புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனது ஆட்சியின் முடிவை அண்மித்துவிட்டதாக உணரும் கடாபி – இதயச்சந்திரன்!
Page 1 of 1 •
Posted by admin On February 27th, 2011 at 9:04 pm / No Comments
மக்கள் எழுச்சியினால் கொதிநிலைப் பிரதேசமாகியுள்ளது லிபியாவின் கிழக்கு, மேற்கு பகுதிகள். தலைநகர் திரிபோலிக்கு (Tripoli) அடுத்ததாக மக்கள் அதிகமாக வாழும் பென்காசி (Ben Ghazi) பெருநகரம் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிடிக்குள் வந்துவிட்டது.
கிழக்கின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் இழந்த அதிபர் முகம்மர் கடாபி தலைநகர் திரிபோலிக்குள் முடக்கப்பட்டுள்ளார். மக்கள் போராட்டம் வெடித்தவுடன் தொலைக்காட்சியில் தோன்றிய கடாபி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களை எலிகளாகவும் கரப்பான் பூச்சிகளாகவும் வர்ணித்தார்.
சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்தவுடன் மறுபடியும் தொலைக்காட்சியில் முகம் காட்டாமல் உரையாடிய அதிபர் மக்கள் எழுச்சியின் பின்புலத்தில் பின்லாடனும் அவரின் அல்ஹொய்தா அமைப்பும் இருந்து செயற்படுவதாக குற்றம் சாட்டுகின்றார்.
உலகப் பயங்கரவாதியென்று மேற்குலகால் வர்ணிக்கப்படும் பின்லாடனை தனது ஒடுக்குமுறையினை நியாயப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்தினால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உலக ஆதரவு இல்லாமல் போகுமென்று நினைக்கின்றார் கேணல் கடாபி.
42 வருட கால ஆட்சியின் முடிவுரை அண்மித்துவிட்டதாக உணரும் கடாபி, குர்திஷ் இன மக்கள் மீது சதாம் உசேயின் இரசாயனக் குண்டுகளைப் பொழிந்தது போன்று தனது மக்கள் மீதும் அத்தகைய நாசகார யுத்தத்தினை கட்டவிழ்த்துவிடுவாரென்கிற அச்சம் நிலவுகின்றது. உலக வரலாற்றில் தனது மக்களைக் கரப்பான் பூச்சி என்று கூறிய ஒரே தலைவர் இவராகத்தான் இருக்க முடியும்.
வீடு வீடாகச் சென்று ஆர்ப்பாட்டக்காரர்களைத் தேடியழிக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு ஆணையிடுகின்றான் அந்நாட்டின் தலைவன். நிலைமைகளை அவதானித்து முடிவெடுப்போம் என்று ஐ.நா. பாதுகாப்புச் சபை வழமை போன்று நழுவல் போக்கினைக் கடைப்பிடிக்கிறது. ஆட்சிக் கட்டமைப்பு சிதைந்து போன நிலையில் படையினர் ஒதுங்கிக் கொள்ள தனது நம்பிக்கை நட்சத்திரங்களான கூலிப் படையினரை மக்கள் மீது ஏவிவிட்டுள்ளார் கடாபி.
கடாபியின் அராஜகத்தை நிராகரித்த பல இராஜதந்திரிகள், உயர்நிலைப் படையதிகாரிகள் பதவி விலகியுள்ளனர். ஐ.நா. சபையில் லிபியாவைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து தரப்பினரும் கேணல் கடாபிக்கு எதிராகத் திரும்பியுள்ளார்கள்.
லிபியாவின் துணைத் தூதுவராக ஐ.நா. சபையில் பணிபுரியும் இப்ராகிம் (Ibrahim Dabaashi) லிபியாவில் நடப்பது அப்பட்டமான இனப்படுகொலை (Genocide) என்று வெளிப்படையாக உலக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததைக் கவனிக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது இதே விதமான குரல்கள் ஒலித்தன.
அழிவு முடிந்த பின்னர் விசாரணைகளை மேற்கொள்வோமென அடம்பிடித்தது சர்வதேச சபைகள். அனைத்துலக ஊடகங்களை உள்ளே அனுமதிக்காமல் மனிதப் படுகொலைகளை அரங்கேற்றுகிறது கடாபி அரசு.இருப்பினும் அல்ஜசீரா தொலைக்காட்சியூடாக பல காணொளிகள் வெளிவருவதனை லிபியா ஆட்சியாளர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
அங்கு அகப்பட்டுள்ள வெளிநாட்டவர்களை மீட்க ஏறத்தாழ 26 நாடுகள், விமானங்களை, யுத்தக் கப்பல்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. அத்தோடு வெளியேறியவர்கள் நேரில் கண்ட பல கொடுமைகளை உலகிற்கு தெரியப்படுத்துகின்றனர்.
போர் விமானங்கள் மூலம் பொது மக்கள் மீது குண்டுத் தாக்குதலை கடாபி அரசு மேற்கொள்வதாக வந்த செய்தியை உடனடியாக எவரும் நம்பவில்லை. ஆனாலும் குண்டு வீச மறுத்த இருவர் தமது மிராஜ் எவ் ஐ போர் விமானத்தினை வட கடலிலுள்ள மால்ரா தீவில் இறக்கி அங்கு அடைக்கலம் கோரியவுடன் உண்மைகள் அம்பலமானது
.
விமானப் படைப் பிரிவினரும் எழுச்சிக்காரர்களுடன் இணைந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. இத்தனை தகவல்கள் உலக மக்களுக்குத் தெரிந்தாலும் மூடிய அறைக்குள் கூட்டம் நடத்திய ஐ.நா. பாதுகாப்புச் சபையானது கண்டனத்தைத் தெரிவித்து அமைதியாகிவிட்டதுதான் கொடுமை.அதேவேளை, லிபியாவுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டுமெனப் பாதுகாப்புச் சபையில் இம்மாத தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் பிரான்ஸின் அதிபர் நிக்கலாஸ் சாக்கோசியும் தனது மக்கள் மீது போர்ப் பிரகடனம் செய்துள்ள லிபியாவினை தண்டிக்க வேண்டுமென ஜேர்மனிய அதிபர் அஞ்ஞெலா மேர்க்கல் அம்மையாரும் காட்டமான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
“அரபுலீக்’ எனப்படும் மத்திய கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பும் லிபியாவின் பிரதிநிதித்துவத்தை இடைநிறுத்தியுள்ளது. லிபியாவை இறுதியாக ஆண்ட இத்தாலி தேசந்தான் தடுமாறிக்கொண்டிருக்கிறது. ஏனெனில் இத்தாலிய நாட்டின் எண்ணெய் இறக்குமதியில் 20 சதவீதம் லிபியாவிலிருந்துதான் வருகிறது.
1988ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து நகரான லொக்கபீயில் (Lockerbie) நடந்த பனாம் (Panam) விமானக் குண்டுவெடிப்பில் கடாபியை நோக்கியே குற்றச் சாட்டுக்கள் குவிந்தன. 2003இல் அதனை ஏற்று நஷ்டஈடு வழங்குவதாக கேணல் கடாபி உத்தரவாதமளித்ததும் இத்தாலியுடனான உறவு பலமடைந்தது.
இன்று மக்கள் கிளர்ச்சி தீவிரமடைவதால் கடாபி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றால் அடுத்து உருவாகப் போகும் அரசாங்கம் எத்தகைய நிலைப்பாட்டினை மேற்கொள்ளுமென்பதை ஊகித்தறிய முடியாது இத்தாலி தவிக்கிறது. இத்தாலிக்கு மட்டுமல்ல மேற்குலகிற்கும் அபிவிருத்தி அடைந்துள்ள ஆசிய நாடுகளுக்கும் மத்திய கிழக்கில் எற்பட்டு வரும் சடுதியான மாற்றங்கள், புதிய கொள்கைகளை வகுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினை உருவாக்குகின்றது.
அதிலும் பாதுகாப்பு குறித்த ஒரு ஆபத்தான நிலையை இஸ்ரேல் எதிர்நோக்குவதையும் காணலாம். மத்திய கிழக்கில் ஏற்படும் அரசியல் இயங்கு நிலை மாறுதல்கள், சுனாமி போல் எழும் அரசியல் மயப்பட்ட தன்னியல்பான எழுச்சிகள், எகிப்துடன் செய்துகொண்ட 32 வருட கால சமாதான உடன்படிக்கையை சிக்கலுக்குள்ளாக்கி விடுமோவென்று இஸ்ரேல் அச்சமடைகிறது.
வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை மையப்படுத்தி அமெரிக்கா உருவாக்கியுள்ள பாதுகாப்பு கட்டமைப்பின் ஸ்திரத் தன்மையானது குறிப்பாக அதன் நட்பு நாடுகளான எகிப்து, ஜோர்தான், சவூதி அரேபியா, வளைகுடா நாடுகளிலேயே தங்கியுள்ளது.
அதேவேளை, பல தசாப்த காலமாக ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்த அமெரிக்காவின் விருப்புத் தெரிவுக்குரிய நாடுகளிலுள்ள மக்கள் அவ்வொடுக்கு முறைகளுக்கு எதிராக அரசியல் சுதந்திரம், பொருண்மிய உயர்வு பெறுவதற்குப் போராட வேண்டுமென்கிற விழிப்புணர்வினை தற்போது பெற்றுள்ளார்கள் போல் தெரிகிறது.
அரபு உலகின் சமகால நிலைவரங்கள், எழுச்சிக்குரிய கால கட்டத்தில் மையமிட்டுச் சுழல்கின்றது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்கிற இயங்கியல் போக்கில் மத்திய கிழக்கில் ஏற்படும் ஜனநாயக மயமாகும் மாற்றங்கள் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கான அகண்ட வாசலைத் திறந்து தனது கடுமையான கரமான இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு ஆபத்தாகிவிடுமோவென்று அமெரிக்கா கவலையடைந்தாலும் படைவலுவில் இந்த இருவருக்கும் போட்டியாக மத்திய கிழக்கில் எவரும் இல்லையென்பதுதான் யதார்த்தம்.
நன்றி: வீரகேசரி.
மக்கள் எழுச்சியினால் கொதிநிலைப் பிரதேசமாகியுள்ளது லிபியாவின் கிழக்கு, மேற்கு பகுதிகள். தலைநகர் திரிபோலிக்கு (Tripoli) அடுத்ததாக மக்கள் அதிகமாக வாழும் பென்காசி (Ben Ghazi) பெருநகரம் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிடிக்குள் வந்துவிட்டது.கிழக்கின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் இழந்த அதிபர் முகம்மர் கடாபி தலைநகர் திரிபோலிக்குள் முடக்கப்பட்டுள்ளார்.மக்கள் போராட்டம் வெடித்தவுடன் தொலைக்காட்சியில் தோன்றிய கடாபி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களை எலிகளாகவும் கரப்பான் பூச்சிகளாகவும் வர்ணித்தார்.சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்தவுடன் மறுபடியும் தொலைக்காட்சியில் முகம் காட்டாமல் உரையாடிய அதிபர் மக்கள் எழுச்சியின் பின்புலத்தில் பின்லாடனும் அவரின் அல்ஹொய்தா அமைப்பும் இருந்து செயற்படுவதாக குற்றம் சாட்டுகின்றார்.உலகப் பயங்கரவாதியென்று மேற்குலகால் வர்ணிக்கப்படும் பின்லாடனை தனது ஒடுக்குமுறையினை நியாயப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்தினால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உலக ஆதரவு இல்லாமல் போகுமென்று நினைக்கின்றார் கேணல் கடாபி.42 வருட கால ஆட்சியின் முடிவுரை அண்மித்துவிட்டதாக உணரும் கடாபி, குர்திஷ் இன மக்கள் மீது சதாம் உசேயின் இரசாயனக் குண்டுகளைப் பொழிந்தது போன்று தனது மக்கள் மீதும் அத்தகைய நாசகார யுத்தத்தினை கட்டவிழ்த்துவிடுவாரென்கிற அச்சம் நிலவுகின்றது. உலக வரலாற்றில் தனது மக்களைக் கரப்பான் பூச்சி என்று கூறிய ஒரே தலைவர் இவராகத்தான் இருக்க முடியும்.வீடு வீடாகச் சென்று ஆர்ப்பாட்டக்காரர்களைத் தேடியழிக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு ஆணையிடுகின்றான் அந்நாட்டின் தலைவன். நிலைமைகளை அவதானித்து முடிவெடுப்போம் என்று ஐ.நா. பாதுகாப்புச் சபை வழமை போன்று நழுவல் போக்கினைக் கடைப்பிடிக்கிறது. ஆட்சிக் கட்டமைப்பு சிதைந்து போன நிலையில் படையினர் ஒதுங்கிக் கொள்ள தனது நம்பிக்கை நட்சத்திரங்களான கூலிப் படையினரை மக்கள் மீது ஏவிவிட்டுள்ளார் கடாபி. கடாபியின் அராஜகத்தை நிராகரித்த பல இராஜதந்திரிகள், உயர்நிலைப் படையதிகாரிகள் பதவி விலகியுள்ளனர். ஐ.நா. சபையில் லிபியாவைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து தரப்பினரும் கேணல் கடாபிக்கு எதிராகத் திரும்பியுள்ளார்கள்.லிபியாவின் துணைத் தூதுவராக ஐ.நா. சபையில் பணிபுரியும் இப்ராகிம் (Ibrahim Dabaashi) லிபியாவில் நடப்பது அப்பட்டமான இனப்படுகொலை (Genocide) என்று வெளிப்படையாக உலக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததைக் கவனிக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது இதே விதமான குரல்கள் ஒலித்தன.அழிவு முடிந்த பின்னர் விசாரணைகளை மேற்கொள்வோமென அடம்பிடித்தது சர்வதேச சபைகள். அனைத்துலக ஊடகங்களை உள்ளே அனுமதிக்காமல் மனிதப் படுகொலைகளை அரங்கேற்றுகிறது கடாபி அரசு.இருப்பினும் அல்ஜசீரா தொலைக்காட்சியூடாக பல காணொளிகள் வெளிவருவதனை லிபியா ஆட்சியாளர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அங்கு அகப்பட்டுள்ள வெளிநாட்டவர்களை மீட்க ஏறத்தாழ 26 நாடுகள், விமானங்களை, யுத்தக் கப்பல்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. அத்தோடு வெளியேறியவர்கள் நேரில் கண்ட பல கொடுமைகளை உலகிற்கு தெரியப்படுத்துகின்றனர்.போர் விமானங்கள் மூலம் பொது மக்கள் மீது குண்டுத் தாக்குதலை கடாபி அரசு மேற்கொள்வதாக வந்த செய்தியை உடனடியாக எவரும் நம்பவில்லை. ஆனாலும் குண்டு வீச மறுத்த இருவர் தமது மிராஜ் எவ் ஐ போர் விமானத்தினை வட கடலிலுள்ள மால்ரா தீவில் இறக்கி அங்கு அடைக்கலம் கோரியவுடன் உண்மைகள் அம்பலமானது.விமானப் படைப் பிரிவினரும் எழுச்சிக்காரர்களுடன் இணைந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. இத்தனை தகவல்கள் உலக மக்களுக்குத் தெரிந்தாலும் மூடிய அறைக்குள் கூட்டம் நடத்திய ஐ.நா. பாதுகாப்புச் சபையானது கண்டனத்தைத் தெரிவித்து அமைதியாகிவிட்டதுதான் கொடுமை. அதேவேளை, லிபியாவுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டுமெனப் பாதுகாப்புச் சபையில் இம்மாத தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் பிரான்ஸின் அதிபர் நிக்கலாஸ் சாக்கோசியும் தனது மக்கள் மீது போர்ப் பிரகடனம் செய்துள்ள லிபியாவினை தண்டிக்க வேண்டுமென ஜேர்மனிய அதிபர் அஞ்ஞெலா மேர்க்கல் அம்மையாரும் காட்டமான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். “அரபுலீக்’ எனப்படும் மத்திய கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பும் லிபியாவின் பிரதிநிதித்துவத்தை இடைநிறுத்தியுள்ளது. லிபியாவை இறுதியாக ஆண்ட இத்தாலி தேசந்தான் தடுமாறிக்கொண்டிருக்கிறது. ஏனெனில் இத்தாலிய நாட்டின் எண்ணெய் இறக்குமதியில் 20 சதவீதம் லிபியாவிலிருந்துதான் வருகிறது.1988ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து நகரான லொக்கபீயில் (Lockerbie) நடந்த பனாம் (Panam) விமானக் குண்டுவெடிப்பில் கடாபியை நோக்கியே குற்றச் சாட்டுக்கள் குவிந்தன. 2003இல் அதனை ஏற்று நஷ்டஈடு வழங்குவதாக கேணல் கடாபி உத்தரவாதமளித்ததும் இத்தாலியுடனான உறவு பலமடைந்தது. இன்று மக்கள் கிளர்ச்சி தீவிரமடைவதால் கடாபி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றால் அடுத்து உருவாகப் போகும் அரசாங்கம் எத்தகைய நிலைப்பாட்டினை மேற்கொள்ளுமென்பதை ஊகித்தறிய முடியாது இத்தாலி தவிக்கிறது. இத்தாலிக்கு மட்டுமல்ல மேற்குலகிற்கும் அபிவிருத்தி அடைந்துள்ள ஆசிய நாடுகளுக்கும் மத்திய கிழக்கில் எற்பட்டு வரும் சடுதியான மாற்றங்கள், புதிய கொள்கைகளை வகுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினை உருவாக்குகின்றது.அதிலும் பாதுகாப்பு குறித்த ஒரு ஆபத்தான நிலையை இஸ்ரேல் எதிர்நோக்குவதையும் காணலாம். மத்திய கிழக்கில் ஏற்படும் அரசியல் இயங்கு நிலை மாறுதல்கள், சுனாமி போல் எழும் அரசியல் மயப்பட்ட தன்னியல்பான எழுச்சிகள், எகிப்துடன் செய்துகொண்ட 32 வருட கால சமாதான உடன்படிக்கையை சிக்கலுக்குள்ளாக்கி விடுமோவென்று இஸ்ரேல் அச்சமடைகிறது.வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை மையப்படுத்தி அமெரிக்கா உருவாக்கியுள்ள பாதுகாப்பு கட்டமைப்பின் ஸ்திரத் தன்மையானது குறிப்பாக அதன் நட்பு நாடுகளான எகிப்து, ஜோர்தான், சவூதி அரேபியா, வளைகுடா நாடுகளிலேயே தங்கியுள்ளது.அதேவேளை, பல தசாப்த காலமாக ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்த அமெரிக்காவின் விருப்புத் தெரிவுக்குரிய நாடுகளிலுள்ள மக்கள் அவ்வொடுக்கு முறைகளுக்கு எதிராக அரசியல் சுதந்திரம், பொருண்மிய உயர்வு பெறுவதற்குப் போராட வேண்டுமென்கிற விழிப்புணர்வினை தற்போது பெற்றுள்ளார்கள் போல் தெரிகிறது.அரபு உலகின் சமகால நிலைவரங்கள், எழுச்சிக்குரிய கால கட்டத்தில் மையமிட்டுச் சுழல்கின்றது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்கிற இயங்கியல் போக்கில் மத்திய கிழக்கில் ஏற்படும் ஜனநாயக மயமாகும் மாற்றங்கள் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கான அகண்ட வாசலைத் திறந்து தனது கடுமையான கரமான இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு ஆபத்தாகிவிடுமோவென்று அமெரிக்கா கவலையடைந்தாலும் படைவலுவில் இந்த இருவருக்கும் போட்டியாக மத்திய கிழக்கில் எவரும் இல்லையென்பதுதான் யதார்த்தம்.
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
இரு முறை பதிவிட்டு இருக்கீறீர்கள் .ஒரு பாதியை அழித்து விடுங்கள் .
லிபியாவை பற்றிய நல்ல பதிவு
ராம்
லிபியாவை பற்றிய நல்ல பதிவு
ராம்
Similar topics
» தனது பேரக்குழந்தைகளுடன் ஆனந்தமாக விளையாடும் கடாபி
» வைகோ தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்-சிபிஎம்
» தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
» காற்றில் பறக்கிறது ஆட்சியின் மானம்!
» பஞ்சாப்: குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தலை நடத்த காங்கிரஸ் கோரிக்கை
» வைகோ தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்-சிபிஎம்
» தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
» காற்றில் பறக்கிறது ஆட்சியின் மானம்!
» பஞ்சாப்: குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தலை நடத்த காங்கிரஸ் கோரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|