புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_m10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10 
48 Posts - 45%
heezulia
மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_m10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10 
43 Posts - 41%
T.N.Balasubramanian
மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_m10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_m10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_m10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10 
3 Posts - 3%
jairam
மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_m10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_m10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10 
1 Post - 1%
சிவா
மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_m10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_m10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_m10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_m10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10 
14 Posts - 4%
prajai
மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_m10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_m10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10 
5 Posts - 1%
Jenila
மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_m10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10 
4 Posts - 1%
jairam
மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_m10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_m10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10 
3 Posts - 1%
Rutu
மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_m10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_m10மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்


   
   
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jul 18, 2011 6:54 pm

பெண்களே உங்கள் மாண்பை இழிவு படுத்த இடந்தராதீர்கள்

'எப்ப ஏதாவது நல்ல காரியம் சுப காரியம் நடந்தாலும், வெளியிலை' என்று சொல்லிக் கொண்டு இவள் 'நிற்பாள்' என்ற நக்கல் பேச்சைக் கேட்காத பெண்ணா நீங்கள்?

நிச்சயம் அதிர்ஷ்டசாலிதான்.

மாதவிடாய் என்பது வழமையாக நடைபெறும் இயற்கையான செயற்பாடு. ஆனால் பெண்கள் பலருக்கும் இடைஞ்சலாக இருப்பதை மறுக்க முடியாது. அந்த நேரத்தை சிறுநீர் கழிப்பது போல சிம்பிளாக சாதாரணமாக எடுத்துக் கொண்டு சகசமாக உலவக் கூடிய பெண்கள் ஒரு சிலர்தான்.

ஆனால் பலருக்கும் சனிட்டரி பாட்ஸ் அணிந்து கொண்டு வழமையான வீட்டு வேலைகள் செய்வதும், பணிக்குச் செல்வதும் பாரிய இடைஞ்சல், அசௌகரியம், மன உளைச்சல். அத்துடன் குருதி இழப்பினால் ஏற்படும் கழைப்பும், ஹோர்மான் மாற்றங்களால் உண்டாகும் உடல், மன உபாதைகளும் தொல்லை கொடுக்கும்.

இதை புரிந்து கொண்டு ஆதரவாக நடப்பது எங்காவது ஓரிரு ஆண்கள்;தான். ஏதோ தூங்குவதும் விழித்தெழுவதும் போன்ற சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்கிறார்கள். அவளுக்கு அது மாதா மாதம் வருகிறதே, அதோடை எவ்வளவு சிரமத்துடன் எல்லா வேலைகளையும் கவனிக்கிறாள் என எண்ணுவதே கிடையாது.

ஆனால் ஏதாவது மத, சமூக, காலாசார சடங்குகள் என வரும்போதுதான் அது ஆண்களின் கண்களைக் குத்தும்.

இதனால் ஏதாவது மங்கள காரியம் அல்லது சமயச் சடங்கு வருகிறதென்றால் முதல் தவிப்பு பெண்களுக்கே.

அடுத்த 'சுகயீனம்' எப்ப வரும் என்பதை கணக்கிட்டுப் பார்ப்பதே முதல் வேலையாக இருக்கும்.

காரியத்திற்கு சுகயீனம் இடைஞ்சலான நாள் என்றால் சுபகாரியத்தைப் பிற் போட முடியாது. மாதவிடாயை சுலபமாகப் பிற்போடலாம் என்ற 'மருத்துவ ரகசியம்' எல்லோருக்குமே இப்பொழுது அத்துப்படி.


கலியாணம், காதுகுத்து, சாமத்தியச் சடங்கு, வீடு குடிபுகுதல் முதல் எது வந்தாலும் வீட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் தள்ளிப் போட வேண்டும் என்பார்கள். இது தேவைதானா? சில வேளை பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கும் கூட.

கோயில் பூசை. திருவிழா, காப்புக்கட்டு, சரஸ்வதி பூசை, எந்த விரதம் என்றாலும் கேட்கவே வேண்டாம். தள்ளிப் போட வேண்டியதாக இருக்கிறது.
மகனுக்கு கல்யாணமாம் ஆனால் தங்கச்சிக்காரிக்குத்தான் தள்ளிப் போட வேண்டுமாம்.

இது என்ன நியாயம்.

மணப்பெண்ணுக்கு தள்ளிப் போட வேண்டுமெனில் அது ஒத்துக்கொள்ள வேண்டிய விடயம்தான்.

ஆசையோடு தவமிருந்த புதுமாப்பிளைக்கு கோபம் வரும் என்பதால் மறுப்புச் சொல்ல முடியாது.

ஆனால் தங்கச்சிக்கும் மாமியாருக்கும், தோழிப் பெண்ணுக்கும் தள்ளிப் போடு என்பது சரியா?

'பேய்க் கதை கதையாதை....'

'..எங்கடை கலை, கலாசாரம் எல்லாவற்றையும் சீரழிச்சுப் போட்டுத்தான் வேறை வேலை பாப்பியள் போலகிடக்கு. இதோடை எப்படி மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது?' என்பார் தாத்தா.

சரியான நியாயம் போலத் தோன்றுகிறதா? அப்படியானால் நீங்களும் அவரது சாடிக்கு மூடிதான்.

வேட்டி உடுத்து குடுமியும் வைத்திருந்த தாத்தா இன்று டவுஸர் போட்டு பெல்ட்டும் கட்டியது மட்டுமல்ல, தலைமுடிக்கு டை அடித்து இளவட்டம் போலத் திரிகிறாரே, அதற்கென்ன பெயர். இதுவும் கலாசார சீர்கேடா?

இரண்டுமே காலாசார சீர்கேடல்ல.

காலம் மாறும்போது எமது பழக்கவழக்கங்கள் மாறுகின்றன.
கருத்துக்கள் மாறுகின்றன. கொள்கைகள் மாறுகின்றன. நம்பிக்கைகள் சீர் குலைகின்றன.

அது நியதி.

காலையில் பழங்கஞ்சி குடித்த எமது சமுதாயத்திற்கு இன்று காப்பி, தேநீர் இல்லையென்றால் 'விடிய மாட்டேன்' என்கிறதே அதுபோலத்தான்.
'கலாசார சீர்கேடு விஷயத்தை விடு.'

'இது சுகாதாரம் சம்பந்தப்பட்டது. இதோடை எப்படி கண்ட இடமும் திரியிறது' என்பார் மற்றொருவர்.

இரத்தமும் சீழும் வடியிற அழுக்குப் புண்ணுக்கு
மருந்து கட்டிக்கொண்டு
கோயில் குளம், சாமியறை, சமையலறை எல்லாம்
கூச்சமின்றித் திரிவார்கள்.


அதில் சுகாதாரக் கேடு இல்லையென்றால், பெண்களின் இந்த இரத்தத்தில் மட்டும் என்ன சுகாதாரக் கேடு இருக்கப் போகிறது.

அழுக்குப் புண்ணில் கிருமி தொற்றியிருக்கிறது அது சுகாதாரக் கேடு.

ஆனால் பெண்களில் கசிவது புது இரத்தம். கிருமித் தொற்று எதுவும் கிடையாது.

வாயால் எச்சில் வழிகிறது, மூக்கால் சளி ஒழுகுகிறது.

அதைத் துடைத்து விட்டு சகல வேலைகளையும் செய்கிறோம்தானே.

அதை விட மேலானது பெண்களின் இந்த மாதாந்த இரத்தப் போக்கும். அதோடை திரிவதும், அதைத் தள்ளிப் போடுவதும் அவர்களது இஷ்டம்.

ஆணாதிக்க நிலைப்பாடுதான் பெண்களை துடக்கென்றும், விலக்கென்றும் அந் நாட்களில் விலக்கி வைப்பதும், விலகியிருக்க நிர்ப்பந்திப்பதுமாகும்.
அதற்கு பெண்கள் தாங்களாகவே அடிபணிவதா?

ஏற்கனவே சொன்னது போல மாதப்போக்கு என்பது ஒரு சாதாரண நிகழ்வு.
சுவாசப்பையானது காற்றை உள்ளும் வெளியும் சுவாசிப்பது போல,
ஆண்களுக்கு விந்து உற்பத்தியாகி வெளியேறுவது போல,
கண்ணீர் சிந்துவது போல

இதுவும் ஒரு சாதாரண உடலியல் செயற்பாடு.

இதில் வெட்கப்படுவதற்கோ, அசிங்கப்படுவதற்கோ எதுவும் இல்லை.

ஆண்டாளும், உமாதேவியும், கன்னி மேரியும் கூட இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.

அவர்களுக்கு வந்ததுதான் இன்றைய பெண்களுக்கும் வருகிறது.

"அவர்கள் புனிதமானவர்கள், தெய்வீகப் பிறவிகள். அவர்கள் இவற்றிற்கு அப்பாற்பட்டவர்கள்" என்று யாராவது சொன்னால், அவர்களைப் பெண்கள் என்றே சொல்லமுடியாது என்பேன்.

எனவே மாதவிலக்கு நாட்களிலும் ஏனைய நாட்களில் உண்பதுபோல, உடுப்பதுபோல, தொழில் புரிவதுபோல செயற்படலாம். கோயிலுக்கும் போகலாம். திருமணத்திற்கும் போகலாம். விரதமும் பிடிக்கலாம்.


ஆசார பூச்சாண்டிகள் காட்டி பெண்களைப் பயமுறுத்தாதீர்கள்.

சுகாதார விதிகளைக் கூறித் தனிமைப்படுத்தாதீர்கள், பண்பாட்டுப் பெருமைகளைக் கூறி அவர்களை முடக்கி வைக்க முயலாதீர்கள்.

தள்ளிப் போடுவதிலும் தவறெதுவும் இல்லை.

அதிலும் முக்கியமாக கடுமையான வலி, உதிரப் பெருக்கு அல்லது அவளது வேலைக்கு இடைஞ்சலாக இருந்தால் மட்டும்.

மருத்துவ ரீதியாகப் பார்த்தால் மிக அவசிய தேவைக்காக ஒரு சில நாட்கள் தள்ளிப் போடுவதில் பாதிப்பில்லை என்றே சொல்கிறார்கள்.

மாறாக, கோயில், விரதம், நல்லநாள்,
ஆசாரம், சுகாதாரம்
போன்றவற்றிற்கெல்லாம் தள்ளிப்போடுவது
பெண்கள் தங்களைத் தாமே,
தமது பெண்மையை,
தமது மாண்பை
இழிவு படுத்தும் செயல் என்றே நான் சொல்வேன்.

"சரி, நீ தள்ளிப் போடாவிட்டால் கிட. நாங்கள் நிகழ்ச்சிக்கான திகதியைத் தள்ளிப் போடுறம" என்றால் ஏற்றுக் கொள்ளலாமா?

உங்களுக்காக விட்டுக் கொடுப்பதுபோலக் காட்டிக் கொண்டே உங்கள் பெண்மையை அவமதிக்கும் கபட நாடகம் இது.

மசிந்து கொடுக்காதீர்கள்.

ஆனால், தள்ளிப் போடுதல் தவறில்லை.

அது உங்களுக்காக மட்டுமே,
அதுவும் உங்கள் உடற் தேவைகளுக்காக
மட்டுமே இருந்தால்!

நன்றி திரு .எம்.கே.முருகானந்தன்

ராம்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக