புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
3 Posts - 6%
prajai
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
2 Posts - 4%
Baarushree
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
2 Posts - 4%
viyasan
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
1 Post - 2%
Rutu
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
1 Post - 2%
சிவா
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
2 Posts - 15%
Rutu
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 09, 2011 1:42 pm

(தன் மகள் காதல்வயப்பட்டாள் என் அறிந்து மணம் முடித்துவைத்த தந்தை
அவள் பிரிந்து அவனோடு வாழச்சென்ற சந்தர்ப்பத்தில் பிரிவுத் துயரை தாங்காது
பாடியது!)


தென்றல் அருகினில் ஓடி வந்து என்னை
தீண்டி உரைத்ததும் என்ன? - அவள்
நின்ற திசைதனில் நேரிருந்து கண்ட
நேசக்கதைகளைச் சொல்ல - சிறு
கன்றென ஏதும் பயமறியா துள்ளி
கன்னிஅவள் கொண்டசின்ன - உளம்
இன்று என்ன படும்பாடென எண்ணியே
ஏங்கும் தந்தைமனம் ஆற்ற!

வந்து தழுவிய வாசமலர் மணம்
வாடும் எனதுடல் நீவி - இன்பம்
தந்து விலகியபோது அவள் எண்ணம்
தாவி எழுந்தது மீள - உயர்
சந்தனமாய் இல்லம் எங்கும் மணத்தவள்
சிந்துகவியெனச் சொல்லும் - குரல்
விந்தையின்று வெறும் வெட்டவெளியென
வேடிக்கையானது கொல்ல!

கைவிரல் பற்றியே கட்டழகன் மீது
காதல்கொண்டாளெனக் கண்டேன் - அவள்
மைவிழிகண்டு மயக்கியவன் என்ன
மாயம் புரிந்தனன் என்றேன் - இவள்
மெய்யுடல் பெற்றவன் மீது கொண்ட உயிர்
மெல்லகரைந்ததும் ஏனோ?- அவன்
மையலிலே இந்த மான்,கிளி, பூங்குயில்
மாறிக்குணம் கொள்ளலாமோ

கண்கள் குளமென ஆகிடவே இங்கு
காணுகின்றேன் ஒரு ஓரம் - சிறு
பெண்ணவள் அன்னையும் பேசமறந்துமே
போனதுமோ வெகு தூரம் இதை
எண்ணிக் கலங்குவ தாகுமோ என்மகள்
ஏற்ற துணை கொள்ளல் தீதோ -ஒரு
வெண்ணிலவு வெறும் வானமதில் என
வீட்டினுள் காய்திட லாமோ


நேற்று மலர்ந்தவள் நேசமுடையவன்
நேரெதிரே வரும்போது -மன
மாற்றமடைந்தவன் மேலே மயங்கிடும்
மாயம்தனை மனமெண்ணி - வரும்
ஆற்றாமை பொங்கிட அஞ்சிநின்றேன் ஒரு
அந்தி வந்த பொழுதோடு - அந்த
வேற்று மனிதனை வேண்டி எனை விட்டு
வேக நடை கொண்ட தேனோ?

ஓடும் நதியென தானிருந்தாள் துள்ளி
ஓசையுட னில்லம் நின்றாள் - அவள்
கூடும்கடல்தனை உள்ளங்கொண்டாள் எனக்
கொஞ்சமறியாது நின்றேன் - தினம்
ஆடும் உலகதில் நாமறியோ மிது
அத்தனை உறுதி என்றேன் -அது
போடும் புவிஅதிர்வோடு குலுங்கிட
பூமி சுழல் கின்ற தென்றேன்

யாவும் எமதென இல்லையம்மா இந்த
ஆவியும் சொந்தமென் றல்லேன் உயிர்
தாவும் உடல்பிரிந் தோடிட மேனியும்
தீயின் சொந்தம் எமதில்லை - ஒரு
பூவும் கொடிசொந்தமில்லையம்மா - இந்தப்
பூமியும் எம்மது இல்லை அந்த
மேவும் வெளி உயர் மேகமலைந்திடும்
வானமும் சொந்தமோ? சொல்லேன்!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 09, 2011 4:59 pm

இதையும் புதுவருடத்துக்காக எழுதினேன். ஒரே மாதிரி வேறு கவிகள் எழுதிவிட்டதால் வெளியிடவில்லை. இப்போதுஇதை தருகிறேன்.

புத்தாண்டு மகளே!

சித்தாடை கட்டிய சின்னப் பெண்ஒருத்தி செல்லநடைநடந்து
புத்தாமரை போலும் பொங்கும் அழகுடன் பக்கமதில் புகுந்தாள்
உத்தமரே உம்மை ஒன்று கேட்பேன் பதில்உண்மை வருமோஎன்றாள்
புத்தரின் வம்சமா பொய்யுரைக்க உண்மைபேசுவேன் கேளாயென்றேன்

இத்தரையில் ஈழம் சுற்றிவந்தேன் எங்கும் ரத்தமும் கத்தியுமாய்
கொத்தலும் வெட்டலும் குண்டுகளுமென அச்சமே மீந்திருக்க
சத்தியதேவனைக் காணவில்லை அங்கு சஞ்சலம் பார்த்திருக்க
முத்தி வெறிஏறும் மூடரும் பேய்களும் முன்னே வந்துஆடுதய்யோ

வைத்தவிதியெல்லாம் வாய்தவறிப் பெரும்குத்துக் கரணம்செய்து
சித்தம்போகும்படி சொல்லிப் பொய்மூட்டையைக் கட்டிஅவிழ்த்துவைத்தே
இத்தரை ஆளும் அரசுகள் காணுது என்ன விநோதமிது
பத்தோடுஒன்றிட்ட பைங்கிளியாள் எனைப் பார்த்து வினவிநின்றாள்

அத்தனையும் வெறுந்தூசு நீயுமிதை உற்றுக்கவனம் கொள்ளு,
செத்தபடிஉயிர் வாழுமோர்அற்புதம் சேயிழை கண்டதுண்டோ
பொத்தென போட்டு அடிக்கப் பலமுள்ள பத்துப்பேர் வாளெடுத்து
ஒத்தைமனிதனை ஒன்றுமில்லாதோனை குத்தியே கொக்கரிக்கும்

சுத்தவீரம்தனைச் சொல்லவும் கேட்டதும் எப்பவும் கண்டதுண்டோ
ரத்தம்வழிந்திட கற்பழித்துக்கொலை பத்துப்பேர் செய்துவிட்டு
பத்திரமாகப் படம்பிடித் தேவைத்துப் பார்த்து மகிழ்ந்து கொள்ளும்
சித்தமிழந்ததோர் செய்கையும் நீஎங்கும் சென்மத்தில் கண்டதுண்டோ

கொத்திப்பேய் புத்தரின் கொள்கை படித்துமே நித்திலமாளுவதை
ரத்தவெறியினில் முத்தி விசர்கொண்டு சுட்டுத்தமிழர்கொல்ல
சத்தியசோதரர் கைகுடுத்துச் சபாஷ் அப்படிப்போடு என்று
முத்தமிடுவதும் எத்தனை காணுது இந்த உலகமது

ரத்தினக் கம்பளம் முற்றம் விரித்தவர் கொத்துற பாம்பு உண்ணும்
வித்தகரை வைத்து வேடிக்கை காட்டியே முத்தமிழைஅழிக்க
கத்துற பாட்டுக்கு சுத்திநடமிடும் முத்தமிழ் கூறுவரும்
’தத்திடத் தோம்’ என தாவிக்குதிப்பது தரணிகண்டதுண்டோ?

கத்தைப் பணத்துக்கு மானமிழந்துமே காட்டிகொடுப்பதுவும்
வெத்துவெறும் பேச்சு அல்லடி பெண்ணே உன் விழிகள் காணவென
சொத்து மணித்தமிழ் ஈழமதில்இங்கு நித்தம் நடக்குதம்மா!
சித்தம்மறுகியும் தீதுஇழைத்தவர் உத்தமரானார் அம்மா

புத்தாண்டுப் பெண்ணே நீபூமியாளுங் காலம் கிட்டடியிலிருக்கு
இத்தனைகோரமும் எம்மினம் சாவதும் இன்னும்நடந்திடுது
செத்திடும் நல்லவர் சத்தியம் காத்தெமை சற்று விடுதலையை
பெற்றிட வைப்பியோ பேசாது காசுக்கு உத்தியோகம் செய்வியோ?

சொல்லி முடித்ததும் என்னபதிலென சற்றுத் தலைதிருப்ப
செல்வியைப் பார்த்திட என்னவிநோதமோ சேயிழை அங்குஇல்லை
தள்ளிஒருதமிழ் தம்பியின் பேச்சுக்கு தன்செவி சாய்த்துநின்றாள்
கள்ளவிழிகள் உருட்டிஅவன்சொல்ல காரிகை நம்பி நின்றாள்

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun Jan 09, 2011 10:03 pm

யாவும் எமதென இல்லையம்மா இந்த
ஆவியும் சொந்தமென் றல்லேன் உயிர்
தாவும் உடல்பிரிந் தோடிட மேனியும்
தீயின் சொந்தம் எமதில்லை -

அருமை வரிகள்........

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Jan 10, 2011 3:59 pm

அருமை இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக