புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
21 Posts - 66%
heezulia
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
63 Posts - 64%
heezulia
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிழை


   
   

Page 1 of 2 1, 2  Next

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Apr 15, 2011 4:38 pm

தென்னங்கீற்று என்னை
சுகமாகத் தீண்டவில்லை
சின்னக் குயிலோசை என்
செவிநாளம் வருடவில்லை

பச்சைப் பசுமரங்கள் என்
பார்வையில் படவில்லை
பழங்கதைகள் நான் பேச
ஆட்களும் யாருமில்லை

காகம் கழுதை என்
கண்ணில் பட்டதில்லை
கற்பூரம் கொளுத்தி வைக்க ஒரு
கோவிலும் இங்கு இல்லை

துள்ளும் மீனினங்கள்
தடாகத்தில் கண்டதுவும்
தாவும் வானரங்கள்
ஆரணத்தில் அலைந்ததுவும்
பார்த்த நியாபகங்கள்
பத்திரமாய் வைத்துள்ளேன்

தெருவோர சண்டைகளும்
திருவிழா கூச்சல்களும்
தெருக்கூத்து வசனமும்
தெம்மாங்கு பாடல்களும்
தொலைந்து போனதுபோல
தொடர்ந்து வரும் ஏக்கங்கள்

வருமானம் தேடி நான்
வளைகுடா வந்த பின்

சுகமான புல்வெளியில்
பதியாத தடங்களாய்
வெளிநாட்டு நாட்களெல்லாம்
என் வாழ்க்கை வங்கியில்
செலவாகிப் போகிறது
சொச்சமின்றி அழிகிறது

பொடியான பாலும்
பதம் செய்த பழங்களும்
என்றோ உயிர் விட்டு
இன்று வறுத்த கோழியும்
புரியாத வாழ்க்கை தான்
தெரியாத தேடல் தான்

வியர்வை அத்தனையும்
வங்கியில் கனக்கிறது
வேதனை மட்டுமென்
நெஞ்சினில் நிலைக்கிறது

ஈட்டுகின்ற பொருள்களெல்லாம்
என்ன செய்வேன் தெரியவில்லை
சேர்த்து வைக்கும் சொத்தெல்லாம்
செலவு செய்ய வழியுமில்லை

அதிகபட்சம் ஐந்தாயிரம்
அம்மாவுக்கு அனுப்புகிறேன்
அவள் வாழுகின்ற முதியோர் இல்லம்
அதற்கு மேல் கேட்பதில்லை

அர்த்தமில்லா வாழ்க்கையின்
அடித்தளத்தில் நின்று கொண்டு
என் நிலையில் இங்குள்ள
எல்லோரையும் கேட்கின்றேன்
பிழைப்புத் தேடி நாம்
பிழை செய்து விட்டோமா?



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Apr 15, 2011 5:35 pm

கவிதை மிக அருமை....
தொலைந்து போன நியாபகங்கள்..
தொலைத்து விட்ட நிம்மதிகள்..
அருமையாக உங்கள் வரிகளில்...
பிழை 224747944 பிழை 224747944 பிழை 224747944

வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதுங்கள்...
பிழை 154550 பிழை 154550 பிழை 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பிழை Friendshipcomment54பிழை 00fq051jst
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Apr 15, 2011 5:56 pm

உங்கள் கவிதை எனும் மயிலிறகு
என் மனதை வருடி சென்றது
சகோதரியே!

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Apr 15, 2011 6:54 pm

நன்றி! சூர்யா.,
நன்றி! அறிமுக நாயகன்.



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 8:06 pm

நெற்றியில் அடித்தாற்போன்ற கேள்விகள்.. நாம் எதற்காக இன்னல் படுகிறோம் என்ற ஒரு கேள்வி அனைவருக்குமே ஒரு கட்டத்தில் எழுவதுண்டு..

அன்னைக்கு முதியோர் இல்லம் தஞ்சமாக்கி நாம் நம்மை வளைகுடா நாடுகளுக்கு தஞ்சமாக்கி என்ன சுகம் பெற்றோம் என்ற கேள்வி எழும்போது மனம் அயர்ந்தே போகிறது.

இருப்பினும் நிதர்சன வாழ்க்கை நமமை இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

அருமையான கவிதை ஒன்றை வழங்கிய யாதுமானவளுக்கு நன்றியும் பாராட்டும்..!
சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 15, 2011 10:19 pm

வியர்வை அத்தனையும்
வங்கியில் கனக்கிறது
வேதனை மட்டுமென்
நெஞ்சினில் நிலைக்கிறது
ஒரே கேள்விதான் ஏன் எழுதத் தயக்கம்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

பிழை 38691590

இரா.எட்வின்

பிழை 9892-41
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Fri Apr 15, 2011 10:22 pm

வாவ். . .அற்புதமான வரிகள்.கவிஞருக்கு பற்பல பாராட்டுக்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 16, 2011 8:05 am

"பிழை" என்று பிழையின்றி கவிதை வடித்த நீர்,
பிழையின்றி கூறினோம், மனம் கவரும் கவிஞர் என்று.

அருமையிலும் அருமை. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணீயன்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 16, 2011 8:29 am

அருமையான கவிதை வாழ்த்துக்கள் சூப்பருங்க

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Apr 16, 2011 10:09 am

கவிதை ரசித்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்!

நன்றி திரு. கலை, திரு. எட்வின், திரு. பாலசுப்பிரமணி, திரு. முரளி மற்றும் திருமதி. ப்ரியா



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக