புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவறையே சரணம்.... Poll_c10கருவறையே சரணம்.... Poll_m10கருவறையே சரணம்.... Poll_c10 
83 Posts - 51%
heezulia
கருவறையே சரணம்.... Poll_c10கருவறையே சரணம்.... Poll_m10கருவறையே சரணம்.... Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
கருவறையே சரணம்.... Poll_c10கருவறையே சரணம்.... Poll_m10கருவறையே சரணம்.... Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கருவறையே சரணம்.... Poll_c10கருவறையே சரணம்.... Poll_m10கருவறையே சரணம்.... Poll_c10 
6 Posts - 4%
prajai
கருவறையே சரணம்.... Poll_c10கருவறையே சரணம்.... Poll_m10கருவறையே சரணம்.... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கருவறையே சரணம்.... Poll_c10கருவறையே சரணம்.... Poll_m10கருவறையே சரணம்.... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கருவறையே சரணம்.... Poll_c10கருவறையே சரணம்.... Poll_m10கருவறையே சரணம்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவறையே சரணம்.... Poll_c10கருவறையே சரணம்.... Poll_m10கருவறையே சரணம்.... Poll_c10 
125 Posts - 54%
heezulia
கருவறையே சரணம்.... Poll_c10கருவறையே சரணம்.... Poll_m10கருவறையே சரணம்.... Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
கருவறையே சரணம்.... Poll_c10கருவறையே சரணம்.... Poll_m10கருவறையே சரணம்.... Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
கருவறையே சரணம்.... Poll_c10கருவறையே சரணம்.... Poll_m10கருவறையே சரணம்.... Poll_c10 
8 Posts - 3%
prajai
கருவறையே சரணம்.... Poll_c10கருவறையே சரணம்.... Poll_m10கருவறையே சரணம்.... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கருவறையே சரணம்.... Poll_c10கருவறையே சரணம்.... Poll_m10கருவறையே சரணம்.... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கருவறையே சரணம்.... Poll_c10கருவறையே சரணம்.... Poll_m10கருவறையே சரணம்.... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவறையே சரணம்....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 15, 2011 11:13 am

கருவறையே...சரணம் !

கேன்சர் பயத்தை விரட்டும் சாந்தா

''திங்கள் முதல் வெள்ளி வரை சென்னை அடையார் கேன்சர் மருத்துவமனையில் இருந்து மொபைல் வேன் மூலம் சென்னையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குப் போய், அங்கிருக்கும் பெண்களை, புற்றுநோய் குறித்த டெஸ்ட்டுக்கு அழைக்கிறோம். ஆனால், 50 சதவிகித பெண்கள் வர மறுத்துவிடுகிறார்கள். டெஸ்ட்டுக்குப் போனாலே, கணவர் வீட்டினரால் ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்கிற பயமும், கூச்சமும்தான் அவர்களை இப்படித் தயங்க வைக்கிறது.

புற்றுநோய் மிகக் கொடியதுதான் என்றாலும், ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டால் முழுமையாக குணப்படுத்திவிட முடியும். இந்த நம்பிக்கை பெண்களுக்கு ஏற்படும்போதுதான் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து அவர்கள் மீளமுடியும்!''

- அக்கறையும் ஆதங்கமும் ஒருசேரச் சொல்கிறார் சென்னை, அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி.சாந்தா.

நவீன பரிசோதனைகளும் சிகிச்சை முறைகளும் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும், 'புற்றுநோய் குணப்படுத்த முடியாத ஒன்று’ என்ற கருத்தே பெரும்பாலான மக்களிடையே நிலவுகிறது. இந்தியப் பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் கர்ப்பப்பைப் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளதாக மருத்துவ ஆய்வுகள் அபாயம் உரைக்கும் நிலையில், பெண்களுக்கான விழிப்பு உணர்வு குறித்து மேலும் விளக்குகிறார் டாக்டர் சாந்தா.

''ஆண்டுக்கு 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் அந்த எண்ணிக்கை அதிகரித்துகொண்டே இருக்கிறது. 1984-ம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் ஆண்டுக்கு 4 லட்சத்து 93 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இப்போது 10 லட்சமாக உயர்ந்திருப்பதுதான் வேதனை. அதிலும், 55 சதவிகித பெண்கள் கர்ப்பப்பை, மார்பகம், வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். குறிப்பாக, நகர்ப்புறப் பெண்கள் மார்பகப் புற்றுநோயாலும், கிராமப்புறப் பெண்கள் கர்ப்பப்பைப் புற்றுநோயாலும் பெருமளவு பாதிக்கப்படுவதும் தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்த விழிப்பு உணர்வு கிராம மக்களிடம் முழுமையாகச் சென்றடையவில்லை என்பதே வருத்தத்துக்குரிய விஷயம். இதற்கு கல்வி அறிவு இல்லாததும் போதிய விழிப்பு உணர்வு இல்லாததும்தான் காரணம்'' என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்திய டாக்டர் சாந்தா,

''உடலில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற, அதீத வளர்ச்சி நிலைதான் புற்றுநோய். இது கட்டியாகவோ, ஆறாத புண்ணாகவோ இருக்கலாம். பெரும்பாலும் நாம் கடைப்பிடிக்கும் வாழ்க்கை முறையும் பழக்கவழக்கங்களுமே புற்றுநோய் ஏற்படக் காரணம். இது தொற்று நோய் கிடையாது. எந்த வயதினருக்கும் வரலாம். சில வகை புற்றுநோய்கள் பரம்பரையாகவும் வரலாம். தாய், தங்கை, சித்தி, பெரியம்மா, பாட்டி போன்ற ரத்தம் சம்பந்தப்பட்ட உறவுக்குள் புற்றுநோய் இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கும் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம். ஆரம்ப நிலையில் உள்ள ஒரு புற்றுநோயாளியைப் பார்த்த மாத்திரத்தில் கண்டுபிடித்துவிட முடியாது. நோயின் ஆரம்ப நிலையில் வலி இருக்காது. நோய் முற்றிய நிலையில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்தே சொல்ல முடியும். அதனால், அவ்வப்போது முறையாகப் பரிசோதனை செய்வதுதான் உகந்தது'' என்றவர், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளையும் அடுக்கினார்.

''இளம் வயதிலேயே திருமணம் செய்து பல முறை கருத்தரிப்பது, கருத்தடை மாத்திரைகளை அதிக அளவில் உபயோகித்தல், பல ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளுதல், பிறப்பு உறுப்புகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாதது இந்த காரணங்களால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும், மாதவிடாயின்போது அதீத ரத்தப்போக்கு, மாதவிலக்குக்கு இடையில் ரத்தப்போக்கு ஏற்படுவது, மாதவிலக்கு முழுவதும் நின்றபின் வெள்ளைப்படுதல், உடலுறவின்போதோ அல்லது பின்போ ரத்தக்கசிவு ஏற்படுவது போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகள்.

அதற்காக அதிக ரத்தப்போக்கு இருந்தால் உடனே, 'புற்றுநோயாக இருக்குமோ?’ என்று பயப்படவேண்டாம். என்றாலும், மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால், சிகிச்சை அளிப்பதும் சுலபம். செலவும் அதிகம் ஆகாது. பக்க விளைவுகளும் தடுக்கப்படும். உரிய சிகிச்சை அளித்தால், 80 முதல் 90 சதவிகித நோயாளிகளை முற்றிலும் குணப்படுத்த முடியும்!''

- உறுதியாகச் சொல்லும் சாந்தா, அதற்கான சிகிச்சை முறைகளையும் விளக்கினார்.

''ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஒரு முறை ட்ரீட்மென்ட் எடுத்து குணம் அடைந்திருந்தால், அடுத்த ஐந்தாண்டுகள் வரை எந்த பாதிப்பும் வராமல் இருந்தால்தான் முழுமையாக நோயில் இருந்து அவர் மீண்டிருக்கிறார் என்று நம்ப முடியும். இப்படிப்பட்டவர்களுக்கு மீண்டும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. 10 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகுகூட சிலவகை புற்றுநோய்கள் மீண்டும் வர சிறிது வாய்ப்பு இருக்கிறது. முற்றிலும் குணமடைந்துவிட்டாலும், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்வது அவசியம். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது இது தொடர்பான பரிசோதனைகளைச் செய்துகொள்வது அவசியம்.

பொதுவாக புற்றுநோய்க்கு கதிரியக்க மற்றும் கீமோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. புற்றுநோயாளிகளில் 80 சதவிகித நோயாளிகளுக்கு கதிரியக்கச் சிகிச்சை தேவைப்படுகிறது. இது அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சையுடன் சேர்த்தோ அல்லது நோயின் தன்மை, அது பரவியிருக்கும் நிலைகேற்பவோ அளிக்கப்படும்!'' எனச் சொல்லும் டாக்டர் சாந்தா, நிறைவாகச் சொன்னது... ஒவ்வொரு பெண்ணும் உள்ளத்தில் ஏற்கவேண்டிய மந்திரம்.

''உடல், மன தூய்மையுடன் கோயிலுக்குள் சென்று, கடவுளை தரிசிப்பது பலருக்கும் வழக்கம். அதேபோல், உடல் பலத்தைத் தந்து காலமெல்லாம் பெண்களின் வயிற்றுக்குள் காவல் தெய்வமாக இருந்து, கருவைச் சுமக்கும் கர்பப்பையையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சந்ததி உருவாக்கத்தின் சந்நிதியாக இருக்கும் கர்ப்பப்பையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பது போலத்தான், கடவுள் இருக்கும் அறையையே 'கருவறை' என்றார்கள். எனவே, ஒவ்வொரு பெண்ணுக்கும் முதல் கடமை... தன்னுடைய கருவறையைக் காப்பதுதான்!''


நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கருவறையே சரணம்.... 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 15, 2011 11:21 am

பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை!

மருத்துவமனைக்குச் சென்றால் கணவரால் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயமா? படிக்க வேடிக்கையாகத்தான் உள்ளது! அதே நேரம் இன்னும் நம்மில் சிலர் இவ்வாறு உள்ளார்களே என்று வருத்தமாகவும் உள்ளது!



கருவறையே சரணம்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 15, 2011 11:59 am

உண்மையே சிவா..... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கருவறையே சரணம்.... 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 15, 2011 12:04 pm

உண்மை. இதுபோன்ற கட்டுரைகள் ஈகரையில் இடம்பெறுவது மிகச் சிறப்பு. இதைக் கண்ணுறும் நண்பர்கள் புற்றுநோயின் தன்மை, சரியான நேரத்தில் சிகிச்சை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

நன்றி சிவா அவர்களே.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 15, 2011 2:30 pm

நாம் அனைவரும் படித்து தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள்
பகிர்ந்தமைக்கு நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 3:40 pm

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 24, 2011 12:21 pm

தாமு இந்த பதிவும் முன்னரே உள்ளது
இனைத்து விட்டேன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 24, 2011 12:31 pm

முரளிராஜா wrote:தாமு இந்த பதிவும் முன்னரே உள்ளது
இனைத்து விட்டேன்
சூப்பருங்க சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் கருவறையே சரணம்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 24, 2011 12:55 pm

இதையும் நீக்கி விட்டேன். கோபத்தில் அள்ள தேவை இல்லாமல் எதற்க்கு என்று தான். புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக