன்னொன்று ஐந்திரம். பயன்பாட்டு வேறுபாட்டு அடிப்படையில் மொழியில் பிரிவினை தேவையில்லை என்பது அகத்தியக் கோட்பாடெனவும் சிறப்புத் தொழில்களுக்கென்று தனி எழுத்துகள் கொண்ட தனிக் குழூஉக்குறி மொழி ஒன்று வேண்டும் என்பது ஐந்திறக் கோட்பாடென்றும் கொள்ளலாம். இந்தப் பிரிவினைக் கோட்பாடே வெற்றி பெற்றது. பிரிவினைக்கு முன்பு வல்லின எழுத்துகளுக்கு நான்கு தனித்தனி ஒலிப்புகளும் அவற்றுக்குத் தனித்தனி வரியன்களும் இன்றைய பிற இந்திய மொழிகளில் காணப்படுவது போல் தமிழிலும் இருந்திருக்க வேண்டும். கிரந்த எழுத்துக்கள் எனப்படும் ஓலியன்களும் இருந்திருக்க வேண்டும்.

இன்றைய தமிழ் எழுத்துகளில் ஒரே வல்லின வரியனில் மூன்றுக்கு மேற்பட்ட ஓலியன்கள் பெறப்படுதல், தொல்காப்பிய சகரக்கிளவியும் அற்றோரன்ன என்ற முரண்பாடும் ந,ன,ற,ர மயக்கங்களும்

அஃதிவண் நுவலா தெழுந்து புறத் திசைக்கும்மெய்தெரி வளியிசை அளவு நுவன் றிசினே

என்ற தொல்காப்பிய வரிகளும் ஐந்திரம் தெரிந்த தொல்காப்பியன் என்ற பாயிர வரிகளும் தொல்காப்பியருக்கும் அகத்தியருக்கும் நடைபெற்றதாகக் கூறப்படும் பூசல் பற்றிய புராண நிகழ்ச்சியும் சில தடயங்கள். அகத்தியம் மீதுள்ள காழ்ப்பினால்தான் அகத்தியர் வடக்கிலிருந்து வந்தார் என்ற கதை எழுந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சிலப்பதிகார ஆசிரியர் தொல்காப்பிய விதிகளை அதன் மூலம் ஐந்திரக் கோட்பாட்டை ஏற்கவில்லை என்பது அந்நூலை ஆய்வோருக்குப் புலப்படும். சகரக் கிளவியைத் தாராளமாகவே கையாண்டுள்ளார் அவர்.

இந்த அகத்திய-ஐந்திர மோதல் உண்மையாக இருந்தால் சமற்கிருதத்தின் பிறப்பின் பின்னணி (ஆரிய இனப் பின்னணி பொய்யென்பதால்) விளங்கும். ஒரு தமிழ் நூலின் பழமையை ′′மொழித் தூய்மை′′ பற்றிய இன்றைய அளவுகோல் கொண்டு அளப்பது தவறு என்பதும் புரியும்.

குமரிக் கண்டப் பண்பாடு மிகப் பெரிய பரப்பும் கி.மு. 50,000 வரை நீண்டு செல்லும் மிகப்பெரிய கால இடைவெளியையும் கொண்டது. இப்பெரிய பரப்பில் இந்நீண்ட காலத்தினுள் என்னென்ன மக்கள் எங்கெங்கு வாழ்ந்தனர்; அவர்கள் கால வரிசையில் இயற்றியவை என்னென்ன என்பவையெல்லாம் அறிவது மிகவும் கடினமான பணி. ஆனால் தப்பெண்ணங்களை ஒதுக்கிவிட்டு இந்தியப் புராணங்கள் மட்டுமல்லாமல் உலகப் புராணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். ஐரோப்பியப் பழம் புராணங்களை எழுத்தாளர் புதுமைப்பித்தனின் தந்தையார் சொக்கலிங்கம் பிள்ளையவர்கள் தொகுத்து அவை இன்று நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் இருப்பதாகத் தெரிகிறது. அவற்றையும் பயன்படுத்தலாம்.

வரலாற்று மேதையான வில் டூறாண்டு யூதர்களைப் பற்றிக் கூறும்போது தவறென்று மெய்ப்பிக்கப்படாதவரை பைபிளில் கூறப்பட்டிருப்பவற்றையே யூதர்களின் வரலாறாக எடுத்துக் கொள்ளலாம் என்றார். நாமும் கிடைக்கும் தடையங்களைப் பின்பற்றி தன்னம்பிக்கையுடன் நம் குமரிக் கண்ட கால வரலாற்றை எழுதுவோம்.

எழுதியவர்: குமரிமைந்தன்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Sep 14, 2010 10:25 pm

குறிப்பு:
ஆரியர்களும் திராவிடர்களும் ஒன்று தான் என்று சமீபத்தில் நிரூபிக்கப்பட்டுவிட்டது.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 15, 2010 7:53 am

அறியாத வரலாறை பகிர்ந்தமைக்கு நன்றி.... நன்றி நன்றி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Sep 16, 2010 11:48 am

bhuvi wrote:அறியாத வரலாறை பகிர்ந்தமைக்கு நன்றி.... நன்றி நன்றி
நன்றி நன்றி புவி.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon Sep 27, 2010 8:05 pm

குமரிகே கண்டமா??
நல்ல ஆராய்ச்சி பிச்ச !

திரு வோடு ரொம்ப முக்கியம் மன்னா !



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 13, 2011 6:32 pm

இத்தகவல்கள் குறித்து தமிழக அரசு சிறந்ததொரு ஆராய்ச்சி நிகழ்த்தி இருக்கலாமே.. சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Apr 14, 2011 3:22 am

குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள். 678642

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Apr 18, 2011 7:01 pm

ithanaiyum padikkavum...

http://www.frontlineonnet.com/stories/20110422280809000.htm



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 18, 2011 7:08 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக