புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_c10நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_m10நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_c10 
64 Posts - 50%
heezulia
நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_c10நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_m10நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_c10நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_m10நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_c10நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_m10நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_c10நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_m10நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_c10நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_m10நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_c10நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_m10நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_c10நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_m10நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகரத்தில் வசிக்கலாம் வாழமுடியாது


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 25, 2010 5:10 am

மனித வாழ்க்கைக்குச் சுகாதாரம் இன்றியமையாதது. சுகாதாரத்தால் மனிதர்கள் நோயற்ற வாழ்வைப் பெறுவார்கள். நோயற்ற வாழ்வே வாழ்வு. நோயால் பீடிக்கப்பட்டவன் விரைவில் மரணமடைவான். அவன் உலகத்தில் உள்ளமட்டும் மற்றவர்க்குப் பெரும்பாரமாக இருப்பான்.

நோய்க்கு காரணம் சுகாதாரக் குறைவேயாம். சுகாதாரம் இருவகைப்படும். ஒன்று இயற்கைச் சுகாதாரம். மற்றொன்று செயற்கைச் சுகாதாரம். இயற்கைச் சுகாதாரம் இறைவன் ஆணை வடிவமாயிருப்பது. செயற்கைச் சுகாதாரம் மனிதர்கள் அறிவுக்கு ஏற்றவாறு இயற்கைப் பொருள்களை மாற்றிச் செய்யும் வசதி.

முற்காலத்தில் நம் பெரியோர்கள் நீண்ட காலம் உலகத்தில் சுகமாக வாழ்ந்து வந்தார்கள். ஒவ்வொருவரும் தொண்ணூறு வயது, நூறு வயது அளவும் சுக வாழ்க்கைப் பெற்றிருந்தனர். ஆயிரம் வருடம், இரண்டாயிரம் வருடம் ஜீவித்திருந்தவர்களையும் நம் பாரதமாதா ஈன்றிருக்கிறாள். மரணமடையாமலே உலகத்தில் வாழும் நெறிகளும் உண்டு. இவைகளை நம்மவர்கள் கட்டுக்கதைகள் என்று சொல்லி எள்ளிநகையாடுகிறார்கள். அதுபற்றி யாமும் பழைய உண்மைகளை விரித்து உரையாடாது செல்கின்றோம். பழைய உண்மைகள் உறுதிப்படும் காலம் நெருங்கியிருக்கிறதென்பதை நேயர்களுக்கு அறிவித்துக் கொள்கிறோம். இப்போது மேல்நாட்டு நாகரிகம் பரவாத இடங்களிலுள்ள ஜனங்கள் நீண்ட நாள் உலகத்தில் ஜீவிக்கின்றார்கள்.

பண்டைக்காலத்து மனிதர் காலையிலெழுந்து உறைவிடத்துக்குச் சிறிது தூரத்திலுள்ள தோட்டம் சென்று, உலாவி, ஊற்று நீரில் மூழ்கிப் பூக் கொய்துஅனுஷ்டானஞ் செய்வர். தோட்டத்தில் உலாவுவதாலும், ஊற்று நீரில் மூழ்குவதாலும், மலர் வாசனையை முகர்வதாலும் மனிதருக்குத் தேக சுகமில்லை என்று கூறுவர் உளரோ?

நித்தியானுஷ்டான முறைகள் யாவும் தேகாப்பியாசத்திற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பது அறிவுடையோர் கருத்து. இடையிடையே இறைவன் திருநாமத்தை உச்சரித்தலால் ஆத்ம சுகமும் உண்டு என்பதை நேயர்கள் கவனிப்பார்களா.

பிறநாட்டார் வழக்கங்களை இந்தியர் மேற்கொள்ளல், மேல்நாட்டு மது மாமிசங்களை உண்ணல், பெண்ணோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியச் சாலைகளில் சிகிச்சை செய்தல், ஏழைகள் குடிசைகளை அழித்து அவர்களை வரிசை வரிசையாகக் கட்டப்பட்ட சிறுவீடுகளில் அடைத்தல், மேல்நாட்டு மருந்துகளை உண்ணல், இத்தேசவொழுக்கத்தை விடுத்தல், பட்டணங்களில் ஜனநெருக்கம், காடுகளை அழித்தல், காலங் குறிப்பிட்டு பெருந்தீனி கொள்ளல், தொழிற்சாலைகளில் தொழிலாளர் நீண்ட நேரம் வேலை செய்தல் போன்ற இன்னோரன்ன காரணங்களால் இந்தியாவின் சுகாதார நிலை குன்றிவிட்டது.

முற்காலத்தில் ஏறக்குறைய எல்லோரும் பிராணாயாமம் செய்து வந்தனர். பிராணாயாமத்தால் தேக சுகம் பாதுகாக்கப்படும். இப்பொழுது பிராணாயாமம் என்ற சொல் இந்நாட்டினதா என்று கேட்போர் பலர் இருக்கின்றனர்.

மக்கள் பிறவியில் பெறுவதற்கரிய இன்பத்தைத் துய்க்கும் வாய்ப்பு உண்டு. இதற்குக் கருவியாக அமைந்துள்ளது உடம்பு. உடம்பால் அறிவு விளக்கமும் இன்பப் பேறும் உண்டாகும். உடம்பு உயிருடனிருந்து துணை புரிவது போலப் பிறிதொன்று துணை புரிவதில்லை. உடம்பு நலன் உயில் நலனாகும். இத்தகைய உடலை நல்வழியில் ஓம்புதல் நலம்.

வைகறைத் துயிலெழு என்பது ஒளவையார் திருவாக்கு. இப்பழக்கம் மிகச் சிறந்தது. பொழுது புலரும் வேளையில் பறவைகளின் ஒலி எழும் நேரத்தில் உறங்குவது தவறு. வைகறைத் துயிலெ ழுந்து நடந்து காலைக் கடன்களை முடித்தல் வேண்டும். பின்னர் உடற்பயிற்சி செய்வது பொருத்தம். பயிற்சியின் போது இளஞாயிற்றின் உயிர்ப்பொளி படருங் காற்றில் மூழ்குவது இயல்பாகவே நிகழும்.

உடற்பயிற்சி பலவகை. அவற்றுள்இங்கே குறிப்பிடத்தக்கன சில. அவை தண்டாலெடுத்தல், பந்தாடல், குதிரையேற்றம், நீந்தல், உலவுதல், ஆசனங்கள் முதலியன இவற்றுள் ஏதாவது ஒன்றைக் கொள்வது ஒழுங்கு.

ஆசன முறைகள் சாலச் சிறந்தன. இம்முறைகள் இப்பொழுது மீண்டும் உயிர் பெற்று வருதல் நாட்டின் முன்னேற்றத்துக்கு அறிகுறியாகும். ஆசனப்பயிற்சி அழுக்குகளையெல்லாந் தள்ளி உடம்பைப் பொற்பெடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.

பொருந்திய உணவு என்பது கவனிக்கத்தக்கது. நம் முன்னோர் உண்ட உணவு மிகப் பொருந்தியது. அந்நாளில் தீட்டிய அரிசி இல்லை. காப்பி, தேநீர், ஓவல்டய்ன், கோக்கோ முதலிய பானங்கள் இல்லை. மேலைநாட்டுக் குடிவகைகள் இல்லை. ஹோட்டல்களில்லை. மிட்டாய்க் கடைகளில்லை. பிற ஆபாசங்களில்லை. முன்னோர் கொழியல் அரிசிச் சோற்றை உண்டனர். பசிய காய்கறிகளைத் தின்றனர். கீரைவகைகளை அருந்தினர். நீர்மோரையும் இளநீரையும் பருகினர். நீண்ட காலம் வாழ்ந்தனர். நல்ல பிள்ளைகளைப் பெற்றனர். இக்கால நாகரீகத்தில் _ நகர வாழ்வில் _ ஹோட்டல்களின் மிடைவில் மக்கள் எங்கனம் பொருந்திய உணவு கொள்ளுதல் கூடும்? இது நிற்க.

இக்கால நாகரீக முறைப்படி அமைந்துள்ள நகரங்களும், அவற்றைப் பார்த்து நடிக்கும் கிராமங்களும் இயற்கை வாழ்வை வகுத்து வருதல் கண்கூடு. நகரமாந்தர் போதிய ஒளியுங் காற்றும் படர்ந்து படியாத மாட மாளிகைகளில் இருக்கிறார். பசுஞ்சோலைகளை அவர் காண்டலவரிது.

நினைத்த போதெல்லாம் காப்பிக் கடைகளில் நுழைந்து குடித்துக் குடித்து வெளியேறுகின்றனர். நூற்றுக்குத் தொண்ணூறு பேர் உடற்பயிற்சி செய்வதில்லை. அவர் காண்பன கேட்பன படிப்பனவெல்லாம் பரபரப்பூட்டுவன. பரிதாபம்!

நன்றி குமுதம் ஹெல்த் 2007.






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக