புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
75 Posts - 46%
heezulia
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
72 Posts - 44%
mohamed nizamudeen
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
4 Posts - 2%
prajai
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
306 Posts - 43%
heezulia
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
289 Posts - 40%
Dr.S.Soundarapandian
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
6 Posts - 1%
prajai
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
நல்ல மனம் தீய மனம் Poll_c10நல்ல மனம் தீய மனம் Poll_m10நல்ல மனம் தீய மனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல மனம் தீய மனம்


   
   
மணிகண்டன்
மணிகண்டன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 19/07/2011

Postமணிகண்டன் Thu Jul 21, 2011 1:53 pm

நல்ல மனம் தீய மனம்

மனம் என்பது மரணப் பட்டினம் நோக்கி அழைத்துச் செல்லும் வாகனம். மனதின் போக்கில் வாழ்ந்த யாருமே சாகாக் கல்வியைப் பயில முடியாது. இதையே இடைகாடார் அழகாகக் கூறுவார்,

" சாகாதிருக்க தான்கற்ற கல்வியன்றோ வாகான மெய்க்கல்வி வகுத்தறி நீ கன்மனமே !"
என்கிறார். இங்கு 'கன்மனமே' என்றது தீங்கான மனமே விலகு என்று பொருள்படும்.

உலகின் கொடுமை என்னவென்றால் மனதிற்கு அடிமையான, மனதின் சீற்றத்தில் சிக்கிய சீமான்களை மக்கள் ஆன்மீகம் தேடி அடி பணிகிறார்கள். அந்தோ பரிதாபம் ! மனதின் கேட்டிற்கு அடிமையானதின் அடையாளம் மூன்று:
1 . ஓய்ந்து ஒரு இடத்தில இருக்க முடியாது
2 .மனிதர்களோடு ஊடாடுவதிலும், மகிழ்வதிலும், போதிப்பதிலும், விவாதிப்பதிலும் நாட்டம்.
3 . பணத்தைப் பயன்படுத்தும் பயன்பாட்டிலேயே சிந்திப்பது, பணத்தின் தேவையிலேயே மூழ்கி இறப்பது.

மனதை வென்று மனதிற்கு மரணம் கொடுப்பவர்களின் நிலை:
1 . தனித்து மௌனம் கண்டு வாழ்வார்கள்
2 . மனித சந்தடியை விட்டு ஒதுங்கிச் சிந்திப்பார்கள்.
3 . தனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு மட்டுமே அவர்களிடம் இருந்து வெளிப்படும்.

நமது உடலுக்கு ஆயுள் இருப்பது போல நமது மனதிற்கும் ஆயுள் உண்டு. ஆயுள் முடிந்ததும் அடுத்த சந்ததியை உருவாக்கும். மனம் ஒரு மனிதனுக்குள் இல்லறம் நடத்தினால் அவனே பெரும் குடும்பி. சில மனிதர்களுக்குள் ஆயிரக்கணக்கில் மனக் குழந்தைகள் வாழும். ஆனால் ஞானியின் சிந்தையில் ஒரே ஒரு மனமே வாழும். அதுபற்றி விரிவாகக் காண்போம்.

நாம் ஏழு வயதிற்குள் வாழும் வரை எத்தனையோ சம்பவங்கள், உணவு, உடை, உறவுகள், விளையாட்டு இப்படி அனுபவித்து இருப்போம். ஆனால், அவைகள் இன்று ஞாபகம் இல்லை. அவைகள் இறந்த மனமாகும். எவ்வளவு முயன்று ஞாபகப்படுத்தினாலும் இன்று ஞாபகத்திற்கு வராது.
பத்து மாதக் குழந்தையாகத் தவழும் பருவத்தில் நாம் ஒரு செம்பு நிறைய தண்ணீர் கீழே சிந்தாமல் மண்டியிட்டபடி எம் தாத்தாக் கையில் கொடுத்தோம். அவர் வாங்கிக் குடிப்பதற்குள் செம்பு தவறி விழுந்து தண்ணீர் கொட்டியதாம். அன்று இரவே தாத்தா இறந்து விட்டார். இன்று அவரின் முகம் எமக்கு நினைவில் இல்லை. காரணம் அந்த மனம் இறந்து விட்டது. சில மனங்களுக்கு இருபது நிமிடங்கள்தான் ஆயுள். அதாவது அடர்ந்த மக்கள் கூட்டமுள்ள இடங்களுக்குப் போனால் அனைவரது முகத்தையும் பார்ப்போம். ஆனால் அடுத்த கணமே அந்த மனம் இறந்து விடும். பிடித்தமான சில முகங்களைப் பார்த்தால் அந்த மனம் இருபது வருடங்கள் கழிந்தாலும் இறக்காமல் வாழும்.

மனதின் ஆயுளைக் குறைப்பதுதான் தவம். அதற்குச் சில யுக்திகள் உள்ளன.

* பிச்சை எடுத்து வாழ்தல்
* ஓரிடத்தில் நிலையாக தாங்காமல் வாழ்தல்
* தன்னை எப்போதுமே தாழ்வாக விமர்சனம் செய்தபடி சிந்தித்தல்.

இதில் முதலாவதாக உள்ள பயிற்சியைப் பட்டினத்தார் செய்தார். அதாவது பிச்சை எடுத்து வாழ்வது எதற்கு என்றால், ஒரு சம்பவத்தால் நாம் மகிழ்ச்சி அடைந்தாலோ அல்லது துக்கம் அடைந்தாலோ நமது மனதின் ஆயுள் அதிகமாகி விடும். ஒருவன் நமக்கு துரோகம் செய்துவிட்டால் அந்த மனம் நாம் சாவது வரை மறக்காமல் வாழும். இதனை அழிக்கவே ஞானிகள் பிச்சை எடுத்தார்கள். அப்படிச் செய்யும் பொது பலரும் திட்டுவார்கள்; சிலர் பாராட்டுவார்கள். எதிலும் சம்பந்தப்படாமல் வாழும் பக்குவம் உருவாகும்.

அதேபோலத் தன்னைப் பெருமையாகப் பேசுபவர்களின் மனதின் ஆயுள் சாகாமல் நீடிக்கும். ஞானிகள் தன்னையே திட்டிக் கொண்டு, விமர்சனம் செய்து கொண்டு, தவத்தின் போது தமது உடலை, மனத்தைக் கேவலமாகப் புறக்கணித்து மனதின் ஆயுளைக் குறைத்து, மனதை ஆக்கிக் கொன்று விடுவார்கள். மனம் உடம்பை நோயாளி ஆக்கினால் பைத்தியம். உடம்பு மனதை நோயாளி ஆக்கினால் ஞானி.

தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு மனிதனும் தனக்குள் வாழும் மனதை சாகடிக்கவே முயல்கிறான். மனம் செய்கிற இன்னல்களை உடல் தாங்க முடியாமல் அவதிப்படும் போது மனதின் மீது விரக்தி உண்டாகும். இதை உணரும் மனங்கள் சாணக்கியமாகச் செயல்பட்டு தனது சந்ததிகளை உண்டாக்கிவிடும். ஒரு மனிதன் உலக இன்பத்தை ஆழ்ந்து சுவைக்கின்றான், திடீரென்று அவனது மனைவி நோய் வந்து இறக்கிறாள். உடனே கடவுளைத் தேடி கோவிலுக்குச் செல்லும் சந்ததி மனம் உருவாகிவிடும். காலப்போக்கில் கோவிலும் சலித்துவிடும். அப்புறம் தியான மன்றத்தைத் தேடிய சந்ததி மனம் உண்டாகும். அங்கு விதம் விதமாகப் மனப் பயிற்சி அளித்து சாவது வரை வினோதமான மனதை உண்டாக்கி விடுவார்கள்.

மனதின் ஏஜெண்டுகள்தான் தியான மன்றங்கள். அங்குப் போனால் நிறைய சந்ததி மனங்கள் கிடைக்கும். முன்னூறு வருடங்கள் வாழ்ந்தாலும் மனதை அழிக்க முடியாதபடி கட்டுக்கட்டாகப் புத்தகங்கள், தகவல்கள், பயிற்சிகள், தத்துவங்கள், பாடல்கள், உளறல்கள், இப்படியே சண்டாள மனதின் சந்ததிகளை மூலையில் திணித்து விடுவார்கள். இதுவா ஆன்மீகம்? இது மரணகீதம்.

மனதின் இந்திர ஜாலங்களில் முக்கிய சக்தி நிமிட நேரங்களில் பல்லாயிரம் சந்ததிகளைப் படைத்துவிடும். அனைத்தையும் அழிக்க நமது நூறு வருட ஆயுள் கூட போதாமல் போகலாம். சாகாக் கல்வி பயில்பவர்கள் நூல்களையோ, தத்துவங்களையோ மதிப்பது கிடையாது. மனம் உள்ளவரை கடவுளைக் காணவே முடியாது. எனவே, மனதைச் சாகடிக்கும் முயற்சியில் இறங்குவார்கள் சித்தர்கள். இதையே

"சினம் இறக்கக் கற்றாலும் சித்தி எல்லாம் பெற்றாலும்
மனம் இறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே "
என்பார் தாயுமானவர்.

சாகாக் கல்வி பயில குருமார்கள் தேவையில்லை. நாம் எந்த குருவிடமும் கற்கவில்லை. "முழு ஆன்ம வலிமை" இருந்தால் தானாகவே வரும். அப்படி வலிமை குறைவாக உள்ளவர்கள் குருவிடம் பாடம் கற்கலாம். அந்த குரு மனதின் மூலம் சொல்லித்தர மாட்டார். வார்த்தைகளோ, சொற்பொழிவோ இருக்காது. மனம் இறந்த மௌன மொழியால் பயிற்சி தொடங்கும், நிறைவு பெறும்.

சாகாக் கல்வியை ஒரு நூல் வடிவில் நாம் கொடுப்பது கூட எமது முட்டாள்தனம் தான். வேறு வழியில்லை, முள்ளை முள்ளால் எடுப்பது போல, மனதினால் காயப்பட்டு மாய்பவர்களை, மனதின் மூலம் எழுத்தாகப் படைத்து மனத்தால் சிந்திக்க வைத்து சாகாக்கல்வி பயில ஆர்வத்தை ஊட்டுகிறோம்.

மனம் உள்ளவரை..... மனப்பாடம் உள்ள வரை........... மனிதனுக்கு விமோசனம் இல்லை. எனவே மனதைக் கொல்லும் ஆயுதத்தைக் கையில் எடுப்போம், மனதைக் கொல்வோம். அதற்கு ஒரே வழி, மனதிற்கு நிறைய துன்பங்கள், வறுமைகள், கஷ்டங்கள் கொடுத்துப் பழக வேண்டும். ஏதாவது ஒரு இன்பத்தை மனம் அடைந்தால் கூட சந்ததியை உருவாக்கி விடும்.

அதுபோல நமக்கு உதவி செய்யும் மனம், கொடுமை செய்யும் மனம் என இரு வகைகள் உள்ளன. தாய், தந்தை மூலம் வந்த மனங்கள் உதவி செய்யும் மனங்கள், நாம் பிறந்த பிறகு சந்ததியைப் பெருக்க விட்ட மனங்கள் தீய மனங்கள். தீய மனங்களின் ஆயுள் குறைவு ஆனால், கொடுமைகள் அதிகம். சாப்பிடத் தூண்டுதல், அனுபவிக்கத் தூண்டுதல் இந்த தீய மனதின் வெளிப்பாடுகள். தீய மனத்தால் குற்றங்கள் பெருகி உடம்புக்குத் தண்டனை கிடைக்கும் போது மனசாட்சி போல வந்து நல்ல மனங்கள் பேசி உதவி செய்யும். நல்ல நூல்களைப் படிப்பது, தியானம் மற்றும் தவம் செய்யத் தூண்டுவது இந்த நல்ல மனங்களே ஆகும். கடவுளைத் தேடுவதும் இந்த நல்ல மனங்கள்தாம். இவற்றில் தீய மனங்களை இனம் கண்டு அழித்து விடலாம். ஆனால் நல்ல மனங்கள் கடுவுளை அடையும்போது இடையுறு செய்து எதிரியாக மாறும். அப்போது நல்ல மனதையும் அழிக்க வேண்டிய நிலை உருவாகும். அதற்குச் சந்ததி மனங்களை உருவாக்கத் தெரியாது. இந்த நல்ல மனமும் அழிந்த பிறகுதான் கடவுள் தரிசனம் உண்டாகும்.

இன்று பலரும் தீய மனதின் தூண்டுதலால் குற்றவாளிகளாக உலவுவதை நேரிடையாகக் காண முடியும். ஆனால், நல்ல மனதின் தாக்கத்தால் பலர் சீரழிவது பலருக்குத் தெரியாது. அதாவது, வள்ளலார் பாடலை மனப்பாடம் செய்தது ஒரு நல்ல மனம், அதன்பிறகு வல்லார் கொள்கையை ஏற்றது அதே நல்ல மனம்.
ஆனால் அருட்பெரும்ஜோதி அனுபவம் அடைய விடாமல் நல்ல மனம் தடையாக நிற்பதைத் தடுக்க முடியாமல் அந்த நல்ல மனம் கள்ள மனமாகி ஜோதியைக் காட்டுவதையும், கனவில் வள்ளலாரைப் பார்த்ததையும் வைத்து வாழ்நாள் முழுக்க அறிவாளி என்கிற போர்வையில் சிக்கிக் கடைசியில் மரணப் படுக்கையில் படுக்கும்போது சன்மார்க்கமும் உதவாது, சாவும் ஒதுங்காது.

இப்படிப் பலரும் செத்துச் செத்துப் பார்த்தும் பலகோடி சன்மார்க்கிகள் திருந்துவதாகத் தெரியவில்லை. நல்ல மனதின் அடிமைகளாக நல்லவர் என்ற பெயரில் வாழ்வைக் கடத்துகிறார்கள். இப்படிதான் பல மன்றங்கள் நெஞ்சுமுட்டும் அளவுக்கு உபதேசங்கள் செய்கின்றன. இதை ஆன்மீகம் என்ற பெயரில் அமோகமாய் விற்பனை செய்து, வயிறு வளர்த்து..... வாயாடி..... வயதாகி...... வாய்க்கரிசி போட வைப்பார்கள். நல்ல மனத்தையும் கெட்ட மனத்தையும் நன்கு புரிந்து கொண்டால் கடைத்தேறலாம்.

--- தவயோகி ஞான தேவ பாரதி சுவாமிகள்.

இந்த பதிவை சற்று சிந்தித்து பாருங்கள்....

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jul 21, 2011 2:02 pm

மனதை வென்று மனதிற்கு மரணம் கொடுப்பவர்களின் நிலை:
1 . தனித்து மௌனம் கண்டு வாழ்வார்கள்
2 . மனித சந்தடியை விட்டு ஒதுங்கிச் சிந்திப்பார்கள்.
3 . தனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு மட்டுமே அவர்களிடம் இருந்து வெளிப்படும்.

அருமையான பதிவு நண்பா. சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நல்ல மனம் தீய மனம் Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக