புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_m10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_m10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_m10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_m10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10 
4 Posts - 3%
prajai
தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_m10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_m10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_m10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_m10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10 
1 Post - 1%
சிவா
தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_m10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10 
1 Post - 1%
bala_t
தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_m10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_m10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10 
296 Posts - 42%
heezulia
தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_m10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_m10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_m10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_m10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_m10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_m10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10 
6 Posts - 1%
prajai
தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_m10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_m10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10 
4 Posts - 1%
manikavi
தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_m10தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 1:56 pm

கொழும்பு, நவ. 3: விடுதலை புலி அமைப்பின் மறைந்த அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இலங்கையில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (நவ.2) அனுசரிக்கப்பட்டது.

கிளிநொச்சி, வன்னி ஆகிய பகுதிகளில் வாழும் ஈழத்தமிழ் மக்கள் பல மணிநேரம் வரிசையாகக் காத்திருந்து தமிழ்ச்செல்வனின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

இலங்கை மட்டுமல்லாது உலக முழுவதும் எங்கெல்லாம் ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரீஸில் ஈழத்தமிழர்கள் திரண்டு தமிழ்ச்செல்வனின் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

தமிழ்ச்செல்வனின் மறைவு குறித்து புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் கூறுகையில், தமிழ்ச்செல்வன் ஈழத்தமிழ் மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் என்றார். எப்போதும் இன் முகத்தை உடையவர் தமிழ்ச்செல்வன். தனி ஈழப் போராட்டத்துக்கான அவரது பங்களிப்பு ஈடுஇணையற்றது என புலிகளின் இணையதளத்தில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. புலிகள் அமைப்பின் வல்லமைமிக்க அரசியல் பிரிவுத் தலைவராக விளங்கிய தமிழ்ச்செல்வன், 2007-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி இலங்கை ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 1:57 pm

கிளிநொச்சியில் இலங்கை ராணுவம் மேலும் முன்னேற்றம்: புலிகள் பலர் பலி


கொழும்பு, நவ.3: விடுதலைப் புலிகளின் வலுவான இடமாகக் கருதப்படும் கிளிநொச்சியில் உள்ள அக்கராயன்குளம் பகுதியில் இலங்கை ராணுவம் மேலும் முன்னேறியது. அப்போது நடந்த சண்டையில் புலிகள் பலர் இறந்தனர்.

பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் திங்கள்கிழமை இதைத் தெரிவித்தன.

அக்கராயன்குளத்துக்கு வடக்கே 3 கி.மீ. வரை ராணுவம் முன்னேறியுள்ளது. கிழக்கே தெரமுரிகண்டி என்ற இடத்திலும் கடும் சண்டை நடந்துவருகிறது.

கிளிநொச்சியில் அரசகுளம் பகுதியிலும் ராணுவம் வெற்றிகரமாக முன்னேறிவருகிறது.

முல்லைத் தீவு போர்முனையிலும் ராணுவம் முன்னேறிவருகிறது. குமலமுனை- தண்ணிமுறிப்புக்குளம் சாலை வரை ராணுவம் ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது.

அதேபோல, முல்லைத் தீவில் உள்ள ஆண்டான்குளம் பகுதியில் புலிகளின் 2 பதுங்கு குழிகளை ராணுவம் தாக்கியது.

அருகில் உள்ள 4 பதுங்கு குழிகளையும் ராணுவம் கைப்பற்றியது. இந்த இடங்களில் எல்லாம் புலிகளுக்கு கடும் சேதாரம் ஏற்பட்டது.

இப்பகுதியில் புலிகள் வைத்திருந்த 129 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன.

மடம் பகுதியின் வடமேற்கில் ராணுவத்தின் கடும் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பூனெரின் பகுதிக்கு புலிகள் பின்வாங்கினர்.

யாழ்ப்பாணத்தில் முகமலை பகுதியில் 2 இடங்களில் நடந்த சண்டையிலும் ராணுவத்தின் கையே ஓங்கியுள்ளது.

4 தமிழர்கள் சுட்டுக் கொலை: இதனிடையே மட்டக்களப்பில் உள்ள கல்முனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பைக்கில் வந்தவர்கள் சுட்டு தமிழர்கள் 4 பேர் இறந்தனர். மக்கள் கூடுவதற்குள் சுட்டவர்கள் பைக்கில் ஏறி தப்பிச் சென்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் புலிகளாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 1:58 pm

ராணுவத்தை ஏமாற்றும் புலிகளின் விமானங்கள்


கொழும்பு, நவ. 2: இலங்கை விமானப் படையின் கண்களுக்குச் சிக்காமல், விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்துவது எப்படி என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

விடுதலைப் புலிகளிடம் ஒரு விமானம் மட்டுமே உள்ளதாக கருதப்பட்டது. தற்போது இரண்டு விமானங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 28-ம் தேதி கொழும்பு மின் நிலையம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி ராணுவத் தளம் மீது புலிகளின் இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தின.

புலிகள் அமைப்பின் இலகு ரக விமானங்கள் வானில் வட்டமிடுவதை இலங்கை ராணுவம் கண்டுபிடித்து விட்டது. ஆனாலும் அவற்றை சுட்டு வீழ்த்த முடியவில்லை. அதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

கொழும்பு மற்றும் தள்ளாடி ராணுவத் தளங்களில் 12.7 எம்எம் ஏஏ ரக விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளன.

வானில் பறக்கும் எந்த விமானத்தையும் துல்லியமாக சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட அந்த விமான எதிர்ப்பு பீரங்கிகள், புலிகளின் விமானத்தை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் பறக்கும் விமானங்களை மட்டுமே விமான எதிர்ப்பு பீரங்கிகளால் தாக்க முடியும். ஆனால், புலிகளின் விமானங்கள் அதற்கும் தாழ்வாகப் பறந்தன. இதனால் அந்த விமானங்களை தாக்க முடியவில்லை என்று வீரகேசரி இதழ் தெரிவித்துள்ளது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 1:59 pm

அதேபோல், இலங்கை விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்களின் கண்களிலும் புலிகளின் விமானம் மண்ணைத் தூவியுள்ளது.

சீன தயாரிப்பான எப்7 ரக விமானத்தில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. எதிரி விமானத்தின் வெப்பத்தை உணர்ந்து இந்த ஏவுகணைகள் குறி தவறாமல் தாக்கும் திறனுடையது.

ஆனால், புலிகளின் விமானத்தில் வெப்பத்தைக் குறைக்க அதன் என்ஜினை மறுவடிவமைப்பு செய்துள்ளனர். இதனால் விமானத்தின் வேகம் குறைந்தாலும், எதிரி விமானங்களின் இலக்குக்கு எளிதில் சிக்காது.

புலிகளின் விமானம் தாக்குதல் நடத்தியபோது, ராணுவத்தின் எப் 7 விமானம் மூன்று முறை எதிர்கொண்டது. ஆனாலும் ராணுவ விமானத்தால், புலிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த முடியவில்லை என்று லக்பிமா நியூஸ் என்ற இதழ் தெரிவித்துள்ளது.

புலிகளின் விமானங்களில் ரேடார்களின் கண்களுக்குத் தப்பும் ஜாமர் கருவி பொருத்தப்பட்டிருக்கலாம் என்றும் தி சண்டே டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 2:00 pm

ராணுவத்துடன் மோதல்: 29 கடற்புலிகள் பலி


கொழும்பு, நவ. 1: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் 29 கடற்புலிகளை ராணுவத்தினர் கொன்றனர். வடக்குக் கடற் பகுதியில் நடைபெற்ற மோதலில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான ஆறு படகுகளும் மூழ்கடிக்கப்பட்டன.

நடுக்கடலில் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற மோதலில் 16 பேர் காயமடைந்தனர் என்று இலங்கை ராணுவம் தெரிவித்தது.

நடுக்கடலில் சந்தேகப்படும்படியான படகுகளை இலங்கை ராணுவம் கண்டுபிடித்தது. அவை தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானவை என்பதை அறிந்தவுடன் அதன்மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது. இதனால் அவர்கள் தப்பிச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

அதிக வேகத்தில் செல்லக்கூடிய இந்தப் படகுகளில் வெடிமருந்துகளை விடுதலைப் புலிகள் கடத்தியதாகத் தெரிகிறது.

உயிரிழந்த 14 பேரில் 7 பேர் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரிகிறது. காயமடைந்த 16 பேரும் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.

இந்தத் தாக்குதலின்போது இலங்கை விமானப்படையும் ஒத்துழைத்தது. விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு படகுகள் மூழ்கடிக்கப்பட்டன.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலில் ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடுத்தனர். பதிலுக்கு ராணுவமும் தாக்குதல் நடத்தியது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 2:00 pm

இருதரப்பிலும் பயங்கரமான மோதல் நிகழ்ந்தது. கிளிநொச்சியின் வடகிழக்கு பகுதியில் குறிப்பாக வெலிஓயா பகுதியில் விடுதலைப்புலிகளின் தளங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது.

இதனிடையே அண்டங்குளம் பகுதியில் ராணுவம் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது இரண்டு கையெறி குண்டு, 90 கண்ணி வெடிகள், 6 அதிநவீன வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.

வெள்ளிக்கிழமை காலை 8.35 மணிக்குத் தொடங்கிய சண்டை மாலை 4.10 மணி வரை நீடித்தது.

இந்தச் சண்டையில் பல விடுதலைப் புலிகளும், சில ராணுவ வீரர்களும் காயமடைந்ததாகத் தெரிகிறது.

மட்டக்களப்பின் கிழக்குப் பகுதியில் போலீஸôர் 5 கண்ணி வெடிகளைக் கைப்பற்றினர். அத்துடன் ரிமோட் கண்ட்ரோல் கருவிகள், பேட்டரிகள் ஆகியன கைப்பற்றப்பட்டன.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 2:02 pm

புலிகளின் பயிற்சி தளத்தை கைப்பற்றியது இலங்கை ராணுவம்


கொழும்பு, அக்.30: விடுதலைப் புலிகளின் மிக முக்கிய பயிற்சி தளத்தை இலங்கை ராணுவம் வியாழக்கிழமை கைப்பற்றியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நிகழ்ந்து வருகிறது. முன்னதாக கொழும்பு மற்றும் மன்னாரில் ராணுவத்தின் கட்டுப்பாட்டு இடங்களை குறிவைத்து புலிகள் நடத்திய தாக்குதல் இலங்கை அரசை அதிர்ச்சியுற செய்தது.

இந்நிலையில், புலிகளின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்களது முக்கிய தளத்தை இலங்கை விமானப் படைகள் கைப்பற்றியுள்ளன.

பொட்டு அம்மனால் உருவாக்கப்பட்ட பயிற்சி தளம்: பெண் புலிகளின் தற்கொலைப் படை பயிற்சி முகாம் முல்லைத் தீவு பகுதியில் உள்ள வள்ளிபுரத்தில் இயங்கி வருகிறது. புலிகளின் உளவுப் பிரிவு தலைவராக இருந்த பொட்டு அம்மனால் இந்த பயிற்சி தளம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும்.

இந்த தளத்தை குறிவைத்து அந்நாட்டு விமானப் படைகள் வியாழக்கிழமை அதிகாலை முதல் தாக்குதல் தொடுத்தன. இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்தது. நிறைவில் அந்த பயிற்சி தளத்தை இலங்கை படைகள் கைப்பற்றியதாக அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த முகாமில் ஏராளமான பெண்கள் இணைந்து தற்கொலைப் படைக்காக பயிற்சி பெற்று வந்துள்ளனர்.

நாச்சிகுடா: அதேபோல வட மேற்கு கடலோர தளமான நாச்சிகுடா, புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. இப் பகுதியை புதன்கிழமை மாலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 2:03 pm

இலங்கை ராணுவத்தினர் 60 பேர் பலி


வவுனியா, அக். 29: வவுனியா அருகே நடந்த சண்டையில் இலங்கை ராணுவத்தினர் 60 பேர் கொல்லப்பட்டதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து புலிகளின் இணையதளத்தில் புதன்கிழமை வெளியான செய்தி:

வவுனியா அருகே முறிகண்டி -அக்கராயன் பகுதியில் புலிகளின் ஆதிக்கப் பகுதிக்குள் முன்னேற முயன்ற இலங்கை ராணுவத்தினரின் முயற்சியை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். இந்த சண்டையில் ராணுவத்தினர் 60 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் அதிகமான படை வீரர்கள் காயமடைந்தனர்.

புலிகளின் விமானங்கள் பத்திரமாக திரும்பின: மன்னார் ராணுவ தரைப்படைத்தளம் மற்றும் அனல்மின் உற்பத்தி நிலையம் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் விமானங்கள், தங்கள் தளங்களுக்கு பத்திரமாக திரும்பியதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

புலிகள் தாக்குதலால் செவ்வாய்க்கிழமை இரவு கட்டுநாயக விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த இரண்டு பயணிகள் விமானங்கள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை சென்னை விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலை மேற்கோள்காட்டி விடுதலைப் புலிகள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக