புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_m10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_m10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10 
4 Posts - 27%
சிவா
நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_m10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_m10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10 
310 Posts - 42%
heezulia
நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_m10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_m10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_m10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_m10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_m10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_m10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10 
6 Posts - 1%
prajai
நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_m10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_m10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10 
4 Posts - 1%
manikavi
நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_m10நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 4:18 pm

நானும் நடிகன்தான்; விளம்பர படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த பணத்திற்கு எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ‌தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வருமான வரித்துறைக்கு அளித்த கோரிக்கையில், நடிப்பதன் மூலம் தான் சம்பாதித்த பணத்துக்கு வருமான வரியில் சலுகை வழங்க வேண்டுமென்றும், தன்னை நடிகராகவும் கருத வேண்டுமென்றும், 2001 -02 முதல் 2004-05 வரை விளம்பரத்தில் நடித்து பெற்ற பணத்துக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80 ஆர்ஆரின் கீழ் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்‌தார்.

இதனை வருமான வரித்துறையின் இரு நபர் தீர்ப்பாயம் விசாரித்தது. நான் தொழில்முறையில் கிரிக்கெட் விளையாடி வருகிறேன் என்றாலும், விளம்பரத்தில் நடித்து சம்பாதித்த பணத்துக்கு மட்டும்தான் வரிச்சலுகை கோருகிறேன். இதற்கு முன்பு இதேபோன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்று சச்சின் தரப்பில் கூறப்பட்டிருந்தது. தான் நடித்த விளம்பரங்களையும் அவர் சமர்ப்பித்திருந்தார். சச்சின் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட தீர்ப்பாயம் அவர் வருமான வரியில் சலுகை பெற அனுமதி அளித்தது.

சச்சின் வரிச் சலுகை கோரும் காலகட்டத்தில் அவர் மொத்தம் 20 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இதில் அன்னியச் செலாவணி மூலம் கிடைத்தது சுமார் 6 கோடி என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது. இதற்காக அவருக்கு சுமார் ரூ.6 கோடி வருமான வரி பிடிக்கப்பட வேண்டும். ஆனால் சச்சின் போராடிப் பெற்ற சலுகையால் சுமார் ரூ.2 கோடி மட்டுமே வரிப்பிடித்தம் செய்யப்படும். 4 கோடி ரூபாய் அவருக்கு மிச்சமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ts




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 24, 2011 4:22 pm

அடடா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 24, 2011 4:23 pm

கடைசியில் ஏழை மட்டும் கஷ்டப்பட வேண்டும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
vcnsethumadhav
vcnsethumadhav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011

Postvcnsethumadhav Tue May 24, 2011 4:39 pm

பாவம்பா ! காசில்லாமல் ரொம்ப கழ்டப்படுகிறார்.
கொஞ்சம் விட்டுக் கொடுப்போம். அந்த வருமான
வரி இழப்பை அப்பாவி மாத சம்பளம் வாங்கும்
அப்பாவிகள் தலையில் கட்டி விடுவோம்.
வாழ்க இந்தியா.

-சேதுமாதவன்



நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் 677196சேதுமாதவன்.நா நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் 677196
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 24, 2011 4:41 pm

அப்ப கிரிக்கெட்லிருந்து ஓய்வு பெற்றுவிடுங்கள், முழு நடிகனாக மாறிவிடுங்கள்.





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 4:59 pm

என்ன கொடுமை சார் இது




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 24, 2011 5:00 pm

நம் இந்திய நாடே சச்சின் டெண்டுல்கரை ஒரு மகான் கிரிக்கெட் வீரராக, கிரிக்கெட் கடவுளாக அபத்த வழிபாடு செய்துவருகிறது. ஆனால் சச்சின் டெண்டுல்கரோ தான் ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல ஒரு நடிகர் அல்லது கலைஞர் என்று கூறி வரிச்சலுகை பெற்றுள்ளார். எதற்கு? தான் கோடி கோடியாக பணம் ஈட்டும் விளம்பர வருவாய்க்குத்தான் அவர் வரிச்சலுகை பெற்றுள்ளார்.

இந்தச் சலுகை மூலம் நாட்டிற்கு வருவாய் இழப்பு சுமார் ரூ.5 கோடி!

நாளை ஊழல்வாதிகளுக்கெல்லாம் அவர் ஊழல் செய்த பணத்திலிருந்து 50% வரிச்சலுகை அளிக்கப்படும் என்று ஒரு அபத்த அறிவிப்பை நம் அரசு செய்தால், பலர் தானும் ஊழல் செய்பவர்கள்தான் என்று கூறி வரிச்சலுகை பெறுவார்கள் போலும்! நம் நாட்டில் இப்படியெல்லாம் நடக்காது என்று நாம் எந்த ஒரு அக்கிரமத்தையும் ஒதுக்கி விட முடியாது.

இதற்கு நம் நாட்டின் வருமான வரித்துறையின் இருநபர் ஆணையம் வரிச்சலுகை அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது ஒன்றும் நமக்கு ஆச்சரியமில்லை. ஆனால் அதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் ஒரு சிறந்த நகைச்சுவை.

அதாவது சச்சின் டெண்டுல்கர் விளம்பரங்களில் தோன்றும்போது கேமரா முன்னாலும் லைட் வெளிச்சம் முன்னாலும் நிற்க வேண்டியிருக்கிறது. அதாவது ஒரு 'மாடல்' என்ற விதத்தில் அவர் தன் தொழிலுக்கு ஒரு படைப்பு பூர்வமான கற்பனையையும் செலவழிக்கிறாராம், மேலும் கலாபூர்வமான கூறுகளை ஒன்றிணைத்து மானுட புலன்களிலும், உணர்வுகளிலும் தாக்கம் செலுத்தும் அழகியல் மதிப்பு விளம்பர நடிப்புக்கு உள்ளதாம்! இதுதான் அந்தத் தீர்ப்பாயத்தின் வரிச்சலுகைக்கான நகைச்சுவை நியாயம்!

பெப்சி கோலா குடியுங்கள் என்று சச்சின் டெண்டுல்கர் விளம்பரத்தில் கூறும்போது இந்தியர்களின் புலன்களும், உணர்ச்சிகளும் தாக்கம் பெற்று மக்கள் அழகியல் உணர்வில் தத்தளிக்கிறார்கள் போலும்! நம் வருமான வரித்துறையினருக்கு என்னே ஒரு கலை, அழகியல் உணர்வு!

மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லது இந்த விஷயத்தில் ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் கூட இந்த அளவுக்கு படைப்பூக்கம் இருக்குமா என்பது சந்தேகமே. அதாவது கேமராவையும் லைட் வெளிச்சத்தையும் எதிர்கொள்ளும் திறமை, இருப்பதில்லையாம்! இவ்வாறும் கூறியுள்ளது அந்தத் தீர்ப்பாயம்.

எனவே ஒரு கலைஞராக சச்சின் டெண்டுல்கரை ஏற்றுக் கொண்டு அவருக்கு ஒரு நடிகருக்கான வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. முத்தாய்ப்பாக அந்தத் தீர்ப்பாயம் இவ்வாறு கூறியுள்ளது.

இப்போது இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலக் கட்டம், 2ஜி ஸ்பெக்ட்ரம் மகா ஊழல், காமன்வெல்த் கல்மாடி கூட்டணி ஊழல், ஆதர்ஷ் ஊழல், சுவிஸ் வங்கியில் கோடிகோடியாக கொட்டிக் கிடக்கும் கறுப்புப் பணம், ஊழல் பணம் இன்னும் என்னென்னவோ ஊழல், கொள்ளை என்ற காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

இதில் பிடிபட்டவர்கள் அனைவரும் கேமரா முன் கொண்டு வரப்படுகிறார்கள். அவர்களும் அபாரமாக சிரித்துக் கொண்டே தங்களது சொந்த நடிப்புத் திறமையை பயன்படுத்தி 'மானுட புலன்கள்' மற்றும் 'உணர்வுகளில்' தாக்கம் செலுத்துகிறார்கள், இதே அடிப்படையில் அவர்களையும் நடிகர்களாக பாவித்து வரிச்சலுகை வழங்கலாமே. தண்டனை என்றைக்குக் கிடைக்கப்போகிறது? வரிச்சலுகையையாவது இவர்களுக்கெல்லாம் அளித்து நம் நாடே ஒரு அழகியல், கலை மதிப்பை வளர்த்தெடுக்கும் நாடு என்ற பெயர் எடுக்கலாமே!

நாம் உடனே ஒரு வாதம் செய்வோம். நாட்டில் அவனவன் மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் கோடி கோடியாக கொள்ளை அடிக்கிறார்கள். இதில் சச்சின் டெண்டுல்கருக்கோ, தோனிக்கோ விளம்பர வருவாய்க்கு வரிச்சலுகை அளிப்பதில் என்ன சார் குடி மூழ்கிவிடப்போகிறது? இவர்கள் நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுபவர்கள், இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பவர்கள் என்றெல்லாம் நம் மத்திய தர வர்க்க அசட்டு உணர்ச்சிகளை பெரிய அறிவு ரீதியான பார்வையாக நாம் முன்வைப்போம்.

இந்த படித்த மத்திய தர வர்க்க ஜீவிகள் எத்தனை பேருக்கு பொருளாதார ஆய்வாளர் பி.சாய்நாத் எழுதிய கட்டுரை தெரியவந்திருக்கும்? தெரியவந்தாலும் 'இந்தாளுங்களுக்கெல்லாம் இதுதான் வேலை' ஆக்கபூர்வமாக எதையும் இவர்கள் செய்ய முடியாது, எப்போதும் குறை கண்டே வாழ்பவர்கள்' என்று கூறி முற்றிலும் ஒதுக்கி விடும் ஒரு அராஜக மனப்போக்கையும் நாம் பார்த்து வருகிறோம்.

இந்திய நிதிநிலை அறிக்கையின் படி நாளொன்றுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வரவேண்டிய வருமான வரி பாக்கி ரூ.240 கோடி. ஆனால் இதுவரை வசூலிக்க முடியாதவை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2005- 06ஆம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வரவேண்டிய ரூ.3,74,937 கோடி வருமான வரி அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் வராதா வரியாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது ஸ்பெக்ட்ரம் ஊழலினால் ஏற்பட்ட வருவாய் இழப்பை விட இரு மடங்கு அதிகம் என்று குறிப்பிடுகிறார் சாய்நாத்.

இது தவிர ஆயத்தீர்வை, சுங்கவரிகளில் அரசு விட்டுக் கொடுக்கும் சலுகைகள் சொல்லி மாளாத வகையில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் வைரம், தங்கம், தங்க நகைகளுக்கான சுங்கவரி வராக்கடன் என்ற வகையில் தள்ளுபடி மாத்திரம் ரூ.95,765 கோடி.

இது தவிர இயந்திரங்கள் இறக்குமதி என்ற தலைப்பிலும் ஏகப்பட்ட சுங்கவரிச்சலுகைகள் வழங்கப்பட்டு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு.

சுங்கவரி வராக்கடன் வருவாய் இழப்பு மட்டும் ரூ.1,98,291 கோடி என்று அந்தக் கட்டுரையில் சாய்நாத் குறிப்பிட்டுள்ளார். மொத்தமாக வராத வரி, வரிச்சலுகை ஆகியவற்றினால் வருவாய் இழப்பு மட்டும் ரூ. 22 லட்சம் கோடி! ஆஹா! ஏழைகளின் நலன்களுக்காக நம் அரசு என்னமாய் உழைத்து வருகிறது!

இந்த வரிச்சலுகையெல்லாம் விலைக்குறைப்பு என்ற அளவில் மக்களுக்காகச் செய்யப்படுவதே என்று பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், மன்மோகன் சிங், கபில் சிபல் ஆகியோர் கூறலாம்.


ஆனால் சச்சின் டெண்டுல்கரை ஒரு 'கலைஞராக' அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ள விளம்பர வருவாய் வரிச்சலுகைக்கு வருவாய்த்துறை புதிய 'அழகியல்' 'கலை' மதிப்பையே வழங்கி விட்டது போங்கள். கமல்ஹாசனுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கிறதோ இல்லையோ சச்சின் டெண்டுல்கர் தோன்றும் விளம்பர நடிப்பிற்காக நம் வருவாய்த்துறையே சச்சினை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்தாலும் செய்வார்கள்.

இதே போல் நாளை அம்பானி, டாடா, மிட்டல் போன்ற உயர்தர தொழிலதிபர்களும் விளம்பரங்களில் நடித்து கலையை வளர்க்கலாம் அதற்காக அவர்களது தொழிலில் ஈட்டும் லாபத்தின் மீதான வரியையும் கூட ரத்து செய்யலாம்!

இது போன்ற வரிச்சலுகைகளினால் விளையாட்டு எந்த விதத்தில் வளரும் என்பதை அரசுகள் தெரிவிக்கவேண்டும்.

கால்பந்து, ஹாக்கி போன்ற துறைகள் ஊழலிலும், அதிகாரப் போட்டிகளிலும் தனிநபர் அராஜகத்திலும் நசிவுற்று சின்னாபின்னமாகி வரும் சூழ்நிலையில் ஒரு விளையாட்டில் அதிக வருவாய் ஈட்டி பெரும் பணக்காரராக இருந்து வரும் ஒரு சில வீரர்களை பெரிய நாயகர்களாகவும், கடவுளாகவும் உருவாக்கி, வழிபாட்டு மனோநிலையில் சலுகைகளை வழங்கி அதனை ஏதோ கலை வெளிப்பாடு என்று வேறு கூறிக்கொள்ளும் கேவலம் இந்த நாட்டைத் தவிர வேறு எங்காவது நடந்தால் அதனைத் தெரிந்து கொள்ள நாங்களும் ஆர்வமாக உள்ளோம்.

சச்சின் டெண்டுல்கரின் நடிப்புக் கலைத்திறமையை நம் வருமான வரி துறையினர் அறுதியிட்டது போல் நாளை ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அணி உரிமையாளர்களான ஷாரூக்கான், விஜய் மல்லையா, இந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் போன்றோரின் 'கலா பூர்வமான' கிரிக்கெட் ரசனைக்காக கிரிக்கெட் சலுகைகளையும் வழங்கலாமே. கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கும் பிற சலுகைகள், ஊதியம், வரிச்சலுகைகளை வழங்கலாமே! என்ன கெட்டுவிடப்போகிறது!. இவர்கள் கிரிக்கெட்டை ரசிக்கும் விதம் அது பற்றி பேசும் விதம், கொடுக்கும் பேட்டிகள் அவர்களை ஒரு கிரிக்கெட் அழகியல், கலை ரசிகர்களாகவே உருவக்கியுள்ளது. எனவே இவர்களும் கிரிக்கெட் வீரர்களுக்கான சலுகைகளுக்குத் தகுதியானவர்களே என்று கூறவேண்டியதுதானே பாக்கி!

உலக இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் 'உலகமே ஒரு நாடக மேடை அதில் நாமெல்லோரும் நடிகர்கள்' என்று அன்றே கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

எனவே நாம் அனைவருமே நடிகர்களே, வரிச்சலுகைக்கு தகுதியானவர்களே! பரிசீலிக்குமா அரசு! நாம் கூறவில்லை ஷேக்ஸ்பிய்ரே கூறிவிட்டார் நாமெல்லோரும் இனி வரி செலுத்தவேண்டியதில்லை.

தடகளம், துப்பாக்கி சுடுதல், குத்துச் சண்டை, கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட எண்ணற்ற விளையாட்டுகளில் ஒரு தனி நபர் சாதனைக்கோ, அணியின் சாதனைக்கோ பரிசுகள் வழங்குவதும், அந்த சாதனையாளர்களுக்கு ஓரிரு முறை வரிச்சலுகை வழங்குவதும் நியாயமானதே. அது அந்த விளையாட்டில் மேலும் பல இளம் வீரர்கள் நுழைய உதவிபுரியும்.

சச்சின் டெண்டுல்கர், தோனி, யுவ்ராஜ் சிங், உள்ளிட்ட பணம் கொழிக்கும் வீரர்களுக்கு உலகக் கோப்பை வென்றதற்காக ரூ.5கோடி பரிசு அறிவிப்பது, மாநில அரசுகள் அவர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்குவது என்பதெல்லாம் தேவையற்ற ஆடம்பர நடவடிக்கைகளே என்பதுதான் நமது கண்டனம்.

- வெப்துனியா




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 24, 2011 5:08 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பணம் விளையாடுகிறது ...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue May 24, 2011 5:23 pm

என்ன கொடும சார் இது .டெண்டுல்கள் அவ்ர் திறமையால் விளையாடி பயிற்சி பெற்று ,புள்ள குட்டி எலாம் விட்டு விட்டு ,ஊர் உராய் போயி விளையாடி ,நினைத்ததை கூட சாப்பிட முடியாமல் நினைத்த இடத்துக்கு போக முடியாமல் கழ்டப்பட்டதால் அவருக்கு இந்த பெருமை ,இந்த அளவு பணம் வருகிறது ,அவருடைய சொந்த பணத்தில் வாரியாக அவ்ர் அரசுக்கு பணம் தருகிறார் ,அதில் சிறிது வரி சலுகை கேட்கிறார் அதில் என்ன தப்பு ,இந்தியாவில் யாருமே ஒழுங்காக வரி செலுத்துவதில்லை ,வரி சலுகைக்காக மட்டுமே எல்.ஐ.சி.பாலிசி எடுக்கும் மக்கள் வாழும் நாடு இந்தியா .இதில் அவரை குறை சொல்லி என்ன பயன் .நாம் எத்தனை பேர் எல்லா பொருட்களுக்கும் பில் போட்டு வாங்கி வரி செலுத்துகிறோம் ?மக்கள் சுய சிந்தனை சேயும் நேரம் இது . டெண்டுலுக்கரை நினத்து பெருமை படுங்கள்

ராம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 24, 2011 5:25 pm

rarara wrote:என்ன கொடும சார் இது .டெண்டுல்கள் அவ்ர் திறமையால் விளையாடி பயிற்சி பெற்று ,புள்ள குட்டி எலாம் விட்டு விட்டு ,ஊர் உராய் போயி விளையாடி ,நினைத்ததை கூட சாப்பிட முடியாமல் நினைத்த இடத்துக்கு போக முடியாமல் கழ்டப்பட்டதால் அவருக்கு இந்த பெருமை ,இந்த அளவு பணம் வருகிறது ,அவருடைய சொந்த பணத்தில் வாரியாக அவ்ர் அரசுக்கு பணம் தருகிறார் ,அதில் சிறிது வரி சலுகை கேட்கிறார் அதில் என்ன தப்பு ,இந்தியாவில் யாருமே ஒழுங்காக வரி செலுத்துவதில்லை ,வரி சலுகைக்காக மட்டுமே எல்.ஐ.சி.பாலிசி எடுக்கும் மக்கள் வாழும் நாடு இந்தியா .இதில் அவரை குறை சொல்லி என்ன பயன் .நாம் எத்தனை பேர் எல்லா பொருட்களுக்கும் பில் போட்டு வாங்கி வரி செலுத்துகிறோம் ?மக்கள் சுய சிந்தனை சேயும் நேரம் இது . டெண்டுலுக்கரை நினத்து பெருமை படுங்கள்

ராம்

நானும் நடிகன்தான்; எனக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்: ச‌ச்சின் டெண்டுல்கார் 453187




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக