புதிய பதிவுகள்
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_c10'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_m10'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_c10 
64 Posts - 58%
heezulia
'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_c10'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_m10'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_c10'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_m10'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_c10'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_m10'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_c10'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_m10'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_c10 
106 Posts - 60%
heezulia
'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_c10'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_m10'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_c10'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_m10'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_c10'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_m10'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 28, 2008 5:11 pm

'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்? Rescue-250

- பி.ஜி. மகேஷ்:

மும்பை: தீவிரவாதிகளை எப்படியெல்லாம் வேட்டையாடுவது என்பது குறித்து என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் தீவிரமாக யோசித்து, நடவடிக்கையில் இறங்கிக் கொண்டிருக்கையில், அதற்கு குந்தகம் விளைவிப்பது போல அவற்றை அப்படியே லைவ் ரிலே செய்யும் டிவி நிறுவனங்கள் மற்றும் என்.எஸ்.ஜியின் உத்திகளை விலாவாரியாக பகிரங்கமாக விளக்கிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளால் ராணுவமும், என்.எஸ்.ஜியும் நொந்து போயுள்ளன.

மும்பை தீவிரவாதத் தாக்குதலிலிருந்து மக்களையும், நகரத்தையும் மீட்கும் முக்கியப் பணியில் என்.எஸ்.ஜி. கமாண்டோக்களும், உள்ளூர் போலீஸாரும், ஏராளமான தொண்டு நிறுவனத்தினரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இந்த முயற்சிகளுக்கு பெரும் குந்தகமாக டிவி நிறுவங்களின் லைவ் ரிலேக்கள் அமைந்துள்ளன. கூடவே ஓசியில் பப்ளிசிட்டி தேடும் அரசியல்வாதிகளும் வந்து சேர்ந்துள்ளனர்.


நமது படைகள் எப்படியெல்லாம் கமாண்டோ வீரர்களை அனுப்பி மீட்க முயற்சி செய்கிறது என்பதை உள்துறை அமைச்சர் விலாவாரியாக டிவியில் நேரடியாக பேட்டி கொடுக்கிறார். இதைப் பார்த்து ஹோட்டலுக்கு உள்ளே பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கு எப்படியெல்லாம் தப்பலாம் என்பது குறித்து தெளிவாக தெரிய வாய்ப்பு ஏற்பட்டு விட்டது.

உள்ளே இருந்து கொண்டே வெளியே நடப்பவற்றை வெகு எளிதாக அவர்களால் அறிந்து கொள்ள நாமே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டுள்ளோம்.

டிவி சானல்களுக்கு இந்த நேரத்தில் ஒரு முக்கிய வேண்டுகோள். மீட்பு முயற்சிகளை தயவு செய்து நேரடியாக ஒளிபரப்பு செய்யாதீர்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 28, 2008 5:12 pm

இதனால் யாருக்கு அதிகம் பாதிப்பு? தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், மீட்பு முயற்சியில் ஈடுபட்டிருக்கிற என்.எஸ்.ஜி. கமாண்டோக்களுக்குத்தான். அவர்களது கடமையை செய்ய நாம் அனுமதிக்க வேண்டும்.

எல்லாம் முடிந்த பின்னர் நிச்சயம் கமாண்டோ படையினர் தாங்கள் எப்படி செயல்பட்டோம், எப்படி மீட்டோம் என்பதை டிவிகள் மூலம் சொல்லத்தான் போகிறார்கள். அதை திரும்பத் திரும்பக் காட்டி, கூடவே விளம்பரதாரர்களையும் நிறையப் பிடித்து வருவாயையும் ஈட்டிக் கொண்டே மக்களுக்கு டிவி நிறுவனங்கள் நடந்ததைச் சொல்லலாம்.

நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ள அனைவருக்கும் விருப்பம்தான். ஆனால் முதலில் ராணுவத்தையும், என்.எஸ்.ஜியையும் சுதந்திரமாக செயல்பட விட வேண்டுமல்லவா. அவர்களது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தித் தரக் கூடாதல்லவா.

ஆனால் நமது அரசியல்வாதிகள் இதற்கு பெரும் இடையூறாகவே இருக்கிறார்கள். அறிவுப்பூர்வமாக தாங்கள் செயல்படுவதில்லை என்பதை அவர்கள் தினசரி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு அரசாங்கமும் தங்களுக்குத் தேவையான பணத்தை எப்படியெல்லாம் சம்பாதிப்பது என்பதில்தான் கவனமாக இருக்கிறது.

சுவிஸ் வங்கியில் அதிக பணம் போட்டு வைத்திருப்பதில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். யார் பெயரில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. சரியாக சொல்பவருக்கு பரிசே தரலாம்.

ஆனால், பாதுகாப்புப் படையினர் குறித்து அரசுகள் அக்கறை காட்டுவதே இல்லை. அவர்களது சம்பளத்தை கூட்டுவது குறித்து ரொம்பவே தயக்கம் காட்டுகிறார்கள். தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை பொம்மை வாங்கி விளையாட அவர்கள் செலவழிப்பதில்லை. மாறாக, மக்களையும், நாட்டையும் காக்க உயிரையும் கூட பணயம் வைக்கத் தயாராக இருப்பவர்கள் அவர்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 28, 2008 5:13 pm

தற்போதைய மும்பை சம்பவத்தில் அரசின் செயல்பாடுகளை அத்தனை மீடியாக்களும் கிழி கிழியென்று கிழித்து விட்டன. சம்பவம் நடந்து 5 மணி நேரம் கழித்தே அரசு பேசுகிறது. அதை விட முக்கியமாக, பிரதமர் பதவிக்காக காத்திருக்கும் அத்வானி எடுத்த எடுப்பிலேயே குற்றப்பத்திரிக்கை வாசிக்கத் தொடங்கி விட்டார்.

சில நாட்கள் அவர் பொறுமை காத்திருக்கலாம். ஆனால் அவரால் முடியவில்லை. அவருடைய விரக்தி புரிகிறது. ஆனால், அது உண்மையிலேயே நாட்டின் மீது கொண்ட அக்கறையா அல்லது வாக்காளர்களை மனதில் கொண்டு பேசினாரா என்பதை சொல்வது சற்று கஷ்டமானதுதான்.

மும்பையில் தாக்குதல் நடந்தால் குஜராத்திலிருந்து நரேந்திர மோடி ஏன் ஓடோடி வருகிறார்? அவர் குஜராத்திலிருந்தே இதுகுறித்து கருத்துக் கூறியிருக்கலாம்.

சம்பவம் நடந்த இடத்திற்கு மோடியை ஏன் மகாராஷ்டிர அரசு அனுமதித்தது? இப்படி அரசியல்வாதிகள் தேவையில்லாமல் வந்து குவிவதால் பாதுகாப்புப் படையினருக்குத்தான் பெரும் தலைவலி. அவர்களுக்கு இரண்டு வேலை - 'தேசபக்தி' மிக்க அரசியல்வாதிகளை காப்பாற்ற வேண்டும், கூடவே ஹோட்டல்களிலிருந்து தீவிரவாதிகளையும் வேட்டையாட வேண்டும். என்ன கொடுமை?

நமது டிவிக்களின் செயல்பாடுகளும் பொறுமையை ரொம்பவே சோதிக்கின்றன. ஆனால், டைம்ஸ் நவ் டிவியின் அர்னாப் கோஸ்வாமி, இந்த விஷயத்தில் சற்று சிறப்பாகவே செயல்படுகிறார்.

உண்மையான தேசபக்தியை அவரிடம் காண முடிகிறது. அவர் பேசும்போதெல்லாம் அவரது கண்கள் கலங்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

அதேபோல அந்த ஷோவில் பங்கேற்கும் சுஹேல் சேத் மிகவும் புத்திசாலித்தனமாக பேசுகிறார். ஒவ்வொரு அரசியல்வாதியையும் சற்றும் தயக்கம் இல்லாமல் விளாசித் தள்ளுகிறார். உங்களது மனதில் உள்ளதை அப்படியே டிவியில் பகிரங்கமாக பேசுவதற்கு மனதில் தைரியம் வேண்டும். அதை அர்னாபும், சுஹேலும் மிகச் சரியாக செய்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 28, 2008 5:14 pm

நமது அரசியல்வாதிகளுக்கு இந்த நேரத்தில் ஒரு யோசனை. தயவு செய்து டிவி கேமராவுக்கு முன்பு வரும்போது கிளிசரனை கொஞ்சம் போல கண்களில் விட்டுக் கொண்டாவது வாருங்கள். அல்லது கொஞ்சமாவது கதறி அழுது விட்டுப் போங்கள். அப்போதுதான் இன்னும் கொஞ்சம் ஓட்டுக்களை நீங்கள் பெற முடியும்.

காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் சேர்ந்து பாதுகாப்புப் படையினரை பாடாய்ப் படுத்துகின்றன. காங்கிரஸோ, தீவிரவாதத்தைத் தடுக்க போதுமான சட்டம் இருப்பதாக கூறுகிறது. அப்படியானால் அவற்றைப் பயன்படுத்தி தீவிரவாதத்தைத் தடுத்திருக்க வேண்டாமா?

பாஜகவோ எந்த தீவிரவாத சம்பவம் நடந்தாலும், உடனே, பொடாவைக் கொண்டு வாருங்கள் என்று கோஷமிட ஆரம்பித்து விடுகிறது. பொடா இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அது மாதிரியாவது ஒரு சட்டம் தேவை என்று கூறுகிறார்கள்.

திரும்பத் திரும்ப நமது அரசியல்வாதிகள் இப்படிப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு கேட்டு போரடித்து விட்டது. அமெரிக்க அரசியல்வாதிகள், ஏதாவது நெருக்கடி ஏற்பட்டால், அத்தனை பேரும் ஓரணியில் திரண்டு ஒரே குரலாக எழுப்புகிறார்கள். ஏன் நமது அரசியல்வாதிகள் அப்படி செய்யக் கூடாது?

பொருளாதார மந்த நிலை குறித்தும், குறைந்து வரும் வெளிநாட்டு முதலீடுகளைப் பற்றியும் நாம் பேசுகிறோம். இதுபோன்ற சம்பவங்களால் நாம் தளர்ந்து போய் விடக் கூடாது. இன்று பங்குச் சந்தையில் 500 புள்ளிகளாவது உயர வேண்டும். அதுதான், இந்தக் கோழைகளுக்கு நாம் கொடுக்கும் சரியான பதிலடியாக இருக்கும் (கோழைகள் என்று நான் சொல்வது நமது அரசியல்வாதிகளை அல்ல, தீவிரவாதிகளை)

பிணைக் கைதிகளுக்குப் பதில் நமது அரசியல்வாதிகள் தங்களது இன்னுயிரைத் தர முன்வருவார்களா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக