புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
44 Posts - 43%
heezulia
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
4 Posts - 4%
prajai
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
4 Posts - 4%
Jenila
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
1 Post - 1%
M. Priya
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
1 Post - 1%
kargan86
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
1 Post - 1%
jairam
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
8 Posts - 5%
prajai
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
6 Posts - 4%
Jenila
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
4 Posts - 3%
Rutu
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
1 Post - 1%
viyasan
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Mar 12, 2011 10:53 am


ஞாநி

44 வருடங்களாக எங்களை அண்டிப் பிழைத்த கட்சி எங்களை இப்போது மிரட்டுவதா என்று கொதிப்படைந்திருக்கும் தி.மு.க. தொண்டன் நிச்சயம் 63 தொகுதிகளில் காங்கிரஸின் வெற்றிக்காக அரும்பாடெல்லாம் படப் போவதே இல்லை.

தம்முடைய 75 வருடப் பொது வாழ்க்கையின் இறுதியில் இத்தனை பெரிய அவமானத்தை கலைஞர் கருணாநிதி சந்தித்திருப்பது பரிதாபமாகத்தான் இருக்கிறது. அரசியல் சாணக்கியர், ராஜதந்திரி என்றெல்லாம் புகழப்பட்டவரின் அரசியல் கணக்கு அவர் பேரன் வயதில் இருக்கும் ராகுல் காந்தியிடம் அடி வாங்கியிருக்கிறது.

எப்போதும் கண்ணியமாக நடந்து கொள்கிற கூட்டணித் தலைவரான சோனியாவிடம் இதுவரை மிரட்டியே காரியம் சாதித்து வந்த கருணாநிதிக்கு, இனி அந்த மிரட்டல்கள் வேலை செய்யாது என்பது எப்படிப் புரியாமல் போயிற்று என்றுதான் புரியவில்லை. எத்தனை மந்திரி பதவி வேண்டும், யார் யாருக்கு எந்த இலாகா ஒதுக்கப்படவேண்டும் என்பதையெல்லாம் ஒவ்வொரு முறையும் காங்கிரஸை மிரட்டியே சாதித்து வந்திருக்கிறது தி.மு.க. இந்த முறை முடியவில்லை.

அறுபது இடம் வரையில் தர ஒப்புக் கொண்டோம். அதற்குப் பின்னர் இன்னும் மூன்று கேட்டால் எப்படி நியாயம்? அதுவும் எந்தெந்த தொகுதி என்பதை அவர்களே முடிவு செய்யவேண்டுமென்று சொன்னால் எப்படி என்று ஒரு புலம்பல் அறிக்கை வெளியிட்டுவிட்டு அமைச்சரவையிலிருந்து விலகுகிறோம் என்று மிரட்டல் ஆயுதத்தைக் கருணாநிதி கையில் எடுத்தபோது, பழைய காங்கிரஸாக இருந்திருந்தால் நிச்சயம் பயந்திருக்கும்.

இந்த முறை காங்கிரஸ் தி.மு.க.வின் மிரட்டல்களுக்குப் பயப்படப்போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் தெளிவாக இருந்தன. ஆனால் அவை எதுவும் அரசியல் சாணக்கியரான கருணாநிதிக்கு உறைக்கவே இல்லை. முதல்கட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு வந்த காங்கிரஸ் குழுவில் தி.மு.க.வுக்கு ஜால்ரா போடும் தங்கபாலுவை விட ப.சிதம்பரத்துக்கே முக்கியத்துவமும் அதிகாரமும் இருந்ததை நடத்திய பேச்சிலேயே தி.மு.க. உணர்ந்திருக்க வேண்டும். தில்லிக்குச் சென்று சோனியாவிடம் தகவல்களைப் பரிமாறும் போதும், தங்கபாலு, குலாம்நபி ஆசாத் போன்ற தி.மு.க. ஆதரவு நபர்கள் பின்தள்ளப்பட்டனர். முன்பிருந்திராத அளவு ஒவ்வொரு கட்டத்திலும் ராகுல்காந்தியின் பங்களிப்பு இந்த முறை அதிகரித்திருந்ததையும் தி.மு.க. கவனிக்கத் தவறிவிட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக கருணாநிதியின் தி.மு.க மத்திய அமைச்சர்கள் ராஜினாமா மிரட்டல் அறிவிப்பு வெளியான பிறகு, தில்லி காங்கிரஸ் தலைமையிடமிருந்து துளிக்கூட சலனமே இல்லை. பழைய நிலையில் காங்கிரஸ் இருந்திருந்தால், அடுத்த விமானத்தில் குலாம்நபி ஆசாத் சென்னை வந்திருப்பார். பிரணாப் சென்னை வருகிறார், ஆசாத் சென்னை வருகிறார் என்று தி.மு.க தரப்பிலிருந்து பல்வேறு தொலைக்காட்சி சேனல் நிருபர்களிடம் சொல்லி செய்தி வரவழைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் காங்கிரஸிடமிருந்து எந்த அசைவும் இல்லை.

பிரதமரை சந்திக்க அழகிரி, தயாநிதி ஆகியோர் நேரம் கேட்டதும், பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கி விட்டது. அதற்கு என்ன அர்த்தம் என்று தி.மு.க.வுக்கு அப்போதுதான் உறைத்தது. நீங்கள் வந்து ராஜினாமா கடிதங்களைக் கொடுத்துவிட்டுப் போகலாம் என்பதுதான் அதன் அர்த்தம். ராஜினாமா செய்வோம் என்று மிரட்டிக் கொண்டிருப்பது வேறு. கடிதத்தைக் கொண்டு போய் தருவது வேறு. எனவே தி.மு.க. தரப்பிலிருந்து பிரணாப் முகர்ஜி மூலம் சமரசத்துக்குக் கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சோனியாவை அழகிரியும், தயாநிதி மாறனும் சந்தித்த போது எல்லாம் மிகத் தெளிவாக தி.மு.க.வுக் குப் புரிந்தது. முன்பு போல இனி காங்கிரஸை மிரட்ட முடியாது. ஆட்சிக் கவிழ்ந்தாலும் சரி, எனக்குக் கவலையில்லை. ஏழாண்டுகளாக உங்களிடம் கண்ணியமாக நடந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் இப்போது எங்களை மிரட்டுவதை சகிக்க முடியாது என்று சோனியா தெளிவாகச் சொல்லி விட்டார். மிரட்டலுக்கெல்லாம் இனி பயப்படமாட்டோம் என்று தில்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைமை சொன்ன அடுத்த நிமிடமே வாலைச் சுருட்டிக் கொண்டு காங்கிரஸ் சொன்னதற்கெல்லாம் ஒப்புக் கொண்டுவிட்டது தி.மு.க.

வீரமணி வர்ணிப்பில் மானமிகு கலைஞர் கருணாநிதியாக இருந்தவர் இப்போது அவமானமிகு கலைஞர் சரணாகதியாகி விட்டார்.

தன் வழக்கமான வார்த்தை விளையாட்டுகளின் மூலம் தம் முகத்தில் கரி பூசப்பட்டதை மறைக்க முயற்சிக்கிறார் கலைஞர் சரணாகதி. காங்கிரஸுக்கு 63 சீட்டுகள் கொடுத்ததை 63 நாயன்மார்களுடன் ஒப்பிட்டு அவமானத்திலிருந்து பத்திரிகையாளர்களின் கவனத்தைத் திருப்ப முயற்சிக்கிறார்.

‘விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் தோழமை உணர்வுடனும்’ இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இப்போது சொல்கிறார். ஏன் இந்த மனப்பான்மையும் உணர்வும் மூன்று தினங்கள் முன்னால் இல்லாமல் இப்போது முளைத்தன என்பதை அவரால் விளக்க முடியாது. தேவையில்லாமல் பத்திரிகைகள் விஷமம் செய்தன என்று குற்றம்சாட்டுகிறார். உண்மையில் பத்திரிகைகளும் சேனல்களும் தி.மு.க பிரமுகர்கள் ஆஃப் தி ரிகார்ட் என்று சொல்லி வரவழைக்க முயன்ற பொய்ச் செய்திகளையெல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்தன என்பதுதான் உண்மை. காங்கிரஸ் தரப்பிலிருந்து எதுவும் வரவில்லை.

தி.மு.க மிரட்டல் ஆயுதத்தைக் கையில் எடுப்பதற்கு முன்னால் காங்கிரஸ் என்ன கேட்டதோ அதையேதான் இப்போது தந்திருக்கிறது. மொத்தம் 63 தொகுதிகள். எந்தெந்தத் தொகுதிகள் என்பதையும் காங்கிரஸ் தேர்வு செய்யலாம். ஆட்சியில் பங்கு பற்றி பகிரங்க அறிவிப்பு இல்லாவிட்டாலும், அதற்கும் உடன்பட்டே ஆகும் நிலை. போட்டியிடும் 121 தொகுதிகளில் 118 தொகுதிகள் தி.மு.க. வுக்கு என்றால் மட்டுமே தனித்து ஆட்சி அமைக்க முடியும். அதற்கு நிச்சயம் வாய்ப்பு இல்லை. எனவே ஆட்சி அமைத்தால், காங்கிரஸ் உள்ளிட்ட எல்லாக் கூட்டணிக் கட்சிகளுக்குமே ஆட்சியில் பங்கு தரவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

தி.மு.க.வின் மிரட்டல்கள் இந்த முறை புஸ்வாணமான தற்குக் காரணம் என்ன ?

கருணாநிதியின் வீட்டுக் கதவையே சி.பி.ஐ. தட்டும் நிலைக்குக் கொண்டு வந்த ஸ்பெக்ட்ரம் ஊழல்தான். தி.மு.க.வின் அரசியல் வாழ்க்கையை கி.மு. கி.பி போல ஸ்.மு., ஸ்.பி. என்று பிரித்துப் பார்க்கலாம். ராசா பதவி நீக்கப்பட்டதை முதலில் சகிக்க வேண்டியிருந்தது. அந்த இடத்தில் இன்னொரு தி.மு.க. அமைச்சர் நியமிக்கப்படாததை சகிக்க வேண்டியிருந்தது. ராசா கைது செய்யப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஈழத் தமிழர் பிரச்னைக்கெல்லாம் கூட அதிகபட்சம் சில மணி நேர உண்ணாவிரதம்தான். அப்போதெல்லாம் பிரயோகிக்காத ராஜினாமா மிரட்டலை இப்போது தி.மு.க. தலைவர் பயன்படுத்திப் பார்க்கக் காரணம் என்ன ?

அடுத்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டியவர்கள் பட்டியலில் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை மும்பை கம்பெனியிட மிருந்து கடனாகப் பெற்ற கலைஞர் டி.வி. யின் இயக்குனர்களான தயாளு அம்மாளும் கனிமொழியும் இருக்கிறார்கள். இந்த நெருக்கடிச் சூழலில் தொகுதிப் பங்கீட்டை பேரமாக்கி, குடும்பத்தைக் காப்பாற்ற தி.மு.க. தலைவர் செய்த முயற்சிகள் விபரீதமாகிவிட்டன.எல்லாம் நலமாக முடிந்துவிட்டது எனக்கு மகிழ்ச்சிதான் என்று கருணாநிதி சொன்னாலும், விளைவுகள் என்ன ?

சராசரி தி.மு.க. தொண்டன் தன் தலைவர் மீதும் சரி, காங்கிரஸ் மீதும் சரி கடும் எரிச்சலில் இருக்கிறான் என்பதுதான் நிஜம். தம் குடும்ப நலனுக்காக, கட்சியை காங்கிரஸிடம் தலைவர் விற்றுவிட்டார். ஈசன் சிறுத்தொண்ட நாயனாரிடம் பிள்ளைக் கறி கேட்டது போல காங்கிரஸ் கேட்டது. சொந்தப் பிள்ளையைக் காப்பாற்ற, கழகம் என் குடும்பம் என்று சொல்லிவந்த தலைவர், கழகக் குடும்பத்தைக் கறி சமைத்து காங்கிரஸுக்குப் பரிமாறி விட்டார். 44 வருடங்களாக எங்களை அண்டிப் பிழைத்த கட்சி எங்களை இப்போது மிரட்டுவதா என்று கொதிப்படைந்திருக்கும் தி.மு.க. தொண்டன் நிச்சயம் 63 தொகுதிகளில் காங்கிரஸின் வெற்றிக்காக அரும்பாடெல்லாம் படப் போவதே இல்லை.

மறுபக்கம், காங்கிரஸ் கட்சிக்குள் ஏழாண்டுக் காலமாக இருக்கிற அதிருப்தி இப்போது 63 சீட் அறிவித்ததால் தீர்ந்து விடவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலினால் தமிழ்நாட்டில் மட்டும்தான் தி.மு.க.வுக்கு இழப்பு. காங்கிரஸுக்கோ அனைத்திந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கு எதிராக ஸ்பெக்ட்ரம் ஊழல் எதிர்க் கட்சிகளால் பெரிதுபடுத்தப்படுகிறது. தி.மு.க.வைக் கழற்றிவிட்டிருந்தால் இந்தப் பழியிலிருந்து தப்பித்திருக்கலாம் என்றே இளைஞர் காங்கிரஸினர் நினைக்கிறார்கள். ஜெயலலிதா ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடங்கியபோதே நீட்டிய ஆதரவுக்கரத்தை அப்போதே பற்றியிருக்கலாம் என்று நினைக்கும் காங்கிரஸார் தேர்தலில் தங்கள் தொகுதிக்கு வெளியே தி.மு.க.வுக் காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடப் போவதில்லை.

கலைஞர் கருணாநிதியின் சரணாகதியால் தி.மு.க.வுக்கு ஏதாவது உடனடி லாபம் என்றால் அது ஒன்றே ஒன்று தான். காங்கிரஸ் அ.தி.மு.க. வுடன் கூட்டு சேர்ந்துவிடாமல் தடுக்க முடிந்திருக்கிறது. அப்படி ஒரு கூட்டு ஏற்பட்டிருந்தால், தேர்தலில் தி.மு.க.வின் நிலை இன்னும் சிக்கலாகி விடும்.

தி.மு.க, காங்கிரஸ் தொகுதி உடன்பாடு சிக்கல் இருவருக்கும் உணர்த்தும் முக்கியமான உண்மை ஒன்று பாக்கி இருக்கிறது. இரு கட்சிகளுக்கும் நீரா ராடியா போன்ற தரகர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதுதான் அது! நீரா ராடியா இருந்தவரையில் இருதரப்பு பேரங்களும் பரஸ்பரம் சுமுகமாகவே நடந்திருக்கின்றன. இந்த முறை ஒரு நீரா ராடியா இல்லாதது எவ்வளவு பேரிழப்பு தி.மு.க.வுக்கு!


பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Mar 12, 2011 11:10 am

மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி 677196அருமை



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி 812496
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 12, 2011 11:13 am

//கலைஞர் கருணாநிதியின் சரணாகதியால் தி.மு.க.வுக்கு ஏதாவது உடனடி லாபம்
என்றால் அது ஒன்றே ஒன்று தான். காங்கிரஸ் அ.தி.மு.க. வுடன் கூட்டு
சேர்ந்துவிடாமல் தடுக்க முடிந்திருக்கிறது.//

ஞானி ஐயா அருமயான கணிப்பு.... பகிர்வுக்கு நன்றி..



மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Aமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Aமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Tமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Hமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Iமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Rமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Aமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 12, 2011 12:03 pm

உடன்பிறப்பே ,,இதும் ஒருவகை ராஜதந்திரமே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 12, 2011 4:45 pm

எப்படியோ இரண்டு கட்சிக்காரனும் தேர்தல் வேலை செய்யாமல் இந்த இரண்டு கட்சியும் தோத்தா சரி



மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Uமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Dமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Aமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Yமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Aமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Sமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Uமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Dமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Hமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Mar 12, 2011 5:00 pm

மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி 453187 மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி 453187 மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி 453187



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி 812496
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக