புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_c10பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_m10பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_c10 
306 Posts - 42%
heezulia
பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_c10பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_m10பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_c10பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_m10பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_c10பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_m10பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_c10பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_m10பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_c10பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_m10பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_c10பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_m10பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_c10 
6 Posts - 1%
prajai
பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_c10பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_m10பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_c10பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_m10பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_c10 
4 Posts - 1%
manikavi
பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_c10பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_m10பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 24, 2010 5:01 am

பரம்பொருளே தேவியிடை பாதி எடுத்தவனே
கரமெடுத்து வேண்டிக் கடைக்கண் பார் என்றேன்
சரம்தொடுத்துப் பாடியன்று தருமிக்கு பாட்டெழுதி
வரம்கொடுத்த வள்ளலென் வாழ்வுக்கும் ஈயாயோ

மரம் பழுத்துக் கனியும், மழை நீரும் தருமே
உரமெடுத்து விளைபயிரும் உண்ணப் பசுபாலும்
தரும்போது, விண்ணும் தலை சுற்று முலகும்
கருப்பொருளே படைத்தாய், கவி எழுதித்தாராயோ

வெறும் நிலையில் நின்று விடைதெரியா தொருமகனாய்
நறும் புகையும் தேன்கனியும் நாள்அலர்ந்தபூவெடுத்து
அறுஞ்சுவை தின்பண்டம் அளித்தே வணங்கியிவன்
குறுங்கவிதை ஒன்றெழுதிக் கொடு வென்றே தாழ்பணிந்தேன்

வரம் தாரா வசந்தங்கள் வைத்த தலைப்பதற்கு
சிரம்தாழ்த்தி வணங்கினேன் சிறிதாய் கவியெழுதி
தரம் ஒன்றுக்கு ஐந்துமுறை தவறா குறை களைந்து
பரம்பொருளே மின்னஞ்சல் பார்த்தெனக்கு அனுப்பாயோ!



Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Nov 24, 2010 12:50 pm

வரம் தாரா வசந்தங்கள் வைத்த தலைப்பதற்கு
சிரம்தாழ்த்தி வணங்கினேன் சிறிதாய் கவியெழுதி
தரம் ஒன்றுக்கு ஐந்துதரம் அழகாய் குறை களைந்து
பரம்பொருளே மின்னஞ்சல் பார்த்தெனக்கு அனுப்பாயோ!

மோனை விளையாடும் மோனத்தவ மிதுவோ
சானை பிடித்த சவரக் கத்தியினைப்போல்
பானை சோற்றுக்கு பதமொரு சோறினைப்போல்
ஊனை பிழிந்து உருவான உன்கவிதை
கானை பிளந்து கைலாசன் காதெத்தும்
வீணே புலம்பாது விடியும்வரை காத்திருப்பாய்.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 24, 2010 1:15 pm

தோழரே எனக்கும் சேர்த்து கேளுங்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 24, 2010 3:14 pm

வினுப்ரியா wrote:தோழரே எனக்கும் சேர்த்து கேளுங்கள்


அடடா இப்பதானே கேட்டிங்க! அவர் அப்பவே கொடுத்திட்டு போயிட்டாரே. இதோ

வரம் தராத வசந்தங்கள்
(இது போட்டிக்கில்லை EXTRA . போட்டிக்கு வேறு தருவேன். இது இறைவன் [மனதுக்குள்[] தந்த பாட்டு)


வரமொன்று வேண்டினேன் பெண்ணே -நல்
வடிவே நல்வாடாத மலரே செந்தமிழே
உரம்கொண்டு நான்பாடி உயிரே - உன்னை
உலகெங்கும் இல்லாத உயர்வாழ்வு தந்து
பரவிடும் உயர்வான வானமங்கு -நீள்
பரந்தோடும் மேகமாம் பஞ்சென்ற தேரில்
விரைந்தோடி விளையாடச் செய்யும் -அந்த
விதமான உயரின்பம் விளைந்தாக வேண்டும்

மணம் கொண்டமலராகும் உந்தன் -மீது
மாறாத அன்பெனும் சுவைகொண்டுநானும்
குணம் கொண்ட வண்டாகக் கூடி - ஒரு
குறைவற்ற இன்பங்கள் பெறவேண்டும் ஆடி
பணமென்று பின்னோடும் பூமி - இதில்
பண்பான உள்ளங்கள் குறைவென்று ஆகி
வனம் கொண்ட விலங்கான வாழ்வில் - வேறு
வகையாக நான் மாறும் வாழ்நிலை வேண்டும்

திசையெங்கும் சுழன்றோடும் காற்றில் -நீயும்
திருமேனி சிறகுகள் கொண்டே பறந்து
அசைந்தோடி வலம்வந்து புவியில் - கண்ணே
அயர்வாக குளிரோடும் ஆற்றோரம் நிற்க
பிசைந்தாசை ருசியோடுஅமுதம் - நான்
பேசுந்தமிழ்கொண்டு பாவென்று ஊட்ட
இசைகொண்டு நீபாட நானும் - மாலை
இரவாகும்வரை நின்று இன்பங்கள்கண்டு

ஒளிந்தோடிப் பொழில்தன்னில் ஆடிஓர்
உணர்வோடு களித்தேநல் எழில் தன்னைநாடி
களிகொண்டு திரிந்தாட வேண்டும் - வாழ்வு
கனவாகிப் போகாமல் விடிந்தே எழுந்தால்
அழிகின்றவாழ்வாக வேலை - அடிமை
ஆகின்ற நிலைவீடு பிள்ளைகள், நூறு
பழி சொல்லும் மனையாட்டி கோவம் -இன்னும்
பக்கத்து அயல்விட்டுப் பாவங்களாக

கிலிகொண்டு வாழ்ந்திடும் கோலம் - ஒரு
கீழெண்ணம் பணம்வேட்டை கூடாதகூட்டம்
பலிகொண்டும் எவரையும் பார்க்கும் -ஓர்
பரிதாப நிலைகொண்ட வாழ்வதும் வேண்டாம்
நிலைமாற்ற வேண்டினேன் விதியே -அதை
நிச்சயம்மாற்றிடு நினையன்று கேட்டும்
வலிகொண்டுவாழ்கிறேன் இன்றும்- ஏன்
வாரா வசந்தங்கள் வாழ்வில் நிறைத்தாய்?


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Nov 24, 2010 3:38 pm

அண்ணா சவாலுக்கு தயார் ஆகிவிட்டீர் போல.... கவிதை அருமை... போட்டிக்கு வாழ்த்துக்கள் அண்ணா...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Nov 24, 2010 3:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு) Logo12
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 24, 2010 3:54 pm

புவனா wrote:அண்ணா சவாலுக்கு தயார் ஆகிவிட்டீர் போல.... கவிதை அருமை... போட்டிக்கு வாழ்த்துக்கள் அண்ணா...

இது போட்டிக்கு அல்ல. போட்டிக்கு ஒத்திகை. பாடிச் சுரம் சேர்க்கின்றேன். அங்கு வேறு கவி எழுதுவேன்.
எதை வைத்து கவி எழுதுவதென்று சிலவேளைகளில் கரு இல்லாமல் அலையும்போது இப்படிகிடைக்கும் தலைப்புக்களை வைத்து இரண்டுமூன்று கவிதை எழுதத் தோன்றும். எல்லாம் அங்கேபோட முடியாதே அதனால் இப்படி!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 25, 2010 12:25 am

Thanjaavooraan wrote:
வரம் தாரா வசந்தங்கள் வைத்த தலைப்பதற்கு
சிரம்தாழ்த்தி வணங்கினேன் சிறிதாய் கவியெழுதி
தரம் ஒன்றுக்கு ஐந்துதரம் அழகாய் குறை களைந்து
பரம்பொருளே மின்னஞ்சல் பார்த்தெனக்கு அனுப்பாயோ!

மோனை விளையாடும் மோனத்தவ மிதுவோ
சானை பிடித்த சவரக் கத்தியினைப்போல்
பானை சோற்றுக்கு பதமொரு சோறினைப்போல்
ஊனை பிழிந்து உருவான உன்கவிதை
கானை பிளந்து கைலாசன் காதெத்தும்
வீணே புலம்பாது விடியும்வரை காத்திருப்பாய்.



காத்தேன் விழிசரியாக் காவல்கிடந்திட்டேன்
கூத்தன் கொடுப்பனென கொண்டமனதிடத்தில்
சேர்த்தேன் இமையிரண்டு சிறியதுயில் கொண்டு
பூத்தண் ணிதழ்விரிக்கும்போழ்தெழவே விந்தையையா

எண்ணமதில் இருந்து ஏதோ எடுத்துரைத்தான்
சொன்னதமிழ் கண்டு சொல்லெழுதுகோல் கொண்டு
என்னமனம்கூறும் எண்ணமதை எழுதிவைத்தேன்’
சின்னவனுக்கில்லை இதுதிங்கள்முடி கொண்டவனாம்

அன்புடன் கிரிகாசன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 25, 2010 1:16 pm

(பெண்ணொருத்தி)
வெண்ணிலவு தேனிறைக்க
வேளை நடுச்சாமத்திலே
கண்ணிரண்டும் தான்கலக்க
காதல்செய்த மன்னவரே
எண்ணியிவள் உன்னவளாய்
இல்லறமும் கண்டபின்னே
கண்ணியமும் தாழ்ந்துமனக்
காதலுள்ளம் போனதென்ன?

பன்னிரண்டு மணிவரையும்
பக்கமவள் தானிருந்து
சின்னவிரல் கொண்டழைந்து
தேறுமின்பம் காணுகிறீர்
என்னைமனம் நோகவிட்டு
என்னருமைச் சக்களத்தி
மின்கணினி விட்டெனையே
மோகமிடும் வரம் வேண்டும்!

(மாணவன்)
தொந்திவயிறானவனே
தும்பிக்கை விநாயகனே
முந்தி நினை நான்தொழுது
முத்தேங்காய் போட்டுடைத்தேன்
வந்ததொரு சோதனையில்
வாராத சித்தியெண்ணி
நொந்து மனம்வாடுகிறேன்
நின்வரம் ஏன்கூடவில்லை


(கணவன்)
பத்துபவுண் போட்டுவைப்பேன்
பாதிசொத்து தந்திடுவேன்
குத்துமதிப் பாய்வயலும்
கோடிபணம்தேறுமென்றார்
நெத்தியிலே குங்குமத்தை
நீயெடுத்த பின்னாலே
மொத்தம்சொன்ன பொய்யதென்று
முன்னிருந்து பேசுகிறாய்

விட்டுவிட ஆகவில்லை
வைத்தஅன்பும் போகவில்லை
தட்டிநாலு போட்டுஉனைத்
தாய்வீடும் போக்கவில்லை
வட்டியின்றி வாழ்வினிலே
வந்தவளே வசந்தியம்மா
கொட்டி வரதட்சணையும்
கொண்டுவரா வசந்தமடி

(வாலிபன்)
எத்தனை நாள் இங்கிருப்பேன்
இன்பமலர் சுந்தரிகள்
அத்தனையும் பட்டுவண்ண
ஆடைகொண்ட பொற்சிலையாம்
புத்தகமும் கையில்கொண்டு
போகுமெழில் அற்புதமாம்
வித்தகியில் ஒருவள்தானும்
வேண்டும்காதல் வரமீயாளோ

(முடிவு)
சுற்றும்புவி மீதினிலே
சொல்லரிய உள்ளங்கள்
பற்றும் வரம் வேண்டி மனம்
பரிதவிக்கும் வாழ்க்கையடா
கற்பனையில் காணுவது
கையில்வரவில்லையெனில்
குற்றமடா வாழ்வு வரம்
தாராத வசந்தங்களே



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 25, 2010 3:06 pm


போட்டிக் கவிதையை அங்கே பாராட்டிய இருவருக்கும் இங்கே நன்றி கூறுகிறேன்

திங்கள்தனை முகிலணைக்கும்
தீந்தமிழை மொழியணைக்கும்
மங்குமிருள் புவியணைக்கும்
மாலைத்தென்றல் மலரணைக்கும்
பொங்குகடல் அலையணைக்கும்
பூவிழியை இமையணைக்கும்
இஙகுவரும் இதயங்களோ
என்கவியைசொல்லணைத்து
தங்கமென ஊட்டமிட்டு
தமிழ்மனதில் ஊற்றெடுக்க
பங்குதரும் அன்பதற்கு
பலகோடி நன்றிகளாம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக