புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
69 Posts - 58%
heezulia
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
111 Posts - 59%
heezulia
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 12, 2010 4:02 pm


மனித ஆற்றல்களில் மகத்தானது நினைவாற்றல். நினைவுத்திறன் என்பது மனிதனின் அரிய சொத்து, மனித குலத்தின் அனைத்து அறிவுகளுக்கும் அடிப்படை தனிமனித ஆளுமை மலர்ச்சிக்கும் முழுமைக்கும் நினைவுத்திறனே ஆதாரம். நினைவாற்றலே இல்லாத, நினைவாற்றலை முற்றிலும் இழந்த மனித வாழ்க்கையை கற்பனை செய்து பார்ப்பதுகூடக் கடினம். ஞாபக சக்தி எனப்படுவது. மனிதன் அனுபவித்த, கற்றறிந்த விஷயங்களை மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வரும் செயல்பாடாகும். நல்ல நினைவாற்றல் பெற்றுள்ள மனிதன் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்த இயலும்.

“ஞாபக மறதி” எனும் பலவீனம், அனுபவம் இல்லாத மனிதன் உலகில் யாரும் இருக்க முடியாது. திருக்குறளை ஒப்பித்தவரானாலும், உலக நாடுகள், சரித்திர நிகழ்வுகள், ஆயிரக்கணக்கான பெயர்கள் என எதையும் தலைகீழாகச் சொல் பவரானாலும் அவர்களுக்கும் ஒரு குறிப்பிட்டளவு மறதி இருக்கவே செய்யும். (தளிர்நடைக் குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியோர் வரை) மறதி இல்லாத மனிதர் இல்லை. மனிதனுக்கு மனிதன் மறதியின் அளவு களும், தன்மைகளும், பாதிப்புகளும் மாறுபடும். மறதிகள் பலவிதம்.

சிலர் பழகிய மனிதர்களின் பெயர்கள் அல்லது முகங்கள் அடிக்கடி மறந்து விடுகின்றனர். சிலர் பொருட்களின் பெயர்களை மறந்து விடுகின் றனர். சிலர் தம் உடைமைகளை, பொருட்களை எங்கே வைத்தோம் என்பதை மறந்து விடுகின்றனர். சிலர் செய்ய வேண்டிய முக்கியக் கடமைகளைக் கூட மறந்து விடுகின்றனர். சிலர் படித்த நூல்களை, நூலிலுள்ள முக்கிய கருத்துக்களை மறந்து விடு கின்றனர். சிலர் கடந்த கால விஷயங்களை மறந்து விடுகின்றனர். சிலர் நிகழ்காலத்தில் சிறிது நேரத்திற்கு முன் நடந்தவைகளைக் கூட மறந்து விடுகின்றனர்.

உலகில் நிலவும் சகல தேசத்து நாட்டுப் புறக் கதைகளிலும் மறதி நாயகர்களைப் பற்றிய கதைகள் ஏராளம் இருக்கின்றன. விசித்திரமான மறதிப் பேர் வழிகளின் நடவடிக்கைகளை கவனித்தால் சிரிப்பும் அனுதாபமும் சேர்ந்தே பிறக்கும்.

விஞ்ஞானி ஐன்ஸ்டின் தனது நண்பரின் இல்ல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நிறைவடைந்து விருந்தினர்கள். எல்லோ ரும் விடைபெற்றுச் சென்ற பிறகும் ஐன்ஸ்டின் மட்டும் இருக்கையில் அமர்ந்தபடி எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். நேரம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. ஐன்ஸ்டின் எழுந்து செல்வதற்கான அறிகுறியே தெரியவில்லை. நண்பர் யோசித்தார் “நீங்கள் உங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள்” என்று எப்படிக் கூற முடியும்? “அடடா நேரமாகிவிட்டது போலிருக்கிறதே!” என்றார். அதனைக் கேட்ட ஐன்ஸ்டின் ஆம் நண்பரே நேரமாகிவிட்டது! இன்னும் நீங்கள் புறப்படவில்லையா? குடும்பத்தோடு என் வீட்டிலேயே இருக்கிறீர்களே?” என்றார். நண்பர் அதிர்ச்சியடைந்து உண்மையை விளக்கி ஐன்ஸ்டினின் மறதியைக் கலைத்து நிஜத்தை நினைவூட்டி அனுப்பி வைத்தார். சராசரி மனிதர்கள் முதல் தலைசிறந்த மனிதர்கள் வரை நினைவாற்றல் குறைபாடு இல்லாத மனிதர்கள் கிடையாது.

மறதி எனும் நுட்பமான பிரச்சனை பெரும் பாலும் மனநலத்தோடு தொடர்புடையது. இது குறித்து உளவியல் நிபுணர்கள் மறதிக்கான சில முக்கிய காரணங்களை சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆர்வமின்மை
முயற்சியின்மை
தாழ்வு மனப்பான்மை
எதிர்மறை எண்ணம்
பயம், அதிர்ச்சி, மனச்சோர்வு, துக்கம், வெறுப்பு போன்ற உணர்ச்சி மற்றும்
மனபாதிப்புகள்
மன ஒருமையின்மை
கவனக்குறைவு
தப்பிக்கும் மனோபாவம் (Escapist Tendency)
கடந்த காலச் சிந்தனைகளில் அல்லது எதிர்காலக் கனவுகளில் மூழ்குதல்.
புகை, மது, போதைப் பழக்கங்கள்
உடல்நலக் குறைபாடுகள், உடல்நோய்கள்

(குறிப்பாக தொற்றாத வகை நோய்கள் - வலிப்பு, ரத்தசோகை, உயர் (அ) குறை தைராய்டு சுரப்பு, மாதவிடாய் நிற்கும் கால ஹார்மோன் பிரச்ச னைகள்)

இத்தகைய காரணங்கள், பின்னணிகள், சூழ்நிலைகள் சிறுவயதினடம் நினைவுக் குறைவை பலவீனத்தை (memory weakness) ஏற்படுத்துகின்றன. இளம் பருவத்தில், நடுத்தரவயதில் அதிகளவு மறதியை ஏற்படுத்துகின்றன. முதுமையில் பேரளவிலான மறதியை, நினைவு அழிவை ஏற்படுத்துகின்றன. அத்தகைய முளை பாதிப்பினை Amnesia என்றும், Dementia என்றும், Alzheimers Disease என்றும் மருத்துவ உலகம் வகை பிரிக்கின்றன.

உலகின் தலைசிறந்த அதியற்புத கணிணி மனித மூளையே. இதனுள் நம்புவதற்கரிய வகையில் நினைவுகள் பதிந்துள்ளன. மூளையின் கோடானு கோடி செல்கள் மனிதன் விழித்துள்ள போதும் தூங்கும் போதும். இயங்கிக் கொண்டே இருக்கின்றன. அவை எத்தனை எத்தனையோ விஷயங்களை பலவிதங்களில் பதிவு செய்து கொண்டும் அசைபோட்டுக் கொண்டுமிருக்கின்றன. வாழ் நிலை, சூழ்நிலை, உடல்நிலை, மனநிலைக் காரணங்களால் நினைவுத்திறனில் சரிவு ஏற்படுகிறது. இப்பிரச்சனை வயது பார்த்து வருவதில்லை. முதுமையில் பல்வேறு உடலியல் காரணங்களால் மறதி சற்று அதிகமாக இருக் கலாம். ஆயினும் எல்லா வயதினருக்கும் மறதி ஏற்படக் கூடும். இருப்பினும் மறதி அல்லது ஞாபக சக்திக் குறைபாடு என்பது மாணவர்களோடும், பாடங்களோடும் மட்டுமே தொடர்புடையவையாகக் கருதப்படுகிறது.

ஒரு மாணவருக்கு ஆர்வம், விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் புரிந்தாலும் புரியா விட்டாலும் எல்லா பாடங்களையும் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் எதிர்ப்பார்க் கின்றனர். இன்றைய கல்விமுறையில் மாணவரின் இயற்கையான விருப்பங்களும், திறன்களும், படைப் பாற்றலும் பரிமளிப்பதற்குப் பதிலாக மழுங்கடிக்கப்படுகின்றன. கல்வி என்பது மாண வரின் ஆளுமையை மலரச் செய்து முழுமை பெறச் செய்ய வேண்டும் எனும் விவேகாநந்தரின் வழி காட்டுதலை நமது கல்வி நிறுவனங்கள் தூர எறிந்துவிட்டன. மாண வரை மார்க் வாங்கும் எந்திர மாக - விடை எழுதும் எந்திரமாக - உருப்போடும் எந்திரமாக மாற்றி விட்ட பெருமை நம் கல்விக்கு உண்டு. இதனால் கோடானுகோடி சிறுவர்களின், இளையவர்களின் இயல்பான திறன்களும், உற் சாகத் துடிப்புகளும் பாடநூல்களுக்குள் புதைக்கப் பட்டுவிட்டன.

ஹோமியோபதி மருத்துவர்கள் எந்த ஒரு மாணவரின் கல்விப் பிரச்சனையையும் ஆய்வு செய்யும்போது மாணவரின் ‘கவனக்குறைவு’ ‘ஞாபகச் சக்திக் குறைவு’ என்று மட்டும் பொதுப் படையாக அணுகுவதில்லை அவரது மனநிலை, உடல்நிலை, விருப்பு, வெறுப்பு, கடந்த கால நோய்கள், பெற்றோர் உடன் பிறந் தோர் பற்றிய விவரங்கள், குடும்பப் பின் னணி, வகுப் பறைச் சூழல் என்று பல் வேறு கோணங்களில் ஆய்வு செய்து பிரச்ச னைகளின் மையப் புள்ளி யைக் கண்டறிவார்கள். அதன் அடிப்படையக் ஆலோசனை களும் சிகிச்சைகளும் வழங்குவார்கள்.

சிலமாணவர்களுக்கு நினைவாற்றல் அபார மாக அமைந்திருந்தும் அவர்களது இயல்பும் சுபாவமும் படிப்புடன் காலகதியோடு ஒத்துப் போகாமல் அமைந்துவிடும். அன்றாடம் சிறிது நேரம் படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளாமல் தேர்வு நேரங்களில் மட்டும் விழுந்து விழுந்து படித்து மூச்சுத் திணறுவார்கள். இதனால் உடல்நலமும் மனநலமும் கெடும். இறையன்பு அவர்கள் கூறும் கதையொன்று ஓர் இளைஞர் நன்கு வளர்ந்த பசுமாடு ஒன்றைத் தூக்கி மார்பில் அணைத்து ஊரைச் சுற்றி வந்தார். ஊர்காரர்கள் வியந்து இவ்வளவு பெரிய பசுவை உன்னால் எப்படியப்பா தூக்க முடிந்தது? என்று கேட்டனர். இது கன்றாக இருந்த நாளிலிருந்தே தினம் தினம் தூக்கித் தூக்கிக் கொஞ்சுவேன் விளையாடுவேன். அது பழகிவிட்டது. வளர்ந்து கனம் கூடினாலும் இப்போது எளிதில் தூக்க முடிகிறது. என்று இளைஞர் பதிலளித்தார்.

பள்ளிப் பாடங்களும் படிப்புகளும் அப்படித்தான். தினமும் படித்துவந்தால் மொத்த கனம் குறையும். ஒருவருடப் பாடங்களை திடீரென ஓரிரு நாளில் தூக்கிச் சுமக்க முற்பட்டால் மூளை தாங்குமா? 365 நாட்கள் தினமும் சிறிதும் நேரம் உழைப்பதைத் தவிர்த்துவிட்டு மூன்று நாளில் அல்லது மூன்று மணி நேரத்தில் முழு வெற்றி பெறுவது முடிகிற காரியமா?

பலநி௧௨௩ நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 4:18 pm

///ஆர்வமின்மை
முயற்சியின்மை
தாழ்வு மனப்பான்மை
எதிர்மறை எண்ணம்
பயம், அதிர்ச்சி, மனச்சோர்வு, துக்கம், வெறுப்பு போன்ற உணர்ச்சி மற்றும்
மனபாதிப்புகள்
மன ஒருமையின்மை
கவனக்குறைவு
தப்பிக்கும் மனோபாவம் (Escapist Tendency)
கடந்த காலச் சிந்தனைகளில் அல்லது எதிர்காலக் கனவுகளில் மூழ்குதல்.
புகை, மது, போதைப் பழக்கங்கள்
உடல்நலக் குறைபாடுகள், உடல்நோய்கள்///

இந்த symptoms எல்லாம் எனக்கும் இருக்கு தாமு! நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் 440806



நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக